Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளதாக அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளதாக அறிவிப்பு

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது.உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கருப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட (கடன் கடிதம்) எல்/சியை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து சீன நிறுவனங்களும் சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.இந்த தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

http://www.samakalam.com/இலங்கை-மக்கள்-வங்கியை-கற/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளதாக அறிவிப்பு

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது.உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கருப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட (கடன் கடிதம்) எல்/சியை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து சீன நிறுவனங்களும் சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.இந்த தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

http://www.samakalam.com/இலங்கை-மக்கள்-வங்கியை-கற/

 

ஓடர் பண்ணிணாப் பிறகு பார்த்தா, காசில்லை....

அதுதான் அனுப்பின சாமானில நொட்டை, நொள்ளாடம் பிடித்து சிக்கலாப் போச்சு.... 🥺

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புப்பட்டியலில் சேர்ப்பதாக சீனத்தூதரகம் அறிவிப்பு - மக்கள் வங்கி பதில்

(நா.தனுஜா)

சேதன உர இறக்குமதி தொடர்பில் விநியோகிக்கப்பட்ட கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்தாததன் காரணமாக மக்கள் வங்கியை 'கறுப்புப்பட்டியலில்' சேர்த்திருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகத்தின் நடவடிக்கைகக்குப் பதிலளித்துள்ள மக்கள் வங்கி, இவ்விவகாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கல் குறித்து கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவிற்கு அமைவாகவே மேற்படி கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. 

இந்நாட்டின் பொறுப்புவாய்ந்த கட்டமைப்பு என்றவகையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக செயற்படும் கடப்பாட்டை தாம் கொண்டிருப்பதாகவும் மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் கடந்த மேமாதத்திலிருந்து இரசாயன உரத்திற்குப் பதிலாக சேதன உரத்தைப் பதிலீடு செய்யும் வகையிலான பசுமை விவசாய அபிவிருத்திக்கொள்கைக்கு மாறியது. அதன்படி சேதன உரத்திற்கான தேவைப்பாடு பற்றிய அறிவிப்பும் கேள்விமனுக்கோரல் விண்ணப்பமும் கடந்த ஜுன்மாதம் விவசாய அமைச்சினால் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஷிங்டாவ் சீவின் பயோடெக் குரூப் கம்பனி லிமிடெட் கலந்துகொண்டதுடன் உரத்தை விநியோகிப்பதற்கான உரித்தைப் பெற்றுக்கொண்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட வழங்குனர்கள் பட்டியலில் இந்நிறுவனத்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டதுடன் அதனூடாக இலங்கைக்கு 99,000 டொன் சேதன உரத்தை இறக்குமதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஷிங்டாவ் சீவின் பயோடெக் குரூப் கம்பனி லிமிடெட் நிறுவனம் இலங்கையின் உள்ளக முகவர் ஊடாக பெறுனருடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன் அதற்கமைவாகக் கடன் தவணைக் கடிதமும் விநியோகிக்கப்பட்டது.

அதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தின் மாதிரிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தினால்  பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

அதன்மூலம் குறித்த உரத்தில் 'எர்வீனியா' என்ற தீங்கேற்படுத்தும் பற்றீரியா அடங்கியிருப்பது கண்டறியப்பட்டமையை அடுத்து, சேதன உரம் ஏற்றப்பட்ட அந்தக் கப்பலை மீண்டும் சீனாவிற்குத் திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன.

அதுமாத்திரமன்றி சீனாவின் ஷிங்டாவ் சீவின் பயோடெக் குரூப் கம்பனி லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் உள்நாட்டு முகவர் நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக சேதன உரம் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவதற்கு எதிராக கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் சேதன உர இறக்குமதி தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம், உர இறக்குமதிக்கான கடன் தவணைக் கடிதத்திற்குரிய பணத்தைச் செலுத்துவதற்குத் தவறியமையினால் மக்கள் வங்கியை (இலங்கை) 'கறுப்புப்பட்டியலில்' சேர்ப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டுள்ள பதிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

சீவின் நிறுவனம் திறந்த விலைமனுக்கோரலில் வெற்றியீட்டியது. இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. சீனாவிலும் சர்வதேச முகவர் நிறுவனத்தினாலும் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் உரத்தின் தரம் உறுதிப்படுத்தப்பட்டது. கப்பலின் ஊடாக உரிய காலப்பகுதியில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையம் அதனை இடைநடுவில் நிராகரித்தது. அதனால் (உரத்தினால்) தீங்கேற்படலாம் என்று கூறியது. கப்பலை நாட்டினுள் அனுமதிப்பதற்கு மறுத்தது. மூன்றாம் தரப்பினூடாகப் பரிசோதனையை மேற்கொள்வதற்கான யோசனையும் மறுக்கப்பட்டது. கடன் தவணைக் கடிதத்திற்கான கொடுப்பனவைச் செலுத்துவதற்கும் மறுப்புத்தெரிவிக்கப்பட்டது. எனவே இலங்கை மக்கள் வங்கி 'கறுப்புப்பட்டியலில்' சேர்க்கப்பட்டது என்று தூதரகம் அதன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்ட மக்கள் வங்கி, சீனத்தூதரகத்தினால் தமது வங்கி கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தலைச் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. 

அதன்படி அவ்வறிக்கையில் மக்கள் வங்கி மேலும் கூறியிருப்பதாவது,

மக்கள் வங்கியினால் வெளியிடப்பட்ட கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவு செலுத்தப்படாமையினால் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலில் சேர்த்திருப்பதாக அறிகின்றோம். இவ்விவகாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கல் குறித்து கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவிற்கு அமைவாகவே மேற்படி கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சீனத்தூதரகத்தின் உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நாட்டின் பொறுப்புவாய்ந்த கட்டமைப்பு என்றவகையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக செயற்படும் கடப்பாட்டை மக்கள் வங்கி கொண்டிருப்பதே மேற்படி கொடுப்பனவைச் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு ஒரேயொரு காரணமாகும். தற்போது நடைமுறையிலுள்ள சட்டரீதியான தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர், வழமையான வர்த்தகக் கொடுக்கல், வாங்கல்களுக்கு அமைவாக குறித்த கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவு விரைவாகச் செலுத்தப்படும் என்று மக்கள் வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கேட்டறிவதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் தொடர்புகொள்ள முற்பட்டோம். அதன்போது இவ்விடயம் தொடர்பில் மத்திய வங்கி விரைவில் அறிக்கையொன்றை வெளியிடும் என்று ஆளுநரின் பிரத்யேக செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

 

https://www.virakesari.lk/article/116242

  • கருத்துக்கள உறவுகள்

தொழிலாளி உருண்டு, பிரண்டு கால் கழுவிவிட்டாலும் எஜமான் தெளிவாய்த்தான் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இந்நாட்டின் பொறுப்புவாய்ந்த கட்டமைப்பு என்றவகையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக செயற்படும் கடப்பாட்டை மக்கள் வங்கி கொண்டிருப்பதே மேற்படி கொடுப்பனவைச் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு ஒரேயொரு காரணமாகும்.

எல்லாவற்றிலும் மதித்து நடக்கிறார்கள், இதிலை மட்டும் பிழை விடக்கூடாது.

13 hours ago, கிருபன் said:

இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையம் அதனை இடைநடுவில் நிராகரித்தது. அதனால் (உரத்தினால்) தீங்கேற்படலாம் என்று கூறியது. கப்பலை நாட்டினுள் அனுமதிப்பதற்கு மறுத்தது. மூன்றாம் தரப்பினூடாகப் பரிசோதனையை மேற்கொள்வதற்கான யோசனையும் மறுக்கப்பட்டது. கடன் தவணைக் கடிதத்திற்கான கொடுப்பனவைச் செலுத்துவதற்கும் மறுப்புத்தெரிவிக்கப்பட்டது.

கையில காசு இல்லை எண்டாப்பிறகு எத்தனை பரிசோதனை செய்தால்த்தானென்ன?  இல்லாத காசு வந்துவிடுமா என்ன? இவ்வளவு காலமும் நீங்கள் கொட்டினத்தையெல்லாம் இரண்டு கரம் நீட்டி வாங்கினனாங்கள் இப்போ கையில காசு இல்லாதபடியாற்தான் தரம் இல்லையென்று ஏற்க மறுக்கிறோம். சொன்னால் புரிஞ்சு கொள்ளுங்கோ!

13 hours ago, கிருபன் said:

சேதன உர இறக்குமதி தொடர்பில் விநியோகிக்கப்பட்ட கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்தாததன் காரணமாக மக்கள் வங்கியை 'கறுப்புப்பட்டியலில்' சேர்த்திருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

இப்பதான் நாடகம் ஆரம்பிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

 

IMG-20211030-081932.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எரியிற வீட்டில விறகு பிடுங்கிற சீனா, ரஷ்யாவோட உறவு வைச்சு பிழைக்கப்போகுது சிங்களம். அடுத்த இலக்கு ஆப்கானிஸ்தான் தலிபான்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.