Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

 

 

நாம் உணர்ச்சிவசபடுவது என்பது இயல்பானதுதான் 
அன்றாட நிகழ்வுகளில் சில தோல்விகளை நாம் சந்திக்க நேர்ந்தால் 
அப்போது உணர்ச்சி பொங்காமல் நிதானமாக சிரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றால் 
எம்மிடம் உயரிய ஒரு நீண்ட கால திட்டம் இருக்க வேண்டும். 
இது எம்மிடம் இல்லாத ஒரு பெரும் குறை இருக்கிறது இதை நாம் நிவர்த்தி செய்ய முடியும் 
அதுக்கான பலம்  அறிவு எல்லாம் தேவைக்கு அதிகமாக கொட்டி கிடக்கிறது 

சிங்களவர்கள் தமிழர் நிலத்தில் குடியேறுவது என்பதை இனி தடுக்க முடியாது 
தர்மீகமாக சிந்தித்தால் தடுக்கவும் கூடாது . இலங்கையின் 70 வீதமான சிங்களவர்கள் இனியும் குறுகிய 
நில பரப்பில் வாழ  முடியாது இலங்கையின் விலைவாசி என்பது இனி வரும் காலங்களில் 
வானத்தை தொடும் அளவுக்கு வளரும் கொழும்பில் இப்போதைய மத்திய தர குடும்பம் ஒன்று 
இன்னும் 10 வருடங்களில் வாழ முடியாது. கொழும்பை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் நிச்சயம் உண்டு. 

தனியார் காணிகளை பாதுகாத்தாலே எமக்கு போதும் 
ஆனால் எதிர்கால விலைவாசிக்கு முகம் கொடுக்க முடியாமல்  
ஏழை தமிழர்கள் காணிகளை விற்கும் நிலையை நாம் எப்படி தடுப்போம்?
என்பதுதான் தமிழர் ஆளுமையை இலங்கையில் கேள்வி குறி ஆக்க கூடியது.

வெள்ளம் வர போகிறது என்பதும் எமக்கு தெரியும் 
எங்கிருந்து என்ன வடிவில் வர போகிறது என்பதும் தெரியும் 
இப்போதும் எவ்வாறு அணை கட்டுவது என்பதை விட்டு விட்டு 
நாம் எமக்குள் புடுங்குபட்டு கொண்டிருப்பது அர்த்தம் அற்றது 

ஒவ்வொரு அரசியல்வாதியும் பல லட்ஷம் ரூபாக்களை கொட்டியே 
இன்று தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறான் அவன் எதோ ஒன்றுக்கு 
முதலீடு செய்து இருக்கிறான் என்பது அவன் தேர்தலில் அவ்வளவு பணம் 
கொட்டும்போதே சாதாரண அறிவுக்கு புரியும். இன்னும் புரியவில்லை என்றால் 
அங்கு அதை புரியும் அறிவு பற்றாகுறை உண்டு என்பதாவது புரியவேண்டும்.
ஆகவே யாரவது அரசியல் வாதி எதையாவது புடுங்குவான் என்று எதிர்பார்ப்பது 
வெறும் நீராசை ... அரசியல் வாதிகளை விட இப்போதைய சூழலில் சாதாரண குடிமக்களால் 
பெரும் எடுப்பில் புடுங்க முடியும். இதுதான் இன்றைய கள சூழல்  

எங்கள் ஊர்களில் விற்கபோகும் காணிகளை கோவிலிலிருக்கும் பணத்தை கொண்டு வாங்கி ஏழைமக்கள் , வீடு இல்லதவர்களுக்கு வீடு  கட்டிக்கொடுக்கிறோம் வெளிநாட்டில் வசிக்கும் எங்கள் ஊர் எனது நண்பர்கள் நீர் இணைப்பு , மின் இணைப்பு எடுத்துக்கொடுத்து வருகிறோம் ஆனால் ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை............. சில இடங்களை விற்காதீர்கள் என சொன்னால் விற்கமாட்டார்கள் ஏழைகள். ஆனால் படித்த பெரிய இடத்தில் வேலை செய்பவர்கள் வேறு இடத்தில் முதலீடு செய்ய இடத்தை விற்கிறார்கள் உதாரணம் திராய்க்கேணி கேள்விப்பட்டிருப்பீர்கள் படுகொலையே நடந்த கிராமமது தற்போது முக்கால் பங்கு விற்கப்பட்டுள்ளது மருதர்.

அதே போல மட்டக்களப்பு , திருகோணமலை எல்லைக்கிராமங்களிலும் இந்த நிலை இன்னும் ஒன்றை சொல்லலாம் என நினைக்கிறன் புலம்பெயர் தமிழர்கள் சிலர் பல கோடிகளுக்கு தங்கள் நிலம் வீடுகளை விற்கிரார்கள் இது மட்டக்களப்பில் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கள் ஊர்களில் விற்கபோகும் காணிகளை கோவிலிலிருக்கும் பணத்தை கொண்டு வாங்கி ஏழைமக்கள் , வீடு இல்லதவர்களுக்கு வீடு  கட்டிக்கொடுக்கிறோம் வெளிநாட்டில் வசிக்கும் எங்கள் ஊர் எனது நண்பர்கள் நீர் இணைப்பு , மின் இணைப்பு எடுத்துக்கொடுத்து வருகிறோம் ஆனால் ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை............. சில இடங்களை விற்காதீர்கள் என சொன்னால் விற்கமாட்டார்கள் ஏழைகள். ஆனால் படித்த பெரிய இடத்தில் வேலை செய்பவர்கள் வேறு இடத்தில் முதலீடு செய்ய இடத்தை விற்கிறார்கள் உதாரணம் திராய்க்கேணி கேள்விப்பட்டிருப்பீர்கள் படுகொலையே நடந்த கிராமமது தற்போது முக்கால் பங்கு விற்கப்பட்டுள்ளது மருதர்.

அதே போல மட்டக்களப்பு , திருகோணமலை எல்லைக்கிராமங்களிலும் இந்த நிலை இன்னும் ஒன்றை சொல்லலாம் என நினைக்கிறன் புலம்பெயர் தமிழர்கள் சிலர் பல கோடிகளுக்கு தங்கள் நிலம் வீடுகளை விற்கிரார்கள் இது மட்டக்களப்பில் 

தனி எதோ ஒரு இயலாமையால் கருணா பிள்ளையானை நாம் இங்கு திட்டி தீர்க்கிறோம் 
எனக்கு என்னமோ நாம் தான் பெருத்த துரோகிகள் போன்ற ஒரு குற்ற உணர்வு எனக்கு அதிகமாகவே உண்டு 
இன விடுதலை போரில் ஆரம்ப நாட்களில் கிராமம் கிராமாக கொலையானது கிழக்கு மக்கள் 
இயக்க மோதல் வந்தபோது யாழ் தெருக்களில் உணர்ச்சி ஆவேசத்தால் நேரு நேர் மோதி இறந்து கிடந்தது 
கிழக்கு இளைஞர்கள். விடுதலைப்புலிகள் வீர் கொண்டு எழுந்தபோது அதை ஆள்தொகையில் அதிகரித்து சாத்தியம் ஆக்கியது கிழக்கு மக்கள் அதனால் ஒவ்வரு மோதலில் மாவீரர் ஆனதும் கிழக்கு மக்கள் 
பின்பு கருணா பிரிவில் அழிந்து கருணாவால் வேட்டை ஆடப்பட்டதும் கிழக்கு மக்களே .... 

இன்று வரை அப்பாடா என்று ஆற அமர்ந்து  மூச்சு விட முடியாமல் வறுமையில் தவிக்கும் 
அவர்களுக்கு போரை சாட்டி மேலைநாடுகளில் குடியேறிய நாங்கள் எதுவுமே செய்ததில்லை 
எவ்வளவோ பணம் அனுப்புகிறோம் அவை எல்லாம் வடக்கில் மட்டுமே பரிமாற படுகிறது.

இலங்கையில் முதலீடு என்று வரும்போது எமது சாதாரண அறிவு எமக்கு தெரிந்த 
இடங்களிலேயே ஏதாவது ஒரு சாத்தியம் உண்டா என்று பார்க்கிறது. இந்த குறையை நிவர்த்தி செய்ய 
நாம் கூடிய தொடர்புகளை கிழக்கில் உருவாக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது  
நீங்கள் யாழை விட்டு போக போகிறேன் என்று சொன்ன போதும் ... போகாதீர்கள் என்று நான் தடுத்த போது 
இதைத்தான் காரணம் சொன்னேன்.... எமக்கு போதிய தொடர்பு கிழக்கில் இல்லை 
அந்த ஏழை மக்களின் ஏழ்மையில் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னமும் பலருக்கு இருக்கலாம் 
நாம் அங்கு ஒரு நம்பிக்கையான அமைப்பை முதலில் உருவாக்க வேண்டும் 
அது பெரும் எடுப்பிலும் இருக்க கூடாது ... அப்படி இருந்தால் அது பலர் கண்ணை உறுத்தும் 
அதுக்கு சாத்தியாமானவை பற்றி நாம் பேசினால் நன்று என்று எண்ணுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

தனி எதோ ஒரு இயலாமையால் கருணா பிள்ளையானை நாம் இங்கு திட்டி தீர்க்கிறோம் 
எனக்கு என்னமோ நாம் தான் பெருத்த துரோகிகள் போன்ற ஒரு குற்ற உணர்வு எனக்கு அதிகமாகவே உண்டு 
இன விடுதலை போரில் ஆரம்ப நாட்களில் கிராமம் கிராமாக கொலையானது கிழக்கு மக்கள் 
இயக்க மோதல் வந்தபோது யாழ் தெருக்களில் உணர்ச்சி ஆவேசத்தால் நேரு நேர் மோதி இறந்து கிடந்தது 
கிழக்கு இளைஞர்கள். விடுதலைப்புலிகள் வீர் கொண்டு எழுந்தபோது அதை ஆள்தொகையில் அதிகரித்து சாத்தியம் ஆக்கியது கிழக்கு மக்கள் அதனால் ஒவ்வரு மோதலில் மாவீரர் ஆனதும் கிழக்கு மக்கள் 
பின்பு கருணா பிரிவில் அழிந்து கருணாவால் வேட்டை ஆடப்பட்டதும் கிழக்கு மக்களே .... 

இன்று வரை அப்பாடா என்று ஆற அமர்ந்து  மூச்சு விட முடியாமல் வறுமையில் தவிக்கும் 
அவர்களுக்கு போரை சாட்டி மேலைநாடுகளில் குடியேறிய நாங்கள் எதுவுமே செய்ததில்லை 
எவ்வளவோ பணம் அனுப்புகிறோம் அவை எல்லாம் வடக்கில் மட்டுமே பரிமாற படுகிறது.

இலங்கையில் முதலீடு என்று வரும்போது எமது சாதாரண அறிவு எமக்கு தெரிந்த 
இடங்களிலேயே ஏதாவது ஒரு சாத்தியம் உண்டா என்று பார்க்கிறது. இந்த குறையை நிவர்த்தி செய்ய 
நாம் கூடிய தொடர்புகளை கிழக்கில் உருவாக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது  
நீங்கள் யாழை விட்டு போக போகிறேன் என்று சொன்ன போதும் ... போகாதீர்கள் என்று நான் தடுத்த போது 
இதைத்தான் காரணம் சொன்னேன்.... எமக்கு போதிய தொடர்பு கிழக்கில் இல்லை 
அந்த ஏழை மக்களின் ஏழ்மையில் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னமும் பலருக்கு இருக்கலாம் 
நாம் அங்கு ஒரு நம்பிக்கையான அமைப்பை முதலில் உருவாக்க வேண்டும் 
அது பெரும் எடுப்பிலும் இருக்க கூடாது ... அப்படி இருந்தால் அது பலர் கண்ணை உறுத்தும் 
அதுக்கு சாத்தியாமானவை பற்றி நாம் பேசினால் நன்று என்று எண்ணுகிறேன் 

நிட்சயமாக மருதர் ஆனால் யாழ் இணைய நபர்கள் யாராவது எந்ததிட்டங்களை வைத்தாலோ, செய்தாலோ நான் அவர்களுக்கு துணை நிற்கமாட்டேன் சாதாரண வார்த்தைகளே என்னை நோக்கி உறுத்திப்பாயும் தோட்டாக்கள் போல் இருக்கும் போது இவர்கள் ஏதாவது தொடங்க அதில் நான் மூக்கு நுழைக்க விரும்பல .இன்னும் பலர் எனக்கே உதவி செய்கிறேன் என சொல்லியும் ஏற்றுக்கொள்ளாத ஆள் நான்  எனக்கு நடிக்க தெரியாது ஊரில் கிராமத்தில் என்ன நடக்கிறது என எழுதினால் பல பிரச்சினைகள் உருவாகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நிட்சயமாக மருதர் ஆனால் யாழ் இணைய நபர்கள் யாராவது எந்ததிட்டங்களை வைத்தாலோ, செய்தாலோ நான் அவர்களுக்கு துணை நிற்கமாட்டேன் சாதாரண வார்த்தைகளே என்னை நோக்கி உறுத்திப்பாயும் தோட்டாக்கள் போல் இருக்கும் போது இவர்கள் ஏதாவது தொடங்க அதில் நான் மூக்கு நுழைக்க விரும்பல .இன்னும் பலர் எனக்கே உதவி செய்கிறேன் என சொல்லியும் ஏற்றுக்கொள்ளாத ஆள் நான்  எனக்கு நடிக்க தெரியாது ஊரில் கிராமத்தில் என்ன நடக்கிறது என எழுதினால் பல பிரச்சினைகள் உருவாகிறது 

நீங்கள் எப்போது நல்லவனாக இருக்க எண்ணுகிறீர்களோ 
அன்றில் இருந்தே கல்லெறிக்கு தயாரக இருக்கவேண்டும் 
இது நான் அனுபவத்தில் பார்த்தது 
நீதி நேர்மையுடன் வாழுபவர்களை 
வாழ தெரியாதவர்கள் என்று வசைபாடிக்கொண்டே இருப்பார்கள் 
ஆனால் இறுதியில் யார் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பதுதான் 
முக்கியமானது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை அண்ண 

ஆசியாவில் நான் குறிப்பிட முனைந்தது இலங்கை இந்தியா, வங்களாதேஷ், பாகிஸ்த்தான் , போன்ற நாடுகளை 

கொஞ்சக்காலம் விடுதலைப்புலிகளால் நீதி,நேர்மை,கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என ஒரு தனியரசில் காட்டப்பட்டதே.எந்த ஒரு நாடும் அங்கீகரிக்காத நிலையிலும்  எமது நாடு இப்படித்தான் இருக்கும் என செய்து காட்டியவர்கள்.

எனவே ஒரு அரசு நினைத்தால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. இலங்கையில் முடியாது என மனதை தேற்றிக்கொண்டு வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்க வேண்டியதுதான்.

4 hours ago, குமாரசாமி said:

கொஞ்சக்காலம் விடுதலைப்புலிகளால் நீதி,நேர்மை,கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என ஒரு தனியரசில் காட்டப்பட்டதே.எந்த ஒரு நாடும் அங்கீகரிக்காத நிலையிலும்  எமது நாடு இப்படித்தான் இருக்கும் என செய்து காட்டியவர்கள்.

 

எந்த ஒரு காரியத்துக்கும் விலை கொடுக்க வேண்டும். இருந்தாலும் இங்கு இதுக்காக அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் முடிவு பூச்சியம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.