Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபை வேண்டுமா.? புதிய அரசமைப்பில் முடிவு.! – அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபை வேண்டுமா.? புதிய அரசமைப்பில் முடிவு.! – அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு.

unnamed-4-2.jpg

எந்தவொரு பயனும் இல்லாதவையாக மாகாண சபைகள் மாறிவிட்டன. எனவே, மாகாண சபை வேண்டுமா.? வேண்டாமா.? என்பதைத் தீர்மானித்தே புதிய அரசமைப்பு கொண்டுவர வேண்டும். அதேவேளை, மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டாம் என்பதே எமது தீர்க்கமான நிலைப்பாடு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சுயாதீன ஆணைக்குழுக்கள் என உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும். ஆனால், கடந்த ஆட்சியில் அவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்படவில்லை. முக்கியமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் சுயாதீனமாகச் செயற்படவில்லை. தன்னை நியமித்த தரப்பினருக்கு தீவிர விசுவாசத்தைக் காட்டினார்.

முன்னர் எமது ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலம்பெயர் அமைப்புகளின் சார்பாகச் செயற்பட்டார் என்ற காரணத்தால் நல்லாட்சியில் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைக்கப்பட்டார். இந்தக் காலப்பகுதியில் அவர் மீது பற்பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில்தான் சுயாதீன ஆணைக்குழு அரசியல் சார்ந்து இருக்க முடியாது என நாம் தொடர்ந்தும் கூறி வந்தோம். எனவேதான் 19 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என்பதே எமது தேர்தல் பிரசாரமாக இருந்தது, 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 20ஆவது திருத்தம் கொண்டு வரப்படும். இது தற்காலிக செயற்பாடு மட்டுமே. புதிதாக உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நாடாளுமன்றம் அதற்கான பொறுப்பை வகிக்கும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

எனவே, நாம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்போம். இதேவேளை, எந்தவொரு பயனும் இல்லாதவையாக மாகாண சபைகள் மாறிவிட்டன . எனவே, மாகாண சபை வேண்டுமா.?  வேண்டாமா.?  என்பதைத் தீர்மானித்தே புதிய அரசமைப்பு கொண்டுவர வேண்டும். அதே வேளை, மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டாம் என்பதே எமது தீர்க்கமான நிலைப்பாடு. இந்த நிலையில் புதிய அரசமைப்பு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் என அவர் கூறினார்.

https://thamilkural.net/newskural/news/73326/

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முன்னர் எமது ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலம்பெயர் அமைப்புகளின் சார்பாகச் செயற்பட்டார் என்ற காரணத்தால் நல்லாட்சியில் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைக்கப்பட்டார்.

இந்தாளுக்கு வந்த நேரத்தைப் பாருங்கள். ஹூல் எப்போது புலிகளுக்கும், புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கும் சார்பாகச் செயற்பட்டார்? முறிந்த பனையெழுதி, சந்திரிக்கா காலத்தில் சந்திரிக்காவின் அரசு சார்பாக "யாழ் பல்கலைக் கழக மனிதவுரிமைகளுக்கான ஆசிரியர்" என்கிற அமைப்பினால் அறிக்கைவிட்டு, புலிகள் மீது வசை பாடியதைத் தவிர இவர் செய்தது ஏதேனும் உண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இந்தாளுக்கு வந்த நேரத்தைப் பாருங்கள். ஹூல் எப்போது புலிகளுக்கும், புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கும் சார்பாகச் செயற்பட்டார்? முறிந்த பனையெழுதி, சந்திரிக்கா காலத்தில் சந்திரிக்காவின் அரசு சார்பாக "யாழ் பல்கலைக் கழக மனிதவுரிமைகளுக்கான ஆசிரியர்" என்கிற அமைப்பினால் அறிக்கைவிட்டு, புலிகள் மீது வசை பாடியதைத் தவிர இவர் செய்தது ஏதேனும் உண்டா? 

முறிந்த பனை எழுதி வெழியிட உதவியதற்காக தற்போது சிலவேளைகளில் வருத்தப்பட்டிருப்பார் போலும்.. 😂

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரஞ்சித் said:

இந்தாளுக்கு வந்த நேரத்தைப் பாருங்கள். ஹூல் எப்போது புலிகளுக்கும், புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கும் சார்பாகச் செயற்பட்டார்? முறிந்த பனையெழுதி, சந்திரிக்கா காலத்தில் சந்திரிக்காவின் அரசு சார்பாக "யாழ் பல்கலைக் கழக மனிதவுரிமைகளுக்கான ஆசிரியர்" என்கிற அமைப்பினால் அறிக்கைவிட்டு, புலிகள் மீது வசை பாடியதைத் தவிர இவர் செய்தது ஏதேனும் உண்டா? 

ஆட்சிகள் மாறினால் எதுவும் நடக்கும் ....இப்ப அரசின் செல்லபிள்ளைகளாக விளங்கும் பலருக்கு இது நடக்கும் காலம் பதில் சொல்லும்...

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.