Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சியின் ஜெனிவாவுக்கான கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் ஜெனிவாவுக்கான கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்

September 7, 2021

spacer.png


 

கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்: ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவணத்தை அனுப்பாது, இரா. சம்பந்தனின் கையொப்பத்துடன் மட்டுமான ஆவணம் அனுப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது. தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை விளக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிற்செல் பச்லெட் அம்மையாருக்கு ஆவணங்களை அனுப்பி வருகின்றன.
 

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகள், கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆவணம் ஒன்றை அனுப்பியது. இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆவணம் தொடர்பில் கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்த நிலையில், அது தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியினர் நேற்று பாராளுமன்ற அலுவலகத்தில் கூடிப் பேசுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பேசவல்ல சுமந்திரன் எம்.பியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு இன்று (நேற்று) இடம்பெறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வேறொரு கட்சியுடன் கையொப்பமிட்டு ஆவணம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கிறார் என்று அறிந்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் இவ்வாறு செய்துள்ளனர்.

“இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக ஆவணம் ஒன்றை அனுப்பவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இரு ஆவணங்களை அனுப்புவது பிரிந்து செல்வதாகத் தென்படலாம். இதனால் இன்னோர் ஆவணத்தை அனுப்பவில்லை. தலைவர் சம்பந்தன் கையொப்பமிட்ட ஆவணத்தை மட்டுமே அனுப்பவுள்ளோம்” என்றார்.

 

https://www.ilakku.org/sampanthan-only-signatory-letter-geneva/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கிறார் என்று அறிந்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் இவ்வாறு செய்துள்ளனர்.

அவர் என்னத்தை அனுப்பிவைப்பார் என்பது யாவரும் அறிந்ததே. இவ்வளவு காலமும் தயாரிக்காததை இப்போ தயாரிக்கிறார் என்றால், வேறெவரும் தயாரிக்கக்கூடாது அல்லது அவர்களது தயாரிப்பை தடுக்க வேண்டும் என்பதற்காக  தயாரித்திருப்பார். அதுதான் இவர் பொங்கிதள்ளுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கையெழுத்தோட தமிழ் மக்களுக்கான தீர்வு வந்திடுமெல்லே?!

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிப் பெட்டி அவருக்குத்தான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, கிருபன் said:

கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்: ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவணத்தை அனுப்பாது, இரா. சம்பந்தனின் கையொப்பத்துடன் மட்டுமான ஆவணம் அனுப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

திட்டம் கிட்டம் பிளானிங்  எல்லாம் என்ரை....ஆனால் நான் சொன்ன இடத்திலை கைநாட்டு வைச்சது சம்பந்தன் ஐயா.🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

கடைசிப் பெட்டி அவருக்குத்தான்..

இவர் வாங்கப்போகிற கடைசி பெட்டியை சொன்னீர்களா? அல்லது வேறு ஏதும் ....... ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

கடைசிப் பெட்டி அவருக்குத்தான்..

இப்ப பெட்டி  அல்ல கொழும்பில் வீடு அதுதான் முக்கியம் .

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கன் கணக்கறிவானாம், தன் கணக்கை தானறியானாம். கட்சிக்கட்டுப்பாடு, ஒழுங்கு பற்றி கதைப்பவர், தான் அதை பின்பற்றி நடந்தாரா என்று சிந்திப்பது நல்லது. கட்சிக்கு தெரியாமல் முடிவெடுத்து, தலைமையை ஏற்க தயார், தலைமை மாற்றப்படவேண்டும் என்று பத்திரிகை கூட்டம் நடத்தும்போது இந்த தர்மம் எங்கே போனது? கட்சியில் உள்ளவர் பதவி விலக வேண்டும் என்று நாடுநாடாய் கூவித்திரியேக்கை இந்த தர்மத்துக்கு என்ன ஆனது? இங்கு பிரச்சனை என்னவென்றால்; தங்களால் வெளியேறிய விக்கினேஸ்வரன் ஐயா அறிக்கையை தயாரித்துவிட்டார், அனுப்பிவிட்டார் என்கிற வயிற்றெரிச்சலே அன்றி வேறொன்றுமில்லை. அதைத்தான் அவர் திரும்பத் திரும்ப சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகள், கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆவணம் ஒன்றை அனுப்பியது. இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆவணம் தொடர்பில் கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்த நிலையில், அது தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியினர் நேற்று பாராளுமன்ற அலுவலகத்தில் கூடிப் பேசுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கட்சிகள் இணைந்து ஏதோவொன்றை அனுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது.

 

22 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வேறொரு கட்சியுடன் கையொப்பமிட்டு ஆவணம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வளவு காலமும் எந்தப் பேச்சுவார்த்தைக்கு பங்காளிக் கட்சிகளை அழைத்துள்ளீர்கள்.

வாக்குக்காக எந்தக் காலமும் காலடியில் கிடக்கவா வேண்டும்.

18 hours ago, satan said:

அவர் என்னத்தை அனுப்பிவைப்பார் என்பது யாவரும் அறிந்ததே. இவ்வளவு காலமும் தயாரிக்காததை இப்போ தயாரிக்கிறார் என்றால், வேறெவரும் தயாரிக்கக்கூடாது அல்லது அவர்களது தயாரிப்பை தடுக்க வேண்டும் என்பதற்காக  தயாரித்திருப்பார். அதுதான் இவர் பொங்கிதள்ளுகிறார். 

இந்தியா எழுதி கொடுத்ததை பிரதிபண்ணி கையெழுத்திட்டிருப்பார்.

6 hours ago, குமாரசாமி said:

திட்டம் கிட்டம் பிளானிங்  எல்லாம் என்ரை....ஆனால் நான் சொன்ன இடத்திலை கைநாட்டு வைச்சது சம்பந்தன் ஐயா.🤣

குமாரசாமி= இந்தியா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.