Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் பேச்சாளர் மாற்றப்பட்டு விட்டாரா?: உண்மையில் நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், கொறடா பொறுப்புக்களில் மாற்றம் ஏற்படுத்த கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது என நேற்று தமிழ் பக்கம் ஒரு செய்தியை முதன்முதலாக வெளியிட்டிருந்தது.

அதை தொடர்ந்து இன்று பல தமிழ் பத்திரிகைகளில் பேச்சாளர், கொறடா புதிதாக நியமிக்கப்பட்டு விட்டார்கள் என செய்தி வெளியிட்டிருந்தன.

சமூக ஊடகங்களிலும் சுமந்திரன் ஆதரவாளர்கள் கொதிக்க, மாற்றத்தை விரும்பிய பொதுவான கூட்டமைப்பு ஆதரவாளர்கள் வரவேற்க- மோதல் போக்கு தொடர்ந்தது.

உண்மையில் கூட்டமைப்பிற்குள் சம பங்காளிகளாக இருக்க வேண்டிய புளொட், ரெலோ கடந்த காலங்களில் தமக்குரிய பங்கை கேட்டுப்பெறாமலிருந்தன. தமிழ் அரசு கட்சி தன்னிச்சையாக நடந்தது ஒரு புறம், பொதுவாகவே இயக்க மனநிலைகளிற்குரிய- இந்த பேச்சாளர் பதவிகள் போன்றவற்றை வைத்து என்ன செய்வது?என எதையும் சாதாரணமாக எடுக்கும்- இயல்பினாலும் அதில் ஆர்வம் காட்டாமலிருந்தனர்.

எனினும், தமிழ் தேசிய அரசியலில் எழுந்துள்ள முரண்பாட்டையடுத்து, அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த ஆயுதப் போராளிகளாவது சில விடயங்களில் முன் கையெடுத்தால் மாத்திரமே, தமிழ் தேசிய கருத்தியலை பேண முடியுமென்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த பின்னணியிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்ற வேண்டுமென ரெலோ, புளொட் வலியுறுத்த ஆரம்பித்தன. உண்மையில் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் பின்னரும் கட்சிகளிற்கிடையில் பேச்சாளர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வதுதான் வழக்கமாக இருந்தது. இம்முறை ரெலோ அல்லது புளொட் ஏற்க வேண்டும்.

அதை யார் ஏற்பது என்பதில் குழப்பமுமில்லை. தமிழ் அரசு கட்சியும் பேச்சாளர் மாற்றத்திற்கு சம்மதம்.

ஆனால், சுமந்திரன் சர்ச்சையை உருவாக்காமல் அந்த பொறுப்பிலிருந்து விலகுவாரா என்பதிலேயே கூட்டமைப்பின் எதிர்காலமுள்ளது.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் கலந்துரையாடல் நடந்தது. அது உத்தியோகபூர்வமான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டமல்ல. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டமாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் பல எம்.பிக்கள் நாடாளுமன்ற அமர்வு முடிந்ததும் ஊருக்கு புறப்பட்டு விட்டார்கள். அதனால், கட்சி தலைவர்கள் கூடி சில விடயங்களை ஆராய்ந்தார்கள்.

இதன்போது, கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்றும் விவகாரமும் பேசப்பட்டது. இரா.சம்பந்தனும் அந்த முடிவில் ஏற்கனவே இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோக்கங்களா தெரியவில்லை- அதற்கென்ன மாற்றலாம். கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தை கூட்டி, அதில் புதிய நியமனத்தை வழங்கலாம் என்றார்.

இரா.சம்பந்தனின் முன்பாக மாவை, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பேசி- செல்வம் அடைக்கலநாதனை புதிய பேச்சாளராக்கலாம் என தமக்குள் உடன்பட்டு கொண்டார்கள். அதை சம்பந்தர் தலையாட்டி ஆமோதித்தார். ஆனால், புதிய பேச்சாளர் நியமனம் வழங்கப்படவில்லை.

அது, 27ஆம் திகதியளவில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடும் போது, அங்கு பிரேரிக்கப்பட்டு, நியமனம் வழங்கப்படும்.

ஒருவேளை, தமிழ் அரசு கட்சியின் முடிவை மீறி சுமந்திரன் அணி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தி- வழக்கத்திற்கு மாறாக வாக்களிப்பை கோரினால் ஒரு சுமுகமற்ற நிலைமை ஏற்படும். சுமந்திரன் அணியில் தற்போது சாணக்கிய ராகுல் வீரபுத்திரன், சி.சிறிதரன் ஆகியோர் உள்ளனர். தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டதால் த.கலையரசனும் சுமந்திரனை ஆதரிக்கலாம்.

இப்படியான நிலைமை வந்தால் சாள்ஸ் நிர்மலநாதனின் வாக்கு முக்கியம் பெறும். அவர் தேர்தல் காலத்தில் சுமந்திரனை கடுமையாக எதிர்த்தவர். ஆனால் நடைமுறையில் எப்படியென்பது தெரியாது. மக்கள் முன்பாக அதி தீவிர தமிழ் தேசியம் பேசும் இரண்டு தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள்தான், தமிழ் எம்.பிக்களிலேயே உளவுத்துறை பிரதானிகளுடனும், ராஜபக்ச குடும்பத்துடனும் நெருக்கமானவர்கள். அவர்கள் முன்னெடுக்கும் அரசியலுக்கும், யதார்த்த நடைமுறைக்கும் தொடர்பில்லை. யார் அந்த கறுப்பாடுகள் என்பதை வாசகர்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறோம்.

பேச்சாளர் விவகாரத்தில் இதுதான் நிலவரம்.

அதுபோல, கூட்டமைப்பின் கொறடாவும் மாற்றுவதென முடிவாகியுள்ளது. அதை புளொட்டிடம் வழங்கலாம், ஏற்றுக்கொள்ளுங்கள் என நேற்று யோசனை தெரிவிக்கப்பட்டது. அவ்வளவுதான்.

கடந்த நாடாளுமன்ற கால கொறடா சிறிதரன் அனேகமான நேரங்களில் தனக்கு எடுப்பார் எல்லது சம்பந்தனுடன் மற்றையவர்களிற்கு நேரத்தை பகிர்வார், சம்பந்தன் மற்றையவர்களின் நேரத்தையும் விழுங்கி உரையாற்றுவார், அவருடன் ஒதுக்கப்பட்டவர்கள் உரையாற்றவே முடியாமல் போகும் என்பது கூட்டமைப்பின் எல்லா எம்.பிக்களின் முறைப்பாடு. நேற்று கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட 18 நிமிடத்தையும் தனது உரையென சிறிதரன் பதிவு செய்து விட்டார். பின்னர் செல்வம் அடைக்கலநாதன் தலையிட்டு, பெரும் பிரயத்தனப்பட்டு, அதில் 9 நிமிடத்தை பெற்று மட்டக்களப்பின் ஜனாவிற்கு வழங்கினார்.

இதனால் கொறடாவிலும் மாற்றம் வரும்.

ஆனால் இரண்டு நியமனமும் இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கு 27ஆம் திகதி வரை பொறுக்க வேண்டியிருக்கும்.

இதற்குள், கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்கப்பட்டு விட்டீர்களா என வினவ செல்வம் அடைக்கலநாதனை பல பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் செல்வம் யாரது அழைப்பிற்கும் பதிலளிக்கவில்லை. இந்த இலட்சணத்தில் பேச்சாளராகினால் எப்படியிருக்கும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மீன் சாப்பிட ஆசைப்பட்டால் முள்ளைப்பற்றி பயப்படக்கூடாது.

https://www.pagetamil.com/141630/

xfghg.jpg.pagespeed.ic.eFkKn5du4H.webp

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து ஒட்டுக்குழுக்களிடம் இந்தப் பதவிகளை அளிக்காமல்.. இளையோருக்கு வாய்ப்பளித்து பயிற்சியும் அனுபவுமும் அளித்து உறுதியான எதிர்கால தமிழ் தேசிய.. அரசியலுக்கு திட்டமிடுங்கள்.

இன்றேல்.. வீடு.. குடிசையாகி.. கொட்டிலாகி.. பின் குப்பையாகும் நிலையே வரும்.  இதனால் பாதிக்கப்படப் போவது தமிழ் மக்களின் நியாயங்களும்.. உரிமைகளும்.. அவர்களுக்கான நீதியும் தான். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 இனியென்ன செத்த மாட்டில்  இருந்து உன்னி கழண்டு  ஓடுவதை போல் செம்புகள் காணாமல் போவினம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

 இனியென்ன செத்த மாட்டில்  இருந்து உன்னி கழண்டு  ஓடுவதை போல் செம்புகள் காணாமல் போவினம் .

மிகவும் வருத்தத்திற்குரிய, நாகரீகமற்ற கருத்து. ☹️

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

மிகவும் வருத்தத்திற்குரிய, நாகரீகமற்ற கருத்து. ☹️

 

ஒரு நாகரீகம்  தெரியாத சுமத்திரனுக்கு அதுவே குறைவு 

சம்பந்தரே  சுமத்திரன் மீது காறி துப்பி விட்டார் செய்தி இன்னும் உங்களுக்கு வரவில்லை போல் இருக்கு "தமிழ்தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரன் கூறிய கருத்துக்களும் காரணம் என்று சம்பந்தர் ஐயா கூறியுள்ளார்." போங்கைய்யா போங்க கள்ளவாக்கு என்று சொன்னால் கேஸ் போடுவேன்  என்றது போல் சம்பந்தருக்கு  எதிராகவும் ஒரு கேஸை பைல் பண்ணிடுங்க .

விளங்கும் ..........

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

ஒரு நாகரீகம்  தெரியாத சுமத்திரனுக்கு அதுவே குறைவு 

சம்பந்தரே  சுமத்திரன் மீது காறி துப்பி விட்டார் செய்தி இன்னும் உங்களுக்கு வரவில்லை போல் இருக்கு "தமிழ்தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு சுமந்திரன் கூறிய கருத்துக்களும் காரணம் என்று சம்பந்தர் ஐயா கூறியுள்ளார்." போங்கைய்யா போங்க கள்ளவாக்கு என்று சொன்னால் கேஸ் போடுவேன்  என்றது போல் சம்பந்தருக்கு  எதிராகவும் ஒரு கேஸை பைல் பண்ணிடுங்க .

விளங்கும் ..........

உங்கள் கருத்தினைத் தெரிவிக்க பாவிக்கும் சொற்களின் தரத்தைக் அதிகரிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.  🤥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

உங்கள் கருத்தினைத் தெரிவிக்க பாவிக்கும் சொற்களின் தரத்தைக் அதிகரிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.  🤥

என்ன செய்வது என்கருத்துக்கு  எதிர் கருத்து எழுதுவதுக்கு சகல உரிமையும் உங்களுக்கு உண்டு .

சுமத்திரன் பற்றி எழுதியதுக்கு  மாத்திரமே .....

பகிடி என்னவென்றால் தமிழ்தேசியத்தையும்   விடுதலைப்புலிகளை இதே யாழில் பல் இடங்களில் சுமத்திரனுக்கு ஆதரவானோர் எனப்படுபவர்கள் கேவலமாக விமரிசிக்கும்போது அவர்களுக்கு சொல்லி பாருங்கள் எனக்கு சொன்னது போல் . அதன் பின் எனக்கு அறிவுரை சொல்ல வாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமைக்காக சுமந்திரனை வெளியே போட்டால் - மிகுதி எல்லாரும் ஒன்றாவார்களா? 

கொள்கையளவில் கஜன்ஸ்சுக்கும் சிவிக்கும் ஒரு வித்யாசமுமில்லை. சீவி சுரேசை கூட வைத்திருப்பதுதான் பிரச்சனை. காரணம் ஈகோ. சுரேஸ் முன்னர் கஜன்ஸ்சுடன் சேர்ந்து பின் பிரிந்தவர். ஆகவே அவருடன் இருக்கும் சீவியுடன் கஜன்ஸ் சேர முடியாது.

இவர்கள் எல்லாருக்கும் சுமந்திரனடோடு பிரச்சனை. 
சரியோ பிழையோ, டெலோ, புளொட், மாவை அணி, சீவி அணி, கஜன்ஸ் எல்லோரும் ஒரு அணியில் திரண்டால் சுமந்திரனை ஈசியாக வெளியில் போடலாம். 

அவர் தனியே ஒரு எம்பியாக இருக்கலாம் அல்லது அரசுடன் சேரலாம். ஆனால் சுமந்திரனை வெளியில் போட கூட இவர்களால் ஒன்றாக முடியாது. கொள்கையளவில் 100% ஒத்து போயும் கூட!

இப்போ கூடவே மணியின் பிரச்சினை வேறு. மணியை கஜன்ஸ் காயடித்து கட்சியில் வைத்திருக்கிறார்கள். மணி எங்கே போனாலும் (சிவி அல்லது கூட்டமைப்பு) அவர்களோடு கஜன்ஸ் ஒரு போதும் சேராயினம் ( சுரேசுக்கு சொன்ன அதே காரணம்). ஆகவே இப்போ மணியை சீவி ஏற்க தயங்க கூடும். மணி ஒன்றில் சைக்கிளில் ஓரமாக ஒட்டி கிடக்க வேண்டும் அல்லது மொட்டுக்கோ அன்னத்துக்கோ போக வேண்டும் அல்லது அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும். ஒரு வினைதிறனான இளம் அரசியல்வாதிக்கு தமிழ் தேசிய பரப்பில் இதுதான் கதி, எனும் போது -

வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் இந்த வகை அரசியலில் நம்பிக்கை இழப்பதில் ஒரு வியப்புமில்லை. எனது வியப்பெல்லாம் 11 வருடமாக மக்கள் இவர்களை எப்டி நம்பினார்கள் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

என்ன செய்வது என்கருத்துக்கு  எதிர் கருத்து எழுதுவதுக்கு சகல உரிமையும் உங்களுக்கு உண்டு .

சுமத்திரன் பற்றி எழுதியதுக்கு  மாத்திரமே .....

பகிடி என்னவென்றால் தமிழ்தேசியத்தையும்   விடுதலைப்புலிகளை இதே யாழில் பல் இடங்களில் சுமத்திரனுக்கு ஆதரவானோர் எனப்படுபவர்கள் கேவலமாக விமரிசிக்கும்போது அவர்களுக்கு சொல்லி பாருங்கள் எனக்கு சொன்னது போல் . அதன் பின் எனக்கு அறிவுரை சொல்ல வாருங்கள் .

தரங்குறைந்த எழுத்துக்களுக்கு எனது பின்னூட்டங்களை நீங்கள் வாசிப்பதில்லையோ 🤥

(தற்போதைய எழுது முறை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் 👍)

On 23/8/2020 at 01:13, nedukkalapoovan said:

தயவுசெய்து ஒட்டுக்குழுக்களிடம் இந்தப் பதவிகளை அளிக்காமல்.. இளையோருக்கு வாய்ப்பளித்து பயிற்சியும் அனுபவுமும் அளித்து உறுதியான எதிர்கால தமிழ் தேசிய.. அரசியலுக்கு திட்டமிடுங்கள்.

இன்றேல்.. வீடு.. குடிசையாகி.. கொட்டிலாகி.. பின் குப்பையாகும் நிலையே வரும்.  இதனால் பாதிக்கப்படப் போவது தமிழ் மக்களின் நியாயங்களும்.. உரிமைகளும்.. அவர்களுக்கான நீதியும் தான். 

குறைந்தது இரு மொழி தெரிந்தவர்க்கு கொடுக்க வேண்டும். கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் சடடதரணி தவராசாவுக்கு கொடுக்கலாம். சித்தார்தனுக்கும் அப்படியான தகுதி உண்டு. மற்றவருக்கு கொடுத்தால் அம்போதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.