Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் சென்ற வவுனியாவை சேர்ந்த இரு இளைஞர்களை காணவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.  

குறித்த இளைஞர்கள்  கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர்.

இந்நிலையில் ஆபிரி்க்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள தங்கியிருந்த நிலையில் வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து வந்துள்ளனர்.

கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன், கதைத்துள்ளார். அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் வவுனியா குருமன்காட்டை சேர்ந்த பிரசன்னா (வயது27)  என்ற இளைஞரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். 

இதேவேளை,  கடந்த வாரமளவில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணிகளை ஏற்றிசென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சிலர் மரணமடைந்ததாக, அந்த படகில் பயணித்து தப்பிய இளைஞர் ஒருவர் காணாமல் போன இளைஞனின் உறவினர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த படகில் வவுனியாவில் இருந்து பயணித்த சிலரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாகவும் வவுனியாவில் உள்ள இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் சென்ற வவுனியாவை சேர்ந்த இரு இளைஞர்களை காணவில்லை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மொரோக்கோ படகு விபத்தில் சிக்கிய 2 இலங்கை இளைஞர்களில் ஒருவர் பலி

 

8faa954d-346595_650x250_crop.jpg

இலங்கையர்கள் உள்ளிட்ட சிலர் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினுக்கு பயணித்த படகு விபத்துக்குள்ளானதாக தகவல் வௌியாகியுள்ளது.

 

இந்த சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமற்போயுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் மொரோக்கோவிற்கு குறித்த இளைஞர்கள் சென்றிருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

கடந்த 3ஆம் திகதிக்கு பின்னர் அவர்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தாம் ஸ்பெயினுக்கு செல்லவுள்ளதாக இறுதியாக அவர்கள் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

எவ்வாறாயினும், அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதாக அதிலிருந்து தப்பிய ஒருவர் வவுனியாவை சேர்ந்த இளைஞர்களின் உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.

வவுனியா – குருமன்காடு பகுதியை சேர்ந்த பிரசன்னா சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வவுனியா – நொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் காணாமல் போயுள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள வௌிவிவகார அமைச்சு அலுவலகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் விபத்தில் சிக்கிய இளைஞர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

 

http://www.jaffnamuslim.com/2020/12/2_14.html

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் படகு விபத்தில் இறந்துள்ளதாகவும் இவர்களுடன் சேர்த்து மேலும் 7 பேரும் இறந்துள்ளதாக செய்திகள் சொல்கிறது உண்மையோ பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் போது 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இருவரும் படகு விபத்தில் இறந்துள்ளதாகவும் இவர்களுடன் சேர்த்து மேலும் 7 பேரும் இறந்துள்ளதாக செய்திகள் சொல்கிறது உண்மையோ பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் போது 

மன்னிக்கவும் விசாரித்த வகையில் யாருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை .

யார் ஏஜேண்டோ அவர்களை பிடித்து விசாரிப்பது நல்லது இப்படி காணாமல் போனவர்கள் திரும்ப வந்த சந்தர்ப்பங்கள் கூட .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

மன்னிக்கவும் விசாரித்த வகையில் யாருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை .

யார் ஏஜேண்டோ அவர்களை பிடித்து விசாரிப்பது நல்லது இப்படி காணாமல் போனவர்கள் திரும்ப வந்த சந்தர்ப்பங்கள் கூட .

ஆனால் இங்கு செய்தி வெளியிட்டு விட்டார்கள் பெருமாள் உயிருடன் இருந்தால் சந்தோசமே எனது சகோதரும் பாரிய சாவாலின் பின்னர் பிரான்ஸ் வந்து சேர்ந்திருக்கிறார் அவரும் வந்து சேர கொரானாவும் வந்து சேர்ந்திருக்கு யாரோ தமிழர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார்  சிறிய வேலைகள் செய்து அவருடன் வந்தவர்கள் லண்டனுக்குள் நுழைந்து விட்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

தனி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்களது உறவினர் ஒருவர் வவுனியாவிலிருந்து முக புத்தகம் ஊடாக ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார் பார்க்கவில்லையா..தம் பிள்ளைகளின் உடலங்கள் உட்பட இன்னும் பலரின் உடல்கள் மொரோக்கோவில் உள்ள ஒரு மருத்துவமைனயிலிருப்பதாக ; தப்பிய ஒருவுர் அறியத் தந்தாகவும் அதற்கு பின் தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கப் பெறாத நிலையிலிருப்பதனால்l தங்களது பிள்ளகைளது உடல்களை மீண்டும் தாயகத்துக்கு அனுப்பி வைப்பதற்கு யாராவது உதவி செய்யுமாறும் அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, யாயினி said:

தனி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்களது உறவினர் ஒருவர் வவுனியாவிலிருந்து முக புத்தகம் ஊடாக ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார் பார்க்கவில்லையா..தம் பிள்ளைகளின் உடலங்கள் உட்பட இன்னும் பலரின் உடல்கள் மொரோக்கோவில் உள்ள ஒரு மருத்துவமைனயிலிருப்பதாக ; தப்பிய ஒருவுர் அறியத் தந்தாகவும் அதற்கு பின் தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கப் பெறாத நிலையிலிருப்பதனால்l தங்களது பிள்ளகைளது உடல்களை மீண்டும் தாயகத்துக்கு அனுப்பி வைப்பதற்கு யாராவது உதவி செய்யுமாறும் அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
 

மேலே பெருமாள் எழுதி இருப்பதை பாருங்கள் அதற்க்காகவே எழுதினேன் 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் இங்கு செய்தி வெளியிட்டு விட்டார்கள் பெருமாள் உயிருடன் இருந்தால் சந்தோசமே எனது சகோதரும் பாரிய சாவாலின் பின்னர் பிரான்ஸ் வந்து சேர்ந்திருக்கிறார் அவரும் வந்து சேர கொரானாவும் வந்து சேர்ந்திருக்கு யாரோ தமிழர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார்  சிறிய வேலைகள் செய்து அவருடன் வந்தவர்கள் லண்டனுக்குள் நுழைந்து விட்டார்கள் 

உங்கள் சகோதரர் லண்டன் வந்தது சந்தோசம் நாங்கள் வந்த காலம் போல் இப்ப இல்லை நன்கு ஆங்கிலம் தெரிந்தால் சரளமாக கதைக்க தெரிந்தால் போடர் ஏஜென்சி காரன் கூட பேசாமல் போய் விடுவான் .இங்கு விசா இல்லை டிரைவ்விங் தெரியாது வேலை செய்ய அனுமதி இல்லை  தமிழ்நாடு  நாமக்கல்ளை சேந்தவர்  30 வயது இங்கு தொழில் அதிபர் மீன்  இறக்கி சந்தைப்படுத்தல் ஒரே பலம் வாயில் ஆங்கிலம் சுழண்டடிக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

உங்கள் சகோதரர் லண்டன் வந்தது சந்தோசம் நாங்கள் வந்த காலம் போல் இப்ப இல்லை நன்கு ஆங்கிலம் தெரிந்தால் சரளமாக கதைக்க தெரிந்தால் போடர் ஏஜென்சி காரன் கூட பேசாமல் போய் விடுவான் .இங்கு விசா இல்லை டிரைவ்விங் தெரியாது வேலை செய்ய அனுமதி இல்லை  தமிழ்நாடு  நாமக்கல்ளை சேந்தவர்  30 வயது இங்கு தொழில் அதிபர் மீன்  இறக்கி சந்தைப்படுத்தல் ஒரே பலம் வாயில் ஆங்கிலம் சுழண்டடிக்கும் .

ஓ அப்படியா தகவலுக்கு நன்றி 

அவர் எனது சித்தியின் மகன் தற்போது பிரான்சிலே உள்ளார் பெருமாள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.