Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாஜக விரைவில் தொடங்கப்படும்... சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தடாலடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பா.ஜ.க.வை ஒருபோதும் ஏற்கமுடியாது – சிங்கள ராவய சீற்றம்

 
ravaya-0.png
 3 Views

 

அரசியல் நோக்கங்களுடன் இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி கிளையை ஸ்தாபிக்க முயற்சிக்கப்படுமாயின் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் அறிவிப்பு தொடர்பில் வினவிய போது அவர் மேலும் கூறியதாவது,

“இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசியல் நோக்கங்களுடன் இலங்கையில் அதன் கிளையொன்றை ஸ்தாபிக்க முடியாது. அதற்கு நாம் முழுமையான எதிர்ப்பை வெளியிடும் அதேவேளை, அத்தகைய செயல்பாடு இடம்பெறும் பட்சத்தில் நாட்டின் சுயாதீனத்தன்மையும், இறையாண்மையும் வெகுவாகப் பாதிப்படையும். எனவே இந்நாட்டின் பௌத்த பிக்குகள் என்ற அடிப்படையில் அதனை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.

இலங்கையில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் முதலீடுகளைச் செய்கின்றன. அதேபோன்று அபிவிருத்தி செயல்திட்டங்களில் தமது பங்களிப்பை வழங்குகின்றன. எனினும் அந்நாட்டிலுள்ள கட்சியொன்றை இங்கு ஸ்தாபிப்பதற்கு அவை முற்படவில்லை. அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் அதனை எம்மால் அனுமதிக்கவும் முடியாது.

அதே போன்று இந்தியாவும் எமது நாட்டில் முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடமுடியும். எனினும் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்யும் நோக்கத்துடன் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதிபடத் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/?p=42584

  • Replies 54
  • Views 5k
  • Created
  • Last Reply
17 hours ago, விசுகு said:

எங்கேயோ  கேட்ட  குரல்

கன நாளைக்கு  கொண்டைய  மறைக்க முடியாது  தானே???

விசுகர், என்ன காமடி பண்ணுரீங்க. எதையுமே மறைக்காமல் வெளிப்படையாய் நான் பேசுவது தானே உங்க கடுப்புக்கே காரணம். எதையுமே மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. குற்றஙளை மறைத்து எந்த குற்றவாளிகளையும் காப்பாற்ற வேண்டிய தேவை,  அதை செய்யும் திருட்டுத்தனம் எனக்கு இல்லை.  ஆகவே ஒளிவு மறைவு இன்றி அனைத்தையும் பேச நான் தயார். 

ஆனால் நீங்க தயாரா? 😂😂

  • கருத்துக்கள உறவுகள்


இப்போ உசுப்பேத்திவிட்டு பின்பு அழிந்து போனோமே என்று வருந்தி பயன் இல்லை.
முன்னைய தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றினார்கள் என்று பலர் யாழ் இணையத்தில் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பாஜக கட்சி தொடங்குமா? – அரசியல் கட்சி, அமைப்புக்கள்  கூறுவது என்ன?

 
1-164.jpg
 17 Views

இலங்கை மீது கண் வைப்பதற்கு முன்பாக முதலில் இந்தியாவிற்குள் முழுமையாக ஆட்சி அமைய பாஜக முயற்சிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் தமது அரசியல் கிளையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், இலங்கையில் உள்ள பல்வேறு தரப்பினர் தமது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனோ கணேசன் இது குறித்து கூறுகையில்,

“இந்தியாவின் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில், பாரதிய ஜனதா கட்சி வென்று அங்கெல்லாம் ஆட்சி அமைக்க வேண்டும் என தான் விரும்புகின்றேன். அது சாத்தியமான பிறகே, இந்தியாவிற்கு வெளியில் இருக்கக்கூடிய இலங்கையில் ஆட்சி அமைப்பது பற்றி அக்கட்சி கவலை கொள்ள வேண்டும். வேண்டுமானால், சுமார் 100 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கலாம். இந்த விடயத்தில் நேபாளத்தில் தனது கிளையை பாஜக விரிவுபடுத்துவது தொடர்பில் நான் கருத்து வெளியிட போவதில்லை. இதேவேளை, பாரதிய ஜனதா கட்சியில் வளர்ந்து வரும் இந்தியாவின் திரிபுரா மாநில முதலமைச்சரை பார்த்து, ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் அவரது எண்ணத்தை ரசிக்கின்றேன்” என்றார்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அமைவது தொடர்பில் மக்கள் குழப்பமடைய தேவையில்லை என இந்து சமயப் பேரவையின் தலைவர் சக்தி கிரீவன் தெரிவித்திருந்த நிலையில்,

“அரசியல் நோக்கங்களுடன் இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி கிளையை ஸ்தாபிக்க முயற்சிக்கப்படுமாயின் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை“ என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் “வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் தனித்துவம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கட்சிகள் வருவதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள தயார்“ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் “வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழர்களே ஆள வேண்டும். ஒருவேளை தமிழர்களின் பகுதிகளுக்கு அவ்வாறான கட்சிகள் வருவதாக இருந்தால், அதனை தாம் எதிர்க்கப் போவதில்லை. சிங்கள மக்களின் இறைமைகள், சிங்கள மக்களின் சுயாதீபத்தியம், சிங்கள மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள், சிங்கள மக்களின் மொழி ஆகியவற்றை நான் அங்கீகரிப்பேன். அதேபோன்று, தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாடு, சுயாதீபத்தியம், இறைமை, தமிழ் தேசியகம், மொழி ஆகியவற்றை சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்களை அங்கீகரிக்கும் கட்சியொன்று, ஆரம்பிக்கப்படுவதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்வேன் என்று சிறிதரன் குறிப்பிட்டார்.

நாடு விட்டு நாடு வந்து, அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சி கொண்டிருக்கவில்லை. எனினும், இலங்கை அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு செய்தியை கூறக்கூடிய வகையில் இந்த விடயத்தை அக்கட்சியை சேர்ந்த மாநில முதல்வர் தெரிவித்திருக்கலாம்.

எவ்வாறாயினும், பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் இலங்கையில் கட்சி ஆரம்பிக்கப்பட்டு,அதனூடாக தமிழர்களுக்க தீர்வொன்று கிடைப்பதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வேன்” என்றார்.

 

https://www.ilakku.org/?p=42608

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

விசுகர், என்ன காமடி பண்ணுரீங்க. எதையுமே மறைக்காமல் வெளிப்படையாய் நான் பேசுவது தானே உங்க கடுப்புக்கே காரணம். எதையுமே மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. குற்றஙளை மறைத்து எந்த குற்றவாளிகளையும் காப்பாற்ற வேண்டிய தேவை,  அதை செய்யும் திருட்டுத்தனம் எனக்கு இல்லை.  ஆகவே ஒளிவு மறைவு இன்றி அனைத்தையும் பேச நான் தயார். 

ஆனால் நீங்க தயாரா? 😂😂

 

ரொம்ப சிரமம் சகோ

எனக்கு  எவற்றிலும் நல்லதையே பொறுக்கத்தெரியும்

உங்களுக்கு  கெட்டதையே பொறுக்க  வரும்

கடினம்  சகோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.