Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏலத்திற்கு வரும் காந்தியடிகளின் கடைசி கடிதம்: காப்பாற்ற மத்திய அரசு தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏலத்திற்கு வரும் காந்தியடிகளின் கடைசி கடிதம்: காப்பாற்ற மத்திய அரசு தீவிரம்

மகாத்மா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவற்கு முன் கடைசியாக எழுதிய கடிதம் இங்கிலாந்தில் ஏலத்திற்கு வரவுள்ளது.

இதையடுத்து அந்தக் கடிதம் ஏலம் போய் விடாமல் காக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்டி ஏல மையம் உலக அளவில் பிரலமான ஏல மையம் ஆகும். இங்கு புகழ் பெற்ற பல பொருட்கள், பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள், கடிதங்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடுவார்கள்.

தற்போது இந்த ஏல மையத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தி எழுதிய முக்கியக் கடிதம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு எழுதிய கடிதம் இது.

1948ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி காந்தி எழுதிய இந்தக் கடிதத்தில், முஸ்லீம்கள் மீது பரிவு காட்ட வேண்டும், அன்பு செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் காந்தியடிகள்.

இந்தக் கடிதத்தை ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த அல்பின் ஸ்ரீராம் என்பவரிடமிருந்து கிறிஸ்டி விலைக்கு வாங்கியுள்ளது. நெப்போலியன், சர்ச்சில் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் எழுதிய கடிதங்களின் தொகுப்பை சேகரித்து வைத்துள்ளவர் அல்பின்.

காந்தியின் கடிதத்தை ஜூலை 3ம் தேதி ஏலத்திற்குக் கொண்டு வருகிறது கிறிஸ்டி. இத் தகவல் வெளியானவுடன் மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கே நேரடியாக தலையிட்டு, எப்படியாவது காந்தியின் கடிதத்தை மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து வெளியுறவுத்துறையும், கலாச்சாரத் துறையும் இணைந்து காந்தி கடிதத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி மகாத்மா காந்தி ஏராளமான கடிதங்களை எழுதியுள்ளார். அதில் 18 கடிதங்கள் கடந்த 1998ம் ஆண்டு ஏலத்திற்கு விடப்பட்டது. அந்தக் கடிதங்களை இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களே ஏலத்தில் எடுத்து காந்தி கடிதம் பிறர் கைக்குப் போவதை தடுத்தனர்.

இந்த முறை மத்திய அரசே நேரடியாக தலையிட்டுள்ளதால் காந்தியடிகள் எழுதிய இந்தக் கடிதம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

- சூரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்தியின் கடிதத்தை காப்பாத்த சொல்லி காந்த்தி எண்டைக்கும் சொன்னதில்லை,

காந்தியிண்ட சொல்லையே காப்பாத்த தெரியல, அதுக்கப்புறம் கடிதமாவது மண்ணாங்கட்டியாவது :(

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி காங்கிரஸ் கட்சியைக் கலைக்கச் சொன்னார். அதைக் காப்பாற்றவில்லைத் தானே. ஏலத்திற்குச் செலவளிக்கப்படும் பணத்தை ஏழைமக்களுக்குக் கொடுத்து உதவலாம். அதனால் காந்தியின் ஆத்மாவும் சந்தோசப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

தனது கடிதங்கள் நல்ல விலைக்கு ஏலம்போய் சமூகத்துக்கு உதவும் என்று தெரிந்திருந்தால் காந்தியடிகள் இன்னும் ஆயிரம் கடிதங்களை எழுதியிருப்பார்.

நானும் நிறையக் கடிதங்கள் எழுதவேண்டுமென்றிருக்கிறேன்.

;)

காந்தியின் கடிதத்தை ஏலத்தில் வாங்குபவர்கள் அதைக் கிழித்து எறியப் போவதில்லை. இலட்சக் கணக்கில் பணம் கொடுத்து வாங்குபவர் அதை மிகவும் பத்திரமாகப் பாதுகாப்பார் என்று நம்பலாம். இந்தியாவிலிருந்த பல அரிய புராதனப் பொருட்களை இந்திய அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் சிதைய விட்டுள்ள நிலையில், காந்தியின் கடிதம் வெளிநாட்டில் இருப்பதே மேல்.

இந்திய மத்திய அரசிற்கு காந்தியடிகளின் கொள்கைகளை காப்பாற்ற வக்கில்லை. ஆகக்குறைந்தது அவரது கடிதத்தையாவது காப்பாற்றலாம் என்று நினைக்கின்றது.

கடிதத்தை பல மில்லியன் டொலர்களிற்கு ஏலத்தில் இருந்து எடுத்து பின் அதை காட்சியகத்தில் இந்திய மக்களின் பார்வைக்கு வைத்தால் இந்தியாவுக்கு விடிவு காலம் ஏதும் கிடைக்குமோ என்னமோ என்ற நப்பாசைதான் இதற்கு காரணமாக இருக்கலாம்!

காந்தீயத்தை காப்பற்ற முடியவில்லை காந்தியின் கடைசி எழுத்தையாவது காப்பாற்றலாம் என்ற ஒரு நப்பாசை

இந்திய அரசிடம் உரிமை கேட்டு அகிம்சை வழியில் எம் தேசத்தில் போராடி மடிந்த தியாகிகளை காப்பாற்ற மறுத்தவர்கள் கடிதத்தை காப்பாற்றுகிறார்களாம். கோவணம் போனது தெரியாமல் தலைப்பகையை தேடுவது போல் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் காந்தியை இந்தியா அரசு மதிக்க வேணுமென்றால் தியாகி திலீபன், அன்னை பூபதியை இந்தியா அரசு காப்பாற்றி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு கடிதத்தையோ அல்லது மண்ணங்கட்டியையோ காப்பாற்றி என்ன பிரயோசனம்?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் காந்தியை இந்தியா அரசு மதிக்க வேணுமென்றால் தியாகி திலீபன், அன்னை பூபதியை இந்தியா அரசு காப்பாற்றி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு கடிதத்தையோ அல்லது மண்ணங்கட்டியையோ காப்பாற்றி என்ன பிரயோசனம்?

ஓ கந்தப்பு சொன்னீங்கள் ஆயிரத்தில் ஒரு வார்த்தை

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.