Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

 

 

 

கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது.

அகில இலங்கை கம்பன் கழகத்தின் சிந்தனைக்கு அமைவாக இளைஞர்களை வளப்படுத்தும் கம்பன் கலைக்கூடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், யாழ். மாநகர சபை மேஜர் மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், வடமாகாண அவை தலைவர் உள்ளிட்ட பலர் வருகைத்தந்தனர்.

வருகை தந்திருந்த விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு வாழ்த்துரைகள் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து குறித்த கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://athavannews.com/2022/1262291

 

  • கருத்துக்கள உறவுகள்

வம்பளப்பதற்கு ஒரு கூடம் தேவையா..?

  • கருத்துக்கள உறவுகள்

முன்னேறிட்டாங்கய்யா! புளியடி, மதவடி, சந்தி. இப்போ  கலைக்கூடமாக மாறியிருக்கு. எதிலும் மாற்றம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பியர் 1996 காட்சிகளை மறந்திட்டார். இதே குத்தியர் தான் சிங்கள இராணுவத்தோடு நின்று கொண்டு சூரியக் கதிர் ஒன்று நடவடிக்கையில்.. நல்லூரில் கட்டப்பட்டிருந்த கம்பன்கோட்டத்தை.. பிரபாகரனின் மாளிகை.. சொகுசு வாழ்க்கை என்று காட்டிப் பிரச்சாரம் செய்தவை. அப்ப குடும்பியர் மறுதலிக்கவே இல்லை.. காரணம்.. குடும்பியர் அப்ப கொழும்புக்கு புதிசு.. தூக்கி உள்ள வைச்சிட்டாங்கள். கடைசியா.. ஒரு தமிழ் பொலிஸ் அதிகாரிதான் உந்தக் கூழாத்தை விடுவிக்க உதவினது. 

இப்ப எல்லாம் மறந்து.. நடக்கட்டும் நடக்கட்டும்.

கம்பன் வம்பன் தான்.. ஆனால் நன்றி மறப்பவன் அல்ல. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவரகளிற்கு இராணுவ பயிற்சி வேண்டும் - கம்பவரிதியின் புலம்பலை "ஆ"வென கேட்ட அரசியல்வாதிகள்

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் ஒரு சில நாட்கள்
தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கலாம். என கம்பவாரிதி ஜெயராஜ் கூறிய நிலையில் அந்த
சபையிலிருந்து பல தமிழ்தேசிய அரசியல் கட்சிகளை சேர்ந்த  பிரமுகர்கள் மௌனம் காத்ததை காணகூடியதாக இருந்தது.

நேற்று (17) திங்கட்கிழமை கிளிநொச்சி பகுதியில் அமையவுள்ள கம்பன் கழகத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் சிங்கள சமூகத்தை விட தமிழ் சமூகத்திலேயேஆளுமையுள்ள பலர் உருவாகினர். ஆனால் தற்போது தமிழ் சமூகத்திலிருந்து ஆளுமையுள்ள பலரை உருவாக்க முடியாமல் போனமை வருத்தத்துக்குரிய விடயம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகம் எனக் கூறி அதற்கு பரிகாரம் கண்டு வருகிறோம். ஆனால் எதிர்காலத்தை எவ்வாறு மாற்றவேண்டும் என சிந்திக்கவில்லை. இலங்கையில் இனிவரும் காலங்களில் இரண்டு மொழிகளைப் பேசத் தெரிந்தால் மட்டுமே எமக்கான அங்கீகாரத்தை பெற முடியும்.

கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படும் கம்பன் கழகத்தின் ஊடாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளதிட்டமிட்டுள்ள நிலையில் எமது எதிர்பார்ப்புகள் இப்போது கற்பனையாக உள்ள நிலையில் அதனை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.எமது கழகத்தின் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குசெல்லும் வரை உள்ள காலப்பகுதியில் அவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதற்கு கம்பன் கழகம் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களை தெரிவின் அடிப்படையில் ஒரு பகுதியினரை தெரிவுசெய்து வெள்ளைக்காரர் ஒருவரை அழைத்து ஆங்கில மொழி பயிற்சி வழங்கப்படும். அதேபோல் சிங்கள மொழிப் பயிற்சிக்காக சிங்கள குடும்பம் ஒன்றில் இருவரை அனுப்பி ஒருவார காலம் அவர்களுடன் தங்கவைக்க வேண்டும். சிங்கள குடும்பத்துடன் தங்கும்போது அவர்களுக்கு மொழிகலாச்சாரம் மற்றும் புரிந்துணர்வை வழர்க்க முடிவதோடு இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. மேலும் இராணுவ முகாம்களுக்கு பல்கலைக்கழகமாணவர்ளை ஓரிரு நாட்கள் அனுப்புவதன் மூலம் தலைமைத்துவத்தை கற்பிப்பது உதவியாக இருக்கும் இதைப் பலர் ஏற்காமல் போகலாம் ஆனால் நான் உண்மையை கூறுகிறேன்.

அதுமட்டுமல்லாது தலைமைத்துவத்தை நடைமுறையில் கற்பதற்காக அரசியலில் உள்ளவர்கள் மற்றும்அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் வீடுகளுக்கு மாணவர்களை ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் பழகும்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஆகவே எமக்கு தென்னிந்திய அரசியல் தலைமைகளுடன் நல்ல தொடர்புகள் இருக்கிற நிலையில்வேண்டுமென்றால் அங்கேயும் சென்று பயிற்சிகளை பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனஅவர் மேலும் தெரிவித்தார். இந் நிகழ்வில் கடற்தொழில் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ,மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், முன்னாள்மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா,முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே சிவஞானம், மற்றும் யாழ்.மாநகர ஆணையாளர் ஜெசீலன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

https://www.thaarakam.com/news/99556799-ad7a-4727-b5e1-74fac62524bb

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இராணுவ முகாம்களுக்கு பல்கலைக்கழகமாணவர்ளை ஓரிரு நாட்கள் அனுப்புவதன் மூலம் தலைமைத்துவத்தை கற்பிப்பது உதவியாக இருக்கும்

ஏது ....  மாணவர்கள் இராணுவத்துக்கு தலைமைத்துவம் கற்பிக்கப்போகிறார்களா?  எங்களின் அரசியல் கைதிகளுக்கு தலைமைத்துவம் கற்பித்து விட்டார்கள், முள்ளிவாய்க்காலில் அகப்படட பொதுமக்களுக்கு தலைமைத்துவம் கற்பித்து விட்டார்கள், இனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்பிக்கபோகினம். இவர்களின் தலைமைத்துவதை பார்த்து வியந்த வெளிநாடுகள் தங்கள் நாடுகளுக்கு இவர்கள் வேணாம் என்று துரத்துகினம். இவருக்கோ இந்த காட்டேரிகள் தலைமைத்துவமாய் தெரிகிறது. இருக்கிற மரியாதையையும் இழக்கப்போகிறார் ......

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இலங்கையில் இனிவரும் காலங்களில் இரண்டு மொழிகளைப் பேசத் தெரிந்தால் மட்டுமே எமக்கான அங்கீகாரத்தை பெற முடியும்.

அப்ப எனி இலங்கையில் கம்பன் வீட்டுத் தறியும் சிங்களம் பேசும் என்றீங்க. காலண்டா. குடும்பியர் எப்படி எல்லாம் ஆட்டிற்றார் குடும்பியை. 

  • கருத்துக்கள உறவுகள்

கம்ப வாரிதியின் ஆரம்ப நாட்களில் அவர் எனது கல்லூரி நிகழ்வொன்றிற்கு வந்து அங்கு சொற்பொழிவாற்றும்போது "தான் வேலை எதுவும் இல்லாது திரியும்போது தனது தாயார் தன்னை ஏசி வீட்டிலிருந்து விரட்டியதாகவும், தான் சொற்பொழிவாற்றத் தொடங்கி சிறிது சிறிதாக பிரபலமடையத் தொடங்கியதன் பின்னரே அவரது ஏச்சு குறைந்ததாக" கூறியது இப்போதும் என் நினைவில் நிற்கிறது. (அவர் St. John's College மாணவர் என்பது என் நினைவு )

தாயார் இன்னும் கூடுதலாக ஏசியிருக்கலாமென்று தற்போது தோன்றுகிறது. 😀

  • கருத்துக்கள உறவுகள்

கம்பவாரிதி எங்கண்ட யfனா ஹின்டு! 🙄

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி இருக்கு....மெல்ல மெல்ல இராணுவமும் பொலிஸும் நல்லவங்க என சொல்ல வாராங்கள் ....எது எப்படியோ கடைசியில் பணம் கேட்பது புலம்பெயர்ந்தவனிடம்...
சிறுவர்கள் பொலிசிலும் இராணுவத்திலும் இணையப்போகினமாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.