Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது!

October 23, 2021
spacer.png

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் நேற்றைய தினம் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில் , இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு மீனவர்களும் , வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழு ஆய்வாளர் ஊடாக வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 
விசாரணைகளின் பின்னர் இருவரையும் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
https://globaltamilnews.net/2021/167588

 

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு பதில் செய்யுறாங்களாம் .. 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் காலத்தில் இவ்வளவுக்கு போகாத மீனவர் பிரச்சனை இப்ப ஏன் போகுதுண்ணா.. இரு பகுதியிலும் இதனை பிரச்சனையாக்கி அரசியல் குளிர் காய ஆக்கள் இருப்பது தான் காரணம்.

இங்கால.. டக்கிளஸ் என்ற வெங்காயமும் சுமந்திரன் என்ற கோமாளியும் போல.. அங்காலையும் ஆக்கள் இருக்கினம்..!

புலிகள் காலத்தில் இருந்த தமிழக - தமிழீழ மீனவர் சமூக சுமூக நிலை மீளத்திருப்பனும் அதற்கு உருப்படியான தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கனும். இந்த இரு பக்கமும் உள்ள அரசியல் கோமாளிகள்.. வெங்காயங்களைப் புறந்தள்ளி வைத்துவிட்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

இருபக்கத்தினதும் தொலைநோக்கற்ற அரசியற் செயற்பாட்டின் துன்பத்தைச்  சுமப்பது அப்பாவி மீனவர்களேயாகும்.  இவர்களது இழுபறி ஆட்டத்தில் அப்பாவி மீனவர்கள் பலியாவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nochchi said:

இருபக்கத்தினதும் தொலைநோக்கற்ற அரசியற் செயற்பாட்டின் துன்பத்தைச்  சுமப்பது அப்பாவி மீனவர்களேயாகும்.  இவர்களது இழுபறி ஆட்டத்தில் அப்பாவி மீனவர்கள் பலியாவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

இரு பகுதி தமிழ் மீனவர்களை பகைவர் ஆக்குவதே சந்தர்ப்பட்டவர்களின் தந்திரோபாயம்.இதன் மூலம் இலங்கைத்தமிழர் தமிழ்நாட்டு  தமிழர்களை விரோதிகாளாக்கி விட்டால் அவர்களுக்கு சகலதும் நலமே.

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கவில்லை இந்த சதுரங்க ஆட்டம். இந்திய கடலில் மீன்வளம் இல்லை என்றே இங்கு வருகிறார்கள், அப்படியிருக்க இவர்கள் அங்கு ஏன் போனார்கள்? இந்திய மீனவர் இங்கு வரும்போது தடுக்காத இந்திய கடற்படை, இவர்களை கைது செய்ததாம். புரியவில்லை? திட்டமிட்டு நடிக்கிறார்கள்போலுள்ளதே! இருபக்கமும் அப்பாவி தமிழ் மீனவர்களே பலிக்கடாவாக்கப்படுவதுடன் உறவிலும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள். சுமந்திரனின் போராட்டம் எல்லோரையும் விழித்தெழ வைத்துவிட்டதோ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறை மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்!

October 24, 2021

spacer.png

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில் , இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரு மீனவர்களும் , வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழு ஆய்வாளர் ஊடாக வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் இருவரையும் நேற்றைய தினம் சனிக்கிழமை வேதாரண்ய காவற்துறையினர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றில்முன்னிலைப்படுத்தினர்.

வழக்கினை விசாரித்த நீதிமன்று , இரு மீனவர்களையும் எதிர்வரும் 1ஆம் திகதி வரையில் புழல் சிறையில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளது.

https://globaltamilnews.net/2021/167630

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.