Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புத் தம்பியே.....!!!

Featured Replies

image15jc0.jpg

பார்த்தவுடனே பாசமாய்

பண்பாக அக்கா என்றழைத்தாய்

பயத்துடனும் அன்போடும்

புன்னகையோடு எனை அண்மித்தாய்

அணமித்த உன்னை இன்புடன்

அரவணைத்தேன் தம்பியென

பாசத்தோடும் கண்டிப்போடும்

பாதுகாத்தேன் தம்பியுனை

இருவீட்டில் பிறந்திருப்பினும்

இருவரும் உறவுகள் ஆனோம்

அன்றாடம் என் வீட்டுக்கு வந்தாய்

அனுதினமும் உந்தன் வீட்டில் நான்

பிறந்த நாளின் போது

பாயாசம் ஊட்டி விட்டதை

மறக்க முடியாது நான்

மயானம் செல்லும் வரை

எவ்வளவோ கலகலப்பாக

எப்பொழுதும் இருந்த நமக்குள்

யார் கண்பட்டதோ தெரியலியே

யாம் இருவரும் எதிரிகளானோம்

என்று தணியும் இந்த கோபம்

என்னால் முடியவில்லை உனை நீங்க

முயல்கின்றேன் உனை அணைக்க

முரட்டு கோபம் எனை தடுக்குதே

என் கூடப்பிறவாத தம்பி நீ

என்றும் என் கூடவே இருப்பாயென

நமகிடையில் இன்னோர் உறவை

நினைத்துப் பார்க்கவேயில்லை

வாசம் வீசும் நம் உறவுக்குள்

வேசமின்றி நாசவேலை செய்ய

பாசம் வைத்து சிலர் பழகி

மோசம் செய்ததை நினைக்க

கண்களில் கண்ணீர் அருவியென பாய

வெண்ணிலவின் ஒளியும் மங்கி போக

கோபம் தணித்து உனை எதிர்பார்த்து

சோகத்தோடு காத்திருக்கின்றேன்

ஒருமுறை உன் திருவாயை திற

செருக்கை துளியின்றி மற

வா வந்து அக்கா என அழை

தா அன்பு முத்தங்கள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும்!

உங்க நிலமை புரிகின்றது, ஆறுதல் சொல்வதைத் தவிர எங்களால் என்ன செய்யமுடியும்.

இதை கவிதையாக மட்டும் எடுக்க என்னால் முடியவில்லை, இது ஒரு பாசப்பின்னலின் வெளிப்பாடு, வார்த்தைகளால் கூறமுடியாத ஒரு பிரிவு.

சோகங்கள் நீடிப்பதில்லை, உங்கள் சோகம் தீர எனது வேண்டுதல்.

அக்கா......... :D

Edited by Kuddithambi

வெண்ணிலா

கண்களில் என்ன

கண்ணீரா?

விழி நீர் துடை

செருக்கறுத்து வாவென

தம்பியை அழைப்பது

இருக்கட்டும்

நீயே தம்பியிடம் செல்

உள்ள(த்)தை சொல்

வரமறுத்தால்

அமைதியாய் வா

அணைக்க ஆயிரம்

உறவுகள் உண்டு!

  • கருத்துக்கள உறவுகள்

''உள்ள(த்)தை சொல்

வரமறுத்தால்

அமைதியாய் வா

அணைக்க ஆயிரம்

உறவுகள் உண்டு!"

ஆகா கவிரூபன் கொண்டிட்டீங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா கவிதை அருமை. தம்பி தவறை உணர்ந்து திரும்பி வர வாழ்த்துக்கள்.

கண்களில் கண்ணீர் அருவியென பாய

வெண்ணிலவின் ஒளியும் மங்கி போக

கோபம் தணித்து உனை எதிர்பார்த்து

சோகத்தோடு காத்திருக்கின்றேன்

வெண்ணிலா ஒளி மயங்கினா உலகு என்ன ஆகிறது தம்பியே எங்கிருந்தாலும் ஓடோடி வாங்கோ நில்லாமல் ஓடி வாங்கோ நிலா அக்காவுக்கு றோஜா பூ கொண்டு வாங்கோ.

:D

நிலா அக்கா கவலைபடவேண்டாம் நான் சொல்லிட்டன் தானே எங்கிருந்தாலும் தம்பி வந்திடுவான் :D

அக்கா......... :D

நீங்கதான் வெண்ணிலா சொன்ன தம்பியா? :D

அக்காகூட சண்டைபிடிக்காம இருக்கலாம்ல... :P

  • தொடங்கியவர்

மன்னிக்கவேண்டும்!

உங்க நிலமை புரிகின்றது, ஆறுதல் சொல்வதைத் தவிர எங்களால் என்ன செய்யமுடியும்.

இதை கவிதையாக மட்டும் எடுக்க என்னால் முடியவில்லை, இது ஒரு பாசப்பின்னலின் வெளிப்பாடு, வார்த்தைகளால் கூறமுடியாத ஒரு பிரிவு.

சோகங்கள் நீடிப்பதில்லை, உங்கள் சோகம் தீர எனது வேண்டுதல்.

இக்கவிதையை அவனுக்கும் அனுப்பினேன். பார்த்த பின்பு நிறைய எல்லாம் சொன்னான். என் சோகம் புரிவதாக சொன்னான். என்னை அக்கா என அழைத்தான் என் தம்பி. எனக்கோ உச்சி குளிர்ந்து விட்டது. எவருக்காகவும் நமக்குள் சண்டை வேண்டாமென ஒப்பந்தம் இட்டுள்ளோம். பார்ப்போம்.

உங்கள் ஆறுதலான கருத்துக்கு நன்றி வல்வை மைந்தன். :lol:

அக்கா......... :lol:

என்னது? இப்படி அக்கா னு கூப்பிடுறீங்க. நான் சொன்ன தம்பி நீங்கள் இல்லை. ஹாஹா :P

வெண்ணிலா

கண்களில் என்ன

கண்ணீரா?

விழி நீர் துடை

செருக்கறுத்து வாவென

தம்பியை அழைப்பது

இருக்கட்டும்

நீயே தம்பியிடம் செல்

உள்ள(த்)தை சொல்

வரமறுத்தால்

அமைதியாய் வா

அணைக்க ஆயிரம்

உறவுகள் உண்டு!

ம்ம் நான் தான் என் கோபத்தை மறந்து அவனிடம் சென்றேன். அவனோ தன் பக்க கருத்துக்களை அள்ளி வீசினான். புரிந்து கொள் என்று கேட்டான். அவனுக்காக என் உறவு நீடிப்பதற்காக ம்ம்ம் என தலையாட்டினேன். என் கோபத்தை குறைக்க சொன்னான். முயற்சிப்பேன். பார்ப்போம். அக்கா என அழைத்தான்.

ம்ம்ம் வெண்ணிலாவுக்காக நிறைய உறவுகள் இருக்கின்றன. என்றும் அன்பாக அரவணைக்க கூடியவர்கள் அவர்கள் யாவரும் இணையத்தில் தான். அண்ணா அக்கா நிறைய யாழ்கள உறவுகள். இப்போ ஒரு தம்பி. நன்றி கவி ரூபன். உங்கள் பதில் கவிதை சூப்பர். :lol:

நல்ல கவிதை பாராட்டுக்கள்!

நன்றி ஈழநிலா :(

வெண்ணிலா கவிதை அருமை. தம்பி தவறை உணர்ந்து திரும்பி வர வாழ்த்துக்கள்.

நன்றி இன்னிசை. :P

வெண்ணிலா ஒளி மயங்கினா உலகு என்ன ஆகிறது தம்பியே எங்கிருந்தாலும் ஓடோடி வாங்கோ நில்லாமல் ஓடி வாங்கோ நிலா அக்காவுக்கு றோஜா பூ கொண்டு வாங்கோ.

:blink:

நிலா அக்கா கவலைபடவேண்டாம் நான் சொல்லிட்டன் தானே எங்கிருந்தாலும் தம்பி வந்திடுவான் :lol:

ஹாஹா வெண்ணிலா ஒளி இல்லையேல் உலகு இருட்டாகிடும். ஆமால்ல. ஹாஹா

அடடடா நான் நினைச்சேன் எல்லோரும் ஜம்மு தம்பியை தான் நினைக்க போறாங்களோன்னு. ஆனால் ஜம்மு தம்பி எங்க வீட்டுக்கு வரல்லையே. ஹாஹா.

ம்ம் தம்பி அக்காக்கு ரோஜாப்பூ எல்லாம் தருவார். ஆனால் என்னை விட பயங்கர கோபக்காரன் பா. ம்ம் இருந்தாலும் என்னோடு இப்ப நேசம். ஹாஹா :P நன்றி ஜம்மு

நான் சொன்ன தம்பி இக்குட்டித்தம்பி இல்லை ஈழத்திருமகன். ஹாஹா

Edited by வெண்ணிலா

அக்கா......... :blink:

அக்கா...........

:lol::lol:

  • தொடங்கியவர்

ரொம்ப தான் வானவில்லுக்கும் குட்டித்தம்பிக்கும் என்னோடை லொள்ளு கூடிட்டு. நானே எவ்வளவு கவலையாக இருந்து கவிதை எழுதினேன். போங்க வானவில் நான் உங்க கூட டூ

ரொம்ப தான் வானவில்லுக்கும் குட்டித்தம்பிக்கும் என்னோடை லொள்ளு கூடிட்டு. நானே எவ்வளவு கவலையாக இருந்து கவிதை எழுதினேன். போங்க வானவில் நான் உங்க கூட டூ

அக்காகாகாகா..................... :angry: :lol::lol: :P :blink:

ஹாஹா வெண்ணிலா ஒளி இல்லையேல் உலகு இருட்டாகிடும். ஆமால்ல. ஹாஹா

அடடடா நான் நினைச்சேன் எல்லோரும் ஜம்மு தம்பியை தான் நினைக்க போறாங்களோன்னு. ஆனால் ஜம்மு தம்பி எங்க வீட்டுக்கு வரல்லையே. ஹாஹா.

ம்ம் தம்பி அக்காக்கு ரோஜாப்பூ எல்லாம் தருவார். ஆனால் என்னை விட பயங்கர கோபக்காரன் பா. ம்ம் இருந்தாலும் என்னோடு இப்ப நேசம். ஹாஹா :P நன்றி ஜம்மு

நான் சொன்ன தம்பி இக்குட்டித்தம்பி இல்லை ஈழத்திருமகன். ஹாஹா

தம்பி சொல்லாம ஒரு நாள் வருவனாக்கும் பிறகு யார் கேட்கிறதில்லை கோபத்தில அடிகிறதில்லை

:P

கவிதை நன்றாக இருக்கு அக்கா,!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அழகு.........அக்கா :P

Edited by putthan

ம் கவிதை நன்னாயிருக்கு வெண்ணிலா ....... :lol:

கவிதையால் அக்காவும் தம்பியும் பழையபடி நல்ல உறவுகளாக மாறியதை நினைக்க சந்தோசமாயிருக்கு..... ! :lol:

கோவங்களை மனசில் வச்சிருக்காமல் ஒருவர் செய்யும் தவறை மற்றவர் மன்னித்து பல காலம் ஒற்றுமையாக இருங்க ...... :lol:

யக்கோவ்......................

கவிதை சுடும்..தேன் - நானும்

ஆறியபின்தான் சுவைத்தேன்..

நாங்கள் சுத்தமென்றால் யமனை அஞ்ச வேண்டியதில்லை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிக்காக கவிதை நல்லா இருக்கு.

எனக்கு இப்பிடி ஒரு தம்பி இல்லையே என்று கவலையா இருக்கு. :lol:

  • தொடங்கியவர்

தம்பி சொல்லாம ஒரு நாள் வருவனாக்கும் பிறகு யார் கேட்கிறதில்லை கோபத்தில அடிகிறதில்லை

:P

வாங்கோ வாங்கோ. ஏன் நான் அடிக்கிறன்? கோபம் எல்லாம் இல்லை பா. நீங்க தாராளமாக வரலாம் :P

கவிதை நன்றாக இருக்கு அக்கா,!!!!!!!!

நன்றி இனியவள் :P

கவிதை அழகு.........அக்கா :P

நன்றி. அட பாவிகளா எல்லோருக்கும் அக்காவாகிட்டேனா? :angry: :) புத்தா உங்களுக்கே நியாயமா? :lol:

ம் கவிதை நன்னாயிருக்கு வெண்ணிலா ....... :huh:

கவிதையால் அக்காவும் தம்பியும் பழையபடி நல்ல உறவுகளாக மாறியதை நினைக்க சந்தோசமாயிருக்கு..... ! :lol:

கோவங்களை மனசில் வச்சிருக்காமல் ஒருவர் செய்யும் தவறை மற்றவர் மன்னித்து பல காலம் ஒற்றுமையாக இருங்க ...... :)

நன்றி அனிதா.

அனிதா எப்போதும் சமாளிக்க முடியுமா? சில தடவைகள் மன்னிக்கலாம். ஆனால் மன்னிப்பே தொடர்கதையானால் பொங்கி எழ தானே வேணும். ம்ம் என்னமோ அக்காவும் தம்பியும் தற்போது சந்தோசமாக இருக்கிறம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.