Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது: பாகிஸ்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது: பாகிஸ்தான்

[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 13:26 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்காவின் உள்விவகாரங்களுக்குத் தீர்வு காண வெளிநாடுகள் தலையிட முடியாது என்று சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சகாத் ஏ சௌத்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

உள்நாட்டு பிரச்சினையை சிறிலங்காவே தீர்ப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்.

பாகிஸ்தான், இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் என்றாலும் அவர்களின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது.

தற்போது சிறிலங்காவுக்கு உலகில் முழு உரிமைகளும் வழங்கப்படவில்லை போன்ற தோற்றப்பாட்டையே நாம் அவதானித்துள்ளோம். நடைபெற்று வரும் மோதல்களை தீர்ப்பதன் மூலம் உலகத்தில் அதிக உரிமைகளை கொண்ட தனக்குரிய இடத்தை பிடிப்பதற்கு சிறிலங்கா போராட வேண்டும்.

தனக்கு எது நல்லது என்பதை சிறிலங்காவே தீர்மானிக்க முடியும். எனவே பாகிஸ்தான், இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் ஏன் அதன் உள்விவகாரங்களில் தலையிட வேண்டும். இனப்பிரச்சனையை தீர்ப்பதில் ஊடகங்கள் அதிக பங்கு வகிக்க முடியும் ஏனெனில் சமூகங்களுக்கு இடையில் அவை தொடர்பாடல்களை ஏற்படுத்தும் கருவியாக தொழிற்பட முடியும்.

சிறிலங்காவில் உள்ள முஸ்லிம் மக்களை மையப்படுத்தி அல்லது தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராக தான் பாகிஸ்த்தான்- சிறிலங்கா உறவு உள்ளதாக ஊடகங்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் நாம் சிறிலங்காவில் உள்ள ஒரு சமூகத்தை சார்ந்து உறவை பேணவில்லை, அதனை ஒரு நாடாக கருதியே உறவுகளை பேணுகின்றோம் என்றார் அவர்.

நன்றி - புதினம்

இனப்பிரச்சனை உள்நாட்டு விவகாரமென்பதை பாக்கிஸ்தான் சொல்லவேண்டிய தகுதி அதற்கு இல்லை.

இவர் சிங்களவருக்கு வக்காளத்து வாங்குகிறாரா அல்லது யாரையாவது மறைமுகமாகத் தாக்குகிறாரா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட போங்கப்பா . ஈழ தமிழனுக்கு இவங்க எல்லாம் தேவையில்லை. கை கொடுக்க போவது GREEN TEA தான். பாவம் பாப்பாணருக்கும் உலகபொலிஸ்காரனுக்கும் வயிற்றோட்டம் தான் வரபோகுது. :) .

இது தான் காலக்கணிப்போ?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாக்கிஸ்தான் எப்ப கருத்துக் கூறும் அளவிற்கு முன்னேறியது?!! 'தீவிரவாதம் தலைவிரித்தாடும் பாக்கிஸ்தானுக்கு! 'விடுதலைப்போரின் மகத்துவம் புரிய வாய்ப்பில்லைத்தான்!.

இந்தியாவை உள்ளே நுளையாதே. நான் அங்கே நிக்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறார். :P :P

இது இந்தியாவின் தன்மானத்தை தூண்டி இந்தியாவை உள்ளே அனுப்பி புலிகளோடு மோதவிடும் ஒ

ஒரு கல் ரெண்டு மாங்காய் முயற்சியோ..

இதன் உண்மையான அர்த்தம் என்ன? உலகுக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி கண்ணே என்பதா? பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் முதல் எல்லா அழிவு ஆயுதங்களையும் சிரிலங்காவுக்கு கொடுத்து போர் தீவிரமடைய மேலும் மேலும் உதவிகளை (தலையீடுகளை) நாம் செய்வோம். தமிழர்க்கு நீதியான நியாயமான தீர்வை வழங்குமாறு வற்புறுத்தி வேறு யாராவது தலையீடு செய்யக்கூடாது.

சிறுபுள்ளி

என்னதான் பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு பகையாகவும் இலங்கைக்கு நட்பாக இருந்தாலும்..... பிரச்சினைக்குள்ள போகாதேங்கோ முதுகெலும்பை முற்றிச்சு போடுவாங்கள் எண்டு புத்தி சொல்லி இலங்கையை இக்கட்டுக்கை தள்ளும் எண்டு இலங்கை கனவான்கள் கனவிலையும் நினைச்சு இருக்க மாட்டினம்...!

நாம ஆயுதங்களை வித்து தள்ளுவம் ...இந்த நாராயனர் யாரு உள்ளுக்கவந்து வாங்கனாமுன்னு தடுக்க??..அமத்திக்கிட்டு கிடங்கனு சொல்லுறாரு :D

Edited by Kuddithambi

இந்த நாட்டுக்காரர் ஆட்டை அறுக்கும் போது கடவுளுக்கே சொல்லிப்போட்டு வெட்டி சாப்பிடுகிறவங்கள்

இவங்களுக்கு என்ன தெரியும் உயிர்களின் மதிப்பு.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் உதவும் விடயத்தில் யாரும் தலையிட முடியாது என்பதை இக்கருத்தின் மூலம் மறைமுகமாக கூறுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் ஈழப்போராட்டத்தில் தங்களுக்கு அனுகூலம் தேடப் பார்க்கின்றார்கள். இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா,யப்பான் என்று எல்லோருமே தாங்கள் எப்படிப் புகலாம் என்று வழி தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் தமிழரின் எச் செயற்பாடும் தமிழருக்குத் தீமையாகப் போகக் கூடாது. அந்த சாதூரியத்தில் தலைவன் செயற்படுவதால் தான் அவர்களால் நேரடியாக முடியாமல் உள்ளது.

சரி அதிருக்கட்டும். இந்தியா என்றால் பார்ப்பானியென்றும், இந்து மதவெறி என்றும் திட்டித் திசை திருப்புகின்ற நம் ஆய்வாளர்கள், பாகிஸ்தான் என்றால முஸ்லீம் மதவெறி என்றோ, சுனி, சியாவின் ஆதிக்க வெறி என்றும் திட்டித் திசை திருப்பினமோ? :) -_-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Jun 27 6:15:09 EEST 2007

நோர்வே, இந்தியா ஏனையவை எதற்கு? இலங்கைப் பிரச்சினையில் பிறநாடுகள் தலையிடக் கூடாது என்கிறது பாகிஸ்தான் சொந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதனை அனுமதிப்பதே உகந்த வழி என்கிறார் தூதுவர் ஷாகஸாட் சௌத்திரி

இலங்கைப் பிரச்சினையில் பிறநாடுகள் தலையிடக் கூடாது. தனது சொந்தப் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு அதனை அனுமதிப்பதே உகந்த வழி.

இலங்கை தனக்கு எது சிறந்தது என்பதனைத் தெரிவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். பாகிஸ்தானோ, இந்தியாவோ, நோர்வேயோ அல்லது வேறு எந்தப் பிற நாடுமோ இலங்கையின் உள் விவகாரத்தில் ஏன் தலையிட வேண்டும்?

இவ்வாறு கொழும்பில் உள்ள பாகிஸ்தானியத் தூதுவர் ஷாகஸாட் சௌத்திரி கேள்வி எழுப்பி விடையும் தெரிவித்திருக்கிறர்.

கொழும்பில், இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தில் ""ஊடக ஒழுக்க நெறி'' என்ற பொருளில் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று நடைபெற்றது. தமிழ் பேசும் மகளிர் ஊடக அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பாகிஸ்தானி யத் தூதுவர் மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையின் பிரச்சினைகளை எந்த வெளிநாட்டாலும் தீர்த்து வைக்கவே முடியாது. இந்தியா, நோர்வே மற்றும் வெளிநாடுகளின் தலையீடு நியாயமற்றது. அந்தந்த நாடு தத்தமது பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள அவற்றை அனுமதிக்க வேண்டும்.

உலகத்தில் இலங்கைக்குரிய சரியான இடம் அளிக்கப்படவில்லை.

இங்கு நிலவும் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைத்து, உலகில் தனக்குரிய சரியான இடத்தைப் பிடிப்பதற்கு இலங்கை போராட வேண்டும் என்றார்.

அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது:

இங்கு நிலவும் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஊடகங்கள் பெரும் பங்காற்ற முடியும். நாட்டில் உள்ள சமூகங்களை இணைக்கும் பாலமாக விளங்கக்கூடிய சக்தியும் திறனும் ஊடகங்களுக்கு உண்டு.

ஊடகங்களில் மிகக் குறிப்பாக தமிழ் ஊடகங்களில் இலங்கையுடன் பாகிஸ்தான் வைத்திருக்கும் உறவு முஸ்லிம்களை மையமாகக் கொண்டது என்ற கருத்தை பொதுமக்களுக்கு உண்டாக்கும் விதத்தில் தகவல், கருத்துக்கள் வெளியிடப்படுகின் றன.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடை யேயான தொடர்புகள் தமிழர்களின் போராட் டத்தை நசுக்கும் நோக்கம் கொண்டது என்ற தவறான கருத்தும் அவற்றில் வெளிப்படுத் தப்படுகின்றன.

இலங்கையுடன் நாம் உறவுகளை ஆரம் பித்த போது, அதனை ஒரு நாடு என்ற நிலை யில் வைத்தே அவ்வாறு செய்தோம். தனி ஒரு சமூகத்துடன் உறவாடும நோக்கத் துடன் அல்ல என்றார் பாகிஸ்தானியத் தூதுவர். (அ)

நன்றி - உதயன்

ஈழப் பிரச்சினையில் இந்தியா

தலையிடக் கூடாதாம்; கூறுகிறது பாக்.

இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா உள்ளிட்ட எந்த வெளிநாடும் தலையிடக் கூடாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

இலங்கைக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் ஷாசாத் செளத்ரி கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அப்போது இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக அவர் கருத்துக்கள் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினை, இலங்கையின் உள்நாட்டு விவகாரம். இதில் இந்தியா உள்ளிட்ட வேறு எந்த வெளிநாடும் தலையிடக் கூடாது.

இலங்கைப் பிரச்சினையை அவர்களே சமாளித்துக் கொள்வார்கள். அதில் இந்தியாவோ, பாகிஸ்தானோ, நார்வேயோ அல்லது வேறு எந்த நாடுமோ தலையிடுவதற்கு உரிமை இல்லை.

இலங்கைப் பிரச்சினைக்கு இலங்கையில் உள்ளவர்களால்தான் தீர்வு காண முடியும். வேறு நாடுகளுக்கு இதில் உரிமை இல்லை.

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு உரிய அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. தற்போது இலங்கையில் நிலவும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து, உலக அரங்கில் தனக்குரிய இடத்தைப் பெற இலங்கை அரசு போராட வேண்டும் என்றார் சௌத்ரி.

விடுதலைப் புலிகளை சமாளிக்க முடியாமல் திணறும் இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவிரமாக போராட இந்தியா ஆயுத உதவி செய்ய வேண்டும் என்று கோரியது. ஆனால் இந்தக் கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது.

இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து ஆயுத உதவியைப் பெறத் தொடங்கியுள்ளது இலங்கை. இதுகுறித்து சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தான், சீனாவிடமிருந்து இலங்கை அரசு ஆயுத உதவிகளைப் பெறக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் துணைத் தூதர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு அதிபர் ராஜபக் ஷே அளித்த பேட்டியில், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறியிருந்தார்.

-thatstamil-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.