Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
 
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
 
 
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தனர். 
 
2-ம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 60, அக்‌ஷர் படேல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 89 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 3-ம் நாளான இன்று வாஷிங்டன் சுந்தரும், அக்‌ஷர் படேலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இந்த இருவர் கூட்டணியை பிரிக்க இங்கிலாந்து அணி மிகவும் தடுமாறியது. 
 
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் - அக்‌ஷர் கூட்டணி 171 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தியது. எனினும் அக்‌ஷர் படேல் தேவையில்லாமல் ரன் எடுக்க ஓடியதால் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார் அப்போது 96 ரன்களில் இருந்தார் வாஷிங்டன் சுந்தர். அவர் எப்படியும் சதமடித்து விடுவார் என நம்பினார்கள் இந்திய ரசிகர்கள். ஆனால் அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய இருவரையும் டக் அவுட் செய்தார் பென் ஸ்டோக்ஸ். இதனால் மறுமுனையில் இருந்த வாஷிங்டன் சுந்தர், ஏமாற்றத்தோடு 96 ரன்களுடன் வெளியேறினார். 
 
இதன்மூலம் இந்திய அணி, 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும், லீச் 2 விக்கெட்டுகளும் எடுத்த்னர். 
 
இதனையடுத்து 2-வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்திலேயா இந்திய அணியின் சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அஸ்வின் தனது முதல் ஓவரிலேயே கிராவ்லியை 5 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து அடுத்த பந்தில் ஜானி பேர்ஸ்டோவை வெளியேற்றினார். இதனையடுத்து அஸ்வின், அக்சர் சுழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.  
 
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (30 ரன்கள்) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். பின்னர் 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களான பென் போக்ஸ் 13 ரன்களும், அடுத்து களமிறங்கிய டொம்னிக் பெஸ் 2 ரன்னும், ஜேக் லீச் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரன்ஸ், தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
 
202103061611197178_indindidasfnasdfsd._L
 
 
 
 
 
 
 
முடிவில் இங்கிலாந்து அணி 54.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசம் மற்றும் ஒரு இன்னிங்கிஸ் வெற்றியை சுவைத்தது. இங்கிலாந்து அணிக்கெதிரான 3-1 என்ற இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, லண்டனில் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் நடந்த முதலாவது 5 நாள் போட்டியுடன் இந்தியா விழித்துவிட்டது. விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி ஆடுகளத்தை தங்களுடைய சுழல்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றமாதிரி அமைத்து 2/3 நாளில் போட்டியை முடித்துவிடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும்சுந்தரின் சதத்தை ஆவலுடன் எதிர்பார்த்தன்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, சுவைப்பிரியன் said:

நானும்சுந்தரின் சதத்தை ஆவலுடன் எதிர்பார்த்தன்.

நானும் தான் ?
பாவ‌ம் பெடிய‌ன் , கொஞ்ச‌ ப‌ந்த‌ பின்ன‌னி வீர‌ர்க‌ள் த‌ட்டி கொடுத்து இருந்தா சுந்த‌ர் ச‌த‌ம் அடிச்சு இருப்பார் , 

இதோட‌ சுந்த‌ர் அடிச்ச‌ மூன்றாவ‌து அரை ச‌த‌ம் ?

சுந்த‌ர் ப‌ந்து வீச்சிலும் க‌வ‌ண்ம் செலுத்த‌னும் அப்ப‌ தான் ந‌ல்ல‌ ஆல்ர‌வுண்ட‌ரா வ‌ருவார் ?

அஸ்வினுக்கு முத‌ல் சுந்த‌ர‌ இற‌க்கி இருக்க‌னும் வ‌ட் ப‌ண்ண ?

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் விளையாட்டு அன்மைக்கால‌மாய் ம‌கிழ்ச்சி அளிக்குது சுவை அண்ண‌ 

51 minutes ago, ஏராளன் said:

சென்னையில் நடந்த முதலாவது 5 நாள் போட்டியுடன் இந்தியா விழித்துவிட்டது. விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி ஆடுகளத்தை தங்களுடைய சுழல்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றமாதிரி அமைத்து 2/3 நாளில் போட்டியை முடித்துவிடுகின்றனர்.

ஆட‌த் தெரியாத‌வ‌லுக்கு மேடை ச‌ரி இல்லை என்ற‌ க‌தை தான் இது ?

இங்லாந் அணியில் இந்த‌னை ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இருக்கின‌ம் ?

20ஓவ‌ர் விளையாட்டு இல்லை 5நாள் விளையாட்டு , 5 நாள் விளையாட்டுக்கு மிக‌வும் பொறுமை தேவை ?

இந்த‌ டெஸ் விளையாட்டில் விளையாடின‌ வீர‌ர்க‌ள் எல்லாரும் அடிச்சு விளையாட‌ கூடிய‌வை இது ஜ‌ந்து நாள் விளையாட்டு என்ற‌த‌ ம‌ற‌ந்து விளையாடின‌ம் ?

சுந்த‌ர் அவுட் ஆகாம‌ 96 ஓட்ட‌ம் எடுத்தார் அது எப்ப‌டி ?

மைதான‌ பிச்சை குறை சொல்வ‌த‌ ஏற்று கொள்ள‌ முடியாது ?

நான் இந்தியா அணிய‌ ஆத‌ரிக்கிற‌வ‌ன் கிடையாது , த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடும் போது விளையாட்டை பார்ப்ப‌து உண்டு ? 

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் அவுஸ்திரேலிய அணியில் இருக்கிறவங்கதான் கடைசியா வாறவனும் அரை சதத்தை கடந்து அடிப்பான். மற்ற அணியில் முக்கியமான துடுப்பாட்டக்காரர்கள் அவுட் ஆனால் பின்னால வாறவங்க எல்லாம் பொசுக்கு பொசுக்கு எண்டு அவுட்டாகி பெவிலியன் போய் சோடா குடிப்பார்கள்.

முன்பு அவுஸ்திரேலிய அணி இருந்த பவரில் இப்போது  இந்திய அணி இருக்கிறது, 7,8, 9 வதாக களம் இறங்குறவர்கள்கூட அரை சதத்தை கடந்து நூறை நெருங்க பார்க்கிறார்கள்,

அதுவும் ரிஷப் பண்ட்  சேவாக் ஸ்டைலில் பயம் எண்டது கொஞ்சம்கூட இல்லாமல் அடிச்சு நொருக்குற காட்சி, வொஷிங்டன் சுந்தர் அஸ்வின் எல்லாம் துடுப்பாட்டத்தில் காட்டும் மிரட்டல் எல்லாம்  பார்த்தால் விராத்கோலிய நம்பிதான் எல்லாமே என்ற நிலமை இந்திய அணியின் கையை விட்டு போயிட்டுது.

திறமையானவர்களால் போதும் போதும் எனும் அளவிற்கு இந்திய அணி நிரம்பி வழியுது, அவர்களை அடையாளம் காட்டியதில் முக்கிய பங்கு ஐபிஎல்க்குத்தான்.

இலங்கையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பாடசாலை நாட்களிலிருந்து கிரிக்கெட்டில் பிரியமான அணியென்றால் இந்திய அணிதான். இலங்கை அணியென்றாலே அருவெருப்பு,அந்த  அணியில் என்ன நடக்குது எண்டும் தெரியாது அதன் வீரர்கள் பெயர்களை அறிவதிலும் ஆர்வமில்லை.

அது இப்போதும் தொடர்கதைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தொடரில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தியா ஐசிசி டெஸ்ட் தரப் பட்டியலில் முதலாவது இடத்துக்கு முன்னேறியதுடன் வரும் ஜூன் மாதம் 18-22 வரை நடைபெறவுள்ள டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியில் நியுஸிலாந்து அணியை எதிர்த்து லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆடவுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.