Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமேசானில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு - வழக்கை எதிர்கொள்ளும் அமேசான் ஊழியர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமேசானில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு - வழக்கை எதிர்கொள்ளும் அமேசான் ஊழியர்கள்

6 மணி நேரங்களுக்கு முன்னர்
அமேசான் வலைதளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அமேசான் வலைதளம்

அமேசான் வலைதளத்தைப் பயன்படுத்தி இருவர் மரிஜுவானா போதைப்பொருள் கடத்தியதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவிலுள்ள அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்ற வாரம், மத்திய பிரதேசத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு 20 கிலோ போதைப்பொருள் கடத்தியதாகக் கூறி போலீசார் இருவரை கைது செய்தனர்.

இந்த நபர்கள், அமேசான் வலைதளத்தில், சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இயற்கை இனிப்பான ஸ்டீவியா இலைகள் என்று கூறி, கனாபிஸ் போதைப்பொருளை விற்றதாகப் போலிசார் கூறுகின்றனர்.

இதுகுறித்த தகவல்களைப் போலீசாரிடம் தாம் பகிர்ந்துள்ளதாக அமேசான் நிறுவனம் கூறியிருக்கிறது.

"தவறான நடத்தையை அமேசான் சிறிதும் சகித்துகொள்ளாது, எங்கள் கொள்கைகளையோ, சட்டங்களை மீறும் நபர்கள் மீதோ, மூன்றாம் தரப்பினர் மீதோ அமேசான் கடுமையான நடவடிக்கை எடுக்கும்," என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

அந்நிறுவனம் சட்டவிரோதமான பொருட்கள் பட்டியலிடப்படுவதையோ விற்பதையோ அனுமதிப்பதில்லை எனவும், சட்டவிரோதமான பொருட்கள் சார்ந்த விதிகளை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்திருக்கிறது.

மத்தியப் பிரதேச போலீசார் அமேசான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர்கள் மீது போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

"போலீசாரின் கேள்விகளுக்கு பதிலாக அந்நிறுவனம் கொடுத்த ஆவணங்களில் இருக்கும் பதில்களுக்கும், விவாதங்களில் வெளிவந்த தகவல்களுக்கும் இருந்த முரண்பாட்டின்" காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகப் போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

எத்தனை நிர்வாகிகளின் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறவில்லை.

அமேசான் வலைதளம் வழியாக, சுமார் $148,000 (இந்திய மதிப்பில் சுமர் 1.1 கோடி ரூபாய்) மதிப்புள்ள 1,000 கிலோ மரிஜுவானா போதைப்பொருள் கடத்தப் பட்டிருக்கிறதென்று மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது அமேசானின் இந்தியத் தொழில் பிரிவு எதிர்கொண்டிருக்கும் வெகு சமீபத்திய வழக்காகும், இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தொழில்சார் போட்டி குறித்த ஒரு விசாரணையை எதிர்கொண்டு வருகிறது.

ஆர்யன் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆர்யன் கான்

அமெரிக்கச் சில்லறை விற்பனைப் பெருநிறுவனமான வால்மார்ட்டின் துணை நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டுடன், அமேசான் இந்தியாவும், சில விற்பனையாளர்களுக்கு முன்னுரிமை அளித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதத்தில், அமேசான் இந்தியாவின் ஒன்றோ அதற்கு மேற்பட்ட ஊழியர்களோ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அந்நிறுவனம் ஒரு உள் விசாரணையைத் துவக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளில், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டிற்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு அதிகரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, நாட்டின் புகழ்பெற்ற சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வந்தனர்.

சென்ற மாதம், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக் கானுடைய 23 வயது மகன் ஆர்யன் கான், ஒரு பார்ட்டியில் போதைப் மருந்து பயன்படுத்தியதாகக் கூறிக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இந்திய ஊடகங்களில் வெகுவாகப் பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-59385303

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரிட்டனில், உணவு விநியோக பாணியில், மோட்டார்சைக்கிளில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விநியோகம் செய்த, நான்கு பிரேசீலிய பெண்களையும், அவர்கள் ஆண் தலைவரையும் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பி உள்ளது.

பெண்களுக்கு ஆறு வருசமும், தலைவருக்கு பதினெட்டு வருசமும் தீட்டியுள்ளார்கள்.

பெண்கள், ஞாயிறுக்கிழமை விடுமுறை தினமாக, வேலை செய்யாமல் இருப்பார்களாம்.

மாதம், £100,000 பவுண்ஸ் லாபம் பார்த்த தொழில் என்கிறது, இலண்டன் தினதந்தி பத்திரிகை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பெண்கள், ஞாயிறுக்கிழமை விடுமுறை தினமாக, வேலை செய்யாமல் இருப்பார்களாம்.

சண்டே என்றால் இவர்களின் அட்டகாசம் இரவு 12 மட்டும் கிற்றார் அடித்து பைலா பாட்டுக்களுடன் முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இன்று பிரிட்டனில், உணவு விநியோக பாணியில், மோட்டார்சைக்கிளில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விநியோகம் செய்த, நான்கு பிரேசீலிய பெண்களையும், அவர்கள் ஆண் தலைவரையும் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பி உள்ளது.

பெண்களுக்கு ஆறு வருசமும், தலைவருக்கு பதினெட்டு வருசமும் தீட்டியுள்ளார்கள்.

பெண்கள், ஞாயிறுக்கிழமை விடுமுறை தினமாக, வேலை செய்யாமல் இருப்பார்களாம்.

மாதம், £100,000 பவுண்ஸ் லாபம் பார்த்த தொழில் என்கிறது, இலண்டன் தினதந்தி பத்திரிகை.

https://uk.yahoo.com/news/charlies-angels-style-brazilian-gang-195542704.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.