Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஸ்லாம், அல்லாஹ்வை அவமதிக்கும் பேச்சு: வழக்கிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

( எம்.எப்.எம்.பஸீர்)

' ஒரே நாடு - ஒரே சட்டம் ' ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர், இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவமதித்து மத ஒற்றுமையை சீர் குலைக்கும் வண்ணம் கருத்து வெளியிட்டமை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 

கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல இவ்வாறு அவரை விடுதலை செய்தார்.

ஞானசார தேரருக்கு எதிரான குறித்த விவகார வழக்கினை முன்னெடுத்துச் செல்வதில்லை என சட்ட மா அதிபர் தீர்மானித்து, அவரை விடுதலை செய்ய வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய,  ஞானசார தேரரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதான நீதிவான் அறிவித்தார்.

பொலன்னறுவை,  சின்னவலப்பட்டியிலும் மெஹரகொடலெல்ல பகுதியிலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவமதிக்கும் வண்ணமும் மத ஒற்றுமையை சீர் குலைக்கும் வண்ணமும் கருத்து வெளியிட்டமை தொடர்பில்  பொதுபல சேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக  வழக்கில் முறைப்பாடு திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு கடந்த 2017 ஆகஸ்ட் 2 ஆம் திகதி  கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த்து.

கடந்த  2017 ஜூன் மாதம் 21 ஆம் திகதி திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவில் சரணடைந்ததை அடுத்து  ஞானசார தேரருக்கு எதிராக  73465 எனும் இலக்கத்தின் கீழ்  இந்த வழக்கு விசாரணைக்கு  எடுக்கப்பட்டிருந்தது.

 ஞானசார தேரருக்கு எதிராகதண்டனை சட்டக் கோவையின் 291 (அ), (ஆ) அத்தியாயங்களின் கீழும்  120 ஆவது அத்தியாயத்தின் கீழும் இவ்வழக்கு தாக்கல்ச் செய்யப்பட்டிருந்தது.

அவ்வழக்கில்   10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல கலகொட அத்தே ஞானசார தேரர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 அத்துடன் ஞானசார தேரருக்கோ அவர் சார்ந்த பொது பல சேனா அமைப்புக்கோ வேறு இன, மதங்களை துற்றும் வகையில், வெறுப்பூட்டும்  வகையில் கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்து இருக்குமாறு கடுமையாக  நீதிவானினால் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே, இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள், இன்று ( 10) கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே, சட்ட மா அதிபரின் ஆலோசனை நீதிவானுக்கு அரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

இஸ்லாம், அல்லாஹ்வை அவமதிக்கும் பேச்சு: வழக்கிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கர் பேசிப் போட்டு... தப்பிப் போயிடுவார்....

அங்க... இஸ்லாமிய நாடுகளில் சிங்கள ஆட்களுக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிக்கர் பேசிப் போட்டு... தப்பிப் போயிடுவார்....

அங்க... இஸ்லாமிய நாடுகளில் சிங்கள ஆட்களுக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

பாகிஸ்த்தானில் நடந்த சம்பவத்தை நீங்கள் முடிச்சுப்போட்டாலும் சவுதியில் தலை வெட்டப்படுவது அதிகமானவர் பாகிஸ்த்தானியர்கள்  இலங்கை முஸ்லீம்களும் அடக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

ஞானசார தேரருக்கோ அவர் சார்ந்த பொது பல சேனா அமைப்புக்கோ வேறு இன, மதங்களை துற்றும் வகையில், வெறுப்பூட்டும்  வகையில் கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்து இருக்குமாறு கடுமையாக  நீதிவானினால் எச்சரிக்கப்பட்டிருந்தது.

சுனாமி நிதிமோசடி, ஆயுத கொள்வனவு மோசடி, இப்படி பல மோசடி வழக்கிலிருந்து குற்றவாளிகளை  விடுவித்து அவர்களை  நாட்டின் ஜனாதிபதியாக்கி அழகு பார்த்த பெருமை இந்த நாட்டின் சட்டமா அதிபருக்கும், நீதிமன்றத்துக்கும் உரியது. ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் தலைவர் பதவிக்காக ஞான சார தேரரை விடுத்திருக்கிறது மட்டுமல்ல அவர்களின் குற்றச் செயலை தொடர்வதற்கும் அங்கீகாரம் அளித்திருக்கிறது. ஆனால் இந்த முறை இவரால் அதிகம் பாதிக்கப்படப்போவது  தமிழர் என்றே எனக்குத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

சுனாமி நிதிமோசடி, ஆயுத கொள்வனவு மோசடி, இப்படி பல மோசடி வழக்கிலிருந்து குற்றவாளிகளை  விடுவித்து அவர்களை  நாட்டின் ஜனாதிபதியாக்கி அழகு பார்த்த பெருமை இந்த நாட்டின் சட்டமா அதிபருக்கும், நீதிமன்றத்துக்கும் உரியது. ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் தலைவர் பதவிக்காக ஞான சார தேரரை விடுத்திருக்கிறது மட்டுமல்ல அவர்களின் குற்றச் செயலை தொடர்வதற்கும் அங்கீகாரம் அளித்திருக்கிறது. ஆனால் இந்த முறை இவரால் அதிகம் பாதிக்கப்படப்போவது  தமிழர் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சுமந்தி ஐயா இருக்குமபோது நீங்களிப்படித்தவறாக எண்ணக்கூடாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.