Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இல்லாளிடம் எல்லாவற்றையும் இயம்புதல் நலமா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் பணிபுரியும் ஒரு பணியாளரின் (A)அறையில் அவருடன் தங்கியிருக்கும் ஒரு நபருக்குக் கோரணா தாக்கம் ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு அனுப்பப் பட்டுள்ளார்.இதனை இப்பணியாளர் எமக்கு அறிவித்து விட்டு தான் கோவிட் பரிசோதனை செய்துகொண்டு முடிவு வரும்வரை வீட்டில் தங்கிக்கொண்டார்.

இச்செய்திகளை என்னுடன் பணிபுரியும் இன்னுமொரு பணியாள்(B) தன்னுடைய மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.உடனே அவருடைய மனைவி நீங்கள் என்னருகே வரக்கூடாது,தனி அறையில் தங்குங்கள் எனப்பலவாறு கதைத்துக்கொண்டு தான் தனிஅறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாராம்.இப்போது அப்பெண் மனநிலை பாதிப்புக்குள்ளாகி,கணவரைப்பற்றியோ மகனைப்பற்றியோ,குடும்பநிலை பற்றியோ சிந்தனை அற்றவராக வைத்தியசிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறாராம் வைத்தியசாலையில் இருவாரங்களாக..இவரும்,இவரது 12வயது மகனும் கஸ்டப்படுகின்றனர்.ஆனால் முதல்பணியாளரின்(A) வைத்திய அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது.

எல்லாவற்றையும் இல்லாளிடம் எடுத்தியம்பும் கணவன்மாரின் செய்கைபற்றி சற்றுச் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நினைத்திருக்க மாடடார் தன மனைவி இவ்வளவு   சீரியஸாக எடுப்பார் என்று. ஏற்கனவே கோவிட பிரச்னை பற்றி பயந்தவராக மனக் குழப்பம் உள்ளவராக இருந்திருக்க கூடும்.ஆதனால் தான்  சொல்வார்கள் "இடம் பொருள் ஏவல் "அறிந்து செயற்பட வேண்டும். என. இனி அவர்தான் தனது  கவனிப்பினாலும்   அன்பாலும் ஆதரவாலும்  நல்ல தன்மையான அறிவுரையாலும் ஒழுங்காக மருந்து எடுப்பதாலும் மீடடக வேண்டும். நலம் பெற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

அவர் நினைத்திருக்க மாடடார் தன மனைவி இவ்வளவு   சீரியஸாக எடுப்பார் என்று. ஏற்கனவே கோவிட பிரச்னை பற்றி பயந்தவராக மனக் குழப்பம் உள்ளவராக இருந்திருக்க கூடும்.ஆதனால் தான்  சொல்வார்கள் "இடம் பொருள் ஏவல் "அறிந்து செயற்பட வேண்டும். என. இனி அவர்தான் தனது  கவனிப்பினாலும்   அன்பாலும் ஆதரவாலும்  நல்ல தன்மையான அறிவுரையாலும் ஒழுங்காக மருந்து எடுப்பதாலும் மீடடக வேண்டும். நலம் பெற வாழ்த்துக்கள்

மனைவியிடம் சொல்ல. வேண்டியது.   Duty of Care 😄இல்லையா,நிலாக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தி said:

என்னுடன் பணிபுரியும் ஒரு பணியாளரின் (A)அறையில் அவருடன் தங்கியிருக்கும் ஒரு நபருக்குக் கோரணா தாக்கம் ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு அனுப்பப் பட்டுள்ளார்.இதனை இப்பணியாளர் எமக்கு அறிவித்து விட்டு தான் கோவிட் பரிசோதனை செய்துகொண்டு முடிவு வரும்வரை வீட்டில் தங்கிக்கொண்டார்.

இச்செய்திகளை என்னுடன் பணிபுரியும் இன்னுமொரு பணியாள்(B) தன்னுடைய மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.உடனே அவருடைய மனைவி நீங்கள் என்னருகே வரக்கூடாது,தனி அறையில் தங்குங்கள் எனப்பலவாறு கதைத்துக்கொண்டு தான் தனிஅறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாராம்.இப்போது அப்பெண் மனநிலை பாதிப்புக்குள்ளாகி,கணவரைப்பற்றியோ மகனைப்பற்றியோ,குடும்பநிலை பற்றியோ சிந்தனை அற்றவராக வைத்தியசிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறாராம் வைத்தியசாலையில் இருவாரங்களாக..இவரும்,இவரது 12வயது மகனும் கஸ்டப்படுகின்றனர்.ஆனால் முதல்பணியாளரின்(A) வைத்திய அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது.

எல்லாவற்றையும் இல்லாளிடம் எடுத்தியம்பும் கணவன்மாரின் செய்கைபற்றி சற்றுச் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது....

ஆனால் சொன்ன விதம்.... வேறு மாதிரியான அர்த்தத்தினை கொடுக்கிறது அல்லவா.

அதாவது, பணியாளர் A க்கும், பணியாளர் B யின் மனைவிக்கும் ஏதோ தொடர்பு இருந்தது போலவும், முன்னவர் நிலைமை தெரிய வர, பின்னவர் மனைவி தனிமைப்படுத்திக் கொண்டார் போலவும் கருத்து அமையக்கூடியதாக உள்ளதே.

முதலில் நகைசுவையாக சொல்கிறீர்கள் என்று நினைத்தேன்.

இது குறித்து யாழ்ப்பாணத்தில், ஒரு A ஜோக் ஒன்றும் இருந்தது.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2021 at 20:21, நந்தி said:

எல்லாவற்றையும் இல்லாளிடம் எடுத்தியம்பும் கணவன்மாரின் செய்கைபற்றி சற்றுச் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

இது போன்ற இயல்பான நிகழ்வையெல்லாம் கணவன்  மனைவியிடமோ, மனைவி  கணவனிடமோ பகிர்தலை யோசிக்க, தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு சற்று அரிதானது. நிலாமதி அவர்கள் சொன்னது போல, இந்நிகழ்வில் மனைவி கொரோனா பயத்தினால் உளவியல் பாதிப்படைந்துள்ளார் என்று வீட்டிலுள்ளோருக்குத் தெரிய வந்திருந்தால் சொல்வதைத் தவிர்க்கலாம் ; சொல்லாமல் கணவன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கலாம். நிற்க.

          தலைப்பைப் பார்த்ததும் வேறு தனிப்பட்ட விஷயமாய் நினைத்ததால், அதையொட்டியும் எழுதி விவாதத்தைத் (தாமதமானாலும் விவாதம் ஏற்படுமானால்) திசை திருப்பும் எண்ணம் தோன்றுகிறது (!). பிற்காலத்திய கதைகளிலும் திரைப்படங்களிலும் நாயகன் புதுமை செய்வதாக எண்ணி, திருமணத்திற்குச் சற்று முன்னரோ பின்னரோ தனது பழைய காதலைப் பற்றிக் கூறி, பிற்காலத்தியத் தவறான புரிதல்களைத் தவிர்க்க அவளும் வெளிப்படையாகப் பேசலாம் எனும் காட்சியமைப்பைக் காண்கிறோம். உளவியல் ரீதியாக அணுகும்போது இதில் நேர்மை, வெளிப்படைத்தன்மையெல்லாம் அபத்தமாகத் தோன்றுகிறது. இதனால்  எத்துணைப் பக்குவப்பட்ட மனதானாலும், ஆழ்மனது உடையாவிட்டால் கூட கீறல் விழுந்த கண்ணாடியாகும் ; கடைசி வரை ஒட்டாது என்பது என் அனுபவ ஞானமல்ல ; கேள்வி ஞானம். எனவே காதல், கத்திரிக்காய் என்ற மிகவும் தனிப்பட்ட விடயமெல்லாம் மனமெனும் அறையிலிருந்து அம்பலத்திற்கு வரக்கூடாது. அந்த அம்பலத்தில் கணவனும் உண்டு ; மனைவியும் உண்டு. மரணத்தில் கட்டையோடு எரிய வேண்டியதை வாழும்போது வெளியே எடுத்தால்  வாழும் வரை சுடும்.

     எனவே தலைப்பில் உள்ள கேள்விக்கு என் பதில்

இல்லாளிடமோ கொண்டவனிடமோ எல்லாவற்றையும் இயம்புதல் நலமில்லை. 

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.