Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்- உலக தமிழர் பேரவை அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்- உலக தமிழர் பேரவை அறிக்கை

 

முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயல் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றில் உலக தமிழர் பேரவை இதனை தெரிவித்துள்ளது.

gtf-1.jpg
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றியை பாராட்டும் அதேவேளை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் என கருதப்படுபவர்கள் அனைவரினதும் உடல்களையும் கட்டாயமாக தகனம் செய்வதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அர்த்தமற்ற பாரபட்சமான இந்த நடவடிக்கை கைவிடப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களையும் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறும் உலக தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் இலங்கை அரசின் இ;ந்த கொள்கை முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கடும் சீற்றத்தையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை அவர்களது மதநம்பிக்கையின் படி உடல்களை அடக்கம் செய்யவேண்டியது கட்டாயம் என சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா வைரசினால் முஸ்லீம் சமூகமே அளவுக்கதிகமான விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை அந்த சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.

srilanka-corona-dead.jpg
இந்த துஸ்பிரயோக கொள்கை பரந்துபட்டது,தகனம் செய்யப்பட்ட பல முஸ்லீம்களின் உடல்கள் கொரோனாவினால் பாதிக்கப்படாதவை – சோதனைக்கு உட்படுத்தப்படாதவை என தகவல்கள் வெளியாகியுள்ளன என குறிப்பிட்டுள்ள உலக தமிழர் பேரவை
தங்கள் நேசத்துக்குரியவர்களின் உடல்களை தகனம் செய்வது அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீயசெயல் எனகருதப்படுவதால் பலர் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கையில் தங்களை தொடர்புபடுத்திக்கொள்ளவிரும்பவில்லை என தெரிவித்துள்ளதுடன் பல முஸ்லீம்கள் தங்களின் உயிரிழந்தவர்களை பொறுப்பேற்க மறுக்கும துன்பியல் செயற்பாடு அரசாங்கத்தின் கொள்கை காரணமாக உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இந்த கொள்கையை பின்பற்றுவதற்கான- ஒருவருக்கு மரணத்தின் போது கிடைக்கவேண்டிய கௌரவத்தினை மறுப்பதற்கான நியாயமான காரணங்கள் இல்லை ,என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை உலக சுகாதார ஸ்தாபனம் தனது வழிகாட்டுதல்களில் உடல்களை புதைப்பதால் பொதுசுகாதாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது,உலகின் அனைத்து நாடுகளும் உடல்களை புதைப்பதற்கு அனுமதித்துள்ளன – இலங்கையை இந்த விவகாரத்தில் வித்தியாசமான நாடாக மாற்றியுள்ளன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
செல்வாக்குள்ள பௌத்தமதகுருமாரின் அழுத்தங்கள் காரணமாகவே உயர் அதிகாரிகள் தங்கள் வழிகாட்டுதல்களை கட்டாயமாக உடல்களை தகனம் செய்யவேண்டும் என மாற்றினார்கள்,பாதிக்கப்பட்ட 14 குடும்பங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் நிராகரித்தது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

corona-dead5-1-300x182.jpg
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகரிக்கும் அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் அதன் தீவிரவாத ஆதரவு சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக மாலைதீவில் உடல்களை அடக்க செய்யும் வழமைக்கு மாறானதொரு முயற்;சியை மேற்கொண்டது எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இவை அனைத்தும் இலங்கை பயணிக்கும் திசையை கேள்விக்கு இடமின்றி சுட்டிக்காட்டுகின்றன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
கட்டாயமாக உடல்களை தகனம் செய்யும் கொள்கை விதிவிலக்கானது இல்லை மாறாக ராஜபக்ச அரசாங்கத்தின் பரந்துபட்ட நிகழ்ச்சிநிரலின் பொருத்தமான ஒரு அம்சம்.
ஒருவருடகாலத்திற்குள் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வருந்தத்தக்க நடவடிக்கைகளான சர்வாதிகார போக்குடைய 20 வது திருத்தத்தினை நிறைவேற்றியது,அதிகாரவர்க்கத்தினை இராணுவமயப்படுத்தியமை – கண்காணிப்பு அச்சுறுத்தல் தடுத்துவைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டமை- ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகியமை இலங்கை மெதுவாக ஜனநாய அரசாங்கத்திலிருந்து ஏதேச்சதிகார அரசாங்கத்தை நோக்கி மாறுவதை வெளிப்படுத்தியுள்ளன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.’

 

https://thinakkural.lk/article/101050

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணமே இனி அரபு தேசம் என்றமாதிரி அரபுப் பதாகை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யிது இந்தச் சனம்....இவை என்னெண்டால் இலண்டனிலை இருந்து இவைக்கு குரல் கொடுக்கினமாம்...சிங்கள பகுதியில் வாலாட்ட முடியாமல் இப்ப யாழ்ப்பாணத்தில் காட்ட வந்திட்டினம்...அப்ப இந்த லண்டன் தமிழர் ..யாழ்ப்பாணத்தில் பாதியை பிரித்துக் கொடுக்கவும் அறிக்கை விடுவினமோ....கிழக்கு  எமது இதய பூமி என்று சோல்லுறவை ..வடக்கையும் எமது இதயம் என்று சொல்ல கனகாலமில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

உலக தமிழர் பேரவையாமோ ??   

 குளிர்க்காலம் போத்திக்கொண்டு இருங்கள்  கடுப்ப கிளப்பாமல் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் இன அழிப்பை எங்களின் காட்டிக்கொடுப்போடுதான் சிங்களத்தால் செய்ய முடிந்தது என்று இப்பவும் பெருமை பேசுற.. முள்ளிவாய்க்காலின் இறுதியில் சிங்களத்தோடு சேர்ந்து பாற்சோறு சாப்பிட்டு தமிழின அழிப்பை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய இந்தக் கூட்டத்துக்கு...

ஏன் 2019 இல் கூட மட்டக்களப்பு.. மற்றும் நீர்கொழும்பு.. மற்றும் கொழும்பில்.. தமிழ் கிறீஸ்தவர்களை முக்கியமாகக் குறிவைத்து குண்டுத்தாக்குதல் நடத்திய இந்தக் கூட்டத்துக்கு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலோ.. அல்லது எந்த தமிழின அழிப்பு நினைவேந்தலோ எதிலும் தம்மை ஈடுபடுத்தாது.. சிங்களவன் முன் தம்மை தூய்மையாகக் காட்ட விளையும் இந்தக் கூட்டத்துக்கு..

லண்டனில் இருக்கும் சில சோம்பேறிகள் வக்காளத்து வாங்கி.. அறிக்கை விடுவது என்பது... சாணக்கியமே அல்ல.. சரணாகதி.. ஆகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உலக தமிழர் பேரவையை சுருக்கி உ.த பேரவை என்று கூப்பிடலாம்.

காலப்போகில் அதுவே ஊத்தை பேரவை என்று மருவினாலும் பொருத்தமாய்தான் இருக்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக யாராவது குரல் கொடுத்து, அழியும் எங்களை காப்பாற்ற மாட்டார்களா? என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்திருந்த காலங்கள் ஏய்த்துவிட்டது. அன்றைய எமது சூழலில் இன்று இருக்கும் சமுதாயத்துக்கு குரல் கொடுப்பதில் தப்பில்லை. ஆனால் திண்ட சட்டியில் துப்புபவர்களாலும் அசிங்கப்படுவதும், அழிக்கப்படுவதும்  நாமே. இவர்கள் விடயத்தில் அமைதி காத்தல் நலம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.