Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை பௌத்த குடியரசாக பிரகடனம் செய்வதற்கு பிரயத்தனம் : இந்திய உயர்ஸ்தானிகரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பௌத்த குடியரசாக பிரகடனம் செய்வதற்கு பிரயத்தனம் : இந்திய உயர்ஸ்தானிகரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டு

ஆர்.ராம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை ‘இலங்கை பௌத்த குடியரசாக’ பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பிரயத்தனம் செய்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் பாணுபிரகாஷ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக கூட்டமைப்பின் தலைவருடைய கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டார். இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர்குழு புதிய அரசியலமைப்புக்கான வரைவொன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு தனது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. 

Raam_01.JPG

அவ்வாறானதொரு நிலையில் தான் தற்போது, விசேட செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். அதேநேரம், தம்மிடத்திலும் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டதாக உயர்ஸ்தானிகரும் பதிலளித்துள்ளார். 

அத்துடன் அந்த விடயத்தில் தாமும் கரிசனையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரேநாடு ஒரேசட்டம்’ என்ற  எண்ணக்கருவை அமுலாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி குறித்த நிலைப்பாடு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கேட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த, கூட்டமைப்பின் தலைவர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை, இலங்கை பௌத்த குடியரசாக மாற்றுவதற்காக பிரயனத்தம் செய்யப்படுகின்றது. அதற்காகவே இவ்விதமான செயலணிகள் உருவாக்கப்படுகின்றன. மேலும் குறித்த செயலணியில் தமிழர்கள் யாரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. ஆகவே இதில் காணப்படுகின்ற உள்நோக்கம் தெளிவாக தெரிக்கின்றது என்று பதிலளித்துள்ளார்.

அதனையடுத்து, இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் சம்பந்தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். கடந்த காலங்களில் காணப்பட்ட நிலைமைகள் பற்றி தெளிவுபடுத்தினார். 

சம்பந்தனின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட உயர்ஸ்தானிகர், தற்போது இழுவை மடி பயன்படுத்தும் மீனவர்களுக்கு மாற்று மீன்பிடி முறைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டு அம்முறைமைகளை உள்ளீர்க்கச் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதிலளித்துள்ளார்.

இதேவேளை,13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் உயர்ஸ்தானிகரிடத்தில் சம்பந்தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அவ்விடயம் சம்பந்தமாக தொடர்ச்சியாக இந்தியா கரிசனை செய்து வருகின்றமையையும் நினைவுபடுத்தினார்.

மேலும், இந்த விடயத்தில் பகிரங்கமான கருத்தடல்கள் செயற்பாடுகள் பொருத்தமற்றதென்பதையும் அவ்விதமான நிலைமைகள் தெற்கில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/116335

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே மதம் என்று சம்பந்தன் ஐயா ஐயுறுகின்றாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அரசை வெருட்ட பாக்கிறாரா?! இல்லை ரீச்சர் நுள்ளிறார் என்று முறையிடுகிறாரா?!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

 

Raam_01.JPG

 

IMG-20211031-201847.jpg

  • கருத்துக்கள உறவுகள்

2009 க்குப் பின் சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்த போதும்.. இனப்படுகொலையாளர்களுக்கு வாக்குக் கேட்ட போதும்.. சிங்கள வெற்றி விழாக்களில் எடுபிடி சகிதம் கலந்து கொண்டு கொட்டாவி விட்ட போதும்..  மறப்போம் மன்னிப்போம் என்று சுய புலம்பல் புராணம் பாடிய போதும்.. புலிகள் பயங்கரவாதிகள்.. நாம் தமிழீழம் கேட்கவில்லை என்ற போதும்...

இது சிங்கள பெளத்த தேசம் என்று பகிரங்கமாக அறிவித்து ருவன்வெலிசயவில் கோத்தா பதவிப்பிரமாணம் எடுத்த போதும்.. இவருக்கு தெரியல்லையோ இந்தச் சங்கதி..???!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

‘இலங்கை பௌத்த குடியரசாக’ பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பிரயத்தனம் செய்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

 

15 hours ago, கிருபன் said:

அதேநேரம், தம்மிடத்திலும் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டதாக உயர்ஸ்தானிகரும் பதிலளித்துள்ளார். 

 

15 hours ago, கிருபன் said:

‘ஒரேநாடு ஒரேசட்டம்’ என்ற  எண்ணக்கருவை அமுலாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி குறித்த நிலைப்பாடு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கேட்டுள்ளார்.

 

15 hours ago, கிருபன் said:

அந்த விடயத்தில் தாமும் கரிசனையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பந்தர் கோள் சொல்லுறார், அதை கேட்ட இந்தியா இனிமேல்  இலங்கையை  உற்று கவனிக்கும். சம்பந்தர் சந்தோஷமாய் அறிக்கை விடலாம், எல்லாவற்றையும் இந்தியா கவனிக்கும் என்று. அதற்கு சாட்சி சுமந்திரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.