Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனை கைதிக்கு உறுப்புரிமையை வழங்கி அரசாங்கம் உலகச்சாதனை..!: தலத்தா அத்துகோரல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(செ.தேன்மொழி)
'வியத்மக ' அமைப்பினூடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சிமுறையை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கத்தை அமைத்தவர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கி உலகச்சாதனை புரிந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தன்னை மாறுப்பட்ட பண்புக் கொண்ட ராஜபக்ஷ ஒருவராகவே காண்பித்துக் கொண்டிருந்தார். வியத்மக அமைப்பின் ஊடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சி முறையை முன்னெடுக்கப்போவதாகவே தெரிவித்து வந்தார். அதன் காரணமாகவே மக்கள் அவரை வெற்றிப்பெறச் செய்தனர். ஆனால், தற்போது புத்திஜீவிகள் இருக்கின்றார்களா என்பது  கேள்விக்குறிய விடயமே . மறுப்புறம் மரண தண்டனை கைதி ஒருவருக்கு உறுப்புரிமையை பெற்றுக் கொடுத்து உலகச் சாதனையை படைத்துள்ளது தற்போதைய அரசு . இந்நிலையில் ஜனதிபதி மற்றும் பிரதமர் மீது மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்.

மரண தண்டனை கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றுக் கொள்ள முடியாது என்று சட்டமா அதிபர் தெரிவித்திருந்த போதும், அவருக்கு உறுப்புரிமை வழங்கி கறுப்பு தினமாக அன்றைய தினத்தை காண்பித்துள்ளனர். இந்நிலையில் எத்தனை கொலைகளைச் செய்தாலும் தேர்தலின் போது அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டால் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த அரசாங்கம் செய்து காண்பித்துள்ளது.

ராஜபக்ஷர்கள் தங்களது குடுப்ப அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் , சர்வாதிகார பண்புகளை உள்ளடக்கும் வகையிலும் 2010 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவந்திருந்தார்கள். அதேப்போன்று தற்போதும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதற்கு முயற்சித்து வருகின்றார்கள். காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவின் ஆட்சி முறையை மீண்டும் கொண்டுவருவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான பலம் பொருந்திய அதிகாரம் ஒன்றை ஜே.ஆர். போன்ற ஒரு நபர் பெற்றுக் கொண்டதினால் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால் ராஜபக்ஷர்களின்  கையில் இந்த அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றால் எதிர்நோக்க வேண்டி ஏற்படும் விளைவுகள் தொடர்பில் கூறமுடியாது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மக்களுக்கே அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது ஊடகங்களும் சுதந்திரமாக செய்றபட்டன. இந்நிலையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்து தங்களது குடும்ப அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றனர். போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை நாங்கள் வரவேற்கின்றோம். இதேவேளை இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடைச் செய்வதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தையும் வரவேற்கின்றோம்.

ஆனால் அதற்குள்ளும் ஏதாவது திட்டம் இருக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டிலிருந்து மாட்டு இறைச்சியை இந்நாட்டுக்கு எடுத்துவரும் உயர்நிலை நபரொருவருக்கு வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்காக இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. பௌத்த நாடான இலங்கைக்கு மரண தண்டனை கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்குவதை பார்க்கிலும் , இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதினால் பாரியதொரு பாவம் வந்து விடாது என்றே நான் எண்ணுகின்றேன் என்றார் https://www.virakesari.lk/article/89643

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிழம்பு said:

பௌத்த நாடான இலங்கைக்கு மரண தண்டனை கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்குவதை பார்க்கிலும் , இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதினால் பாரியதொரு பாவம் வந்து விடாது என்றே நான் எண்ணுகின்றேன் என்றார்

ஏழுக்கு மேற்பட்ட தமிழர்களை துடிக்க துடிக்க  கொன்ற சொறிலங்கா ராணுவம் நீதி மன்றத்தில் குற்றவாளியாகியவன் அவனை இதே கோத்தா பொது மன்னிப்பு கொடுக்கும்போது எங்கே போயிருந்தவர் இந்த தலதா அத்துகோரல ?

இதைவிட பெரிய பகிடியெல்லாம் நடக்கும் பொறுத்து இருப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடனில் மூழ்கி தத்தளிக்குது, பாராளுமன்றம் கொலை, கொள்ளைக்காரரால் நிரம்பி வழியுது. ஆட்சிக்கு கொண்டுவந்து, வக்காலத்து வாங்குபவர்கள் வாயிலும் வயித்திலும் அடிச்சுக்கொண்டு புலம்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்னும் நம்பிக்கை ஒளி தெரியுது. 

  • கருத்துக்கள உறவுகள்

 ஒருவேளை இந்த அரசாங்கம், சிறைச்சாலையை பாராளுமன்றத்துக்கு மாற்றி விட்டார்களோ என்கிற சந்தேகமாய் இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

நாடு கடனில் மூழ்கி தத்தளிக்குது, பாராளுமன்றம் கொலை, கொள்ளைக்காரரால் நிரம்பி வழியுது. ஆட்சிக்கு கொண்டுவந்து, வக்காலத்து வாங்குபவர்கள் வாயிலும் வயித்திலும் அடிச்சுக்கொண்டு புலம்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்னும் நம்பிக்கை ஒளி தெரியுது. 

நானும் அப்படித்தான் இந்த உலகவங்கி , ஆசிய அபிவிருத்திவங்கி , தி  எகானாமிஸ்ட் எழுதிய ஆய்வறிக்கைகளை எல்லாம் படித்துவிட்டு இலங்கை எதோ அதள பாதாளத்திற்கு போகப்போகுது மக்களெல்லாம் ரொட்டித்துண்டிற்கே  அடிபட போகினம் என்று பார்த்தால் அவனுகளோ தில்லாக விமானநிலையத்தை சுற்றுலா பயணிகளுக்கு மூடிவிட்டு, மத்தியகிழக்கில் வேலை இழந்து நாடு திரும்பும் எல்லோரையும் கெத்தாக உள் வாங்கிக்கொண்டு Gun மாதிரி  இருக்கிறான்கள், இவையிரண்டும் தான் இலங்கைக்கு அதிக வெளிநாட்டு செலவாணியை ஈட்டித்ததந்ததாக ஞாபகம் , இனிமேல் இந்த புலுடா அறிக்கைகள் சொல்வது போல நாடந்தாலொழிய இவனுகள் சொல்லும் எந்த புருடாவையும் நம்பப்போவதில்லை   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.