Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை ஏமாற்றும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் இந்தியாவுக்கா? போர்க்கொடி தூக்கும் ‘சிங்களே’

 
Sinhale-800x400-696x348.png
 28 Views

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறியமுடிகிறது. கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று ‘சிங்களே’ அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பன்னலோக தேரர் தெரிவித்தார்.

“சிங்களே” அமைப்பால் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட அரசாங்கம் மிகவும் முக்கியமானதொரு விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொண்டிருக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிரான பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து நாமும் குரலெழுப்பி வந்தோம். இதற்கு எதிராகப் பல அமைப்புக்கள் அங்கு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டன.

எனினும் தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணம் முழுவதற்கும் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கு போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இவ்வாறானதொரு தருணத்தில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

நாட்டின் சுயாதீனத்துவத்தையும் இறையாண்மையையும் பிறிதொரு நாட்டுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயலாகவே நாம் இதனைக் கருதுகின்றோம். எனவே அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் மேற்கொள்கின்றது. இந்த அரசாங்கத்தை நாட்டு மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கும்வரையில் எதற்காகவும் அஞ்சத் தேவையில்லை என்று அவர்கள் கருதுகின்றார்கள். மக்கள் தம்மீது கொண்டிருக்கும் இந்த அபார நம்பிக்கை தொடர்பில் ஆட்சியாளர்கள் நன்கு அறிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையைத் தவறான முறையில் பயன்படுத்தியே ஆட்சியாளர்கள் இத்தகைய காரியங்களைச் செய்கின்றார்கள்.

அதேபோன்று ஸ்பார்க் எயார் என்ற நிறுவனத்துக்கு மத்தள விமானநிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கையளிக்கப்படவிருக்கிறது என்பது தொடர்பாகவும் நாம் அறிவோம். இவ்வாறு தேசிய பாதுகாப்பு அடிப்படையிலும் உபாய மார்க்க ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் மற்றும் விமானநிலையம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

 

https://www.ilakku.org/கொழும்பு-முறைமுக-கிழக்கு/

 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை!

 
2.jpg
 53 Views

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையின் 100% இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுத்தப்படும் என தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்த அரசாங்கம் தற்போது கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி கிழக்கு முனையத்தின் முழு நிர்வாகத்தையும் 49% பகுதியையும் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். 

“கொழும்பு துறைமுக கிழக்கு முனை குறித்து தேர்தலுக்கு முன் பாரிய எதிர்ப்பு வெளியிட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனார் இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து எக்காரணம் கொண்டும் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு விற்கப்படாது என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் அத்வானி போட் என்ட் ஸ்பெசல் இக்கொனமிக் சோன் (அத்வானி துறைமுக மற்றும் சிறப்பு பொருளாதார வலயம்) என்ற இந்திய நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் 49% பகுதியை விற்பனை செய்ய இணங்கியுள்ளனர். அதுமாத்திரமன்றி அதன் முழு நிர்வாகத்தையும் குறித்த நிறுவனத்திற்கு வழங்க இணங்கியுள்ளதாக சர்வதேச பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

ஊரடங்கு சட்டத்தில் பயன்பெற்று மக்களை ஏமாற்றி இவ்வாறு வாக்குறுதிகளை மீறி இந்த அரசாங்கம் செயற்படுகிறது. மக்களுக்கு ஏன் உண்மையை கூற அரசாங்கம் மறுக்கிறது?” என ஹர்ச டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.ilakku.org/eastern-terminal-sold-out-to-india-hiding-behind-curfew-harsha/

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, உடையார் said:

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து எக்காரணம் கொண்டும் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு விற்கப்படாது என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் அத்வானி போட் என்ட் ஸ்பெசல் இக்கொனமிக் சோன் (அத்வானி துறைமுக மற்றும் சிறப்பு பொருளாதார வலயம்) என்ற இந்திய நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் 49% பகுதியை விற்பனை செய்ய இணங்கியுள்ளனர். அதுமாத்திரமன்றி அதன் முழு நிர்வாகத்தையும் குறித்த நிறுவனத்திற்கு வழங்க இணங்கியுள்ளதாக சர்வதேச பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மகிந்த இன்னும் பழைய காலம் போல் நினைத்து நடக்கிறார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.