Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழோடு விளையாடு

Featured Replies

  ன்பு உள்ளங்களே..... 

அ ன்பு காலை வணக்கம் .....
அ திகாலை எழுத்தவன் ......
அ திசக்தி ஆதவ்னையே.....
 ருகில் வரவைப்பான்......!!!

 ன்பினால் ...
அ கிலத்தையே வெல்லலாம் ....
அ ங்கிகள் தொடக்கம் ...
 ருகில் உள்ள உயிர்வரை ...
அ ன்பு செலுத்துங்கள் .....!!!

 ற்புதங்கள் என்பது ....
 திசயம் செய்வதல்ல ...
 ன்புக்கு கட்டுபட்டு ...
அ ண்ட சராசரத்தோடு ....
அ டக்கமாவதே .........!!!

 ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
 தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
 ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!

 ந்தி சாயும் நேரம் ....
 ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
 ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென...!

@
கவிப்புயல் இனியவன்
 

 தவன் துயில் எழமுன் ....

ராவாரத்துடன் எழுந்த .....
ருயிர் நண்பர்களே ....
ண்டவன் கிருபையால் .....
சீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

னந்தம் பொங்கிட ....
த்மா திருப்தியுடன் ....
ரம்பிப்போம் பணிகளை ....
யிரம் பணிவந்தாலும் ....
ர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ரம்பிக்கும் வாழ்க்கை ...
லயத்துக்கு சமனாகட்டும்....
ண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
னந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

த்திரமே பகையின் சூத்திரவாதி ....
த்திரத்தை வென்றவன் ...
ண்டவனை வெல்கிறான் ....
ண்டாண்டுகாலம் நட்புடன் ....
ட்சி செய்கிறான் உலகை .....!!!

தியும் அந்தமும் இல்லாத ....
ண்டவனை தினமும் தொழு ....
யிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ருயிர் குடும்பத்துடன் ....
னந்தமாய் வாழ்ந்திடுவோம்...!!!
+++
கவிப்புயல் இனியவன்
(தொடரும் )
  • தொடங்கியவர்
னிய 
னிமையான 
ன்பமான 
ல்லத்தில் 
றையருள்மிக்க 
ல்லறவாழ்க்கை 
ன்றும் என்றும் 
றையருளால் 
டையூறுகள் நீங்கி 
ன்பமே 
டைவிடாமல் கிடைக்க 
ந்தநாள் மட்டுமல்ல 
தயத்துடிப்பு உள்ளவரை 
ன்பலோகத்தில் வாழ 
ந்த 
னியவனில் 
தயம் கனிந்த 
னிய வணக்கம் 
யன்றவரை அயலவரையும்
ன்பமாய் வைத்திருங்கள் 
றைவன் விரும்புவதும் 
வ்வுலகில் எல்லோரும் 
ன்பமாய் வாழவைக்கும் 
இயல்புடைய மனிதனை தான்....!!!
  • தொடங்கியவர்

ஈர விழிகளை திறந்து ....
ஈசன் நினைவில் இருக்கும்
ஈரமான இனிய உள்ளங்களே ...
ஈரேழுலக இன்பம் பெற ...
ஈசன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

ஈகை கொண்ட இதயம் ...
ஈசன் குடியிருக்கும் இதயம் ....
ஈகையுடன் வாழ்பவர்கள் ....
ஈரேழு தலைமுறை வாழ்வர் ....
ஈகை தலைமுறை காக்கும் ....!!!

ஈட்டி முனைபோல் பேசாதே ....
ஈவிரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
ஈகையை விளம்பரமாக்காதே ...
ஈன செயல் எதையும் செய்யாதே ....
ஈன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ஈரமான பார்வையே இரக்கபார்வை....
ஈரமான செயலே உயர் சேவை ....
ஈரமான ஈரமான என்றால்....?
ஈசனை இதயத்தில் நினைத்து ....
ஈசனைபோல் வாழும் வாழ்கை..... !!!
@
கவிப்புயல் இனியவன் 
தமிழோடு விளையாடு 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஒரு சமுத்திரம், நன்றாக விளையாடுகின்றீர்கள் கவிதை வடிவில் 😀

  • தொடங்கியவர்

உள்ளம் தூய்மையாக இருப்பின்... 
ள்ளிருக்கும் மனது இறைவன்......!
ள்ளதூய்மை என்பது ....
யிரினங்கள் அனைத்திலும் ....
ள்அன்பை செலுத்துவதாகும் ....!!!

றவுகளே எனது இனிமையான ....
ள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் ....
ழைப்பை உயிராய் மதிப்போம் ....
ற்றார் உறவினரை மகிழ்விப்போம் .....
ற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!!

ள்ளொன்று வைத்து புறம்பேசாதே.....
ள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே .....
ண்டு களித்தே உடலை நோயாக்காதே.....
ண்மை அன்பை உதறி விடாதே .....
ள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!!

ள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
லகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
ள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
ள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் 
யிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம்...!!!

@

கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

ஊரோடு ஒற்றுமையாய் வாழ்...
ஊன் இல்லாதோருக்கு கொடுத்துதவு.....
ஊனம் என்பது உடலில் இல்லை .....
ஊத்தை கொண்ட உள்ளம் இருப்பதே ....
ஊர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு.....
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே .....
ஊதாரியாய் செலவு செய்யாதே .....
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ....
ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!!

ஊக்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ....
ஊதியத்தை இயன்றவரை பெற்றுவிடு ....
ஊழியம் செய்வதை உயர்வாய் நினை ....
ஊழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ....
ஊர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ....
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை .....
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ....
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ....
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு...!
@
கவிப்புயல்
இனியவன் 

  • தொடங்கியவர்

ழுந்திரு மனிதா ....
ழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
ன்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
ழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
ட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

வன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
வன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
வனல்ல அவன் - இறைவன் .....!
ல்லோர் இதயத்திலும் இருக்கும் 
ல்லையற்றவன் அவன் ....!!!

ங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
ப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
தற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
ந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
ல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

திரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
டுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
ல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
டுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
ல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

ன் என்று கேள்வி கேள் ....
ளனமாக இருந்துவிடாதே ....
ராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ளனமாக இருந்தமையே .....!!!

காதிபத்தியம் பல தோன்றியதால் ....
ழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
காதிபத்திய பொருளாதாரம் ......!!!

ணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
றிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
கலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
கன் அடியே போற்றியேன்று சரணடை ...
ழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!!!

ர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
டு தொடக்கிய ஆசானும்  ஏகன் .....
மாற்றுபவனை காட்டிலும் ....
மாறுபவனே புத்தி அற்றவன் .....
மாறாதே அத்துடன் ஏமாற்றாதே

  • தொடங்கியவர்
ம் பொறியை அடக்கி ....
யங்களை தெளிவுபடுத்தி ....
ம்பூதத்தை வசப்படுத்தி .....
ந்து வகை நிலத்தை ஆழும் ...
யன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

யங்களை தூக்கி எறிந்து விடு ....
க்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
யக்காட்சிக்கு இடமளிக்காதே .....
யமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
யங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

சுவரியத்தை  நேர்மையாய் உழை ....
க்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
யிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
யிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

யா என்று பணிபோடு முதியோரை அழை ....
யர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
வாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
யனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு....!!!
  • கருத்துக்கள உறவுகள்

உயிரெழுத்து கவிதைகளில் உயிர் நிறைந்திருக்கு புயல்........!   👍

  • தொடங்கியவர்

 

ளி கொண்ட இதயங்களே .....
ன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ன்றே குலம் ஒருவனே தேவன் ......!!!

டுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ன்று கூடியே துடைத்தெறிந்தோம் .....
ற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!!!

ழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ற்றுமையின்றியும் ஒழுகமின்றியும் வாழ்ந்தால் ....
ற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!!!

ளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
டுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....

@

கவிப்புயல் இனியவன் 

  • கருத்துக்கள உறவுகள்

"ஒளி கொண்ட இதயங்களே .....
ன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ன்றே குலம் ஒருவனே தேவன் .."

கவிப்புயல் இனியவன் இதை உணர்ந்தால் அமைதியாக வாழலாம் எல்லோரும்,

யார் பெரிவன் என்பதால் தான் இத்தனை பிரச்சனைகளும்

  • தொடங்கியவர்

கோ என்று வாழ ஆசைப்படாதே .....
ர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
டம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
டு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ரங்கட்டி மக்களை ஒதுக்காதீர் ....
ரம்போய் மக்களை விற்காதீர் .....
லமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

வியம் போல் மனதை அழகாக்கு....
சையின் சொற்களை இனிமையாக்கு ....
லை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
தல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ரினமே உண்டு அதுவே மனித இனம்....!!!

@

கவிப்புயல் இனியவன் 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது தொடருங்கள் புயல் அடிக்கட்டும்.........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

கவிக்குள் எழுந்த புயல் யாழ் களத்தையே கலக்கி அடிக்கிறதே.... பெயருக்கு ஏற்றபடி கவிப்புயல் ஈற்றில் இனிமை தரும். :100_pray:

  • தொடங்கியவர்

ண்ணில் காந்த சக்தியுடன் ....
டமையை மூச்சாய் கொண்டு....
திரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...
ண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!

ட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....
டப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....
ண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....
ண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!

ரும்புபோல் பேச்சில் இனிமையும் .......
திரவன் போல் மனதில் ஒளிமையும் .........
ற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......
ல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!

ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
ருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே........!!!

@

கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

காற்றை போல் பலமாய் இரு ....
காற்றை போல் மறைமுகமாய் இரு ....
காற்றை அசுத்தபடுத்தாதே .....
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!

காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....
காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....
காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....
காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!
+

இயற்கை மேல் அன்பு செலுத்துவோம்
இயற்கை கவிதை

  • தொடங்கியவர்

கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!!!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பேர்ச்சியை சாட்டி வாழாதே..... !!!
@
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும்....!!!

@

கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்
குப்பையில் போட்டாலும் ....
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!!!

குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!!

கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!!

குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!
@
கவிப்புயல் இனியவன் 
  • தொடங்கியவர்

கூடு துறந்து போனால் .....
கூச்சலிட்டு பயனில்லை ....
கூட்டுறவு வாழ்கை முறையில் ....
கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....!!!

கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....
கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....
கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....
கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!!!

கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....
கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....
கூத்து தமிழனின் பாரம்பரியம் .....
கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!!!

கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....
கூனல் முதுமையில் வந்தே தீரும் .....
கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....
கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும்...!

@

கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

கெடுதி கொண்ட உணவுகள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் ....
கெடுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் ....
கெடுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....!!!

கெட்ட உணர்வால் கெட்டார் கோவலன் ....
கெட்ட எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் .....
கெட்ட செய்யலால் கெட்டார் ராவணன் ....
கெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே .....
கெட்டவன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....!!!

கெச்சைக்கு தேர் கொடுத்தான் பாரி ....
கெட்டியாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி ....
கெம்பி செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ......
கெக்கலித்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் ....
கெடியுடன் கெழி கொண்ட வாழ்க்கை வாழ்வோம்.....!!!

@

கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்
கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....
கேசவன்(இறைவன் ) நினைவில் வாழ்தல் கேடயம் ....
கேள்வன்(கணவன் ) மனைவிக்கு கேடயம் ....

கேட்பார் சொல் கேளாதே 
கேட்டவுடன் எதையும்  கொடுக்காதே ....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....
கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!!!

கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி 
கேட்டறிதல்   அறிவுக்கு  உறுதி ....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி....!!!
@
கவிப்புயல் இனியவன்
  • தொடங்கியவர்

கையசைத்தேன் கண்ணசைத்தாள்......
கைவிலங்கிட்ட கைதியானேன்........
கைகோர்த்து பேசக்கேட்டேன்........!

கையோடு கை இணையக்கேட்டேன்.....
கை சாத்திட்டு என் கையைப்பிடி.......
கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....!

கைநழுவி போகாமல் இருக்க........
கைசாத்திட சம்மதித்தேன்........
கைப்பிடி விழாவும் முடிந்தது.........!

கைவழி இசைபோல் அவள்பேச.......
கைஞ்ஞானமாகியது என் புத்தி.......
கையோடு கைசேர்த்தாள் என்னவள்.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கவிப்புயல் இனியவன் said:

கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....!

கைதியாகிறேன் என்றவள்....

கைதியாக்கி விட்டாளே...!😭

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.