Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சத்தீவு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்- தமிழக முதல்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்- தமிழக முதல்வர்


spacer.png

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக பக்தர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிற நிலையில் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களை கூறி இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த முயற்சியால் இரு நாட்டு மக்களிடையே நல்லுறவு பேணப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

 

https://athavannews.com/2022/1265517

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் பொல்லை எதிரியிடம் வலியக் கொண்டுபோய் குடுத்து விட்டு பிறகு அந்தப் பொல்லாலயே அடி வாங்கிறது......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

கச்சத்தீவு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்- தமிழக முதல்வர்


spacer.png

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக பக்தர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிற நிலையில் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களை கூறி இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த முயற்சியால் இரு நாட்டு மக்களிடையே நல்லுறவு பேணப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

 

https://athavannews.com/2022/1265517

இது “தமிழக கடற்கொள்ளையர்களுக்கு” என்று வரவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அது முடியாவிட்டால் இந்திய நீதிமன்றங்கள் சென்று கச்சதீவைத் திரும்பப் பெறுவதற்கு முயற்சிக்கலாமே. இதுவும் சரிவராதுவிட்டால் இந்தியாவின் சின்ன வீட்டுக்கு நீங்களும் பில்லியன்களை அள்ளிக் கொடுத்தால், தற்போதுள்ள நிலமையில் உங்களையும் கிள்ளி விளையாட அவ அனுமதிப்பா. கச்சதீவுவர வழியும் பிறக்கும் தமிழக முதல்வரே.🥰

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2022 at 23:32, Paanch said:

உங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அது முடியாவிட்டால் இந்திய நீதிமன்றங்கள் சென்று கச்சதீவைத் திரும்பப் பெறுவதற்கு முயற்சிக்கலாமே. இதுவும் சரிவராதுவிட்டால் இந்தியாவின் சின்ன வீட்டுக்கு நீங்களும் பில்லியன்களை அள்ளிக் கொடுத்தால், தற்போதுள்ள நிலமையில் உங்களையும் கிள்ளி விளையாட அவ அனுமதிப்பா. கச்சதீவுவர வழியும் பிறக்கும் தமிழக முதல்வரே.🥰

என்ன இந்த பொட்டல் சின்ன வீடு, ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போலிருக்கே..? 🥰😛

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதலமைச்சரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளசுடன் பேச்சு!

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

திருவிழாவில் கலந்து கொள்ளும் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில கலந்துரையாடலை நடத்தி இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களினதும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு கொறோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதி வழங்குவதில்லை என்று ஏற்பாடு குழு தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆலோசனையின்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 

http://www.samakalam.com/கச்சத்தீவு-திருவிழா-தொடர/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

என்ன இந்த பொட்டல் சின்ன வீடு, ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போலிருக்கே..? 🥰😛

கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது வன்னியரே.! இந்தியா தொடர்பான நலன்களையும், இலங்கைத் தமிழர் தொடர்பான நலன்களையும் சிரமேற்கொண்டு பாதுகாப்பேன் என்று உறுதியான ஒப்பந்தங்கள் செய்துகொண்டபின்பு... உனக்கும் பே, உங்க அப்பனுக்கும் பே பே என்று காட்டிய இந்தச் சின்னவீடு.... பில்லியன் கணக்கான நிதியைத் தனது தந்திரத்தால், அதுவும் பெரும் வல்லரசுகளில் ஒன்றாகிவிட்ட எண்ணத்தில் இருக்கும் இந்தியாவையே தன்வழிக்குக் கொண்டுவந்து பெற்றுள்ளதே. 😜 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.