Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது- டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது- டக்ளஸ் |  Athavan News

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சம் தேவையற்றது- டக்ளஸ்

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டும் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியுமே வந்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு தொற்றாகும்.

இந்நிலையில், இலங்கையில் குறித்த தொற்று இவ்வாண்டின் முற்பகுதியில் ஏற்பட்டபோது அதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியிருந்தது.

ஆனாலும், ஒரு சில காரணங்களால் அத்தொற்று இலங்கையில் மீண்டும் பரவியுள்ளது. இதையும் அரசாங்கம் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களிடையேயும் உண்டு.

அதேபோல், இத்தொற்று ஒரு சிலரது தொழிற்றுறையை மட்டும் பாதித்திருக்கவில்லை. இது அனைத்து உழைப்பாளிகளையும் பாதித்துள்ளது.

அத்துடன், கடலுணவில் இது பரவுவதாக சிலரது போலிப் பிரசாரங்களால் மக்களிடையே கடலுணவு விற்பனையில் சிறு பின்னடைவு காணப்பட்டது. ஆனாலும், இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதால் நோயுற்ற ஒருவர் மரக்கறி வகைகளைத் தொட்டாலும் அதனூடாக பரவும் என்பதே உண்மை நிலையாகும்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற நிகழ்வானது இம்மாவட்ட மக்களின் நலன்களை முன்னிறுத்தியே நடத்தப்பட்டது. இது ஒரு களியாட்ட நிகழ்வல்ல. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கோரி எவரையும் வற்புறுத்தியும் அழைத்திருக்கவில்லை.

அத்துடன், இந்நோய்த் தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிகழ்வு நடைபெற்றதால் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அனைத்து அமைச்சர்களும் அவர்களுடன் வருகைதந்தோரும் சுகாதார முறைகளைப் பின்பற்றி சுகாதாரப் பிரிவினரின் அனுமதியுடனேயே வருகை தந்திருந்தனர்” என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/அமைச்சர்கள்-வருகையால்-கொ/

அரசியலில் இதெல்லாம் சகஜம் டக்ளஸ் அவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஒரு கெட்ட வைரஸ். இதை விடவா கொரோனா கெட்டதாகப் போகுது. கொரோனாவை விட டக்கிளஸ் கொன்றது அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

இதே ஒரு கெட்ட வைரஸ். இதை விடவா கொரோனா கெட்டதாகப் போகுது. கொரோனாவை விட டக்கிளஸ் கொன்றது அதிகம். 


இப்ப கொஞ்ச நாளாய் இவரையே துரத்தி ,துரத்தி தாக்கிறீங்கள் அடி பலமோ 😃
 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:


இப்ப கொஞ்ச நாளாய் இவரையே துரத்தி ,துரத்தி தாக்கிறீங்கள் அடி பலமோ 😃
 

இந்த கெட்ட வைரஸ் எத்தனை வருசமா இருந்து எம்மக்களை துரத்தி துரத்தி தாக்கிட்டு.. இப்ப வாக்குப் போடு செய்து தாறன் என்று இன்னும் நாசமறுக்குது. நீங்கள் அதை பார்த்து ரசிக்கலாம். ஆனால் எல்லாருக்கும் அது சாத்தியமில்லை.. தானே.

இந்த வைரஸை எப்பவோ ஒழிச்சிருக்கனும்.. கொரோனாவை விடக் கொடியது என்பதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லித் தான் ஆகனும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

இந்த கெட்ட வைரஸ் எத்தனை வருசமா இருந்து எம்மக்களை துரத்தி துரத்தி தாக்கிட்டு.. இப்ப வாக்குப் போடு செய்து தாறன் என்று இன்னும் நாசமறுக்குது. நீங்கள் அதை பார்த்து ரசிக்கலாம். ஆனால் எல்லாருக்கும் அது சாத்தியமில்லை.. தானே.

இந்த வைரஸை எப்பவோ ஒழிச்சிருக்கனும்.. கொரோனாவை விடக் கொடியது என்பதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லித் தான் ஆகனும். 

இவ்வளவு நாளும் மெளனமாய் இருந்து விட்டு இப்ப துள்ள ஏதோ காரணம் இருக்குதென்று நினைக்கிறேன் 🙂...கத்தரிக்காய் மலிந்தால் சந்தைக்கு இல்லையா 😉
 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

இவ்வளவு நாளும் மெளனமாய் இருந்து விட்டு இப்ப துள்ள ஏதோ காரணம் இருக்குதென்று நினைக்கிறேன் 🙂...கத்தரிக்காய் மலிந்தால் சந்தைக்கு இல்லையா 😉
 

இவ்வளவு காலமும் உந்த வைரஸும் அடங்கித்தான் இருந்தது. இப்ப ஓவரா துள்ளுது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இந்த கெட்ட வைரஸ் எத்தனை வருசமா இருந்து எம்மக்களை துரத்தி துரத்தி தாக்கிட்டு.. இப்ப வாக்குப் போடு செய்து தாறன் என்று இன்னும் நாசமறுக்குது. நீங்கள் அதை பார்த்து ரசிக்கலாம். ஆனால் எல்லாருக்கும் அது சாத்தியமில்லை.. தானே.

இந்த வைரஸை எப்பவோ ஒழிச்சிருக்கனும்.. கொரோனாவை விடக் கொடியது என்பதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லித் தான் ஆகனும். 

ஆனால் முழுக்க வாயால் வடை சுடும் அறிக்கைக்கள்தான் இந்த சுமத்திரனையே கக்கூஸு  கட்ட வைத்த இணைய கூட்டம் கண்ணில் இவர் இன்னும் விழவில்லை போல் இருக்கு .

ஓவராய் ஆடுறார் .

நேற்று யாழ்ப்பாணம் பழக்கடையில்  நின்று அழுகின பழம்களை எண்ணி பார்த்து அழுதவராம் தனக்கு வாக்கு போட்டு இருந்தால் இந்த நிலை வந்து இருக்குமா என்று .

கடி தாங்க  முடியலை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.