Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேரணையை நிறைவேற்றினாலும் எம்மை எதுவும் செய்ய முடியாது! - மஹிந்த இறுமாப்பு.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரேரணையை நிறைவேற்றினாலும் எம்மை எதுவும் செய்ய முடியாது! - மஹிந்த இறுமாப்பு.!

Screenshot-2021-03-01-07-49-54-430-com-a

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறாவிட்டால் என்ன? அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவேமாட்டோம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. இலங்கை தொடர்பான புதிய பிரேரணை விவகாரமும் சூடுபிடித்துள்ளது. வாக்குரிமையுள்ள 10 நாடுகள் மட்டும் இதுவரை இலங்கைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறா விட்டால் என்ன எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இம்முறை பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எமது நட்பு நாடுகள் உறுதியாக உள்ளன. இறுதியில் என்ன நடந்தாலும் எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டில் நாம் மாற்றம் எதையும் செய்யவே மாட்டோம். எமது புதிய அரசு பதவியேற்ற கையுடன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கொள்கை விளக்க உரையில் அரசின் நிலைப்பாடுகளை தெளிவாக வெளியுலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரும் தற்போது ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்தியம்பியுள்ளார். எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மிரட்டல்களுக்கும், அவருக்கு ஆதரவாக இருக்கும் சில நாடுகளின் கூட்டிணைவால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கும் நாம் அஞ்சவும் மாட்டோம்; அடிபணியவும் மாட்டோம்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/03/01/23140/

  • கருத்துக்கள உறவுகள்

இது வெளியில் இறுமாப்பு தோற்றம் இருந்தாலும், இலங்கைத்  தீவு அதன் முக்கிய சர்வதேச அரசியல், பொருளாதார  தொடர்புகள், சார்பு காரணிகள் (வர்த்தகம், கடன்) போன்றவற்றுக்கு முழுமையாக மேற்கு-ஹிந்தியை கூட்டணிக்கு கட்டுண்டு இருக்க தேவை இல்லை என்பது இதன் சமிக்ஞை ஆகும்.

மங்கள சமரவீர பொய்யே சொல்கிறார் என்று, அதாவது UNHRC சொன்ன நல்லிணக்கம் என்பதற்கு எண்ணமுள்ள அரசியல் ஆவல் (intentional political will) இல்லை என்றும், UNHRC சொன்ன நல்லிணக்கம் என்பதை  புதைப்பதற்கான   எண்ணமுள்ள அரசியல் ஆவல் (intentional political will) மட்டும் தான் மகளை சமரவீர கூட வைத்து இருந்தார் என்றும் அப்போதே சொல்லியது.

இதை தெரிந்தும் விட்டுக்கொடுத்து, மேற்கு, சர்வதேச சமுக கூட்டு, கிந்தியாவின் ஆசியுடன். சுமந்திரன் போன்றோர் உள்ளூர்  ஆதரவை காட்டியும், அனல், சுமந்திரன் கையில் அப்போது ஒன்றும் பெரிதாக  இருக்கவில்லை. கிந்தியாவே, முழுமையாக செல்வாக்கு செலுத்தியது.     

முன்பு சொல்லியது, தேயிலை வர்த்தகம் சிங்களம், இப்பொது பெரும்பாலும் சீன சந்தைக்கு மாற்றி  விட்டது.

ரணில், மைத்திரியின் நல்லாட்சி 2015 இல் இருந்து வாங்கிய காலமே, இந்த ஏற்பாடுகளை செய்வதற்கு, நல்லிணக்கம் என்ற பெயரில்.     
      
சிங்களம், ஒரு படி மேலேயே நிற்கிறது, பூகோள அரசியல், பொருளாதார நிலையில். 

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலை வர்த்தகம், வட்டிக்கு கழிக்கப்படும் அதுவும் யுவானில்...

மேலும், சிங்களத்தின் இந்த நிலையே எமக்கு நல்லது. இலங்கை மீது விதிக்கப்படும் எந்த தடையும் மீறி சீனா பாதுகாக்கும். வீட்டோ அதிகாரத்தினை கூட பாவிக்கும்.

ஆனால், ஒரே ஒரு விசயமே, சிங்களத்தினை தடுமாற செய்யும். அதுவே தமிழர்களின் சுஜ நிர்ணய உரிமை குறித்த முடிவு, இதனை சீனாவோ, சிங்களமோ தடுக்க முடியாது.

அதுவே, இந்தியாவுக்கும், மேற்குக்கும், தமிழருக்கும் உள்ள இறுதி வாய்ப்பு. 

கிழக்கு தீமோர் விசயத்தில், இந்தோனேசியாவுக்கும், கோசோவா விசயத்தில் சேர்பியாவுக்கும், தென் சூடான் விசயத்தில் சூடானுக்கும், எரித்திரியா விசயத்தில் எத்தியோப்பியாவுக்கும் இதுவே நிகழ்ந்தது வரலாறு.

கனடாவின் கியூபெக் மாகாணமும், பிரித்தானியாவின், ஸ்காட்லாந்து நாடும், சுஜநிர்ணய உரிமை தேர்தல் நடாத்த கோரியபோது, மறுக்காமல் நடாத்த வேண்டிய நிலைமை உருவானதும், இந்த யாருமே மறுக்க முடியாத உரிமைதான்.

அப்படி ஒரு நிலைமை உருவானால், சிங்களவன் எவ்வளவுதான் கெஞ்சினாலும், தமிழ் பேசும் இனம், ஒட்டு மொத்தமாக, சிங்களத்தினை நிராகரிக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

அப்படி ஒரு நிலைமை உருவானால், சிங்களவன் எவ்வளவுதான் கெஞ்சினாலும், தமிழ் பேசும் இனம், ஒட்டு மொத்தமாக, சிங்களத்தினை நிராகரிக்கும்.

அவனை காப்பதற்கு இருக்கிறார்கள் தமிழ் அரசியல் தரகர்கள். இவனது இந்த தெனாவெட்டுக்கு ஐ. நா. இலங்கை மீது நடவடிக்கை எடுக்க காட்டிய கால தாமதம்,   நம்ம அரசியல் தரகர்களின் முண்டு கொடுப்பே காரணம். அவனுக்கு குளிர் விட்டுப்போச்சு  இந்த முடிவை  வைத்துக்கொண்டு குழு அமைக்கிறேன், விசாரணை செய்கிறேன், நல்லிணக்கத்தை உருவாக்குகிறேன் என்று காலத்தை  இழுத்தடித்து, எல்லோரையும்  ஏமாற்றியது தான் கண்ட பலன்.   நம்ம அரசியற் தலைவர்கள் ஓடியோடி வெளிநாட்டுத்தூதுவர்களை சந்தித்து, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கியும், சில முடிவுகள் அவர்களையும் மீறி ஐ. நாவில்  எடுக்கப்பட்டு விட்டதால், இப்போ தாங்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்க, ஒப்புக்கு சப்பாக சில குற்றச்சாட்டுகளை அரசு மீது  அடுக்கிக்கொண்டும்,  தன்னை விட்டு விடையங்கள் கைமீறி போய்விடாமல் இருப்பதற்காக  எல்லாவற்றுக்குள்ளும்  மூக்கை நுழைத்துக்கொண்டும்,  கருத்துக்களை சொல்லிக்கொண்டும்  நடிக்கும் கூட்டமும் உண்டு. இவர்ளை இனங்கண்டு வெளியேற்றும் வரை  விடிவு என்பது தமிழருக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, satan said:

அவனை காப்பதற்கு இருக்கிறார்கள் தமிழ் அரசியல் தரகர்கள். இவனது இந்த தெனாவெட்டுக்கு ஐ. நா. இலங்கை மீது நடவடிக்கை எடுக்க காட்டிய கால தாமதம்,   நம்ம அரசியல் தரகர்களின் முண்டு கொடுப்பே காரணம். அவனுக்கு குளிர் விட்டுப்போச்சு  இந்த முடிவை  வைத்துக்கொண்டு குழு அமைக்கிறேன், விசாரணை செய்கிறேன், நல்லிணக்கத்தை உருவாக்குகிறேன் என்று காலத்தை  இழுத்தடித்து, எல்லோரையும்  ஏமாற்றியது தான் கண்ட பலன்.   நம்ம அரசியற் தலைவர்கள் ஓடியோடி வெளிநாட்டுத்தூதுவர்களை சந்தித்து, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கியும், சில முடிவுகள் அவர்களையும் மீறி ஐ. நாவில்  எடுக்கப்பட்டு விட்டதால், இப்போ தாங்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்க, ஒப்புக்கு சப்பாக சில குற்றச்சாட்டுகளை அரசு மீது  அடுக்கிக்கொண்டும்,  தன்னை விட்டு விடையங்கள் கைமீறி போய்விடாமல் இருப்பதற்காக  எல்லாவற்றுக்குள்ளும்  மூக்கை நுழைத்துக்கொண்டும்,  கருத்துக்களை சொல்லிக்கொண்டும்  நடிக்கும் கூட்டமும் உண்டு. இவர்ளை இனங்கண்டு வெளியேற்றும் வரை  விடிவு என்பது தமிழருக்கு இல்லை.

ஒன்று நடக்க வேண்டும் என்றால், அனைத்துமே அமைந்து வரும்.

பலருக்கு தெரியாத ஒன்று. 1600ம் ஆண்டில் உருவான, இங்கிலாந்தின் கிழக்கிந்திய கொம்பனி இந்தியாவினை உருவாக்கி இருந்தாலும், அது இந்திய துணைக்கண்டத்தில் காலூன்ற காரணம், 1661ம் ஆண்டில், பெரிதாக அழகில்லாத, பற்கள் துருத்திய போர்த்துக்கேய இளவரசியை, இங்கிலாந்து இரண்டாம் சார்ள்ஸ் மன்னர் கலியாணம் கட்ட கொடுக்கப்பட்ட சீதனம், இன்று பாம்பே நகரம் அமைந்த பகுதி.

கோவுடன் சேர்த்து போர்த்துக்கேயர் பிடித்து வைத்திருந்தனர். 

நோகாமல் நொங்கு துண்ணுறது இதுதான்.

அதனை வைத்தே, இந்திய துணைக்கண்டத்தில் உறுதியான காலூன்றினர். அதுதான், அமைந்து வருவது என்பது.  

****

மன்னருக்கு வைப்பு எக்கசக்கம். வெளியாலை 13 - 17 பிள்ளையள் பிறந்தாலும், போர்த்துக்கேய, பட்டத்து ராணிக்கு ஒன்றுமே பிறக்கவில்லை ஆததால், அவரது தம்பியார் மன்னரானார்.

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.