Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பதிலாக ‘அமைதித் தூபி’ அமையும் – பல்கலைக்கழகப் பேரவை அதற்கே அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பதிலாக ‘அமைதித் தூபி’ அமையும் – பல்கலைக்கழகப் பேரவை அதற்கே அனுமதி

 
Capture-2-4.jpg
 115 Views

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட போர்க்கால முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ‘அமைதித் தூபி’ என்ற பெயரில் மீண்டும் கட்டியெழுப்ப பல்கலைக்கழகப் பேரவை அனுமதி வழங்கியிருக்கிறது.

மாதத்தின் இறுதி சனிக்கிழமையான நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

தூபி விவகாரம் தொடர்பில் நடந்தவற்றை துணைவேந்தர் சிறிசற்குணராஜா  நீண்ட அறிக்கை ஒன்றின் மூலம் பேரவை உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அதன் பின்னர் முன்னைய தூபி இருந்த இடத்தில் அமைதித் தூபியை அமைப்பதற்கான அனுமதியைப் பேரவை வழங்கியது.

இறுதிப் போரில் உயிரிழந்த தமிழர்களின் ஞாபகார்த்தமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இராணுவம், பொலிஸ் ஆகிய தரப்புகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவே தூபியை இடிக்க வேண்டியேற்பட்டது என்று துணைவேந்தர் தெரிவித்திருந்தார்.

தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. தூபி இடிக்கப்பட்டத்தை எதிர்த்தும் அழிக்கப்பட்ட தூபி அதே இடத்தில் மீளவும் கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் மாணவர்கள் சிலர் பட்டினிப் போராட்டதில் குதித்தனர். அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்திற்குப் பேராதரவு வழங்கினர்.

தூபி இடிப்பைக் கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய கொந்தளிப்பு நாடுகளைக் கடந்து, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கும் விரிவாக்கம் பெற்றது. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தூபியை மீளக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் சிறிசற்குணராஜா பல்கலைக்கழக மாணவர்களுக்கு உறுதிமொழி வழங்கினார். அதனை உறுதிபடுத்தும் விதமாக மாணவர்களோடு இணைந்து புதிய தூபிக்கான அடிக்கல்லையும் நட்டுவைத்து மாணவர்களின் பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

இவை அனைத்தும் நடந்த பின்னர் நடைபெற்ற முதலாவது பேரவைக் கூட்டத்தில் தூபியை மீண்டும் நிறுவுவதற்குரிய முறையான அனுமதியை பேரவை வழங்கியது. முன்னர் அமைக்கப்பட்டிருந்த தூபி யாழ். பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பு அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் முறையான அனுமதியின்றிக் கட்டப்பட்டிருந்தது. இதனைக் காரணமாகக்காட்டி, சட்டத்திற்கு முரணான அந்தக் கட்டுமானத்தை அகற்றவேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

 

https://www.ilakku.org/?p=40855

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சமிருந்த கோவணமும் மெல்ல...

 

உபயம் டக்கி..

☹️

  • கருத்துக்கள உறவுகள்

அமைதித் தூபி  என்றால்....
அதனை யாழ். பல்கலைக் கழகத்தில் கட்டத் தேவையில்லை.
சிங்களப் பகுதிகளில்... தாராளமாக கட்டிக் கொள்ளட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி தூபி' என்பதற்கு இடமில்லை | முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும் | மாணவர்  ஒன்றியம் உறுதி! - Vanakkam London

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது.

அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலையே தூபி மீள கட்டப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைவிடுத்து, ‘அமைதி தூபி’ எனும் பெயரிலையோ அல்லது வேறு வடிவங்களிலோ தூபியை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்ட விரோதமானது எனக்கூறி பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவில் கடந்த மாதம் எட்டாம் திகதி இடித்தழிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டத்துடன், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த, எதிர்ப்பலையைத் தொடர்ந்து ஜனவரி 11ஆம் திகதி காலை தூபியை மீள அமைப்பதற்கு என துணைவேந்தர் தலைமையில் மாணவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் பின்னர், தூபி கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், தூபி விவகாரத்தில் நடைபெற்ற விடயங்களை விலாவரியாகக் குறிப்பிட்டு துணைவேந்தர் சிறிசற்குணராஜா அறிக்கை சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது அமைக்கப்படவுள்ள தூபியினை ‘அமைதி தூபி’ எனும் பெயரில் அமைக்க பேரவை அனுமதி அளித்துள்ள நிலையில், மாணவர் ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

http://athavannews.com/அமைதி-தூபி-என்பதற்கு-இடம/

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கும் இடங்களில் சத்தம் போடும் தூபிகள் இடைஞ்சலாகவே இருக்கும் 
அமைதி தூபி என்றால் அமைதியாக இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அமைதித்தூபியோ, முள்ளிவாய்க்கால் தூபியோ என்பது பிரச்சனையல்ல.தமிழரின் எண்ணங்களுக்கு தடைவிதித்து, அவர்களின் மனங்களை சம்மட்டி கொண்டு இடிப்பதே முக்கிய நோக்கம். அதற்கு துணைவேந்தர் பதவியளித்து அதற்காக துணை போன பச்சோந்தி சற்குணராஜாவே காரணம். நாளைக்கு இந்த அமைதித் தூபிக்கும் ஒரு காரணம் காட்டி இடிக்கப்படும். இந்தத் தூபிகள் தென்னிலங்கையில் சிங்களவருக்கு  தமிழரை அடக்கியாண்ட அடையாளங்களாக விளங்கவேண்டும். வடக்கில் அவர்களின் கோரமுகத்தை மறைக்க இது இருக்க கூடாது. அவர்கள் தங்கள் முகவர்களை வைத்து  அரங்கேற்றும்  நாடகத்திற்கு எதிர்கால சந்ததிக்கு இது பெரும் தடை. 

  • கருத்துக்கள உறவுகள்

சிக்னல் , பேருந்து நிறுத்தம்,  இட அடையாளம் இதெல்லாம் கல்வெட்டில் ஒன்டு இருக்கும்.. மக்கள் மத்தியில் புழங்கும் பெயர் வேறாக இருக்கும் ..

விட்டா அவயள் முதலாம் உலக போரில் உயிர் நீத்தவர்களுக்கு தூபி வைக்க அனுமதி தருவினம்  என் சிப்சு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.