Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொம்பாந்துறை சிறீலங்கா இராணுவ முகாமருகே துணை ஆயுதக்குழுக்களிடையே மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 05-07-2007 00:55 மணி தமிழீழம் [செந்தமிழ்]

கொம்பாந்துறை சிறீலங்கா இராணுவ முகாமருகே துணை ஆயுதக்குழுக்களிடையே மோதல்

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் கொம்மாந்துறை இராணுவ முகாமருகே கருணா கூலிக்குழுக்களுக்கும் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுக்களுக்கும் இடையே புதன்கிழமை மாலை 5 மணியளவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கருணா கூலிக்குழுவினர் ஈ.பி.டி.பி குழுவினரை துன்புறுத்தியதாகவும் ஐந்து கருணா கூலிக்குழு உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி துணை இராணுவக்குழுவின் கட்டடத்தொகுதிக்குள் பிரவேசித்து கைக்குண்டுத் தாக்குதலையும் துப்பாக்கிபிரயோகத்தையும் மேற்கொண்டதாகவும். இதன்போது ஈ.பி.டி.பி குழு உறுப்பினர்களான 23 அகவையுடைய சிவஞானம் சுதர்சன், 21 அகவையுடைய கோவிந்தன் விஷ்ணு ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்போது கருணா குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தற்போது இரு துணைஇராணுவக்குழு முகாம்களுக்கும் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கிவருவதாகவும் காயமடைந்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது.

இதேவேளை கருணா கூலிக்குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்பத்திரிகைகள் விநியோகத்திற்கு தடைவிதித்திருந்தமை தெரிந்ததே.

பதிவு

ஆக..

நல்லகாலம் பிறக்குது

நல்லகாலம் பிறக்குது

மிஞ்சுற ஓநாயை வரிப்புலி குதறும்..

நாங்கள் எதிர்பர்த்தது நடக்கிது....

தெருவில திரியிற விசர் நாயள் அடிபட்டு செத்தா ஊருக்கு நல்லம் தனே..

நிதர்சனம் வெளியிட்ட செய்திப்படி செங்கலடியில் ஈ.பி.டி.பி. - கருணா குழு நேரடி மோதல் - கருணா குழுவில் இருவர் சாவு!

ஜ வியாழக்கிழமைஇ 5 யூலை 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

மட்டக்களப்பு செங்கலடியில், ஈ.பி.டி.பி.யினரும் கருணாகுழுவினருக்கும் நடந்த நேரடி மோதலில் கருணா குழு உறுப்பினர் இரண்டு பேர் குண்டு பாய்ந்து மரணமடைந்துள்ளனர். ஈ.பி..டி.பி. யைச் சேர்ந்த இருவர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். ஏற்கனவே, சிறிலங்கா அரசாங்கத்தினுள் ஈ.பி.டி.பி. இயக்கம் மட்டுமே செல்லப்பிள்ளையாக இருந்தது. இதை தட்டிப்பறிக்க கருணா தனக்குப் போட்டியாகவும், தனது அமைச்சர் பதவிக்கும் போட்டியாக வந்தது டக்ளஸ் தேவானந்தேவுக்கு மிகுந்த மன உளைச்சலை உருவாக்கியிருந்தது. வவுனியா, கொழும்பு ஆகிய நகரங்களில் கருணா குழுவினின் கடத்தல், கொலை மற்றும் கப்பம் பெறுதல் ஆகியவற்றோடு, ஈ.பி.டி.பி.யினர் கடத்தல், கொலை, மற்றும் கப்பம்பெறுதல் போன்ற செயல்களும் கருணா குழுவினர் மீது சுமத்தப்படுகிறதினாலும், முறுகல் நிலமை இருந்து வந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் ஈ.பி.டி.பி. இயக்கத்தினுள் உள்முரண்பாடு ஏற்பட்டு, சில முக்கிய மூத்த உறுப்பினர்கள் கருணா குழுவினருடன் இணைந்து விட்டனர். அவர்களை திரும்ப அனுப்புமாறு. கருணா குழுவின் தலைமையகத்துக்கு, ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் கேட்டுக்கொண்ட போதும், திரும்ப அனுப்ப இயலாது என்ற பதில்தான் கிடைத்துள்ளது இந்த நிகழ்ச்சியினால மேலும் முறுகல் நிலமை மோசமடைந்தது. இந்த நிலையில், கருணா குழுவினர் காடுகளில் இருந்து மரங்களை வெட்டி, லொறிகளில் ஏற்றிக் கொண்டு செங்கலடியில், ஈ.பி.டி.பி.யினரின் முகாமுக்கு அருகாமையில் வந்த போது, ஈ.பி.டி.பி.யினர் அவர்களைத் தடுத்துள்ளனர். அதன் போது, கருணா குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது, ஈ.பி.டி.பி.யின் இரண்டு உறுப்பினர் காயமடைந்தனர். இந்த நிலையில், கருணா குழுவினர், ஈ.பி.டி.பி.யினரை தாண்டி லொறி போக முடியத நிலையில், திரும்பவும் தங்கள் முகாமுக்கு சென்றடைந்தனர். விசனமடைந்த சின்னத்தம்பி தனது குழுவினருடன், செங்கலடியில், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள ஈ.பி.டி.பி.யினரின் அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் சென்று, வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பாகி, இரு குழுவினரும் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர். இதில் கருணா குழு உறுப்பினர் இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இரண்டு உறுப்பினர்களை இழந்து சின்னத்தம்பி தமது முகாமுக்குத் திரும்பி விட்டார். இந்த நிலையில் இரு குழுவினரும் தமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணாவுக்கு அரசியல் சொல்லி கொடுத்ததாக பிபிசி தமிழ் ஓசையில் டக்ளஸ் அண்று தெரிவித்திருந்தார் இண்று டக்ளஸ் கருணா குழுவிற்கு சுடுவது எப்படி என்று காட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும் விபரங்கள் தொடரும்

நிதர்சனம்

உயிரிழந்தனர். இரண்டு உறுப்பினர்களை இழந்து சின்னத்தம்பி தமது முகாமுக்குத் திரும்பி விட்டார். இந்த நிலையில் இரு குழுவினரும் தமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணாவுக்கு அரசியல் சொல்லி கொடுத்ததாக பிபிசி தமிழ் ஓசையில் டக்ளஸ் அண்று தெரிவித்திருந்தார் இண்று டக்ளஸ் கருணா குழுவிற்கு சுடுவது எப்படி என்று காட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளார்

:P :)

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினருக்கு இடையில் மோதல்

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பகுதியில் உள்ள கொம்மாந்துறை சிறிலங்கா இராணுவ முகாமுடன் இயங்கி வரும் துணை இராணுவக் குழுக்களான கருணா குழு மற்றும் ஈபிடிபி குழுவினருக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இம்மோதலில் கருணா குழுவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஈபிடிபி குழுவைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈபிடிபி குழுவினரின் முகாம் பகுதிக்குள் சென்ற 5 கருணா குழு உறுப்பினர்கள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியதுடன், அங்கிருந்த வீடுகளின் மீது சரமாரியான துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியுள்ளனர். இதன் போது சிவநாயகம் சுதாகரன் (வயது 23), கோவிந்தன் விஷ்னு (வயது 21) ஆகிய ஈபிடிபி உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.

இம்மோதல்களை நிறுத்தும் பொருட்டு இந்த இரு குழுவினருக்கும் பாதுகாப்புக்களை வழங்கி வரும் சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியவர்களை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எனினும் அவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஈபிடிபி உறுப்பினர்கள் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கில் தேர்தலை நடத்த அரசு எண்ணியுள்ள வேளையில் இம்மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளை தடைசெய்துள்ள இக்குழுவினர் தமது பத்திரிகைகளை இராணுவ காவலரன்களில் வைத்து விநியோகித்து வருகின்றனர்.

கொம்மாந்துறை இராணுவ முகாம் மிகவும் பாரிய முகாமாக இப்பகுதியில் இருப்பதுடன் அது மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப்போட்டி அரசியலில் மோதல்கள் சகஜம். கீழ் மட்ட தொண்டன் ( ஆயுததாரி) பலியாவான் தலைவர்கள் கை குலுக்குவார்கள். பின் வன்னிப்புலிகள் தங்கள் தோழரை கொன்று விட்டதாக அறிக்கை விடுவார்கள்.

சொறி நாய்கா தமக்குள்ளேயே அடிபட்டு சாகுங்கள்.இன்று ஏதும் விசேட செய்தி ஏதும்வருதோ தெரியல

செங்கலடியில் ஈ.பி.டி.பி. - கருணா குழு நேரடி மோதல் - கருணா குழுவில் இருவர் சாவு!

மட்டக்களப்பு செங்கலடியில் ஈ.பி.டி.பி.யினரும் கருணாகுழுவினருக்கும் நடந்த நேரடி மோதலில் கருணா குழு உறுப்பினர் இரண்டு பேர் குண்டு பாய்ந்து மரணமடைந்துள்ளனர். ஈ.பி..டி.பி. யைச் சேர்ந்த இருவர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்தினுள் ஈ.பி.டி.பி. இயக்கம் மட்டுமே செல்லப்பிள்ளையாக இருந்தது. இதை தட்டிப்பறிக்க கருணா தனக்குப் போட்டியாகவும் தனது அமைச்சர் பதவிக்கும் போட்டியாக வந்தது டக்ளஸ் தேவானந்தேவுக்கு மிகுந்த மன உளைச்சலை உருவாக்கியிருந்தது.

வவுனியா கொழும்பு ஆகிய நகரங்களில் கருணா குழுவினின் கடத்தல் கொலை மற்றும் கப்பம் பெறுதல் ஆகியவற்றோடு ஈ.பி.டி.பி.யினர் கடத்தல் கொலை மற்றும் கப்பம்பெறுதல் போன்ற செயல்களும் கருணா குழுவினர் மீது சுமத்தப்படுகிறதினாலும் முறுகல் நிலமை இருந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் ஈ.பி.டி.பி. இயக்கத்தினுள் உள்முரண்பாடு ஏற்பட்டு சில முக்கிய மூத்த உறுப்பினர்கள் கருணா குழுவினருடன் இணைந்து விட்டனர். அவர்களை திரும்ப அனுப்புமாறு. கருணா குழுவின் தலைமையகத்துக்கு ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் கேட்டுக்கொண்ட போதும் திரும்ப அனுப்ப இயலாது என்ற பதில்தான் கிடைத்துள்ளது இந்த நிகழ்ச்சியினால மேலும் முறுகல் நிலமை மோசமடைந்தது. இந்த நிலையில் கருணா குழுவினர் காடுகளில் இருந்து மரங்களை வெட்டி லொறிகளில் ஏற்றிக் கொண்டு செங்கலடியில் ஈ.பி.டி.பி.யினரின் முகாமுக்கு அருகாமையில் வந்த போது ஈ.பி.டி.பி.யினர் அவர்களைத் தடுத்துள்ளனர். அதன் போது கருணா குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஈ.பி.டி.பி.யின் இரண்டு உறுப்பினர் காயமடைந்தனர். இந்த நிலையில் கருணா குழுவினர் ஈ.பி.டி.பி.யினரை தாண்டி லொறி போக முடியத நிலையில் திரும்பவும் தங்கள் முகாமுக்கு சென்றடைந்தனர்.

விசனமடைந்த சின்னத்தம்பி தனது குழுவினருடன் செங்கலடியில் இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள ஈ.பி.டி.பி.யினரின் அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் சென்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பாகி இரு குழுவினரும் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர். இதில் கருணா குழு உறுப்பினர் இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இரண்டு உறுப்பினர்களை இழந்து சின்னத்தம்பி தமது முகாமுக்குத் திரும்பி விட்டார். இந்த நிலையில் இரு குழுவினரும் தமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணாவுக்கு அரசியல் சொல்லி கொடுத்ததாக பிபிசி தமிழ் ஓசையில் டக்ளஸ் அண்று தெரிவித்திருந்தார் இண்று டக்ளஸ் கருணா குழுவிற்கு சுடுவது எப்படி என்று காட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

nitharsanam.com

எப்படி இந்த ஒட்டு ஓநாய்கள் செத்தாலும் எங்களுக்கு சந்தோசம் தான். தங்களுக்குள் அடிபட்டு செத்தால் இரட்டிப்பு சந்தோசம்.

இப்படியான மோதல்களில் இறப்பவர்கள் பெரும்பாலும் வயது குறைந்த இளைஞர்கள். விடுதலை போராட்டம் பற்றி அறியாத அப்பாவிகள். வறுமையினாலும் கட்டாயத்தின் பேரிலும் சாக்கடைக்குள் இறங்கிவிட்டவர்கள். கூலிக்குழுக்களிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டியவர்கள்.

இன்று ஒநாய்கள் என்றும், விசர் மற்றும் சொறி நாய்கள் என்றும் தூற்றப்படுபவர்கள் முன்னர் வீரவேங்கைகள் என்றும் மாவீரர்கள் என்றும் போற்றப்பட்டவர்கள்!

பலவந்தமாக இணைக்கப்பட்ட மற்றும் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் தமிழ் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் மேலும் அவர்களால் அல்லலுறும் அப்பாவி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

அன்னியன் விரித்த வலையில் சிக்கிய எங்கள் குழந்தைகள்,

செய்தித் தடையால் சிந்திக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள்,

சிந்தனையில் விசமூட்டப்பட்டு வெறியேற்றப்பட்டவர்கள்,

தமிழுணர்வும் மனிதநேயமும் மறக்கடிக்கப்பட்டவர்கள்!

சகோதரர்கள் கோபித்தாலும் தாயவள் கோபிக்கமாட்டாள்!

தமிழ்த்தாய் அழைக்கிறாள், திரும்பி வாருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.