Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸின் பங்கு நிகரற்றது – பேராசிரியர் புஸ்பரட்ணம் எடுத்துரைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸின் பங்கு நிகரற்றது – பேராசிரியர் புஸ்பரட்ணம் எடுத்துரைப்பு

தமிழ் மக்களின் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று வரலாற்றுத் துறை பேராசிரியர் புஸ்பரத்தினம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியை தொடருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே வரலாற்றுத் துறை பேராசிரியரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Douglas-300x182.jpg
யாழ். பல்கலைக் கழகத்தின் கலாசார சுற்றுலா கற்கைநெறி சார்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் போன்ற பலர் கலந்து கொண்ட குறித்த கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பேராசிரியர் புஸ்பரட்ணம்,
தமிழ் மக்களுடைய வரலாற்றுப் பாரம்பரியங்களும் தொல்லியல் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய காலச் சூழலின் அவசியம் கருதி யாழ் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கற்கைநெறியை தொடர்ந்தும் கற்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் நிகரற்றவாறு இவ்வாறான பல்வேறு நடவடிககைள் மேற்கொண்டமையை சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக சாவகச்சேரி நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, வரலாற்றுச் சின்னமான இந்து ஆலயம் தொடர்பான விவகாரத்தில் தலையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொல்லியல் மரபுரிமை நிலையம் ஒன்று சாவகச்சேரி பிரதேசத்தில் அமைவதற்கு காரணகர்த்தாவாக இருந்தமையினையும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த விரிவுரையாளர்கள், கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கைநெறி தொல்லியல் மரபுரிமைகளை பேணிப் பாதுகாத்தல், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுற்றுலாத் துறையை விருத்தி செய்தல், தமிழ் மக்களுடைய கலாசார விழுமியங்களை மெருகேற்றுதல் போன்ற விடயங்களை உள்ளடக்கும் வகையில் கலாசார சுற்றுலா சிறப்பு கற்கை நெறிக்கான பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், எமது எதிர்காலச் சந்ததிகளுக்கு எமது தனித்துவங்களை கொண்டு சேர்ப்பதற்கு இந்தப் கற்கைநெறி வலுச் சேர்க்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டனர்.
அத்துடன், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு என்பது சவாலான விடயமாக இருக்கின்ற சூழலில், சுற்றுலாத் துறை என்பது பொருளாதாரத்தின் பிரதான மார்க்கங்களில் ஒன்றாக இருக்கின்ற இலங்கை போன்ற நாடுகளில் கலாசார சற்றுலாவை சிறப்பு கற்கை நெறியாக கற்பதன் மூலம் வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த மாணவர்கள், தமக்காக இந்த வாய்ப்பினை மீண்டும் பெற்றுத் தந்த அமைச்சருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
மக்களோடு வாழ்ந்நு மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவற்றை தீர்த்து வைக்கக் கூடியவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கடந்த காலங்களில் சரியானவர்களின் கைகளில் அதிகாரங்கள் கிடைக்காமையினாலேயே தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் எமது தலைமைகளின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களையும் சுட்டிக் காட்டிய கடற்றொழில் அமைச்சர், அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

https://thinakkural.lk/article/142457

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர்…. என்னத்துக்கோ, அத்திவாரம் போடுறார். 🤣

ம்ம்ம்ம்… நடக்கட்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் பந்தையம் கட்டுவமா.நான் சொல்லுறன் 5 கூட தான்டாது என்டு.😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

சிறியர் பந்தையம் கட்டுவமா.நான் சொல்லுறன் 5 கூட தான்டாது என்டு.😄

சுவைப்பிரியன்… நான், டக்ளசின்ரை பந்தயத்துக்கு வரேல்லை. 🤣

அது… ஒரு பக்கம் தாண்டுறதே கஸ்ரம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கடற்தொழில் அமைச்சருக்கும் பல்கலைகழக கலாச்சார கற்கை நெறிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று தெரியவில்லை. தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அரசியல் தலையீடு இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்ற நிலைதான் இப்போது இலங்கையில். அரசியல் இலாபம் அடைவதற்கு சிக்கல்களை வேண்டுமென்றே உருவாக்கி அதை தீர்த்து வைத்து தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்புவது இவர் நோக்கமா? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பேராசிரியர்…. என்னத்துக்கோ, அத்திவாரம் போடுறார். 🤣

ம்ம்ம்ம்… நடக்கட்டும். 🤣

அந்தாள் என்ன செய்யிறது.

என்னைப்பற்றி சொல்லும் காணும் என்றால் ஏதாவது நல்லதாக சொல்லி தொலைக்கத் தானே வேணும்.

அவ்வளவு சுதந்திரம் தமிழருக்கு.

3 hours ago, vanangaamudi said:

கடற்தொழில் அமைச்சருக்கும் பல்கலைகழக கலாச்சார கற்கை நெறிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று தெரியவில்லை

 

5 hours ago, தமிழ் சிறி said:
6 hours ago, சுவைப்பிரியன் said:

சிறியர் பந்தையம் கட்டுவமா.நான் சொல்லுறன் 5 கூட தான்டாது என்டு.😄

சுவைப்பிரியன்… நான், டக்ளசின்ரை பந்தயத்துக்கு வரேல்லை. 🤣

அது… ஒரு பக்கம் தாண்டுறதே கஸ்ரம்

ஓடாத குதிரையையும் ஓட வைக்கோணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

சிறியர் பந்தையம் கட்டுவமா.நான் சொல்லுறன் 5 கூட தான்டாது என்டு.😄

ஒரு திரி எரிஞ்சால் ஓடியாந்து நன்றி வணக்கம் சொல்லுறது.
எரியாட்டில் பந்தயம் கட்டுறது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vanangaamudi said:

கடற்தொழில் அமைச்சருக்கும் பல்கலைகழக கலாச்சார கற்கை நெறிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று தெரியவில்லை. தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அரசியல் தலையீடு இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்ற நிலைதான் இப்போது இலங்கையில். அரசியல் இலாபம் அடைவதற்கு சிக்கல்களை வேண்டுமென்றே உருவாக்கி அதை தீர்த்து வைத்து தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்புவது இவர் நோக்கமா? 

இப்போது மட்டுமல்ல உறவே! எப்போதுமே தென்னாசிய நாடுகளில் இது தான் நிலையாக இருக்கிறது. இப்போது உறுத்துவதன் காரணம், அரசியல் வாதி டக்ளஸ் என்பதால் மட்டும் தான்!😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.