Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என கோருவோரை மதிக்கிறேன்: சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என கோருவோரை மதிக்கிறேன்: சுமந்திரன்

போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களது கருத்தை நான் வெகுவாக மதிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே மூன்று தடவைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன.
அவை தொடர்பாக தமிழர் தரப்புக்கு எவ்வித பயனும் ஏற்படவிலை. கூட்டமைப்புடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்ட அரசங்காத்தினால் கூட எவ்வித முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கமானது ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடரின் தீர்மானத்துடன் ஒத்துப்போக முடியாது என இவ்வருட ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டது.

இதன் காரணமாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதைக் காட்டிலும் அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இதேவேளை, இவ்விடயம் மனித உரிமைகள் பேரவையின் கரங்களில் இருந்து வெளியே போக கூடாது.
சர்வதேச அரங்கில் இவ்விடயம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

இவ்விடயம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களது கருத்தை நான் வெகுவாக மதிக்கிறேன். ஏனெனில் அவர்கள் தமது கருத்தை வெளிப்படையாக சொல்கிறார்கள்.
அதன் பின்னரான நடவடிக்கைகள் எவை என்பது தொடர்பில் அவர்களால் கருத்து கூற முடியாவிடினும் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இவ்விடயம் கற்றப்பட வேண்டும் என குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் மனித உரிமைகள் பேரவையில் இவ்விடயம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் ஆனால் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என கூறும் பெரும்பான்மையினரின் கருத்து எனக்கு புரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/போர்க்குற்ற-விவகாரம்-மனி/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள எஜமான விசுவாசம் உச்சத்தில் இருக்கிறார்..

ஏலவே.. இனப்படுகொலையை.. போர்க்குற்றமாக்கி.. இப்ப அட்டூழியம்.. என்ற நிலைக்கு சம் சும் கும்பல் கொண்டு வந்திட்டுது.

அதுபோக.. ஐநா விசாரணை போய்.. சர்வதேச விசாரணை போய்.. கலப்பு விசாரணை போய்.. உள்நாட்டு விசாரணை போய்.. இப்ப ஒரு விசாரணையும் இல்லை என்றாக்கியாச்சு.

தமிழ் அரசியல்கைதிகள் போய்.. அரசியல் கைதிகள் யாரும் இல்லை என்றாக்கியாச்சி..

பாக்கி இந்த சர்வதே மனித உரிமைப் பேரவையில் கிடந்து இழுபடுற அந்தக் கடைசிக் கோவணம் தான். அது சிங்களவனுக்கு பெரும் குடைச்சலாக் கிடக்கு. அதையும் உருவிப் போட்டிட்டா..

எல்லாம் முடிஞ்சிடும்.

நாம பின்கதவால்.. வந்த காரியம் முற்றுப் பெற்றிடும். 

ஒன்றை இல்லாமல் செய்வதில் எம்மவர்கள் வல்லவர்கள்.. ஆனால்.. ஆக்கமாட்டார்கள்.. ஆக்கமாகவும் செய்யமாட்டார்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்.. புலிகள் மட்டும்.. சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாத அரசு சொல்லிக் கொள்வது போல.. இவைக்கும் எப்பவும் பயங்கரவாத அமைப்பாகும். அதில எல்லாம் இவை மாற்றத்தை... விட்டுக்கொடுப்பை கோர மாட்டினம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என கூறும் பெரும்பான்மையினரின் கருத்து எனக்கு புரியவில்லை”

இதன் அர்த்தம் என்ன? இவர் என்ன சொல்ல வாறார்? தெரிந்தவர்கள்  யாராவது கூறுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்கிறாரா? இல்லை இனிமேற்தான் கால அவகாசம் கொடுப்போம் என்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நாம் ஒன்றை சிந்திக்கணும்  தமிழ் மக்களுக்கு தீர்வை கொடுக்கப்போறன் என்பவர் முதலில் சிங்கள ராணுவ பாதுகாப்பு இல்லாமல் தமிழ் மக்களிடையே நெருங்க முடியாதவரால் தீர்வு வருமென்ற நம்பிக்கையை விதைப்பவர்கள் யார் ?

சுமத்திரனால் இதுவரை தமிழ் இனம் இழந்தது அதிகம் இப்பகூட வெளிநாட்டு தமிழமைப்பு செய்த கடிதம் என்று தானே ஒன்றை தயாரித்து அதை விக்கியருக்கு மெயிலில் அனுப்பி தில்லு முள்ளு பன்றார் .

சுமத்திரனால் எல்லாமே பறிகொடுத்து கொண்டு இருக்கிறேம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, பெருமாள் said:

சுமத்திரனால் எல்லாமே பறிகொடுத்து கொண்டு இருக்கிறேம் .

அவர் புலிகள் மேலுள்ள தனிப்பட்ட கோபங்களினால் தமிழினத்தையே கேள்விக்குறியாக்குகின்றார். சுமந்திரனுக்கு ஈழத்தில் பூரண ஆதரவு இல்லை. எல்லாம் புலம்பெயர் சுத்துமாத்துக்களின் ஆதரவு மட்டுமே.

ஆனாலும் இன்றைய எமது சமுதாயம் தெளிவடைந்து விட்டது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 போலிகளின்  கவர்ச்சியை  காட்டி ஏமாற்ற முனைகிறார்கள் அவ்வளவே. வக்காலத்து வாங்குபவர்களும் அவ்வாறானவர்களே. எதற்கெடுத்தாலும் இறந்தவர்களை இழுத்துவருவது அவர்களின் இயலாத் தன்மையே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.