Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை

ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டு சுயாதீன ஊடகங்கள் மற்றும் பெப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் உயிரிழப்புகளைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பின் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

3000.jpeg

நாட்டின் மிகப் பெரிய நகரமான யாங்கோனில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மார்ச் 14 பின்னர் பாகோவில் புதிய இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

82 பேரின் இறப்பு எண்ணிக்கை அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தால் தொகுக்கப்பட்டுள்ளது. 

இந்த சங்கம் பெப்ரவரி 1 ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர் ஏற்பட்ட தாக்குதலில் இருந்து தினசரி உயிரிழப்புகள் மற்றும் கைதுகளை வெளியிடுகிறது.

அதேநேரம் மியான்மர் நவ் செய்தித்தளமும் 82 பேர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது.
 

 

https://www.virakesari.lk/article/103650

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மரில் ஒரே நாளில் 82 பேரை சுட்டுக்கொன்ற இராணுவம்

 
1-88-696x391.jpg
 38 Views

மியான்மரில் ஒரே நாளில் 82 பேரை இராணுவம் சுட்டு கொன்றுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரின் பாகோ நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்கள் நடத்திய போது அவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் 82 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 14-ம் திகதி   யான்கூன் நகரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு ஒரே நாளில் அதிகபட்சமாக பாகோ நகரில் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மியான்மரில் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 46 பேர் சிறுவர்கள் என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது.

 

https://www.ilakku.org/?p=47107

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமும் இப்படித்தான் வெகுவிரைவில் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, பெருமாள் said:

சிங்களமும் இப்படித்தான் வெகுவிரைவில் .

ஏதோ சிங்களம் இவ்வளவுகாலமும் தெய்வ கடாட்சமாய் இருந்த மாதிரியேல்லோ கதைக்கிறியள்?
 

மே 18' உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு - தமிழ்முரசம் செய்திச் சேவை

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700யைக் கடந்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாங்கோனுக்கு வடகிழக்கில் 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ள பாகோ நகரில் இடம்பெற்ற போராட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 82பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தற்போது உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 700யைக் கடந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை இராணுவத்தினர் எடுத்துச் சென்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க இயலாத சூழல் நிலவுகிறது.

இதேவேளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாண்டலேயில் உள்ள மியாவடி வங்கியின் மிகப்பெரிய கிளை மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் போது பாதுகாப்பு காவலர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2021/1209365

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.