Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுண்கடன், வட்டி சுமையால் ஏற்பட்ட விபரீதம்: இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Women-Scucide-In-Karadiyanadu-Batticalao.jpg

நுண்கடன், வட்டி சுமையால் ஏற்பட்ட விபரீதம்: இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை!

நுண்கடன் மற்றும் வட்டி சுமையால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துளெ்ள சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கணவனுக்குப் பெற்றுக்கொடுத்த கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியாது கடன் பழு காரணமாக மனைவி இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம், மட்டக்களப்பு, பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு சிவத்தபோக்கடி கிராமத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் குணரத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த இளம் பெண்ணுக்கு ஆறு வயதில் ஒரு மகளும், 15 மாதங்களேயான ஒரு கைக்குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த இளம் பெண் நுண்கடன் வழங்கும் இரு நிறுவனங்களிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் கடன் பெற்று அதனை மேசன் வேலை செய்யும் தனது கணவன் தொழிலுக்குச் சென்று வருவதற்காக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதேவேளை, கணவன் மது போதையுடன் தலைக்கவசமின்றியும் மோட்டார் சைக்கிளின் சாரதி அனுமதிப்பத்திரம், இன்சூரன்ஸ் இன்றியும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ததால் போக்குவரத்துப் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டு 30 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாகச் செலுத்த வேண்டியதாகிவிட்டது.

இதற்கான பணத்தை இன்னொருவரிடம் வட்டிக்குப் பெற்று தண்டப் பணம் செலுத்தியுள்ளார். அதேவேளை, வட்டிக்குப் பெற்ற பணத்தை மீளச் செலுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை விற்று அந்தப் பணத்தைச் செலுத்தியுள்ளார். அத்துடன் நகைகளும் அடைவு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடும்ப பொருளாதார தகராறு காரணமாக கணவன் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலைமை காரணமாக குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் பெற்றோர், சகோதரி வசிக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

கடனைத் தீர்க்க முடியாத மன அழுத்தம், கணவன் பிரிந்து சென்ற விரக்தி ஆகியவற்றால் அவர் கடுமையா பாதிக்கப்பட்டு எவருடனும் மனம் விட்டுப் பேசாது இருந்துள்ளார். இந்நிலையில், தான் குறித்த வீட்டில் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று, தனது கைக் குழந்தையை குளிப்பாட்டி, படுக்கையறையில் உறங்க வைத்த பின்னர் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

http://athavannews.com/நுண்கடன்-வட்டி-சுமையால்/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு மாதிரி கந்துவட்டி தொல்லை தொடங்கிவிட்டது. இந்த பேய்களை எப்படி விரட்டுவது.

சிங்களவன் ஒரு பக்கம் இவன்கள் ஒரு பக்கம். மக்களின் கஷ்டத்தைபயன்படுத்தி இரத்தை உறிஞ்சும் அட்டைகள்,

மக்கள் தான் அவதானமாக இருக்கனும், இருப்பதை வைத்து முன்னேறினால், எந்த தொல்லையுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தமிழ்நாடு மாதிரி கந்துவட்டி தொல்லை தொடங்கிவிட்டது. இந்த பேய்களை எப்படி விரட்டுவது.

சிங்களவன் ஒரு பக்கம் இவன்கள் ஒரு பக்கம். மக்களின் கஷ்டத்தைபயன்படுத்தி இரத்தை உறிஞ்சும் அட்டைகள்,

மக்கள் தான் அவதானமாக இருக்கனும், இருப்பதை வைத்து முன்னேறினால், எந்த தொல்லையுமில்லை

உடையார் ஜீ 
இது வட்டிக்காரனின் தவறு அல்ல, துப்புக்கெட்ட புருசனின் தவறு 
வட்டிக்கு வாங்கும்போதே தெரியும்தானே திரும்ப கொடுக்கவேண்டும் என்று...? எமது தமிழினம் புலத்தில்  சீரழிய முதற்காரணம் பாழாய்ப்போன குடி...அன்பான மனைவி அழகான இரண்டு குழந்தைகள் இதற்க்கு மேல் என்ன வேண்டும், இந்த நாசமாய் போனவனுகளால் பாவம் பெண்பிள்ளைகள்     

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உடையார் ஜீ 
இது வட்டிக்காரனின் தவறு அல்ல, துப்புக்கெட்ட புருசனின் தவறு 
வட்டிக்கு வாங்கும்போதே தெரியும்தானே திரும்ப கொடுக்கவேண்டும் என்று...? எமது தமிழினம் புலத்தில்  சீரழிய முதற்காரணம் பாழாய்ப்போன குடி...அன்பான மனைவி அழகான இரண்டு குழந்தைகள் இதற்க்கு மேல் என்ன வேண்டும், இந்த நாசமாய் போனவனுகளால் பாவம் பெண்பிள்ளைகள்     

ஆமா நம்முடைய ஆட்கள்தான் திருந்த வேண்டும்; எப்பதான் யோசிப்பார்களோ. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தமிழ்நாடு மாதிரி கந்துவட்டி தொல்லை தொடங்கிவிட்டது. இந்த பேய்களை எப்படி விரட்டுவது.

சிங்களவன் ஒரு பக்கம் இவன்கள் ஒரு பக்கம். மக்களின் கஷ்டத்தைபயன்படுத்தி இரத்தை உறிஞ்சும் அட்டைகள்,

மக்கள் தான் அவதானமாக இருக்கனும், இருப்பதை வைத்து முன்னேறினால், எந்த தொல்லையுமில்லை

இது மட்டுமா.. அண்மையில்.. கடன் கொடுத்து.. தமிழ் பெண்களை கடன்காரிகள் ஆக்கிவிட்டு.. மூதூர் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் பாலியல் லஞ்சம் பெறும் ஒரு முஸ்லீம் வியாபாரியின் செயல்கள் பிடிபட்டிருந்தன. 

என்ன.. தேர்தலுக்கு தேர்தல்.. கிழக்கின் விடியல்.. வடக்கின் வசந்தம் என்று கொண்டு சிங்கள.. அரச கூலிகள்.. வாக்கை வாங்கி ஆட்சியாளர்களின் எடுபிடிகளாகி வந்தாலும்.. எம்மவர்களின் இப்படியான அடிப்படைப் பிரச்சனைகளைக் கூட கவனிக்க ஆக்களில்லை. 

சிங்களவர்களுக்கு சரியான சமுர்த்தி திட்டங்களும்.. சமுர்த்திக் கொடுப்பனவுகளும்.. சமுர்த்தி வங்கி உதவிகளுக்கும் கிடைக்கும் நிலையில்.. எம்மவர்களுக்கு அதுகூட வாக்கு அரசியலாக்கப்பட்டுள்ளது.

இதனை சில கீழ்புத்தி அமைப்புக்களும்.. அரச எடுபிடிகளும்.. கீழ்புத்தி தனிநபர்களும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.