Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடகொரியாவிடம் இருந்து ஆயுதக் கொள்வனவு ; குற்றச்சாட்டை மறுத்த இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published by J Anojan on 2022-02-02 07:45:13

 
 

(ஜெ.அனோஜன்)

கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. 

அத்துடன் 2022 31 ஜனவரி திகதியிடப்பட்ட “கருப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வட கொரியாவிலிருந்து ஆயுதங்களை வாங்கினோம்’ – அமைச்சர் பசில் ஆர்” என்ற தலைப்பில் முன்னணி இணையதளத்தில் வெளியான செய்தியின் மீது வெளியுறவு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தனது அமைச்சரவை சகாவுடன் பேசியதாகவும், குறித்த செய்தியில் தமக்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளவும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடகொரியாவிடம் இருந்து ஆயுதக் கொள்வனவு ; குற்றச்சாட்டை மறுத்த இலங்கை | Virakesari.lk

ஆக.... இந்த யுத்தம் தடை செய்யப்பட்ட, மனித குலத்துக்கு எதிரான ஆயுதங்களை பயன்படுத்தி மட்டும்  அரசால் வெல்லப்படவில்லை. ஆயுதங்கள் வாங்க தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து கூட வாங்கி பயன்படுத்தி வென்றிருக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் ஆயுதம் பெற்றதை தற்போது விவரித்தால் சர்வதேச மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் - பஷில்

Published by J Anojan on 2022-02-03 08:17:54

 
 

(இராஜதுரை ஹஷான்)

யுத்தக்காலத்தில் ஆயுதம் பெற்றதை தற்போது விவரித்தில் சர்வதேச மட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். ஆகவே அவ்விடயம் குறித்து பேசாமல் இருப்பது இரு தரப்பிற்கும் சிறந்ததாக அமையும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No description available.

யுத்த காலத்தில் கறுப்பு சந்தை ஊடாக ஆயுதம் பெற்றதாக குறிப்பிடப்படும் விடயத்தை பற்றி பேசவும், விவரிக்கவும் விரும்பவில்லை. ஏனெனில் அது சர்வதேச மட்டத்தில் சிக்கல் நிலைமையை ஏற்படுத்தும்.

அவ்விடயம் குறித்து பேசாமல் இருப்பது இரு தரப்பிற்கும் சிறந்ததாக அமையும். ஜெனீவா விவகாரம் காலம் காலமாக பேசப்படுகிறது.எமது ஆட்சியில் இறுதி தீர்மானத்தை காண எதிர்பார்த்துள்ளோம்.

யுத்தம் நிறைவு பெற்ற காலத்தில் இருந்து ஜெனிவா விவகாரம் பேசப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறந்த முறையில் இப்பிரச்சினை எதிர்க்கொள்ளப்பட்டது.

 

2015 ஆம் ஆண்டு ஜெனிவா விவகாரம் கையாண்ட விதம் மாற்றியமைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபாய ரஜபக்‌ஷ ஜெனிவா விவகாரத்திற்கு இறுதி தீர்வை காண நாகரீகமான கொள்கையினை வகுத்துள்ளார்.

ஜெனிவா விவகாரத்திற்கு சுமூகமான இறுதி தீர்வை நிச்சயம் காண்போம் என்றார்.

யுத்த காலத்தில் ஆயுதம் பெற்றதை தற்போது விவரித்தால் சர்வதேச மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் - பஷில் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

யுத்த காலத்தில் ஆயுதம் பெற்றதை தற்போது விவரித்தால் சர்வதேச மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் - பஷில்

Published by J Anojan on 2022-02-03 08:17:54

 
 

(இராஜதுரை ஹஷான்)

யுத்தக்காலத்தில் ஆயுதம் பெற்றதை தற்போது விவரித்தில் சர்வதேச மட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். ஆகவே அவ்விடயம் குறித்து பேசாமல் இருப்பது இரு தரப்பிற்கும் சிறந்ததாக அமையும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No description available.

யுத்த காலத்தில் கறுப்பு சந்தை ஊடாக ஆயுதம் பெற்றதாக குறிப்பிடப்படும் விடயத்தை பற்றி பேசவும், விவரிக்கவும் விரும்பவில்லை. ஏனெனில் அது சர்வதேச மட்டத்தில் சிக்கல் நிலைமையை ஏற்படுத்தும்.

அது தான்…சிங்களவன்.
தமிழன் என்றால்…. ஆயுதம் வந்த வழியிலிருந்து, எல்லாத்தையும்…
காட்டிக் குடுத்து, அரசியல் கட்டுரை எழுதி, முழு இனத்தையும்…
விற்று விட்டுத்தான்…. அடுத்த அலுவல் பார்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 பேச விரும்பவில்லை என்றால் வாங்கித்தான் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2022 at 00:47, பிழம்பு said:

ஜனாதிபதி கோட்டபாய ரஜபக்‌ஷ ஜெனிவா விவகாரத்திற்கு இறுதி தீர்வை காண நாகரீகமான கொள்கையினை வகுத்துள்ளார்.

அநாகரீக முறையில் கொள்கை வகுத்து,  மனித உரிமைகளை மீறி போர் செய்தவர்  கொள்கை வகுத்தால்; எப்படி  நாகரீகமான முறையில் வரும்? எப்படி போர் செய்தாரோ அப்படித்தானே வரும்?

On 4/2/2022 at 00:47, பிழம்பு said:

ஜெனிவா விவகாரத்திற்கு சுமூகமான இறுதி தீர்வை நிச்சயம் காண்போம் என்றார்.

அதுக்குத்தானே காலம் உங்களை அரியணை ஏற்றி வைத்திருக்கிறது. விதைத்தது வினை, தினை அறுவடை செய்யவேணும் என்று அடம்பிடிக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் வேண்டுமென்றே செய்தது, இருந்தாலும் ஏற்க அஞ்சுகிறீர்கள்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.