Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் அருகி வரும் கலை

Featured Replies

 

யாழ்ப்பாணத்தில அருகி வரும் ஒரு கலை பீடி சுற்றுவது முன்பு ஒரு குடிசை தொழிலா நடந்துகொண்டு இருந்த இந்த தொழில் இப்போ பல்வேறு காரணங்களால பலரால தொடந்து செய்யாம விடுபட்டு வருது. இதுக்கு முக்கிய காரணம் இதுக்கான தேவையும் குறைஞ்சு கொண்டே போறது தான்.  இப்பிடியே போனா ஒரு 3-4 வருஷத்தில இந்த கலையே யாழ்ப்பாணத்தில/இலங்கை முழுவதும் இல்லாம போயிடும், சிலர் எத்தனையோ விதமான பிரச்சனைகள் எதிர்நோக்கி இத தொடந்து செய்து வந்தாலும் ஒரு 1000 பீடி சுத்தினா தான் இவங்களுக்கு 900 இலங்கை ரூபா கிடைக்கும்.  அப்பிடி 1000 பீடி சுத்த தோராயமாக இவங்களுக்கு 7-8 மணி நேரம் எடுக்கும், இத போல உங்களுக்கு வேற ஏதும் தொழில்கள்/ கலைகள் தெரியுமா. இப்பிடி இன்னும் ஒரு 5-6 வருஷத்தில இல்லாம போற மாறி, சொல்லுங்க ஒரு பதிவு பண்ணி வைக்க முயற்சிக்கிறன். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்ரிக் கதிரைகளின் பெருக்கத்தால்... ஊரில் பின்னல் மரக்கதிரைகள்.. சாய்மனைக்கதிரைகளை பின்னவும் பொருட்கள் இல்லை.. ஆக்களும் இல்லை. இந்தக் கலையும் அருகி வரும் கலைக்குள் அடங்குகிறது. 

மீளவும் தும்பு மெத்தைகளுக்கும்.. பஞ்சு மெத்தைகளுக்கும்.. பிரப்பங்கதிரைகளுக்கும் திரும்புமா ஊர்.. உலகம்..??!

பிளாஸ்ரிக் பாவனைக்கு முற்றான தடை வந்தால்.. இந்தக் கலைகள் மீண்டும் உயிர்க்கலாம். குறைந்தது பாடசாலை மட்டத்திலாவது இவற்றை அறிமுகப்படுத்திக் கற்றுக் கொடுப்பதோடு.. இயற்கைக்கு உகந்த பொருட்களை தயாரிக்கவும்.. கண்டறியவும் உதவக் கூடிய அறிவை பிள்ளைகள் மத்தியில் ஊட்டக்கூடிய கல்வியும் அவசியமாகும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய பல குடும்பங்கள் + பெண்பிள்ளைகள்  பீடி சுத்தியே வாழ்வாதாரத்தை விடவும் மேலதிகமாக தமக்கு வேண்டிய நகைகள், பணம் எல்லாம் சேகரித்து வந்துள்ளார்கள்.... மேலும் மாவிட்டபுரப் பக்கமெல்லாம் வெங்காயக்கூடைகள் பின்னி வலிகாமம் சங்கத்தில் குடுத்தும் உழைப்பார்கள். பின்னேரங்களில் அக்கம் பக்கத்து பெண்கள் எல்லாம் விடுப்பு கதைத்துக் கொண்டு வேலை செய்வார்கள்.....அது ஒரு கனாக் காலம்.......!  😇

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, sivarathan1 said:

 

யாழ்ப்பாணத்தில அருகி வரும் ஒரு கலை பீடி சுற்றுவது முன்பு ஒரு குடிசை தொழிலா நடந்துகொண்டு இருந்த இந்த தொழில் இப்போ பல்வேறு காரணங்களால பலரால தொடந்து செய்யாம விடுபட்டு வருது. இதுக்கு முக்கிய காரணம் இதுக்கான தேவையும் குறைஞ்சு கொண்டே போறது தான்.  இப்பிடியே போனா ஒரு 3-4 வருஷத்தில இந்த கலையே யாழ்ப்பாணத்தில/இலங்கை முழுவதும் இல்லாம போயிடும், சிலர் எத்தனையோ விதமான பிரச்சனைகள் எதிர்நோக்கி இத தொடந்து செய்து வந்தாலும் ஒரு 1000 பீடி சுத்தினா தான் இவங்களுக்கு 900 இலங்கை ரூபா கிடைக்கும்.  அப்பிடி 1000 பீடி சுத்த தோராயமாக இவங்களுக்கு 7-8 மணி நேரம் எடுக்கும், இத போல உங்களுக்கு வேற ஏதும் தொழில்கள்/ கலைகள் தெரியுமா. இப்பிடி இன்னும் ஒரு 5-6 வருஷத்தில இல்லாம போற மாறி, சொல்லுங்க ஒரு பதிவு பண்ணி வைக்க முயற்சிக்கிறன். 

 

மன்னிக்க வேணும்.... இனி இல்லாமல் போகும் தானே.

புகையிலை பயிர்ச்செய்கை தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பீடி சுத்தல் தொழிலும் இல்லாமல் போகும். அத்துடன், இது நோய் தரும் பொருள். இல்லாமலே போகட்டுமே.

****

நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்களாயின், இவர்களுக்கு, புலம் பெயர் தமிழர் சார்ந்த தொழில்களை அறிமுகப்படுத்துங்கள்.

வேறு நாடுகளில் இருந்து வருபவைகளில், கலப்படம் இருப்பதாக கருதும் இங்குள்ள மக்கள், நேரடியாக, மொளகாய்த்தூள், இடித்து வறுத்த அரிசிமா, அங்கிருந்து dhl, fedex மூலம் வரவைக்கிறார்கள்.

நேற்று இங்கிருக்கும் பெரிய ஆசிய கடை ஒன்றுக்கு போயிருந்தேன். 500 வருசத்துக்கு முன்னம் வரை, தமிழன் வித்த மிளகினை, பிரேசில் நாட்டில் செய்து பேக் பண்ணி அனுப்பி விக்கிறார்கள்.

போர்த்துகேயன் கொண்டு போய் அங்கே சேர்த்து விட்டான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலத்திலை பீடி சுத்துற இலைக்கு பெரிய தட்டுப்பாடு வந்துட்டுது. பீடி இலை மாதிரியே மொருக்கம் பழ மரத்து இலையும் இருக்கும்.அதாலை சனமெல்லாம் மொருக்க மர இலையெல்லாத்தையும் உருவி காயப்போட்டு விக்க வெளிக்கிட்டினம்.

என்ரை புகை பழக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே உந்த பீடிதான். இஞ்சை ஆரும் பீடி பத்தியிருக்கிறியளோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

ஒரு காலத்திலை பீடி சுத்துற இலைக்கு பெரிய தட்டுப்பாடு வந்துட்டுது. பீடி இலை மாதிரியே மொருக்கம் பழ மரத்து இலையும் இருக்கும்.அதாலை சனமெல்லாம் மொருக்க மர இலையெல்லாத்தையும் உருவி காயப்போட்டு விக்க வெளிக்கிட்டினம்.

என்ரை புகை பழக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே உந்த பீடிதான். இஞ்சை ஆரும் பீடி பத்தியிருக்கிறியளோ? 😁

நான் பத்திப் பார்த்திருக்கின்றேன்..!

ஆனால் இலங்கையில இல்லை....லண்டனில எண்டு சொன்னால் நம்பவா போறீங்கள்?

பங்களா தேசிகளின் கடைகளில் விப்பார்கள்! ஒரு பம்பலுக்குக் கொஞ்சப் பேர் சேர்ந்து பத்திப் பார்த்தோம்!

பீடி மணம் மனசிலையிருந்து போக ஒரு கிழமை எடுத்தது எண்டால் பாருங்கோவன்!🙃

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்ரை புகை பழக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே உந்த பீடிதான். இஞ்சை ஆரும் பீடி பத்தியிருக்கிறியளோ? 😁

உங்களுக்கு அப்பிடி , எண்டை ஊரில் பீடி சுத்தியே கோடீஸ்வரியான அக்கா ஒருவரும் இருக்கிறா 
கோடிஸ்வரியான பிறகு பீடியிலை பக்கமும் போறதில்லை (வேற ஒன்றுமில்லை பீடி சுத்தப்போன இடத்தில் 
பீடி கம்பெனி முதலாளியின் கோடீஸ்வர மகன் அக்காவை  போட்டு சுத்தோ சுத்து என்று சுத்தி வாந்தியெடுக்க வைக்க, முதலாளியும் வேறை வழியில்லாமல் கண்ணாளம் கட்டிக்கொடுக்க அக்காவும் கோடிஸ்வரியாகி போனா) 

 

  • தொடங்கியவர்
10 hours ago, nedukkalapoovan said:

பிளாஸ்ரிக் கதிரைகளின் பெருக்கத்தால்... ஊரில் பின்னல் மரக்கதிரைகள்.. சாய்மனைக்கதிரைகளை பின்னவும் பொருட்கள் இல்லை.. ஆக்களும் இல்லை. இந்தக் கலையும் அருகி வரும் கலைக்குள் அடங்குகிறது. 

மீளவும் தும்பு மெத்தைகளுக்கும்.. பஞ்சு மெத்தைகளுக்கு.. பிரப்பங்கதிரைகளுக்கும் திரும்புமா ஊர்.. உலகம்..??!

பிளாஸ்ரிக் பாவனைக்கு முற்றான தடை வந்தால்.. இந்தக் கலைகள் மீண்டும் உயிர்க்கலாம். குறைந்தது பாடசாலை மட்டத்திலாவது இவற்றை அறிமுகப்படுத்திக் கற்றுக் கொடுப்பதோடு.. இயற்கைக்கு உகந்த பொருட்களை தயாரிக்கவும்.. கண்டறியவும் உதவக் கூடிய அறிவை பிள்ளைகள் மத்தில் ஊட்டக்கூடிய கல்வியும் அவசியமாகும்.

உண்மை தான், முந்தி என்க வீட்ட ஒரு தும்பு மெத்தை இருந்த அதுல ஒரு மொத்த துணி விரிச்சு படுத்தா நல்ல தூக்கம் வரும் இப்போ அப்பிடி எல்லாம் இல்ல, நிச்சயமா நான் இங்க யாரும் அந்த மாறி இப்பவும் செய்யிணமா எண்டு தேடி பாக்கிறன், அப்பிடி கண்டு பிடிச்சா அவங்ககூட கதச்சு எப்படி இது செய்யிறாங்க எண்டும் இதன் நன்மைகள் பத்தியும் ஒரு பதிவு போடுகின்றேன்.

 

8 hours ago, Nathamuni said:

 

மன்னிக்க வேணும்.... இனி இல்லாமல் போகும் தானே.

புகையிலை பயிர்ச்செய்கை தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பீடி சுத்தல் தொழிலும் இல்லாமல் போகும். அத்துடன், இது நோய் தரும் பொருள். இல்லாமலே போகட்டுமே.

****

நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்களாயின், இவர்களுக்கு, புலம் பெயர் தமிழர் சார்ந்த தொழில்களை அறிமுகப்படுத்துங்கள்.

வேறு நாடுகளில் இருந்து வருபவைகளில், கலப்படம் இருப்பதாக கருதும் இங்குள்ள மக்கள், நேரடியாக, மொளகாய்த்தூள், இடித்து வறுத்த அரிசிமா, அங்கிருந்து dhl, fedex மூலம் வரவைக்கிறார்கள்.

நேற்று இங்கிருக்கும் பெரிய ஆசிய கடை ஒன்றுக்கு போயிருந்தேன். 500 வருசத்துக்கு முன்னம் வரை, தமிழன் வித்த மிளகினை, பிரேசில் நாட்டில் செய்து பேக் பண்ணி அனுப்பி விக்கிறார்கள்.

போர்த்துகேயன் கொண்டு போய் அங்கே சேர்த்து விட்டான்.

 

முதல் 2018 அப்பிடி புகையிலை பயிர்ச்செய்கை 2021 முதல் தடை எண்டு சொன்னாங்க, ஆனா எதோ பிரச்சனையால அது நடக்கல, தடை சம்மந்தமான எந்த செய்திகளும் இன்னும் வரவில்லை இங்க. 

நோய் தரும் எண்டுறதை நான் மறுக்கல, நிச்சயமாக நாங்க இப்போ குடிசைதொழிலா  நல்லெண்ணெய், மிளகாய் தூள் செய்யிற ஆக்களோட கதைச்சுட்டு இருக்கம், கட்டாயம் அவங்க பத்தி பதிவு போடுறான், அவங்க தொடர்ப்பு இலக்கங்களோட, அதனால வெளிநாடுல இருக்க ஆக்கள் இலகுவா தொடர்பு கொண்டு அவங்க கிட்ட வாங்க ஏலுமா  இருக்கும்.  


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.