Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செயல் தலைவர் பதவி: பாஜகவில் இணையும் குஷ்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செயல் தலைவர் பதவி: பாஜகவில் இணையும் குஷ்பு

spacer.png

 

நடிகையும் காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக, பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைக்கிறது.

ஏற்கனவே திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து குஷ்பு கருத்து தெரிவித்தபோது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அது அவரது அரசியல் பாதை பாஜகவை நோக்கி திரும்புவதற்கான தொடக்கப்புள்ளி என்று அப்போது சிலர் யூகித்தனர். அப்போது தன்னை தொடர்புகொண்ட பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி நான் பதில் கூற மாட்டேன் என்று தொடர்ந்து மௌனம் காத்து வந்தார் குஷ்பு. ஆனால் இன்று (அக்டோபர் 12) டெல்லியில் பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைகிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டதும் குஷ்பு தொடர்ந்து காங்கிரஸ் நிகழ்ச்சிகளை பாராமுகமாகவே இருந்து வந்தார். அண்மையில் தமிழகத்துக்கான புதிய பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தபோது காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் குஷ்பு தலைகாட்டினார். அதன் பிறகு நேற்று திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் சங்கமம் நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் சங்கமம் நடந்துகொண்டிருக்கும்போதே குஷ்பு பாஜகவில் சங்கமம் என்ற தகவல் காங்கிரஸ் கட்சியினருக்குத் தெரியவந்தது.

 

தமிழக காங்கிரஸில் சிலரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “குஷ்பு ஆட்சி அதிகாரமுள்ள கட்சியில் இடம் வேண்டும் என்று பேசி முடித்துவிட்டார். அதற்கான பாதைக்காகத்தான் புதிய கல்விக்கொள்கை ஆதரவுநிலை எடுத்தார். தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியைவிட மாநில அரசியலில்தான் குஷ்புவுக்கு கவனம் இருந்தது. தமிழகத்தில் காங்கிரஸில் வலிமையான பதவி கேட்டார். ஆனால் அதற்கு மேலிடம் உடனடியாக சம்மதிக்கவில்லை. குஷ்பு ஒரு முடிவெடுத்துவிட்டார் என்பதை அறிந்த அவருக்கு நெருக்கமான முன்னாள் தலைவர் இளங்கோவனும் குஷ்புவிடம் பேசியிருக்கிறார்.

அண்மையில் காலமான வசந்தகுமார் வகித்த செயல் தலைவர் பதவியைக் கூட பேசி வாங்கித் தருவதாக இளங்கோவன் சொல்லியும் குஷ்பு சம்மதிக்கவில்லை. அதற்கு மேல் யாரும் அவரோடு மல்லுக்கட்ட விரும்பவில்லை” என்றனர்.

நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட குஷ்புவிடம், “நீங்கள் பாஜகவுக்கு போவதாக தகவல் வருகிறதே?’.... ‘நீங்கள் இப்போது காங்கிரஸில் இருக்கிறீர்களா?” என்ற கேள்விகளை திரும்பத் திரும்ப செய்தியாளர்கள் கேட்டபோது, “நோ கமெண்ட்ஸ். கருத்து சொல்ல விரும்பல” என்ற பதிலை மட்டுமே சொல்லிக்கொண்டு விமான நிலையத்துக்குள் சென்றார்.

தமிழக பாஜக தரப்பிடம் இதுகுறித்து கேட்டபோது, “குஷ்பு டெல்லியில் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்” என்றனர். பாஜகவில் தமிழகத்தில் ஏற்கனவே போதுமான அளவு துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுவிட்ட நிலையில், குஷ்புவுக்கு என்ன பதவி வழங்குவார்கள் என்ற குழப்பம் பாஜகவினரிடையே ஏற்பட்டுள்ளது.


 

 

 

https://minnambalam.com/politics/2020/10/12/15/kushboo-joins-bjp-from-congress

  • கருத்துக்கள உறவுகள்

குசுப்பு.... தமிழ் நாட்டிலை, இருக்காத கட்சியே இல்லைப் போலுள்ளது. 😁🤣

  • கருத்துக்கள உறவுகள்

mqdefault.jpg

அண்ணை உங்கட எல்லா போட்டோவிலும் தோற்றம் மறைவு என்டு எழுதி இருக்கே ஏன் .?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

குசுப்பு.... தமிழ் நாட்டிலை, இருக்காத கட்சியே இல்லைப் போலுள்ளது. 😁🤣

கார்த்திக்....பிரபு....வாசு.....சுந்தர் எல்லாம் கட்சி வைச்சிருந்தவர்களா? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வம்: குஷ்பு

spacer.png

 

கடந்த மார்ச் மாதமே காங்கிரஸில் இருந்து விலக முடிவெடுத்துவிட்டதாக இன்று (அக்டோபர் 12) பாஜகவில் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்தவருமான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று காலை விலகிவிட்டு, மதியம் பாஜகவில் சேர்ந்துவிட்டார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி. ரவி,தமிழக பாஜக தலைவர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். பின் பாஜகவின் அகில இந்திய தலைவர் நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாஜகவில் சேர்ந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் குஷ்பு. "பாஜக எனக்கு வழங்கும் எந்தவொரு வேலையையும் நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார் குஷ்பு.

"கட்சிக்குள்ளேயே உயர்ந்த மட்டத்தில் அமர்ந்திருக்கும் சிலர் யதார்த்தத்துடனோ அல்லது பொதுமக்களுடனோ எந்த தொடர்பும் இல்லாதவர்கள். அவர்களால்தான் கட்சிக்கு உண்மையாக பணியாற்ற விரும்பிய என்னைப் போன்றவர்கள் அடக்கப்படுகிறார்கள், வெளியேற்றப்படுகிறார்கள்” என்று சோனியாவுக்கு குஷ்பு கடிதம் எழுதினார்.

 

ஆங்கில நாளேடான தி இந்துவிடம் பேசிய குஷ்பு, “காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக நினைத்து நான் எழுதிய இந்த கடிதத்தை கடந்த மார்ச் மாதமே தயார் செய்துவிட்டேன். சோனியா காந்தி முன்னிலையில் நான் காங்கிரஸில் சேர்ந்ததால் அவரிடம் என் ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைக்க விரும்பினேன். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக என்னால் சோனியாவை சந்திக்க முடியவில்லை. இந்தக் கடிதத்தை எழுதியபோது நான் பாஜகவில் சேரப் போவதாக நினைக்கவில்லை” என்று குறிப்பிட்ட குஷ்பு,

"எதிர்க்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருப்பவர் என்ற வகையில், அரசாங்கத்தின் கொள்கைகளைத் தாக்குவது எனது கடமையாக இருந்தது. ஆனால் பா.ஜ.க. தனது சித்தாந்தம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் தெளிவாக இருக்கிறது என்பதை படிப்படியாக உணர்ந்தேன். பிரதமர் மோடி மீது மக்கள் மீண்டும் காட்டிய நம்பிக்கையும் எனக்குப் புரிந்தது”என்றார் குஷ்பு.

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற ஒரு கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது, “பாஜக சிறுபான்மையினருக்கு எதிரி என்றால், காங்கிரஸ் இந்துக்களின் எதிரியா?” என்று திருப்பிக் கேட்டுள்ளார் குஷ்பு.

மாநில அரசியலில்தான் தனக்கு ஆர்வம் என்பதை சூசகமாகத் தெரிவிக்கும் வகையில், “தமிழக பாஜக எனக்கு அளிக்கும் வேலைத் திட்டத்துக்காக காத்திருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார் குஷ்பு.

இதன் மூலம் தேசிய அரசியலை விட மாநில அரசியலில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ள குஷ்பு வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://minnambalam.com/politics/2020/10/12/52/kushboo-waiting-state-bjp-political-assignment

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

குசுப்பு.... தமிழ் நாட்டிலை, இருக்காத கட்சியே இல்லைப் போலுள்ளது. 😁🤣

 காற்றுள்ளபோதே துற்றி கொள்ள தெரிந்து வைத்திருக்கின்றார், பிழைக்க தெரிந்தவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஷ்புவின் வருகை பா.ஜ.கவுக்கு உதவுமா? ஆய்வாளர்களின் பார்வை என்ன?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன் 
  • பிபிசி தமிழ்
12 அக்டோபர் 2020
குஷ்பு
 

திரைப்பட நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறார். குஷ்புவின் இந்த முடிவு அவருக்கோ பாரதிய ஜனதா கட்சிக்கோ பலன் அளிக்குமா?

2007வாக்கில் தமிழ் இதழ் ஒன்றில் குஷ்புவின் பேட்டி ஒன்று வெளியானது. அந்த பேட்டி தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவதாகக் கூறி பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. 

அந்தத் தருணத்தில் விளக்கமளித்த குஷ்பு, தான் பேட்டியளித்ததை மறுக்கவோ, பின்வாங்கவோ செய்யாமல் தான் சொன்னதைத் தெளிவாகப் புரியவைக்க முயன்றார். 

அவரது கருத்துகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை உறுதியாகச் சந்தித்தார். திரைக்கலைஞரான குஷ்பு குறித்த பிம்பத்தை அந்த நிகழ்வு வெகுவாக மாற்றியது. 

தெளிவு, துணிச்சல், அரசியல் பார்வை ஆகியவை கொண்டவராக உருவெடுத்திருந்த குஷ்பு, 2010வாக்கில் தி.மு.கவில் இணைந்தார். அதற்குப் பிறகு காங்கிரஸ், இப்போது பா.ஜ.க என பத்தாண்டுகளுக்குள் 3வது கட்சிக்குத் தாவியிருக்கிறார் அவர். 

2021ல் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சி அமைப்புகளை வலுப்படுத்தியிருப்பதோடு, புதிய நிர்வாகிகள் நியமனம், பல கட்சிகளிலிருந்தும் தொண்டர்கள், தலைவர்களைச் சேர்ப்பது என பரபரப்பாக இருக்கிறது மாநில தலைமை. 

ஏற்கனவே தி.மு.கவிலிருந்து வி.பி. துரைசாமி, கு.க. செல்வம் ஆகியோர் பா.ஜ.கவில் இணைந்தது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது காங்கிரசில் இருந்து குஷ்புவும் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

குஷ்பு
 

தங்கள் கட்சியை விட்டு விலகி, குஷ்பு பா.ஜ.கவில் இணைந்திருப்பதை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது போல காட்டிக்கொண்டிருக்கிறது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, "குஷ்பு விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை. குஷ்பு கட்சியில் இருந்தபோதும் கொள்கைப் பிடிப்புடன் செயல்படவில்லை," என்று தெரிவித்திருக்கிறார். 

ஆனால், பா.ஜ.கவில் அவர் சேர்ந்திருப்பது அக்கட்சி குறித்த நேர்மறையான பார்வையை உருவாக்க உதவும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான மாலன்.

"வாக்காளர்களைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தமான ஒரு பார்வையின் அடிப்படையில்தான் வாக்களிக்கிறார்கள். அம்மாதிரி ஒரு பார்வையை உருவாக்க பிரபலமான முகங்கள் தேவை. அரசியல் கட்சிகளில் சினிமா நட்சத்திரங்கள் அந்த இடத்தைத்தான் நிரப்புகிறார்கள். சினிமா நட்சத்திரங்களைப் பொறுத்தவரை, மற்றவர்களை விட அவர்களுக்கு மக்களிடம் அதிக நெருக்கம் இருக்கிறது. அந்த நெருக்கமும் மரியாதையும் அறிவாளிகளுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ கிடையாது. ஆகவே குஷ்பு போன்ற ஒரு பிரபல நட்சத்திரம் பா.ஜ.கவில் இணைவது, அந்த கட்சிக்கு ஒரு பெரிய வரவுதான்" என்கிறார் மாலன். 

மாலன்
 

குஷ்பு பிரபல நட்சத்திரமாக இருப்பதால், பா.ஜ.கவால் இதுவரை அணுக முடியாத இடங்களை அணுக முடியும்.

"பா.ஜ.கவுக்கு ஒரு நகர்ப்புற கட்சி என்ற இமேஜ் இருக்கிறது. குஷ்புவால் கிராமப்புறங்களுக்குச் சென்று அந்த இமேஜை மாற்ற முடியும். மேலும் அவரால் பெண்களை எளிதில் அணுக முடியும். தவிர, இந்துத்துவா கட்சி என்ற பெயரை சமன்படுத்தவும் குஷ்புவின் வருகை உதவும்" என்கிறார் மாலன். 

ஆனால், ஊடக கவனத்தைத் தவிர பெரிதாக எந்த பலத்தையும் பா.ஜ.கவுக்கு இது அளிக்காது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

"தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு இன்னொரு முகம் கிடைத்திருக்கிறது. கு.க. செல்வம் வந்து சேர்ந்தார்; வி.பி. துரைசாமி வந்து சேர்ந்தார், அணண்ணாமலை வந்து சேர்ந்துவிட்டார், குஷ்புவும் வந்துவிட்டார் என்பது போன்ற ஒரு பேச்சை ஏற்படுத்த இந்த வருகை உதவும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி இதனால் மாறும் என நான் கருதவில்லை" என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தனிநபர் செல்வாக்குமிக்க தலைவர்கள் மிகக் குறைவு என்று சுட்டிக்காட்டும் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் செய்த காரியங்களால் பலனடைந்த மக்கள் அக்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். ஆகவே, பெரிய தலைவர்கள் விலகிச் சென்றால்கூட, அக்கட்சியின் வாக்கு வங்கி சேதமடையாது. வாக்கு ரீதியாக பா.ஜ.கவுக்கு பெரிய பலனும் கிடைக்காது என்கிறார் அவர். 

பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் செயல்படும் குஷ்புவுக்கு இது எந்த விதத்தில் உதவும்? "தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியலில் தற்போது தமிழ்நாட்டில் இருந்து யாரும் இல்லை. அதனை மாற்றியமைக்கும்போது அதில் இவர் இடம்பெறலாம். தவிர, குஷ்பு பதவிக்காக சென்றிருப்பார் என தோன்றவில்லை. அப்படியிருந்தால் பா.ஜ.க. 2014ல் வெற்றிபெற்றபோதே அங்கு சென்றிருக்கலாம்" என்கிறார் மாலன். 

ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ பிரச்சனைகள் சார்ந்தே தனது அரசியல் முடிவுகளை குஷ்பு மேற்கொள்வதாகச் சொல்லும் ராதாகிருஷ்ணன், அவர் தி.மு.கவிலிருந்து விலகி, அதன் இயல்பான தோழமை கட்சியான காங்கிரஸில் சேர்ந்ததே தவறு என்கிறார். இப்போது பா.ஜ.கவில் என்ன காரணத்திற்காக இணைந்திருக்கிறார் என்பது 2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே தெளிவாகிவிடும் என்கிறார்.

ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், R K RADHAKRISHNAN

 
படக்குறிப்பு, 

பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்

"குஷ்பு காங்கிரஸில் இருந்தபோது தீவிரமாக செயல்பட்டவரில்லை. பொதுவாக காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான செய்தித் தொடர்பாளர்கள் மிகவும் பரபரப்பாக, எப்போது பிஸியாக இருப்பார்கள். ஆனால், குஷ்பு மிகவும் தேர்வு செய்துதான் பேசுவார். கூட்டங்களுக்கு எப்போதாவதுதான் வருவார். 2016, 2019 தேர்தலில் இடம் கிடைக்காதபோதெல்லாம் அவர் பெரிதாக வருந்திய மாதிரி தெரியவில்லை. அரசியலில் உள்ள ஒருவருக்கு தேர்தலில் போட்டியிடுவதே பெரிய விஷயமில்லையென்றால் அவர் எதற்காக அரசியலில் இருந்தார் என்பதே புரியவில்லை. ஜோதிமணி போன்றவர்கள் மிகவும் கீழ்மட்டத்திலிருந்து மேலே வந்தவர்கள். உழைப்புதான் அதற்குக் காரணம். அப்படியிருக்கும்போது கட்சியை குறைசொல்வதில் பலனே இல்லை. அவர் எதற்கு காங்கிரசிற்கு வந்தார், எதற்கு சென்றார் எனத் தெரியவில்லை" என்கிறார் தமிழ்நாடு மஹிளா காங்கிரஸின் பொதுச் செயலாளர் லக்ஷ்மி. 

ஆனால், அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வரும்போது கட்சி குறித்த இமேஜை மாற்ற அவர் உதவக்கூடும் என்று கருதுகிறார் மாலன். 

"பா.ஜ.கவைப் பொறுத்தவரை, அது ஒரு பிராமணர் கட்சி என்ற தோற்றம் உண்டு. அகில இந்திய அளவில் இந்தப் பார்வையை மாற்றும் நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டன. தமிழ்நாட்டில் தற்போதுதான் அது துவங்கியிருக்கிறது. வி.பி. துரைசாமி, குஷ்பு போன்றவர்களின் வருகை அதனை மாற்ற உதவும்" என்கிறார் மாலன்.

தமிழ்நாட்டில் இருந்து பிரபல தலைவர்கள் பா.ஜ.கவில் இணைவது புதிதல்ல. ஏற்கனவே காங்கிரசைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம், தனிக்கட்சி நடத்திக் கொண்டிருந்த சு. திருநாவுக்கரசர் போன்றவர்கள் பா.ஜ.கவில் இணைந்து அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களது வருகையால் தமிழ்நாடு பா.ஜ.க. பெரும் வளர்ச்சியைக் கண்டதாகச் சொல்ல முடியாது. 

குஷ்புவுக்கு முன்பே, திரைத்துறையைச் சேர்ந்த நமீதா, காயத்ரி ரகுராம், ராதாரவி போன்றவர்கள் பா.ஜ.கவில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 2021இல் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திரைத்துறையினரின் பிரபலம், பா.ஜ.கவுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை பா.ஜ.கவினரிடம் இருக்கிறது.

 

https://www.bbc.com/tamil/india-54514372

  • கருத்துக்கள உறவுகள்

“பா.ஜ.க.வில் இணைந்தாலும் நான் என்றுமே பெரியார்வாதி தான்” - நடிகை குஷ்பு பேட்டி

“பா.ஜ.க.வில் இணைந்தாலும் நான் என்றுமே பெரியார்வாதி தான்” - நடிகை குஷ்பு பேட்டி

சென்னை, 

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, நேற்று முன்தினம் அக்கட்சியில் இருந்து விலகி டெல்லியில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

பா.ஜ.க.வில் இணைந்த நடிகை குஷ்பு நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், துணைத்தலைவர் சக்ரவர்த்தி, மீனவப்பிரிவு தலைவர் எஸ்.சதீஷ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் குஷ்புவை வரவேற்று கமலாலயம் அழைத்து சென்றனர். அங்கு பாரதமாதா, தமிழன்னை சிலைகளுக்கும், பா.ஜ.க. நிறுவனர்கள் தீனதயாள் உபாத்யாயா, ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரது உருவப்படங்களுக்கும் நடிகை குஷ்பு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


அதனைத் தொடர்ந்து நடிகை குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல காலமாக ஒரு கட்சியில் இருந்து, நாட்டுக்கு நல்லது தான் செய்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து வந்தேன். ஆனால் மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எனக்கு தெரியவந்தது. மிகவும் நிதானமாக பலமுறை யோசித்த பின்பே நான் பா.ஜ.க.வில் இணைந்தேன். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பா.ஜ.க. வளர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு குஷ்பு அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அடிக்கடி கட்சி மாறும் அரசியல் நிலைப்பாடு உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தவில்லையா?

பதில்:- மாற்றங்கள் இருக்கலாம். மாற்றங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழவே முடியாது. கொள்கைதான் மாறக்கூடாது.

கேள்வி:- பா.ஜ.க.வில் இணைந்த பின்னரும் பெரியார்வாதியாக இருப்பீர்களா?

பதில்:- பெண்களுக்கு ஆதரவாகவும், தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் தீரவும் குரல் கொடுத்தவர்தான் பெரியார். பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு முதல் ஆளாக நானும் குரல் கொடுத்து தான் வருகிறேன். அந்த அடிப்படையில், பா.ஜ.க.வில் இணைந்தாலும் நான் என்றுமே பெரியார்வாதி தான்.

கேள்வி:- காங்கிரஸ் கூட்டங்களை ஷூட்டிங் என்ற பெயரில் நீங்கள் புறக்கணித்ததாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளாரே?

பதில்:- காங்கிரஸ் கட்சியில் கடைசியாக நடந்த பல கூட்டங்களில் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தனது தவறுகளை மறைப்பதற்காக என்மீது பழி போடுகிறார், கே.எஸ்.அழகிரி. நான் எந்த ஷூட்டிங்கும் போகவில்லை. ‘அண்ணாத்த’ படத்தில் கூட 20 நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்டது. மாதத்தில் 5 நாட்கள் போக மீதமுள்ள 25 நாட்களும் கட்சி பணியாற்ற தயாராகத்தான் இருந்தேன். அந்த 25 நாட்களும் காங்கிரஸ்காரர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்களா? யாரும் எனக்கு எந்த வித அழைப்பும் விடுக்கவில்லையே.

கேள்வி:- சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்பீர்களா?

பதில்:- பா.ஜ.க.வில் இப்போதுதான் இணைந்துள்ளேன். எனக்கு முன்பாக பல தலைவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். நியாயப்படி அவர்கள்தான் போட்டியிட வேண்டும்.

கேள்வி:- உங்களது கணவர் சுந்தர்.சி. கொடுத்த அழுத்தம் காரணமாக தான் பா.ஜ.க.வில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாரே?

பதில்:- நானும், எனது கணவரும் ஒன்றாக இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுகூட கிடையாது. அப்படித்தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் தன் மீது உள்ள தவறை மறைப்பதற்காக மற்றவர் மீது கே.எஸ்.அழகிரி பழிபோடுகிறார்.

மேற்கண்டவாறு குஷ்பு பதில் அளித்தார்.

முன்னதாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த நடிகை குஷ்புவுக்கு சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் மலர் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவருக்கு ஆளு உயர மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.வில் இணைந்தது சந்தோஷமாக இருக்கிறது. நான் பா.ஜ.க.வில் இணைவதற்கு காரணம் மாநில தலைவர் எல்.முருகன் தான். தன் கட்சியை வளர்க்க எல்லாரிடமும் பேசி, இந்த கட்சியால் தான் நாட்டிற்கு நல்லது செய்ய முடியும் என்று புரிய வைத்து அழைக்கிறார். ஆனால் 6 ஆண்டுகளாக அந்த தேசிய கட்சியில் இருந்த என்னை அக்கட்சியின் தலைவர் தன்னை நடிகையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.

6 ஆண்டுகள் கழித்து தான் நான் நடிகையாக அவர்களுக்கு தெரிகிறேன். காங்கிரஸ் கட்சியை விட்டு ஒருவர் ஏன் விலகி வெளியில் செல்கிறார் என்று யோசிக்கும் திறன் அவர்களுக்கு கிடையாது.

6 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு என்னுடைய நேரம், உழைப்பு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வெளியே வந்து உள்ளேன். சிந்திக்கிற திறன் இல்லாத ஒரு கட்சியாக காங்கிரஸ் இருந்து உள்ளது. தி.மு.க.வில் இருந்து வெளியேறும் போது அக்கட்சியினர் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வரும்போதும் பெரிய குற்றச்சாட்டுகள் எதையும் நான் வைக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய என்னை பற்றி தவறாக பேசும்போது நிச்சயமாக பதிலடி தந்து தான் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/14031121/Even-if-I-join-the-BJP-I-will-always-be-a-Periyar.vpf

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.