Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் - கொழும்பு ஊடகம்

Featured Replies

புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் - கொழும்பு ஊடகம்

ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முழுமையான படை பலத்தையும் கிழக்கில் மையப்படுத்தியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக படைத்துறை ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவும் அவருடைய படைத்துறை ஆலோசகர்களும் விடுதலைப் புலிகளிள் தாக்குதல் உத்திகள் குறித்து பூரண அனுபவமற்றவர்களாக இருப்பதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவ ரீதியில் முக்கியத்துவமற்ற நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கு ஸ்ரீலங்கா படையினர் மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொப்பிகலையில் விடுதலைப் புலிகளின் மரபு வழி தாக்குதல் அணிகள் எவையும் நிலை கொண்டிருக்கவில்லை என்றும் அவர்களின் கரந்தடிப்படையணியே தாக்குதல் நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரந்தடிப்படையின் சில உறுப்பினர்களை தொப்பிக்கலையில் இருந்து வெளியேற்றுவதற்கு இராணுவம் பாரிய படைநடவடிக்கைகளை மேற்கொள்வது அவர்களின் அனுபவமின்மையின் வெளிப்பாடே என்று இராணுவ ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் குடாநாட்டை 1995ம் ஆண்டு முழுமையாக கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்து பெருமெடுப்பிலான வெற்றி விழாவினை நடத்தியிருந்தது எனினும் இன்று வரை யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை படையினரால் தடுக்க முடியவில்லை என்றும் அந்த செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் செறிவு மிக்க கரந்தடி தாக்குதலுக்கோ தற்காலிக தங்குமிட அமைத்தலுக்கோ ஏதுவற்ற யாழ் குடாநட்டிலேயே விடுதலைப் புலிகளால் படையினருக்கு எதிரான தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்த முடியுமாயின் கிழக்கு மாகாணத்தில் அதனைவிட மோசமான தாக்குதல்களை விடுதலைப்புலிகளால் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காடுகள் நிறைந்த முழுமையாக அரச படைகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட முடியாத ஈரூடக தொடுப்புகள் மிக்க கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முற்றாக தடுப்பதற்கு அரசாங்க படைகளால் முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது படையினர் சந்தித்து வரும் இழப்புகளை விடவும் கூடுதலான இழப்புகளை படையினர் எதிர்காலத்தில் சநதிக்க நேரிடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முழுமையான கட்டுப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பது விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் என்ற எண்ணம் தவறானது என்றும் விடுதலைப்புலிகள் 95ம் ஆண்டு அவர்களின் கோட்டையாக கருதப்பட்ட யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறிய பின்னரே ஸ்ரீலங்கா படைகளின் வரலாற்றில் பாரிய இழப்புகளை சந்திக்கும் வகையிலான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலப்பரப்பின் ஆழுகைகளை கைப்பற்றுவதன் மூலமாகவோ குறிப்பிட்ட பிரதேசத்தில் அகலக் கால்பரப்பி நிற்பதன் மூலமாகவோ யுத்தத்தின் போக்கை மாற்றி விட முடியாது என்ற வரலாற்று உண்மையை ஸ்ரீலங்கா அரசாங்கம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது ஈராக்கிலும் முன்பு வியட்நாமிலும் உலக வல்லரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான விளைவுகளை ஸ்ரீலங்கா நினைவு கூர வேண்டும் என்றும் உலக வல்லரசாகவும் பொருளாதார ரீதியல் பலம் பொருந்தியதாகவும் உள்ள அமெரிக்காவால் தாங்க முடிந்த இழப்புகளை கடனில் தத்தளித்து வெளிநாட்டு உதவிகளை நம்பி நாட்களை நகர்த்தும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தாங்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்த நடவடிக்கைகள் ஸ்ரீலங்காவிற்கு பாரிய பொருளாதார சுமையை அதிகிக்கச் செய்யும் அதே வேளை படையினர் சந்திக்கும் இழப்புகள் அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளால் மிகக் குறைந்த இழப்புகளோடு ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ய முடியுமும் என்பதால் யுதத்தத்தின் மூலம் தான் பிரச்சினைக்கு தீர்வு என்ற நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்ச மாற்றிக் கொள்ளாவிட்டால் மீட்கமுடியாத பாதாளத்திற்கும் இலங்கை விழுந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்து வரும் நாடக்களில் விடுதலைப்புலிகளின் பதில் தாக்குதலின் விளைவுகளை முழுமையாக அரசாங்கம் அனுபவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்தாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல்கள் வடக்கிலா?தெற்கிலா அல்லது கிழக்கிலா என்ற சந்தேகம் வேண்டாம்...வடக்கும்,கிழக்கும் சேர்ந்தது தான் எங்கள் தாயகம்...ஆகவே தாக்குதல்களும் பரந்து ஒரே நேரத்தில் இடம்பெற சாத்தியக்கூறுகள் உண்டு.

Edited by Valvai Mainthan

தெற்கு என்பது எதை குறிகின்றது தமிழீழத்தின் தெற்கையா இல்லை இலங்கை தீவின் தெற்கையா

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை எழுதியவர் தெற்கென்று கிழக்கையே குறிப்பிடடிருக்கவேண்டும். தமிழீழத்தைப் பொறுத்த வரை இரண்டு தெற்குகள் உள்ளன. ஒன்று தெற்கின் வலதுகரை-றைற் சௌத், மற்றயது இடதுகரை-லெப்ற் சௌத். இதில் வலது கரை சற்று நீளங் குறைந்த புத்தளப்பிரதேசம், இடது கரை நீளத்தில் கூடிய கூமுனைவரை செல்லும் கிழக்குப்பிரதேசம். தற்போதைக்கு றைற் சௌத்தில் எவ்வித படை நடவடிக்கைகளையும் செய்யக்கூடிய வாய்ப்புக்களில்லை ஆகவே கிழக்கிலேயே கரந்தடித் தாக்குதல்கள் நடக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. கட்டுரையாசிரியரும் அதையே குறிப்பிட்டுள்ளரென எண்ணுகிறேன்.

தெற்கு என்பது அம்பாறையைக் குறிக்கும் என நினைக்கிறேன். கிழக்கிலிருந்து புலிகளை வெளியேற்றியதாகக் கூறப்படுவது மட்டக்களப்பை சுற்றியுள்ள பிரதேசத்தைத்தான்.

ஆனால் அம்பாறையில் இன்னும் புலிகள் உள்ளனர்.

இந்த படத்தில் தமிழீழ வரைபடம் புத்தளத்தை உள்ளடக்கம் செய்யவில்லை.இது புலிகளின் சமாதான செயலக இணையத்தில் எடுகப்பட்டது

untitled-3.jpg

http://www.ltteps.org/mainpages/images/200...repot_-_May.pdf

  • கருத்துக்கள உறவுகள்

சிலாபம் வரையான புத்தளப் பிரதேசம் ஒருகாலத்தில் தமிழர்களின் பாரம்பரியத் தாயகாமாகவிருந்து சிங்களவர்களிடம் பறிபோய்விட்டது. இருந்தும் உடப்புப் போன்ற கிராமங்களில் தமிழர்கள் செறிந்து வாழ்கிறார்கள். அரசியல் ராஜதந்திர நோக்கங்களுக்காக தமிழீழத்தின் வலது கரையை நாம் தற்போதைக்குத் தேசவரைபடத்திலிருந்து விலக்கி வைத்தாலும் உண்மையில் அதுவும் தமிழர் பிரதேசங்களே. அம்பாரையையும், கந்தளாயையும் எவ்வாறு விட்டுக்கொடுக்க முடியாதோ அவ்வாறுதான் புத்தளமும். புத்தளம் தற்போதும் தமிழ்பேசும் இஸ்லாமியத் தமிழர்கள் வாழும் பிரதேசமாகவே இருக்கிறது. என்ன செய்வது? அதிகம் ஆசைப்படுகிறோமென்று சர்வதேசம் எங்களைக் கணிக்கக்கூடாது என்பதற்காக நாம் இழந்தவற்றை இழந்தவைகளாகவே விட்டுக்கொடுக்கத் துணிந்துவிட்டோம். அந்த வகையில்தான் சமாதானச் செயலகம் இந்த வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி மிகமிக அவதானமாக இருக்கின்றான். பிறகெங்காவது தாக்குதல் நடந்து விடுமா என்று. நிச்சயமாக நாங்களும் அந்த நிலை குறித்துச் சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிமலை பிடிபட்டதால் மனச்சோர்வில் இருக்கும் பலரை உற்சாகப்படுத்த இப்படியான செய்திகள் தேவைதான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டையை குழப்பிறது நல்லாப்பிடிக்குமாக்கும்கிர

கொழும்புக்கு அனைத்து வழிகளாலும் உள்நுளையும் அனைத்து வாகனங்கள் மற்றும் தனிநபர்களும் இன்று காலை முதல் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்!

குடும்பியை பிடித்ததனால் தலைக்கு ஆபத்து!

கொழும்புக்கு அனைத்து வழிகளாலும் உள்நுளையும் அனைத்து வாகனங்கள் மற்றும் தனிநபர்களும் இன்று காலை முதல் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்!

குடும்பியை பிடித்ததனால் தலைக்கு ஆபத்து!

தலைக்கு ஆபத்தென வாலைத்தானே தேடுறாங்கல் தலை வந்து முட்டீட்டு போயிடும் இதுதான் சிங்களவனின் நகைசுவை :P

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினை தீவிரமாக ஆரம்பித்த 80 களில் இருந்தே கொழும்பில் பாதுகாப்பற்ற நிலைதான் நிலவுகின்றது.. குடும்பிமலை பிடிபட்டதால்தான் புதிய தாக்குதல்கள் நடைபெறும் என்றமாதிரியான புதிய செய்திகளால் யாருக்கு லாபம்?

என்னதான் கண்ணுக்குள் எண்ணெய்யை விட்டுக்கொண்டு விழித்திருந்தாலும் எங்கோ ஓர் ஓட்டை இருக்கவே செய்யும்.. சிங்களப் படைகள் அதைப் பிடித்தோம், இதைப் பிடித்தோம் என்று அறிக்கைவிட்டாலும், பிடிபடாமல் ஏதாவது ஒன்று வந்து பயங்கரமான சேதம் விளைவிக்கும் என்பதையும் உணர்ந்தே வைத்துள்ளார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.