Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் வடக்கில் பழைய நிலைமை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்- பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நாடு திரும்பினார் | தினகரன்

மீண்டும் வடக்கில் பழைய நிலைமை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்- பிரதமர்

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படாது.

நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.

ஆனால், மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்.

இதேவேளை சட்டவிரோத மீனவ பிரச்சினையை இந்திய பிரதமரிடம் முன்வைத்துள்ளோம்.

நாடு என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாம் கடற்படையினருக்கு அறிவித்துள்ளோம்.

இதேவேளை 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/மீண்டும்-வடக்கில்-பழைய-ந/

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மீண்டுமொரு கிளர்ச்சி ஏற்பட்டால் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலடிதான் மீண்டும் வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று (29) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவரால், திலீபனின் நினைவேந்தல் குறித்து மஹிந்தவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா? என கேட்கப்பட்டடது.

இதற்கு பதிலளித்த மஹிந்த, அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாது. நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும் என்றார்.

https://samugammedia.com/mahinda-says-about-dileepan/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

வடக்கில் மீண்டுமொரு கிளர்ச்சி ஏற்பட்டால் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலடிதான் மீண்டும் வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வைப்பவரே நீங்கள் தான்.
எனவே நல்ல முடிவாக எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தமிழ்கட்சிகள் ஒன்று சேர்ந்து திலீபன் விடயத்தில் இருப்பது பிடிக்கவில்லையாம் திலீபனின் ஆன்மா தமிழர்களை ஒற்றுமையாக்குது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.