Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்ரா வைரஸ்: தொற்றுத்தடுப்பிற்கு உதவும் புதிய தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்ரா வைரஸ்: தொற்றுத்தடுப்பிற்கு உதவும் புதிய தகவல்கள்.

(முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவை நான் ஆரம்பித்த டெல்ரா தொடரில் இருந்து தனியாக இணைக்கிறேன். அவசியமெனின் அந்தத் தொடரோடு நிர்வாகம் இணைத்து விடலாம்!) 

உலகின் பிரதானமான கோவிட் 19 தோற்றுவிக்கும் வைரசாக டெல்ரா  வகை வைரஸ் உருவாகியிருக்கிறது. மேற்கு நாடுகள் சிலவற்றில், முகக் கவசம் அணியும் அவசியம், மூடிய இடங்களில் ஒன்று கூடும் ஆட்களின் எண்ணிக்கை மீதான கட்டுப் பாடு என்பவற்றை மீள அமல் படுத்தும் தேவை ஆகியவை டெல்ரா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கின்றன. இது வரையில் டெல்ரா வைரஸ் வேகமாகப் பரவும் சக்தி கொண்டது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தாலும், அப்பரவலின் உயிரியல் ரீதியான பின்னணி சரியாக இனங்காணப் பட்டிருக்கவில்லை. தற்போது சீனாவில் இருந்து வெளி வந்திருக்கும் ஆய்வுத் தகவல்களை (கீழுள்ள இணைப்பின் தழுவலாக) ப் பகிர்கிறேன்.

நோயறிகுறி தோன்ற முன்னரே பரவும் டெல்ரா

: அனேகமான நுண்ணுயிர்க் கிருமிகளாலேற்படும் தொற்று நோய்கள், தொற்றிய உடனேயே உருவாவதில்லை. உடலில் தொற்றிய நோய்க்கிருமி பெருகி, உடலில் உரிய தாக்கங்களை உருவாக்கிய பின்னரே நோயறிகுறிகள் வெளிப்படும் (இந்த நிலையை, உள்ளே இயந்திரம் சிறிது பழுதடைந்த பின்னர் வாகனங்களில் "check engine" எச்சரிக்கை விளக்கு எரியும் நிலையோடு ஒப்பிடலாம்). இந்த தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து நோயின் அறிகுறி வெளிப்படும் நாள் வரைக்கும் இடையேயான காலத்தை நோயரும்பு காலம் என்றுஅழைக்கலாம். சாதாரண கோவிட் 19 வைரஸ் (சீனாவில் முதன் முதலில் தொற்றை ஏற்படுத்திய வைரஸ்), 6.3 நாட்கள் நீண்ட நோயரும்புக் காலத்தைக் கொண்டிருந்ததாகக் கணிப்புகள் கூறுகின்றன. டெல்ரா வைரஸ் தொற்று ஏற்பட்டோரில், சிறிது விரைவாக 5.8 நாட்களில் நோய் உருவாகியதாக தற்போதைய ஆய்வு கணித்திருக்கிறது.

இந்த அரை நாள் விரைவான  நோயரும்பு காலம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. முக்கியமான தகவல் என்னவெனில், இந்த நோயரும்பு காலத்தின் இறுதிப் பகுதியில் டெல்ரா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் வைரசை ஏனையோருக்குப் பரப்ப ஆரம்பித்து விடுகின்றனர். தொற்று உருவான நாளில் இருந்து சராசரியாக 4 நாட்களில் பி.சி.ஆர் மூலமாக நோயாளிகளின் மூக்கிலும், தொண்டையிலும் டெல்ரா வைரசுகளை அடையாளம் காணக்கூடியதாக இருந்திருக்கிறது: அதாவது, நோய்க் குணங்குறிகள் வெளிவருவதற்கு கிட்டத் தட்ட 2 நாட்கள் முன்பாகவே டெல்ரா தொற்றுக்குள்ளானோர் வைரசுகளைக் காற்றின் வழியே பரப்ப ஆரம்பித்து விடுகின்றனர் என்பதே முக்கியமான தகவல்!

இது எப்படி பழைய கோவிட் 19 வைரசுகளில் இருந்து வேறு படுகிறது? பழைய கோவிட் 19 வைரசுகளைப் பொறுத்த வரையில், தொற்றைத் தொடர்ந்து சராசரியாக 5.5 நாட்களின் பின்னரே பி.சி.ஆர் மூலம் தொண்டையில்/மூக்கில் வைரசுகளைக் கண்டறியக் கூடியதாக இருந்திருக்கிறது - அதாவது நோய் அறிகுறிகள் வெளிவருவதற்கு 1 நாள் முன்னதாக ஒருவர் வைரசுகளைப் பரப்பும் இயலுமையைக் கொண்டிருக்கிறார்.

சாராம்சமாக, : டெல்ரா வைரஸ் தொற்றினால், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உருவாவதற்கு கிட்டத் தட்ட 2 நாட்கள் முன்னதாகவே தொற்று ஏனையோருக்குப் பரவும் வாய்ப்புகள் இருக்கின்றன! இதன் பாதகமான விளைவு, அந்த 2 நாட்களில் தொற்று இருப்பது தெரியாத ஒருவர் சாதாரணமாக நடமாடினால் பலருக்கும் டெல்ரா வைரசைப் பரப்பி விடக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்தத் தகவலை எங்கள் சுயபாதுகாப்பிற்காக எப்படிப் பயன்படுத்தலாம்? அடிக்கடி பி.சி.ஆர்  பரிசோதனைகள் செய்து கொள்ளாத ஒருவர், சாதாரணமாக நாளாந்த சமூக வாழ்வில் ஈடுபடுபவராக இருந்தால், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல் ஆகிய முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். சிறப்பாக இளைஞர்கள், வயதானோர், உடல் பலவீனமான நோயாளிகளோடு நெருக்கமாக உறவாடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது கூடிய எச்சரிக்கைகளைக் கடைப் பிடிக்க வேண்டும். முழுவதுமாக கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டோர், ஏனையோருக்கு டெல்ரா வைரசைப் பரப்புவதும் குறிப்பிடத் தக்க அளவு குறைவாகவே இருப்பதாகவும் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. எனவே, சாதாரணமாக சமூக வாழ்வில் ஈடுபட்டிருப்போர், தடுப்பூசி எடுத்துக் கொள்வதாலும் டெல்ரா பரவலைப் பெருமளவில் குறைத்துக் கொள்ள முடியும்!

இங்கே மேற்கோள் காட்டப்படும் ஆய்விலும், இன்னுமோர் ஆய்விலும் வெளிவந்த தகவல்களின் படி, டெல்ரா வைரசுகள் தொற்றின் போது உருவாகும் வைரசுகளின் எண்ணிக்கையும் முன்னைய கோவிட் 19 வைரசுகளை விட அதிகமாக இருக்கின்றன. இதன் அர்த்தம், ஒருவர் இன்னொருவருக்கு தொற்றைக் கடத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பதாகும். R0 என அழைக்கப் படும் வைரஸ் பரவுகை வீதம் டெல்ரா வைரசைப் பொறுத்த வரையில் 6.4 என ஒரு ஆய்வு கணித்திருக்கிறது: இதன் அர்த்தம் டெல்ரா தொற்றுக்குள்ளான ஒருவர், முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளி பேணாமல் நடமாடும் போது சராசரியாக ஆறிற்கு மேற்பட்ட நபர்களுக்கு வைரசைக் கடத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதாகும்! (முன்னைய கோவிட் 19 வைரசுகளில் இந்தப் பரவல் வீதம் 2 - 4 பேர்களாகக் கணிக்கப் பட்டிருக்கிறது).  

கடந்த சில நாட்களாக இலங்கையில் ஒன்றுகூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் கோவிட் கட்டுப் பாட்டினால் பூட்டப் படும் நிலைமைகளைக் கையாளவும் விளங்கிக் கொள்ளவும் இத்தகைய  ஆய்வுத் தகவல்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

டெல்ராவைப் பொறுத்த வரை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் எவையும் தோன்ற முன்னரே தொற்றுப் பரவுகிறது, ஒருவரில் இருந்து குறைந்தது 6 பேருக்குப் பரவுகிறது. இந்த இலக்கங்களே முடிவுகளை எடுக்க அடிப்படையாக இருக்க வேண்டும்! வேறெந்த உணர்ச்சிபூர்வமான  கருத்துகளும் சுயபாதுகாப்பிற்கு உதவப் போவதில்லை!

 

மேற்கோள்: https://doi.org/10.1038/d41586-021-02259-2

(101 பேரில் நடத்தப் பட்ட சிறியளவிலான ஆய்வு)

சொற்களும் அர்த்தங்களும்:

நோயரும்பு காலம் – incubation period

பி.சி. ஆர் -PCR – polymerase chain reaction

நோயறிகுறிகள் – symptoms

பரவும் வீதம் – R0 – reproduction number  

- ஜஸ்ரின்    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.