Jump to content

அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள்


Recommended Posts

You said you have attached couple of photos. I couldn't see them in my web browser. I think it is a problem in the web browser. Never mind. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் எப்படி ஒவ்வொரு வடிவமான பொருளிற்கேற்ப வடிவம் எடுக்கிறதோ அதே போல தான் இந்து மதமும் (எந்த மதம் என்றாலும்)...இந்து மதம் தண்ணீர் போல....மனிதர்கள் மனம் பாத்திரம் போல.....நல்ல மனம் இருந்தால் நல்ல வடிவமாகவே தண்ணீரை அந்தப் பாத்திரம் பிரதி பலிக்கும்....தப்பான மனம் இருந்தால் எல்லாத்தையும் தப்பு தப்பாகவே பார்க்க வைக்கும்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். ஆனாலும்

தண்ணீர் தெளிவாக இருந்தால்தான் அப்படியே பிரதிபலிக்க வாய்ப்புண்டு

மாசுப்டட தண்ணீர் தனது மாசையும் பிரதிபலிக்கத்தான் எத்தணிக்கும்.

அப்போது நுணுக்குகாட்டி எனும் அறிவியல் கண்களால் பார்க்கும் போது பல கிருமிகள் தெரியும்மல்லவா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிலைகளோ சித்திரங்களோ வைக்கப்பட்ட காலத்தை நாம் கவணத்தில் கொள்ள வேண்டும். அக் கால கட்டத்தில் மக்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டதால் இல்லற வாழ்க்கையை வெறுப்பவர்கள் அதிகமாயினர். அதனால் அவர்களிடம் இனக் கவர்ச்சி ஏற்படுத்தும் பொருட்டு இப்படி வைத்தனர். இன்றுபோல் அன்று திரையரங்குகளோ பத்திரிகைகளோ இருந்திருந்தால் அவர்கள் இப்படி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அன்று பெரும்பாலான மக்கள் கூடும் ஒரே இடம் கோவிலாகத்தான் இருந்தது. அத்துடன் அது அன்றைய தேவையாகவுமிருந்தது.

இன்று 22ம் நூற்றான்டின் ஆரம்பத்தில் இருக்கிறோம். தெருவெங்கும் ஆபாசச் சுவரெட்டிகள் வண்ண விளக்குகளுடன் ஜொலிக்கின்றன. வீட்டுக்குள் டி.வி யைத் திறந்தால் ஒரே ஆபாசம். திரைப் படங்களோ குடும்பமாய் சேர்ந்திருந்து பார்க்க முடியாதவை. ஏன் கணணியிலேயே அப்படிப் படங்கள் தானாகவே வந்து போகின்றன. இந்நிலையிலும்கூட யாழ்கள விதிமுறைகளைப் பாருங்கள். ஆபாசமாகப் பேசக்கூடாது, படங்கள் போடக்கூடாது போன்று நிறைய வைத்திருக்கிறார்கலென்றால், அன்று கட்டுக்குடும்பியுடனும், காதில் கடுக்கனுடனும் அதீத கண்டிப்புடனும் இருந்த நம் முன்னோர் இப்படியான ஒன்றைச் செய்வதற்கு முன் எவ்வளவு தூரம் மன்டையைப் போட்டு உடைத்திருப்பார்கள் என்பதைக்கூட நாம் சிந்திக்காமல் எழுதுவது எமது அறியாமையைத்தான் காட்டும்.

இப்போதும் பல அரசுகள் தம்மின மக்கள் தொகையைப் பெருக்குவதற்காக அதிக பிள்ளைகள் பெறும் குடும்பத்திற்கு பலவிதமான சலுகைகளை அறிவிக்கிறார்களே! எனின் அவர்கள் ஆபாசத்துக்குத் துனை போகிறார்களா?

இவையெல்லாம் அந்தக் கம்பனிகள் தங்கள் வியாபாரத்தைப் கூட்டுவதற்காக தெரிந்தே செய்யும் தந்திரங்கள். முன்பு கூட ஒருமுறை சுவாமி படங்களை டாய்லெட் தட்டுகளில் பதித்திருந்தனர். இப் பிரச்சனைக்குத் தீர்வு வரும்முன் அவர்கள் நிறைய விளம்பரம் பெற்று விடுவார்கள்.

அந்ததந்த காலத்தில் அவனவன் பிழைப்பதற்கு எதை எதையோ படைக்கிறான் என்பதுதானே ஒரு சாரரின் வாதமாக இங்கே இருக்கிறது. அதையே முழுமையாக நம்பி முட்டாள்கள் ஈவதால் என்ன பயன் என்பதே அவர்களின் கருத்தாகவும் படுகிறது.

இந்து சமயத்தில் ஆபாசம் பிழையென கூறுவோர் குறைவு....... இந்து சமயத்தில் ஆபாசமில்லை அது பார்ப்பவர் கண்ணளுக்குத்தான் அப்படி தெரிகிறது என்று தம்பட்டம் இடிப்பவர்களே அதிகம். அவனவன் பிழைப்பிற்காக ஒன்றை படைத்துக்கொண்டிருக்கிறான் இந்தியாவில் தாம் உயர்ந்த மனிதர்கள் என்று தனக்கு தானே பட்டம் சூட்டியவன் பிள்ளையாரை கடவுளாக படைத் தனது பிழைப்பை பார்த்தான். அமெரிக்காவில் ஒருவன் சற்று வித்தியாசமான கோணத்தில் பிழைப்பை பார்க்கிறான் என்பதே எனது கருத்து!

Link to comment
Share on other sites

சுகன், மற்றும் ஈழத்திருமுகன் ஆகியோரின் கருத்துக்களை வரவேற்கின்றேன்.

இன்றைய கீழைத்தேய உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும், ஏழ்மைக்கும், பொருளாதார பின்னடைவுக்கும் காரணமாக ஏதோ ஒருவகையில் மதம் இருக்கிறது. புதிய தலைமுறை அதன் பிடியிலிருந்து விரைந்து விடுபடுவதே மீட்சியை தரும்!

மதம் என்பது ஒருவரது பலவீனம், எப்படி எமது பாலியல் செயற்பாட்டை நாம் வெளியே பிரசித்தம் செய்வதில்லையோ அப்படியே அதனையும் மறைவாக வைத்துக்கொள்வதே நன்று. அதையும் தாண்டி மற்றவரும் தன்னை போல செய்யவேண்டும் அல்லது தனது நம்பிக்கையை மதிக்க வேண்டும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்வது?

Link to comment
Share on other sites

இந்தப் படங்கள் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அறுகம் புல்லுக்கு அறுபதுக்கு மேற்பட்ட வியாதிகளை தீர்க்கும் குணம் உண்டு. அறுகம் புல்லின் எல்லா பகுதியும் மருத்துவத்துக்கு பயன் படுத்தப்படும் ஒன்று. அது போல் செவ்வரத்தம் பூவுக்கும் நோய் தீர்க்கும் குணமுண்டு.

அறுகு பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்யும் ஒன்றாக சித்தரிக்கப்பட்டு அதன் பெறுமதி பின்தள்ளப்பட்டுவிட்டது. தற்போது பிளாஸ்டிக் அறுகம் புற்களும் பாவனைக்கு வருகின்றது மிக்க வேதனையான விடயம்.

Link to comment
Share on other sites

ம்..

நண்பர்களே !!

சமுதாய மாற்றம் தனியொரு மனிதனால் மட்டும் நடந்து முடிவதல்ல. தனிமனித முயற்சி ஒரு உந்துசக்தியாக இருக்கமுடியும். எம்மாலானதை தக்கதருணத்தில் செய்வதே சாலச்சிறந்தது. முதலில் சாதியத்தின் கோரப்பற்களின் பிடியினின்றும் காயம்பட்ட மனிதமனங்களை பண்பாகவும் இதமாகவும் மீட்கவேண்டியது கல்வி கற்ற நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடன். இதை நான் சில ஆண்டுகளுக்குமுன்னரே தொடங்கிவிட்டடேன். மனிதர்களில் உடலியல்ரீதியாக எந்த வேறுபாடும் இல்லை (All human beings are physically equivalent). உளவுரண் மட்டுமே வேறுபடுகின்றது. தன்னம்பிக்கை வளரும்போது மதம் ஒழிந்துவிடும். இந்த தன்னம்பிக்கையை வளரவிடாது மதமும் அதன் சடங்குகளும் எம்மை கட்டிவைத்துள்ளன என்பதே உண்மை.

மற்றயது பழந்தமிழர் இனம் இயற்கையோடு இணைந்து வாழப்பழகியது (Natural life !! Truely I don't believe in religion but I do believe in nature - Physics. In this scientific world we all make attempt to understand and learn the hidden laws of nature. There is nothing other than this in our studies). எமது பலமும் பலவீனமும் அதுதான். மதத்தின் பெயரால் ஆழப்புதைக்கப்பட்ட எமது வாழ்க்கைத்திறன் வெளிக்கொணரப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.