Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல் ஒன்றிற்குள் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்த வேளை சம்பவம் – பெருமளவு ஆயுதங்கள் கடலில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் ஒன்றிற்குள் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்த வேளை சம்பவம் – பெருமளவு ஆயுதங்கள் கடலில்

காலிக்கடலில பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
காலிகடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
செங்கடல் பகுதிக்கு செல்லவிருந்த கப்பலில் ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
படகொன்றிலிருந்து கப்பலிற்குள் ஆயுதங்களை ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆயுதங்களை ஏற்ற பயன்படுத்தப்பட்ட வலை அறுந்துவிழுந்தது என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
36 ஆயுதங்களும் அவற்றிக்கான வெடிபொருட்களும் கடலிற்குள் வீழ்ந்தன என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

செங்கடல் பகுதிக்கு போகுதென்றால்.. ஐஎஸ் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு அல்லது ஏமனில் எதிர்தரப்புக்கு.. கோத்தா ஆயுதசப்பிளை செய்கிறாரோ.

ஏலவே சோமாலிய இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆயுத சப்பிளை செய்த குற்றச்சாட்டு இவர் மீதுள்ளது. 

இலங்கையில் நடந்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு மறைமுக அன்பளிப்பாகவும் இவை இருக்கலாம். இது குறித்து சர்வதேச சமூகம் அக்கறை செலுத்தி.. தமது புலனாய்வுப் பிரிவுகள் மூலம் சம்பவத்தின் பின்னணியை ஆராய்வது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

செங்கடல் பகுதிக்கு போகுதென்றால்.. ஐஎஸ் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு அல்லது ஏமனில் எதிர்தரப்புக்கு.. கோத்தா ஆயுதசப்பிளை செய்கிறாரோ.

ஏலவே சோமாலிய இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆயுத சப்பிளை செய்த குற்றச்சாட்டு இவர் மீதுள்ளது. 

இலங்கையில் நடந்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு மறைமுக அன்பளிப்பாகவும் இவை இருக்கலாம். இது குறித்து சர்வதேச சமூகம் அக்கறை செலுத்தி.. தமது புலனாய்வுப் பிரிவுகள் மூலம் சம்பவத்தின் பின்னணியை ஆராய்வது நல்லது. 

ஒரு கிழமையில்.... நடந்த இரு கப்பல் விடயங்களும், விபத்து நடந்த பின் தான்... வெளியே தெரிய வருகின்றது.

இரகசியமாக.... எத்தினை “மாபியா” வேலை நடக்குதுதோ...

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 க்கு முதல் வாங்கிய எடுத்த ஆயுதங்களை யுத்தம் முடிந்தவுடன் மிதக்கும் ஆயுத கப்பல் மூலம் கோத்தா இந்துமா சமுத்திரத்தில் வைத்து அண்டர் டீல்  போட்டு வித்தவர் இப்பவும் தொடர்கிறது என்றால் ஏதோ  ஒரு அமைதியான நாடு அழிவுக்கு  உள்ளாக போகுது .

  • கருத்துக்கள உறவுகள்

அவன்கள் முடிவு பண்ணிவிட்டான்கள் கடலை ரசாயனத்தாலும், நாட்டை திரவ, திண்ம கழிவுகளாலும் நிரப்புவதென்று.உள்ளூர்காரனும் வெளிநாட்டானும் கடலில்  கொட்டுறான், விமானத்தாலும் தரையில் கொண்டுவந்து கொட்டுறான். இதுவே ஒரு பொதுமகன் செய்தால் சும்மா விடுவார்களா? கடவுள் தந்த வளத்தை அழிக்கவென்றே பிறந்திருக்கிறானுகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.