Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை

கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை

 

கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என்று தனது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லீம் மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் குறித்த ஜனாதிபதி செயலணிக்கு பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், பொருத்தமான இருவரை சிபாரிசு செய்யுமாறு அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.

எனினும், இதுவரை குறித்த இருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு காலத்தில் புத்திஜீவிகளினால் நிரம்பியவர்களாக நம்மவர்கள் இருந்தனர். கடந்த காலத்தில் தமிழர்களின் தலைமைகள் என்று கூறிக்கொண்டவர்களின் விவேகமற்ற வீரத்தின் வெளிப்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளில் ஒன்றாக புத்திஜீவிகளுக்கும் தற்போது நம்மத்தியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது..

கடந்த கால ஆயுதச் செயற்பாடுகளினால் பல புத்திஜீவிகள் விவேகமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். எஞ்சியிருப்பவர்களும் சமூகம் சார் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

இவ்வாறான காரணங்களினால் குறித்த செயலணிக்கு பொருத்தமான தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதநிதிகளை நியமிக்க முடியாமல் இருக்கின்றது. எனினும் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் விரைவில் இருவர் நியமிக்கப்படுவார்கள்´ என்று தெரிவித்தார்.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆடத் தெரியாதவள்.. மேடை சரியில்லை என்றாளாம்.

இந்தக் குத்தியர்களை இன்னும் நம்புவர்களுக்கே இந்த விளக்கம். 

மொட்டைகளை தவிர வேறு யாரும் இடம்பெற முடியாது.. அது மகிந்த.. கோத்தா கும்பலின் முடிந்த முடிவு. அதை வெளில சொல்ல துணிவின்றி.. இப்படி மென்று விழுங்குது.. எஜமான அடிவருடிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

ஆடத் தெரியாதவள்.. மேடை சரியில்லை என்றாளாம்.

இந்தக் குத்தியர்களை இன்னும் நம்புவர்களுக்கே இந்த விளக்கம். 

மொட்டைகளை தவிர வேறு யாரும் இடம்பெற முடியாது.. அது மகிந்த.. கோத்தா கும்பலின் முடிந்த முடிவு. அதை வெளில சொல்ல துணிவின்றி.. இப்படி மென்று விழுங்குது.. எஜமான அடிவருடிகள். 

அதே... தான், நெடுக்ஸ்.
விழுந்தாலும்... மீசையில், மண் ஓட்டவில்லை  என்று... 
டக்ளஸ்... "பீலா"  விடுகிறார். 

நாங்கள்... சம்பந்தன், சுமந்திரங்களின்... பீலா  கதையளை. கேட்டு...
காது, புண்ணாகி போய்.. இருக்கிற நிலையிலை...
இது, வேறை... அலுப்பாக இருக்குது.  

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:


கடந்த கால ஆயுதச் செயற்பாடுகளினால் பல புத்திஜீவிகள் விவேகமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் தன் பங்கு எவ்வளவு இருந்தது என்பதை மறைப்பதோடு, ஏதோ பொருத்தமான தமிழர் இல்லாததனாலேயே தமிழ் பிரதிநிதிகள் உள்வாங்கப்படவில்லை என்று தன் இயலாப்  பக்கத்தை மறைக்கப்பார்க்கிறார். பாவம்! சும்மா ஒரு படமாவது காட்ட வேண்டாமோ? தான் ஒரு பலமான அமைச்சர் என்று. எந்த ஒரு அதிகாரமுமில்லாத அமைச்சு, செய்த  துரோகத்து கூலி, சர்வதேசத்துக்கு தமிழரும் எங்கள் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியில் இருக்கிறார்கள், அவர்களுக்கு எந்த பாராபட்க்ஷமும் காட்டப்படுவதில்லை என்கிற பிரச்சாரத்துக்கு இருத்தி விட்டால், அறிக்கை கோரிக்கை எல்லாம் விவஸ்த்தை இல்லாமல் வைக்கிறதே. உம்முடைய வரையறைக்குள் நிண்டு கொள்ளும். இல்லை மூக்குடைபடுவீர்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

இதில் தன் பங்கு எவ்வளவு இருந்தது என்பதை மறைப்பதோடு, ஏதோ பொருத்தமான தமிழர் இல்லாததனாலேயே தமிழ் பிரதிநிதிகள் உள்வாங்கப்படவில்லை என்று தன் இயலாப்  பக்கத்தை மறைக்கப்பார்க்கிறார். பாவம்! சும்மா ஒரு படமாவது காட்ட வேண்டாமோ? தான் ஒரு பலமான அமைச்சர் என்று. எந்த ஒரு அதிகாரமுமில்லாத அமைச்சு, செய்த  துரோகத்து கூலி, சர்வதேசத்துக்கு தமிழரும் எங்கள் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியில் இருக்கிறார்கள், அவர்களுக்கு எந்த பாராபட்க்ஷமும் காட்டப்படுவதில்லை என்கிற பிரச்சாரத்துக்கு இருத்தி விட்டால், அறிக்கை கோரிக்கை எல்லாம் விவஸ்த்தை இல்லாமல் வைக்கிறதே. உம்முடைய வரையறைக்குள் நிண்டு கொள்ளும். இல்லை மூக்குடைபடுவீர்.  

அப்படி... கிடைத்திருந்தாலும்,  கிழிச்சு தொங்க விட்டிருப்பார்களா?
இல்லை... நக்குற ++++++  ###### ++++ மாறவே.. மாறாது. 

வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்; சேர்ப்பர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2020 at 07:12, Dash said:

வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்; சேர்ப்பர்களா?

 
கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு தமிழ் புத்திஜீவிகளை நியமிப்பது தொடர்பாக...
கிழக்கு தொல்பொருள் ஜனாதிபதி செயலணிக்கு இலங்கையில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் ஆர்வம் காட்டாததன் காரணமாக தமிழர்களை நியமனம் செய்வது சவாலாக இருக்கிறது என்று கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அறிவித்து இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் .
இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்பதை அமைச்சருக்கும் ஊடகங்களுக்கும் இந்தப் பதிவு மூலமாக வெளிப்படையாக அறிவிக்கிறேன்.
தொல்பொருளியல் துறையை நான் சாராதவனாக இருந்த போதிலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் தொல்பொருளியல் துறை சாராத மகப்பேற்றியல் நிபுணர் கபில குணவர்தன உட்பட பலர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் சமுதாய மருத்துவ நிபுணராக கடமையாற்றிவரும் எனக்கு ஒரு துறை சார் நிபுணராக செயலணியில் கடமையாற்ற முழுமையான தகுதி இருக்கிறது.
இதை விட நான் கட்சி அரசியலுக்கு அப்பாற்ப்பட்டவன் என்பதையும் 2015 யாழ் மருத்துவச் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் வட மாகாண சபையினால் மறைக்கப்பட்ட சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து மாசடைந்த உண்மைகளை அம்பலப் படுத்தியவன் என்பதையும் அப்போது இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அமைச்சர் நன்றாக அறிவார் மேலும் நான் கிழக்கை சாராதவனாக இருப்பதானால் பல முரண்பாடுகளுக்கு அப்பால் இந்த விடயத்தில் நடுநிலையாக சிந்திக்க முடியும். நான் தொடர்ச்சியாக மருத்துவத்துக்கு அப்பாலும் பல ஆய்வுகளை மேற்கொண்டுவருவதும் கிழக்கில் கூட கடந்தகாலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு துறைசார் நிபுணராக கல்குடாவில் மதுபானசாலை இயங்குவதற்கு போதுமான நீர்வளம் அங்கு காணப்படவில்லை என்று தெரிவித்து இருந்ததையும் அனைவரும் அறிவர். இந்தப் பின்புலத்தில் அமைச்சரின் சாதகமான முடிவையும் நியமனக் கடிதத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
MBBS (Jaffna), PGD (Population Studies), MSc (Community Medicine), MD (Community Medicine), FCCP (Sri Lanka), FRSPH (UK)
சான்றளிக்கப்பட்ட சமுதாய மருத்துவ நிபுணர்
வருகை நிலை விரிவுரையாளர், யாழ் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.