Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே கவனத்தில் கொள்ளப்படவுள்ள இலங்கை விவகாரம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதல் நாளில் இலங்கை குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.  மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

59682616_2359056400820686_45143166230410

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்றைய நிகழ்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.  இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.

இலங்கை கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட்,  30/1  தீர்மானத்திலிருந்து விலகியமை உள்ளிட்ட பல நடவடிக்கைகளினால் இலங்கை முழு அளவில் பொறுப்புக்கூறலுக்கான கதவுகளை அடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே கவனத்தில் கொள்ளப்படவுள்ள இலங்கை விவகாரம்..! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்கள் நடை பெறவில்லை .....பிறகு என்னத்துக்கு இந்த கூட்டத்தொடர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, putthan said:

மனித உரிமை மீறல்கள் நடை பெறவில்லை .....பிறகு என்னத்துக்கு இந்த கூட்டத்தொடர்

உது எனக்கு கனகாலமாய் இருக்கிற கேள்வியொண்டு

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப அழுத்தம் கொடுத்து வெடிச்சிட போகுது..☺️

Screenshot-2021-08-10-13-31-56-475-org-m

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உது எனக்கு கனகாலமாய் இருக்கிற கேள்வியொண்டு

30 வருடத்திற்கு முதல் புலம்பெயர்ந்த சனம் அந்த நாட்டு குடியுரிமை எடுக்கிறதுக்கு  ஐ.நா சபைக்கு காசு கொடுத்து மனித உரிமை மீறல் நடந்தது  என்று சொல்லவைத்து கொண்டிருக்கினம்😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, putthan said:

30 வருடத்திற்கு முதல் புலம்பெயர்ந்த சனம் அந்த நாட்டு குடியுரிமை எடுக்கிறதுக்கு  ஐ.நா சபைக்கு காசு கொடுத்து மனித உரிமை மீறல் நடந்தது  என்று சொல்லவைத்து கொண்டிருக்கினம்😀

புலம்பெயந்த தமிழர் விசா எடுக்கிறதுக்காக காசு குடுத்து அங்கை சண்டையை ஊக்குவிச்சவை எண்டொரு கதை இப்பவும் இருக்கு கண்டியளோ...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயந்த தமிழர் விசா எடுக்கிறதுக்காக காசு குடுத்து அங்கை சண்டையை ஊக்குவிச்சவை எண்டொரு கதை இப்பவும் இருக்கு கண்டியளோ...

சிங்களவர்களை மட்டும் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து விசா கொடுத்தவையள் என்று சொன்னாலும் சொல்லுவினம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

30 வருடத்திற்கு முதல் புலம்பெயர்ந்த சனம்

இந்தச் சனத்தாலைதான்  நம்ம நாட்டின் இறைமை கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை வளைத்துப்போட்டால் நாடு சொர்க்க பூமி. அதுதான் பல புலனாய்வாளர் யாழ் களத்தில் சஞ்சரித்து இலங்கையரசிற்கு புகழாரம் சூட்ட முயலுகினம்.  "புலம் பெயர்ந்தவர்களின் விருப்பத்திற்கேற்ப நாம் அரசியல் செய்ய முடியாது." நம்ம பிரதிநிதி ஒருவர்தான் இவ்வாறு திருவாய் மலர்ந்தருளினார்.  சரி, வாக்குப்போட்ட மக்களின் விருப்பத்திற்கு என்னாச்சு? 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

 அதுதான் பல புலனாய்வாளர் யாழ் களத்தில் சஞ்சரித்து இலங்கையரசிற்கு புகழாரம் சூட்ட முயலுகினம்.  "புலம் பெயர்ந்தவர்களின் விருப்பத்திற்கேற்ப நாம் அரசியல் செய்ய முடியாது." நம்ம பிரதிநிதி ஒருவர்தான் இவ்வாறு திருவாய் மலர்ந்தருளினார்.  சரி, வாக்குப்போட்ட மக்களின் விருப்பத்திற்கு என்னாச்சு? 

யாழ் களத்தில் புலனாய்வாளர்களா? அட கடவுளே நான் இனி தப்பிதவறி மகிந்தா குடும்பத்தை விமர்சிக்க மாட்டேன்....
ராஜாபக்சா குடும்பம் பொன்மன செம்மல்,புரட்சி ,காவிய தலைவர்கள்.....

நல்லகாலம் கொரனா வந்து அட்டகாசம் பண்ணியதால சிறிலங்காவுக்கு போக முடியாமல் போய்விட்டது .....இல்லை என்றால் விசயம் தெரியாமல் இறங்கி இருப்பேன் .....

யாழ் களத்தில் புலனாய்வாளர்களா? அட கடவுளே நான் இனி தப்பிதவறி மகிந்தா குடும்பத்தை விமர்சிக்க மாட்டேன்....
ராஜாபக்சா குடும்பம் பொன்மன செம்மல்,புரட்சி ,காவிய தலைவர்கள்.....

நல்லகாலம் கொரனா வந்து அட்டகாசம் பண்ணியதால சிறிலங்காவுக்கு போக முடியாமல் போய்விட்டது .....இல்லை என்றால் விசயம் தெரியாமல் இறங்கி இருப்பேன் .....

வாக்கு போட்ட மக்களுக்காக தானே டெல்லி போய்வாறோம்.....இட க்கிட பாராளுமன்றமும் போய்வாறோமல்ல...

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, putthan said:

யாழ் களத்தில் புலனாய்வாளர்களா? அட கடவுளே நான் இனி தப்பிதவறி மகிந்தா குடும்பத்தை விமர்சிக்க மாட்டேன்....
ராஜாபக்சா குடும்பம் பொன்மன செம்மல்,புரட்சி ,காவிய தலைவர்கள்.....

நல்லகாலம் கொரனா வந்து அட்டகாசம் பண்ணியதால சிறிலங்காவுக்கு போக முடியாமல் போய்விட்டது .....இல்லை என்றால் விசயம் தெரியாமல் இறங்கி இருப்பேன் .....

யாழ் களத்தில் புலனாய்வாளர்களா? அட கடவுளே நான் இனி தப்பிதவறி மகிந்தா குடும்பத்தை விமர்சிக்க மாட்டேன்....
ராஜாபக்சா குடும்பம் பொன்மன செம்மல்,புரட்சி ,காவிய தலைவர்கள்.....

நல்லகாலம் கொரனா வந்து அட்டகாசம் பண்ணியதால சிறிலங்காவுக்கு போக முடியாமல் போய்விட்டது .....இல்லை என்றால் விசயம் தெரியாமல் இறங்கி இருப்பேன் .....

வாக்கு போட்ட மக்களுக்காக தானே டெல்லி போய்வாறோம்.....இட க்கிட பாராளுமன்றமும் போய்வாறோமல்ல...

நீங்கள் நல்லா பயந்திட்டியள் என்று தெரியுது?😀

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

நீங்கள் நல்லா பயந்திட்டியள் என்று தெரியுது?😀

பின்ன ....30 வருசத்துக்கு முதல் ஓடி வந்த கோஸ்டியை இப்படி பயப்படுத்தினால்....பக்கத்து வீட்டில சீன வெடி வெடிக்கிற சத்தம் கேட்டு ஒடிவந்த என்னை பிடிச்சா....எனக்கு எப்படீருக்கும் கற்பனை பண்ணவே பயமா இருக்கு ....
நம்ம காவியத்தலைவன் கோத்தா வாழ்க....அவரது தளபதி டகிளஸ் வாழ்க

அப்படியே புலனாய்வாளர்கள் லிஸ்ட்டை போட்டால் அவர்களின் கருத்துக்கு லைக் போட வசதியா இருக்குமல்ல😀

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, putthan said:

பின்ன ....30 வருசத்துக்கு முதல் ஓடி வந்த கோஸ்டியை இப்படி பயப்படுத்தினால்....பக்கத்து வீட்டில சீன வெடி வெடிக்கிற சத்தம் கேட்டு ஒடிவந்த என்னை பிடிச்சா....எனக்கு எப்படீருக்கும் கற்பனை பண்ணவே பயமா இருக்கு ....
நம்ம காவியத்தலைவன் கோத்தா வாழ்க....அவரது தளபதி டகிளஸ் வாழ்க

அப்படியே புலனாய்வாளர்கள் லிஸ்ட்டை போட்டால் அவர்களின் கருத்துக்கு லைக் போட வசதியா இருக்குமல்ல😀

புலிகளின் புலனாய்வு துறையை கூட கண்டு பிடித்து விடலாம் ஆனால் ???😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.