Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வில்பத்து காடழிப்பு மனுவை ஜுலை 31ஆம் திகதி முதல் ஆரம்பத்திலிருந்து  விசாரிக்க தீர்மானம் - News View

வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்தமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் முழுப் பகுதியையும் மறுகட்டமைக்க தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தவும் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான நிலையம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வன பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

வில்பத்து சரணாலயத்தின் கல்லாறு வனப்பகுதியில் 2388 ஏக்கரை அழித்ததன் ஊடாக பாரிய சூழல் அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வனப்பகுதியை மேலும் அழித்து மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற குடியேற்றங்களைத் தடுப்பதற்கான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சுற்றாடல் நீதிக்கான நிலையம் மனுவை தாக்கல் செய்திருந்தது.

http://athavannews.com/வில்பத்து-காடழிப்பு-சட்ட/

சரியான தீர்ப்பு. பலநாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்று சொல்வார்கள். இவர் வாழ் நாள் முழுதும் மக்களையும் அரசையும் ஏமாற்றி பிழைக்கலாம் எண்டுதான் எண்ணி இருந்தார். ஷொப்பிங் பையுடன் போனவர் இன்று கோடிபதியாக இருக்கிறார். கொழும்பு , புத்தளம், மன்னர் என மாட மாளிகைகளுடன் இருக்கிறார்.

இவர் கடந்த காலங்களில் அரபு நாடுகளுக்கு சென்று தனது தொண்டு நிறுவனதேனுடாக நிறையவே பணம் கொண்டு வந்து தமிழர் காணிகளில் அவரது இனத்தவரை குடியேற்றினார். இதிலும் நிறையவே பணமும் கையாடப்பட்ட்து. அமைச்சினூடாகவும் தாராளமாக பணம் சேர்ந்தது.

இவரது நடவடிக்கை எல்லாம் சிங்கள மக்களுக்கு இப்போது புரிந்துள்ளதால் அரசாங்க பக்கமாக அண்ட முடியாமல் தவிக்கிறார். இல்லாவிடடாள் தேர்தல் முடிந்த கையுடன் குத்துகாரணம் அடித்திருப்பர்.

இப்போது இவர் அங்குள்ள காணிகளில் மீள் நடுகையுடன் நிறையவே வேலைகளும் செய்ய வேண்டி வரும். அதனை கண்காணிக்க ஒரு குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் சடட மா அதிபர் திணைக்களமும் இவரது சொத்து சேர்ப்பு சம்பந்தமாக வேறாக விசரனை செய்கிறது. எனவே இவரது திருட்டு தனங்கள் இனி வரும் காலங்களில் வெளி வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தண்டனையாக வாழ் நாள் முழுக்க தினம் 100 மரங்கள் நட தண்டனை கொடுப்பார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Robinson cruso said:

சரியான தீர்ப்பு. பலநாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்று சொல்வார்கள். இவர் வாழ் நாள் முழுதும் மக்களையும் அரசையும் ஏமாற்றி பிழைக்கலாம் எண்டுதான் எண்ணி இருந்தார். ஷொப்பிங் பையுடன் போனவர் இன்று கோடிபதியாக இருக்கிறார். கொழும்பு , புத்தளம், மன்னர் என மாட மாளிகைகளுடன் இருக்கிறார்.

இவர் கடந்த காலங்களில் அரபு நாடுகளுக்கு சென்று தனது தொண்டு நிறுவனதேனுடாக நிறையவே பணம் கொண்டு வந்து தமிழர் காணிகளில் அவரது இனத்தவரை குடியேற்றினார். இதிலும் நிறையவே பணமும் கையாடப்பட்ட்து. அமைச்சினூடாகவும் தாராளமாக பணம் சேர்ந்தது.

இவரது நடவடிக்கை எல்லாம் சிங்கள மக்களுக்கு இப்போது புரிந்துள்ளதால் அரசாங்க பக்கமாக அண்ட முடியாமல் தவிக்கிறார். இல்லாவிடடாள் தேர்தல் முடிந்த கையுடன் குத்துகாரணம் அடித்திருப்பர்.

இப்போது இவர் அங்குள்ள காணிகளில் மீள் நடுகையுடன் நிறையவே வேலைகளும் செய்ய வேண்டி வரும். அதனை கண்காணிக்க ஒரு குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் சடட மா அதிபர் திணைக்களமும் இவரது சொத்து சேர்ப்பு சம்பந்தமாக வேறாக விசரனை செய்கிறது. எனவே இவரது திருட்டு தனங்கள் இனி வரும் காலங்களில் வெளி வரலாம்.

றொபின்சன்.... இவர் யாழ்ப்பாணத்தை  சேர்ந்த முஸ்லீம்  என்றும், 
ஈழப் போர் முடிவுக்கு வந்த நிலையில்...
அகதிகளாக இருந்த மக்களுக்கு... உணவு கொடுக்கும், பொறுப்பு..  
அரசாங்கத்தால்... இவருக்கு வழங்கப் பட்டதாம், அதில் பெரும் பணம் பார்த்தது மட்டுமல்லாது,
பல காணிகளையும் சுருட்டியவர் என்று, ஊரில் இருந்தவர் சொன்னவர்.

அவரும்... ஒரு "கைப் பையுடன் போனவர், இன்று பல கோடிகளுக்கு அதிபதி" என்று சொன்னார். 
பத்து வருடத்தில்... கோடீஸ்வரர்  ஆகியவருக்கு, இன்று  அரசே... அவரை சும்மா விடாது போலுள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

றொபின்சன்.... இவர் யாழ்ப்பாணத்தை  சேர்ந்த முஸ்லீம்  என்றும், 
ஈழப் போர் முடிவுக்கு வந்த நிலையில்...
அகதிகளாக இருந்த மக்களுக்கு... உணவு கொடுக்கும், பொறுப்பு..  
அரசாங்கத்தால்... இவருக்கு வழங்கப் பட்டதாம், அதில் பெரும் பணம் பார்த்தது மட்டுமல்லாது,
பல காணிகளையும் சுருட்டியவர் என்று, ஊரில் இருந்தவர் சொன்னவர்.

அவரும்... ஒரு "கைப் பையுடன் போனவர், இன்று பல கோடிகளுக்கு அதிபதி" என்று சொன்னார். 
பத்து வருடத்தில்... கோடீஸ்வரர்  ஆகியவருக்கு, இன்று  அரசே... அவரை சும்மா விடாது போலுள்ளது.

hqdefault.jpg?sqp=-oaymwEiCKgBEF5IWvKriq

மரமாக நட்டு அந்த மாதிரி "எபெக்ற்" கொண்டு வந்துட போகிறார். வலு கவனம் தேவை தோழர்.! ☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, புரட்சிகர தமிழ்தேசியன் said:

hqdefault.jpg?sqp=-oaymwEiCKgBEF5IWvKriq

மரமாக நட்டு அந்த மாதிரி "எபெக்ற்" கொண்டு வந்துட போகிறார். வலு கவனம் தேவை தோழர்.! ☺️

எங்கடை... பனை மரத்தை, அழித்து விட்டு... 
ஈச்ச மரம்,  நட்டு விடுவார்களா.. என்று பயமாகத்தான் இருக்கு தோழர். 😎

8 hours ago, தமிழ் சிறி said:

றொபின்சன்.... இவர் யாழ்ப்பாணத்தை  சேர்ந்த முஸ்லீம்  என்றும், 
ஈழப் போர் முடிவுக்கு வந்த நிலையில்...
அகதிகளாக இருந்த மக்களுக்கு... உணவு கொடுக்கும், பொறுப்பு..  
அரசாங்கத்தால்... இவருக்கு வழங்கப் பட்டதாம், அதில் பெரும் பணம் பார்த்தது மட்டுமல்லாது,
பல காணிகளையும் சுருட்டியவர் என்று, ஊரில் இருந்தவர் சொன்னவர்.

அவரும்... ஒரு "கைப் பையுடன் போனவர், இன்று பல கோடிகளுக்கு அதிபதி" என்று சொன்னார். 
பத்து வருடத்தில்... கோடீஸ்வரர்  ஆகியவருக்கு, இன்று  அரசே... அவரை சும்மா விடாது போலுள்ளது.

இல்லை இல்லை. இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இல்லை. மன்னார் தாராபுரத்தை சேர்ந்தவர். இவர் முதலில் ஜிஹாத் இயக்கத்தில் இருந்து பின்னர் முஸ்லீம் காங்கரஸில் சேர்ந்து அரசியல் செய்யத்தொடங்கினார்.

எருக்கலம்பிட்டியை சேர்ந்த மன்சூர் அரசியல் செய்யும்வரைக்கும் இவருக்கு செல்வாக்கு இருக்கவில்லை. அனாலும், மன்சூர் இளம் வயதில் இருதய நோயால் மரித்தவுடன் இவர் அந்த இடத்தை எடுத்துக்கொண்டார்.

அடுத்தது, யுத்த முடிவு காலத்தில் இவர் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்து நன்றாக பணம் பார்த்தார். அதாவது அகதி முகாமில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பும் இவரிடமே இருந்தது. ஏறக்குறைய மூன்று லட்ச்சம் பேர் அங்கு இருந்தார்கள். ஒரு சாப்பாட்டுக்கு 10 ரூபா வைத்தாலும் கணக்கு போட்டு பார்த்தால் தெரியும் ஒரு மாதத்துக்கு எதனை கோடி உழைத்தார்கள் என்று.

அத்துடன் அங்குள்ள பாலை மரங்களை வெட்டித்தான் அகதி முகாம்கள் அமைக்கப்பட்ட்து. இவரது சகோதரன்தான் அதை கொந்தராது எடுத்திருந்தார். அதை விற்றும் நிறைய பணம் பார்த்தார்கள். இப்படித்தான் அமைச்சு பதவியை காலத்துக்கு காலம் மாறி மாறி பெற்று கோடீஸ்வரராக மாறினார்.

இருந்தாலும் என்ன. உப்பு தாண்டவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இவருக்கு எதிராக இன்னும் நிறையவே குற்றசாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. நேற்றுக் கூட முன்னாள் ராணுவ தளபதி இவருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சாட்சி கூறியுள்ளார். இன்னும் நிறையவே பிரச்சினைகள் இவருக்கு இருக்கிறது. கொள்ளையடித்த பணம் இப்படியே கொள்ளையாகவே போகும்.

8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

hqdefault.jpg?sqp=-oaymwEiCKgBEF5IWvKriq

மரமாக நட்டு அந்த மாதிரி "எபெக்ற்" கொண்டு வந்துட போகிறார். வலு கவனம் தேவை தோழர்.! ☺️

அவரால் அப்படி செய்ய முடியாது. இதை கண்காணிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படி செய்தால் நல்லதுதான். ஆனால் அவரால் அந்தளவுக்கு செலவு செய்ய முடியாது.  ஒரு பேரீச்ச மரம் கொண்டு வந்து நட்டு பராமரிக்க ஏறக்குறைய ஒரு லட்ச்சம் ரூபா செலவாகும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Robinson cruso said:

இல்லை இல்லை. இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இல்லை. மன்னார் தாராபுரத்தை சேர்ந்தவர். இவர் முதலில் ஜிஹாத் இயக்கத்தில் இருந்து பின்னர் முஸ்லீம் காங்கரஸில் சேர்ந்து அரசியல் செய்யத்தொடங்கினார்.

எருக்கலம்பிட்டியை சேர்ந்த மன்சூர் அரசியல் செய்யும்வரைக்கும் இவருக்கு செல்வாக்கு இருக்கவில்லை. அனாலும், மன்சூர் இளம் வயதில் இருதய நோயால் மரித்தவுடன் இவர் அந்த இடத்தை எடுத்துக்கொண்டார்.

அடுத்தது, யுத்த முடிவு காலத்தில் இவர் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்து நன்றாக பணம் பார்த்தார். அதாவது அகதி முகாமில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பும் இவரிடமே இருந்தது. ஏறக்குறைய மூன்று லட்ச்சம் பேர் அங்கு இருந்தார்கள். ஒரு சாப்பாட்டுக்கு 10 ரூபா வைத்தாலும் கணக்கு போட்டு பார்த்தால் தெரியும் ஒரு மாதத்துக்கு எதனை கோடி உழைத்தார்கள் என்று.

அத்துடன் அங்குள்ள பாலை மரங்களை வெட்டித்தான் அகதி முகாம்கள் அமைக்கப்பட்ட்து. இவரது சகோதரன்தான் அதை கொந்தராது எடுத்திருந்தார். அதை விற்றும் நிறைய பணம் பார்த்தார்கள். இப்படித்தான் அமைச்சு பதவியை காலத்துக்கு காலம் மாறி மாறி பெற்று கோடீஸ்வரராக மாறினார்.

இருந்தாலும் என்ன. உப்பு தாண்டவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இவருக்கு எதிராக இன்னும் நிறையவே குற்றசாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. நேற்றுக் கூட முன்னாள் ராணுவ தளபதி இவருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சாட்சி கூறியுள்ளார். இன்னும் நிறையவே பிரச்சினைகள் இவருக்கு இருக்கிறது. கொள்ளையடித்த பணம் இப்படியே கொள்ளையாகவே போகும்.

அவரால் அப்படி செய்ய முடியாது. இதை கண்காணிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படி செய்தால் நல்லதுதான். ஆனால் அவரால் அந்தளவுக்கு செலவு செய்ய முடியாது.  ஒரு பேரீச்ச மரம் கொண்டு வந்து நட்டு பராமரிக்க ஏறக்குறைய ஒரு லட்ச்சம் ரூபா செலவாகும். 

சரியான தகவல்களுக்கு... நன்றி, றொபின்சன்.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.