Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.நிலாவரையில் புராதன கட்டடம் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நிலாவரையில் புராதன கட்டடம் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு

 
1-133.jpg
 21 Views

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

PHOTO-2021-01-21-15-36-24.jpg

சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ், சட்டத்தரணி சுகாஸ், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

http://athavannews.com/wp-content/uploads/2021/01/6f1b94a7-f49b-414e-a333-a4f154d239b7-641x480.jpg

இங்கு கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=39960

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொல்பொருள் திணைக்களம் வந்தால்.....

அதற்குப் பின்னாலை புத்த பிக்குகளும், புத்த விகாரையும் வரும். 

நிலாவரை கிணத்துக்கும், ஆபத்து வந்து விட்டது. 😟

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனத்தின்ர வளவுக்குள்ள ஆய்வு செய்ய வரும்போது தான் கொஞ்சம் சுரணை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

யாழ்.நிலாவரையில் புராதன கட்டடம் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு

 
1-133.jpg
 21 Views

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

PHOTO-2021-01-21-15-36-24.jpg

தோண்டப்பட்ட குழி, சவக்குழி மாதிரித் தெரிகிறது. இந்த இடம் முசுலீம்களின் யனாசாவைப் புதைப்பதற்கு ஏற்ற மண்வளம் கொண்ட இடம் என்ற செய்தியும் விரைவில் வரலாம்... 😵

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்த தொல்பொருள் திணைக்களம் வந்தால்.....

அதற்குப் பின்னாலை புத்த பிக்குகளும், புத்த விகாரையும் வரும். 

நிலாவரை கிணத்துக்கும், ஆபத்து வந்து விட்டது. 😟

நான் நினைக்கிறேன் அந்த பகுதியில் சிலையை புதைத்து வைத்து விட்டினம்  போல் உள்ளது நாளை உரிமை கொண்டாட ஏதுவாக .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் – நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் தொல்லியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தலைமையில் இன்று (21) அதிகாலை முதல் திடீர் அகழ்வாராய்ச்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தால் திடீரென மேற்கொள்ளப்பட்டும் இந்த ஆய்வு நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை ஏற்பட்டது. தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களால் வலி.கிழக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டது.

முன்னறிவித்தல் ஏதுமின்றி இந்தப் பணியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபட்டுள்ள நிலையில் சம்பவத்தை அறிந்த வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர் தியாராஜா நிரோஷ் தலைமையிலான குழுவினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர்.


IMG_0360-300x200.jpg

IMG_0365-300x200.jpg

IMG_0366-300x200.jpg

 
 

IMG_0371-300x200.jpg

IMG_0373-300x200.jpg

IMG_0383-300x200.jpg

IMG_0388-300x200.jpg

 
 

இதன்பாதே இது ஒரு சாதாரண தொல்லியல் ஆய்வு. இந்த ஆய்வு தொடர்பாக நாம் அறிக்கை சமர்ப்பிப்போம். இந்த இடத்தில் சிலைகளோ அல்லது வேறு நிர்மாணங்களோ உருவாக்கப்பட மாட்டாது என்று தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஸை ‘உதயன் ஒன்லைன்’ தொடர்பு கொண்ட போது,

“அகழ்வு பணியொன்று இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, சபை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, நான் சம்பவ இடத்திற்கு வந்தோன். வரும்போது அங்கு இராணுவத்தினரும் காணப்பட்டனர்.

அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது ஆராய்ச்சி பணிகளுக்காகவே அகழ்கிறோம் என்று தெரிவித்தனர். ஆனால் எமக்கு சந்தேகம் உள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் ஏதாவது அத்துமீறலை செய்யும் தோக்கில் செயற்படுகின்றனரா தெரியவில்லை. எனவே நான் இப்போதும் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தால் திடீர் அகழ்வாராய்ச்சி – கண்காணிப்பு பணியில் வலிகிழக்கு தவிசாளர் – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம் யார்? ஏதற்காக வெட்டுகின்றீர்கள்? தவிசாளர் நேரில் கேள்வி

Digital News Team 2021-01-21T22:24:46

புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையிலானவர்கள் சென்றமையை அடுத்து பிசுபிசுத்துள்ளது.

nilavaray-thol2-300x225.jpg

இன்றைய தினம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நிலாவரை கிணற்றுப் பகுதியில் சிங்கள இனத்தினைச் சேர்ந்தவர்கள் கட்டிட அத்திபாரம் வெட்டுவதைப் போன்று வெட்டி வருகின்றனர் என்ற தகவல் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவைக்கூட்டத்தினை தவிசாளர் சடுதியாக முடிவுறுத்திவிட்டு சபையினரையும் அழைத்துக்கொண்டு நிலாவரை கிணற்றுப் பகுதிக்குச் சென்றார்.

அச் சமயத்தில் நிலாவரை கிணற்றுப்பகுதியில் இராணுவத்தினர் பலர் இருந்தனர். இராணுவத்தினர் தவிசாளர் உறுப்பினர்களுடன் வருவதைக் கண்டதும் வளாகத்தில் இருந்து வெளியேறிச்சென்றனர். இந் நிலையில் தவிசாளர், அங்கு நிலத்தினை வெண்டிக்கொண்டிருந்தவர்களிடத்தில் நீங்கள் யார்? என்ன செய்கின்றீர்கள்? என்று வினவினார். அதற்கு அங்கு நின்ற அதிகாரி ஒருவர் தான் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நளின் விரசிங்க… நாம் பணிகளில் ஈடுபடுகின்றோம் என்றபோது தவிசாளர் இங்கே எதாவது புதிய கட்டிடங்களை அமைக்கவா முயற்சிக்கின்றீர்கள்? எனக் கேட்டுவிட்டு நிலத்தினை வெட்டிக்கொண்டிருந்தவர்கள் முழுமையாக சிங்களவர்களாக இருந்தபோது தவிசாளார் தான் வரலாறு சார்ந்த விடயங்களாக இருப்பதால் தன்னால் தமிழில் தான் தொடர்ந்து உரையாட முடியும் என்றார்.

nilavaray-thol-300x225.jpg

அப்போது அங்கு நின்ற ஒருவரை இவர் தமிழர் தான் என தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரி கூட்டிக்காட்டியபோது அவரும் உரியவாறு தமிழைப்பேசவில்லை. இந் நிலையில் தவிசாளர்  நாட்டில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகள் ஆக்கிரமிப்புப் பணிகளாகவே அமைகின்றன அதுதான் எமக்கு சந்தேகமாகவுள்ளது. எமது மக்கள் இனநல்லிணக்கத்தினை பாதிக்கும் வகையில் இங்கு பௌத்த கட்டுமாணம் அல்லது வரலாற்ற மேசடி நடக்கப்போவதாக எனக்கு அறிவித்துள்ளனர்.

 
இப் பகுதியை பிரதேச சபைதான் பங்காளராக முகாமை செய்கின்றது. சுற்றுலா வலயமாக கேள்விக் கோரல் செய்வதும் நாம் தான். எமக்குத் தெரியாமல் என்ன செய்யப்போகின்றீர்கள்?   நான் தவிசாளராக அவதானிப்பினைச் செலுத்த வேண்டியுள்ளது என அவ்விடத்தில் ஒரிரு உறுப்பினர்களுடன் நின்றபோது, மீளவும் தோன்டப்பட்ட குழியில் கணிசமான பகுதி முடப்பட்டது.
பின்னர் அங்கு வந்திருந்தவர்கள் குறித்த பகுதியில் காணப்பட்ட சிறு சிறு புட்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தவிசாளரிடம் எதாவது பிரச்சினையா என்று கேட்டபோது தவிசாளர் நாம் எனது கடமையினை ஆற்றுகின்றோம் எனக் கூறிவிட்டு நிற்க சட்டி பானைகளுடன் உணவினை எடுத்து வந்து மதிய போசனத்தினை தொல்லியல் திணைக்களத்தினர் ஆரம்பித்திருந்தனர்.
 
nilavaray-thol1-300x225.jpg
  இந் நிலையில்,  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் அதன் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கே.சுகாஸ் உள்ளிட்ட மேலும் பல செயற்பட்டாளர்களும் அவ்விடத்திற்கு வருகை தந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். பின்னர் ஊடகங்களும் வருகைதர தொல்லியல் திணைக்களத்தினர் எடுத்து வந்திருந்த மண்வெட்டிகள், தள்ளுவண்டி போன்றவற்றினை பிக்கப்பில் ஏற்றி அனுப்பினர். பின்னர் 3 மணியாளவில் வந்திருந்த உத்தியோகத்தர்களையும் குறித்த பிக்கப் வாகனம் வந்து ஏற்றிச் சென்றது.

 

இந்நிலையில் சம்பவ இடத்தில் காத்திருந்த தவிசாளர், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்வர்கள் நிலாவரைக் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இருந்து வெளியேறினர்.

 

https://thinakkural.lk/article/106501

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.