Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் அரசமைப்பை , அரசை மதித்து நேர் வழியில் நடந்தால் தீர்வும் தானாக வந்து சேரும்.! - ராஜபக்ச அரசு அறிவுரை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் தீர்வும் தானாக வந்து சேரும்.! - ராஜபக்ச அரசு அறிவுரை.!

Screenshot-2020-10-04-11-22-31-281-com-a

இலங்கை மூவினத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இங்கு தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்."

- இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டின் அரசமைப்பை மதித்து - அரசை மதித்துத் தமிழர்கள் நேர் வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புகளையும் தமிழர்கள் சந்திக்க வேண்டி வந்திருக்கமாட்டாது.

நாம் எமது படை வீரர்களின் தியாகத்தால் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் திரும்பவும் பழைய நிலைக்கே செல்ல முற்படுகின்றார்கள்.

ஆயுதப் போராட்டக் காலத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவு கூர அனுமதி கேட்டு வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலைத் தமிழர்கள் அனுஷ்டித்துள்ளார்கள், போதாக்குறைக்கு இந்து ஆலயம் முன்பும் அவர்கள் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள்.

அரசையும் சிங்கள மக்களையும் கடும் சீற்றமடையைச் செய்யும் வகையில் தமது நடவடிக்கைகளைத் தமிழர்கள் தொடர்ந்தும்  முன்னெடுக்கின்றார்கள். நாட்டைப் பிளவுபடுத்தும்  நோக்கில் அரசியல் தீர்வு  ஒன்று வேண்டும் என ஒற்றைக்காலில் அவர்கள் நிற்கின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்.

ஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் வேண்டாம் என உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

அவ்வாறு நடந்தால் தமிழர்கள் செவ்வாய்க் கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வைக் கேட்க வேண்டி வரும்" - என்றார்

http://aruvi.com/article/tam/2020/10/04/17498/

  • கருத்துக்கள உறவுகள்

நாயை நடுக்கடலில் விட்டாலும் அது நக்கித்தான் தண்ணீர் குடிக்கும். இந்தாளுக்கு அமைச்சர்பதவி அதுவும் வெளிவிவகார அமைச்சுப்பதவி கொடுத்தாலும் அது தன்குணத்திலிருந்து மாறாதுபோலுள்ளது.🤔

9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் தீர்வும் தானாக வந்து சேரும்.! - ராஜபக்ச அரசு அறிவுரை.!

Screenshot-2020-10-04-11-22-31-281-com-a

இலங்கை மூவினத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இங்கு தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்."

- இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டின் அரசமைப்பை மதித்து - அரசை மதித்துத் தமிழர்கள் நேர் வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புகளையும் தமிழர்கள் சந்திக்க வேண்டி வந்திருக்கமாட்டாது.

நாம் எமது படை வீரர்களின் தியாகத்தால் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் திரும்பவும் பழைய நிலைக்கே செல்ல முற்படுகின்றார்கள்.

ஆயுதப் போராட்டக் காலத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவு கூர அனுமதி கேட்டு வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலைத் தமிழர்கள் அனுஷ்டித்துள்ளார்கள், போதாக்குறைக்கு இந்து ஆலயம் முன்பும் அவர்கள் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள்.

அரசையும் சிங்கள மக்களையும் கடும் சீற்றமடையைச் செய்யும் வகையில் தமது நடவடிக்கைகளைத் தமிழர்கள் தொடர்ந்தும்  முன்னெடுக்கின்றார்கள். நாட்டைப் பிளவுபடுத்தும்  நோக்கில் அரசியல் தீர்வு  ஒன்று வேண்டும் என ஒற்றைக்காலில் அவர்கள் நிற்கின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்.

ஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் வேண்டாம் என உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

அவ்வாறு நடந்தால் தமிழர்கள் செவ்வாய்க் கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வைக் கேட்க வேண்டி வரும்" - என்றார்

http://aruvi.com/article/tam/2020/10/04/17498/

முதலில் சிங்கள அரசுகள் தமிழர்களை மதித்து இலங்கைப் பிரசைகளாக நடத்தட்டும். அதன் பின் பார்க்கலாம் தமிழர்களுக்கென இன்னொரு அரசோ நாடோ தேவையா என்பதை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

நாயை நடுக்கடலில் விட்டாலும் அது நக்கித்தான் தண்ணீர் குடிக்கும். இந்தாளுக்கு அமைச்சர்பதவி அதுவும் வெளிவிவகார அமைச்சுப்பதவி கொடுத்தாலும் அது தன்குணத்திலிருந்து மாறாதுபோலுள்ளது.🤔

மற்ற அமைச்சர்கள் சிறப்பானவர்கள், இவர்தான் பொருத்தமற்றவர் என்றவறாக அல்லவா எழுதியிருக்கிறீர்கள்? இது உண்மைதானா?

3 hours ago, Ellam Theringjavar said:

முதலில் சிங்கள அரசுகள் தமிழர்களை மதித்து இலங்கைப் பிரசைகளாக நடத்தட்டும். அதன் பின் பார்க்கலாம் தமிழர்களுக்கென இன்னொரு அரசோ நாடோ தேவையா என்பதை.

இனித்தானா “தமிழர்களுக்கென இன்னொரு அரசோ நாடோ தேவையா என்பதை“ பார்க்கப்போகிறீர்கள்?

  • 2 weeks later...
On 4/10/2020 at 14:49, கற்பகதரு said:

மற்ற அமைச்சர்கள் சிறப்பானவர்கள், இவர்தான் பொருத்தமற்றவர் என்றவறாக அல்லவா எழுதியிருக்கிறீர்கள்? இது உண்மைதானா?

இனித்தானா “தமிழர்களுக்கென இன்னொரு அரசோ நாடோ தேவையா என்பதை“ பார்க்கப்போகிறீர்கள்?

பதிவிலேயே பதில் இருக்கிறது. அரசு எல்லா மக்களையும் மதித்து நடத்தினால் பின் ஏன் தனிநாடு தனியரசு என்ற எண்ணம் வரும். வராது.

ரோகண விசயவீர முழு நாட்டையும் ஆளப்பார்த்தார். வந்த வேகத்திலேயே தொலைந்து போனார். ஏன் அவருக்கு ஆசையிருந்தது. தேவையிருக்கவில்லை.

தமிழர்கள் வடக்கு கிழக்கு மட்டும் கேட்டார்கள். ஆசையல்ல. தேவையிருந்தது.

இன்னுமொருதரம், ஆளும் வர்க்கம் சரியாய் இருப்பின் மக்களுக்கு பிரிக்கவேண்டும் எண்ணம் வராது.

 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Ellam Theringjavar said:

பதிவிலேயே பதில் இருக்கிறது. அரசு எல்லா மக்களையும் மதித்து நடத்தினால் பின் ஏன் தனிநாடு தனியரசு என்ற எண்ணம் வரும். வராது.

ரோகண விசயவீர முழு நாட்டையும் ஆளப்பார்த்தார். வந்த வேகத்திலேயே தொலைந்து போனார். ஏன் அவருக்கு ஆசையிருந்தது. தேவையிருக்கவில்லை.

தமிழர்கள் வடக்கு கிழக்கு மட்டும் கேட்டார்கள். ஆசையல்ல. தேவையிருந்தது.

இன்னுமொருதரம், ஆளும் வர்க்கம் சரியாய் இருப்பின் மக்களுக்கு பிரிக்கவேண்டும் எண்ணம் வராது.

 

கனடாவில்  கியூபக்மக்கள்  சிறந்த  உதாரணம்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2020 at 16:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆயுதப் போராட்டக் காலத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவு கூர அனுமதி கேட்டு வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலைத் தமிழர்கள் அனுஷ்டித்துள்ளார்கள், போதாக்குறைக்கு இந்து ஆலயம் முன்பும் அவர்கள் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள்.

இதற்கு சிங்களமக்களும் அரசும் ஏன் சீற்றமடைய வேண்டும் என்று தெரியலியே.

On 4/10/2020 at 16:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை மூவினத்தவர்களுக்கும் சொந்தமான நாடு

நீங்களும் உங்கள் சட்டமும் அன்றும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை  இன்றும் இல்லை. எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் ஏதேதோ பேசுகிறீர்கள். அதனாற்தான் இந்தப் பிரச்சனை தொடர்கிறது, நீங்கள் யாரை விலை பேசினாலும், வளைத்துப்போட்டாலும்  பிரச்சனை  தீராது. 

On 4/10/2020 at 16:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்தினோம்.

அப்படி ஏதும் மாற்றம் நிகழவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக நீங்கள் காட்ட முயற்சிக்கிறீர்கள் உங்களிடம் சோரம் போனவர்களூடாக. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.