Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு வாள்வெட்டுச் சம்பவத்தில் சிறுவன் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

child.jpg

மட்டக்களப்பு வாள்வெட்டுச் சம்பவத்தில் சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான  வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை)  இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம் குழு மோதலாக மாறி பின்னர் பழிதீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் விளையாட்டுக்களில் மிகவும் ஆர்வத்தோடு பங்குபற்றுபவர் என்றும் சிறந்த பணிவான குணாம்சங்கள் கொண்டவர் என்றும் விளையாட்டுப் பயிற்சி உத்தியோகத்தர் லோகிதராசா ஜயஜனனி தெரிவித்தார்.

மேலும் செங்கடி மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து இந்த மாணவன் பங்குபற்றிய கூடைப்பந்தாட்ட அணி, முதற் தடவையாக கல்குடா வலய மட்ட அரை இறுதிப்போட்டி வரை சென்றது எனவும் ஜயஜனனி தெரிவித்தார்.

இதேவேளை சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/மட்டக்களப்பு-வாள்வெட்டு/

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை.எங்கே போய்க்கொண்டிருக்கிறது எமது சமூகம்.வாழ வேண்டிய வயதிலே வாளால் வெட்டிக்கொலை.உயிரைப்பறிக்கும்உரிமை இப்போது எல்லோர் கைகளிலும்.விட்டுக்கொடுப்பும் இல்லை,விசாரிப்பு,பேசித்தீர்க்கும் பண்பு எதுவும் இல்லை.வன்முறைதான் இப்போ வாழ்க்கை முறையாய்ப் போச்சுது.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by நந்தி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தி said:

என்ன கொடுமை.எங்கே போய்க்கொண்டிருக்கிறது எமது சமூகம்.வாழ வேண்டிய வயதிலே வாளால் வெட்டிக்கொலை.உயிரைப்பறிக்கும்உரிமை இப்போது எல்லோர் கைகளிலும்.விட்டுக்கொடுப்பும் இல்லை,விசாரிப்பு,பேசித்தீர்க்கும் பண்பு எதுவும் இல்லை.வன்முறைதான் இப்போ வாழ்க்கை முறையாய்ப் போச்சுது.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

பாடசாலை பிரச்சினையை கையில் எடுத்து சென்ற பெரியவர்களை முதலில் சிறையில் அடைக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

5 hours ago, நந்தி said:

என்ன கொடுமை.எங்கே போய்க்கொண்டிருக்கிறது எமது சமூகம்.வாழ வேண்டிய வயதிலே வாளால் வெட்டிக்கொலை.உயிரைப்பறிக்கும்உரிமை இப்போது எல்லோர் கைகளிலும்.விட்டுக்கொடுப்பும் இல்லை,விசாரிப்பு,பேசித்தீர்க்கும் பண்பு எதுவும் இல்லை.வன்முறைதான் இப்போ வாழ்க்கை முறையாய்ப் போச்சுது.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

'தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி' இன்றைய இலங்கையில் உள்ள குடிகளின் தலைவர்கள் என்று இருப்போரில் பலர் கொள்ளை, கொலைகள் செய்துவந்த பெரும் ஏமாற்றுப் பேர்வழிகளே.😲  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பாடசாலை பிரச்சினையை கையில் எடுத்து சென்ற பெரியவர்களை முதலில் சிறையில் அடைக்க வேண்டும் 

பாவம், சிறுவன்.

அதேவேளை, இது ஏதோ இலங்கையில் மட்டும் நடக்கும் விடயம் என்று கவலைப்பட தேவையில்லை.

இங்கே இங்கிலாந்தில், இரு மாணவர்களுடையே வாய் தர்க்கம், தாய்மாரில் தொடங்கி, தந்தை மாரில் நீண்டது.

ஒரு கட்டத்தில் ஒரு தந்தை மகனையும் காரில் ஏத்திக் கொண்டு, அடுத்த மாணவன் வீட்டுக்கு போய் விட்டார், இரண்டில் ஒன்று பார்க்க.

கதவை தட்டி... வாங்கடா வெளியே என்று கத்தி இருக்கிறார். கதவு திறக்கவில்லை. 

வந்த, தகப்பனுக்கும், மகனுக்கும்... இவர்கள் பயத்தில் பதுங்குகிறார்கள் என்று நினைத்து... இன்னும் பலமாக கத்தி இருக்கிறார்கள்.

கதவு திறந்தது.... கூடவே வெளியே வேகமாக வந்த... துப்பாக்கி குண்டு... வெளியே நின்ற தகப்பனின் தலையில் பாய... அவர் விழ.... மகன் ஓட.... போலீசார் வந்தனர்.

இவ்வளவுக்கும் இறந்தவரின் சொந்த மகன் அல்ல... அவருடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் மகன். அந்த தாய் தன், மகனுடன், இந்த பார்ட்னரையும் கிளப்பிக் கொண்டு வந்து விட்டார். விதி யாரை விட்டது.

வீட்டில் கொள்ளை அடிக்க வந்தனர் என்று சொல்ல நினைத்த வெடி வைத்த தகப்பன்.... போலீசார்... இவர்களது முன் பிரச்சனையினை கிளறுவார்கள் என்று புரிந்து, தனது மகனுடன் டீல் போட்டார்.

மகனே.... நான் உள்ள போனா 20 வருசம்.... நீ தான் வெடி வைத்தாய் என்று சொன்னால், சிறுவன் என்ற படியால், 1 வருசம்... 2 வருசம்... நீ தான் வெடி வைத்ததாக ஒத்துக்கொள் மகனே என்று சொல்லி அதுபோலவே போலீசாரிடம் சொல்லி வைத்தனர்.

கையில் காப்பு போட்டு மகனை போலீசார் இழுத்து செல்வதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார் தகப்பன்.

விசாரணையில், மகன் கடைசி நேரத்தில், தகப்பனின் டீலினை சொல்லி, தான் தப்பிக்க கொள்ள... தகப்பன் கம்பி எண்ணுகிறார்.

https://www.telegraph.co.uk/news/2018/05/08/father-blamed-son-murder-committed-jailed-least-26-years/

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.