Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னவனுக்கு சொல்..!!!

Featured Replies

marakkaamalsolthumbxa7hg9.jpg

இளங்காலைப் பொழுதினில் இதழ் விரித்து

மலரத் துடித்த போது உன்

வசியப் பார்வை என்னை சட்டென

மலரவைத்தது.

உன்னைப் பார்த்த அந்நிமிடத்தில்

இருந்து என் மனசுக்குள்

எதோ ஒரு தாக்கம்.

இதைத்தான் காதல் என்பார்களோ?

புரியவில்லை..!

எனக்கு புரியவில்லை, கிளியே..!

அவனிடம் ஒரு முறை கேட்டு சொல்

மெளனத்தின் ஓரத்தில்

நெஞ்சின் ஈரத்தில்

வெட்கப்படும் என் மனசு

இராத்திரியில் கனவுகள்

பகலில் அவன் நினைவுகள்

இதுதான் என் வாழ்க்கை

கிளியே இதையும் அவனிடம் சொல்

ஆயிரமாயிரம் கனவுகளில்

அவன் வந்து என் கூந்தல் கோதி

தூக்கத்தை கலைத்து விளையாடி

மகிழ்ந்த அந்த இனிமையான

இரவுகள் அதையும் மறக்கவில்லை நான்

இதையும் அவனிடம் சொல் கிளியே.

பசுவின் மடியினைத் தேடும்

பசுங்கன்றினைப் போல

காளை அவன் மனம் தேடி

பாவை என் மனம் அலைகிறது

என்னவனிடம் இதையும் சொல் கிளியே

இனிப் பேசும் முதல்வார்த்தை

அவனோடு தான் என்றும் அவனின்

இரக்கமான நினைவுகளை என்

இதயவங்கியில் வட்டியில்லாமல்

வைப்புச் செய்து காத்திருக்கிறேன்

இதையும் மறக்காமல் சொல் கிளியே

பசிமறந்து பஞ்சணையும் வெறுத்து

கட்டாந்தரையில் கண்விழித்து

என் வசந்த கால நினைவுகளை

மீட்டிப் பார்க்கிறேன் தினமும்

என் உதடுகள் அவன் பெயரை மட்டுமன்றி

வேறெவர் பெயரும் உச்சரிக்கவில்லை

என் மான்விழிகளில் அவன் பிம்பம் தவிர

வேறெந்த உருவமும் தெரியவில்லை

இவையனைத்தையும் அவனிடம் சொல்வாயென

என் வளர்ப்புக் கிளியே உன்னை தூதனுப்புகிறேன்

யாவற்றையும் மறக்காமல் என்னவன் செவிகளில்

உன் கிளி மொழியில் சொல்லிடுவாயா.?

Edited by வெண்ணிலா

நிலா அக்காவின் மீண்டும் கவிதை எழுதுனதில எனக்கு ரொம்ப சந்தோசம்............கிளியோட படத்தில நிற்கிறது நீங்களோ...............நிலா அக்கா கிளி என்னதிற்கு தம்பி நான் இருகிறன் யார் என்று சொல்லுங்கோ நான் போய் சொல்லிட்டு வாரேன்..........காதலி கிளியிடம் சொல்லி தூதனுப்பு நிலாக்காவின் கவி அருமை.......... :rolleyes:

வெண்ணிலா கவிதை நன்றாக எழுதுறீங்கள்...

பசிமறந்து பஞ்சணையும் வெறுத்து

கட்டாந்தரையில் கண்விழித்து

என் வசந்த கால நினைவுகளை

மீட்டிப் பார்க்கிறேன் தினமும்

இந்தவரிகள் நல்லா இருக்கு..

ஆனால், (எனது பார்வைக்கு) மேலயுள்ள படம் கவிதைக்கு பொருத்தமாக இல்லை..

வெண்ணிலா...உங்களுக்குமா?? :)

கவிதை அருமை..

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையால அசத்துறீங்க.

கிளியையும்தூது விடுறீங்களா வெண்ணிலா.

  • தொடங்கியவர்

நிலா அக்காவின் மீண்டும் கவிதை எழுதுனதில எனக்கு ரொம்ப சந்தோசம்............கிளியோட படத்தில நிற்கிறது நீங்களோ...............நிலா அக்கா கிளி என்னதிற்கு தம்பி நான் இருகிறன் யார் என்று சொல்லுங்கோ நான் போய் சொல்லிட்டு வாரேன்..........காதலி கிளியிடம் சொல்லி தூதனுப்பு நிலாக்காவின் கவி அருமை.......... :)

தம்பி உங்களை எப்படி அக்கா நம்பி தூதனுப்புறது? லொள்ளுகள் அரட்டையால் சொதப்பி விட்டீங்க என்றால் அவ்வளவுதான். சோ கிளியையே விட்டிருக்கு. பார்ப்பம். :P

நிலா கவிதை நன்றாக உள்ளது!!!!!

நன்றி

வெண்ணிலா கவிதை நன்றாக எழுதுறீங்கள்...ஆனால், (எனது பார்வைக்கு) மேலயுள்ள படம் கவிதைக்கு பொருத்தமாக இல்லை..

ஒரு சோகமான தூதுக்கவிதைக்கு போட்ப்பட்டிருந்த படம் பொருத்தமாக இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் கலைஞன் அண்ணா. தற்போது திருத்தபப்ட்டுள்ளது.

பாராட்டுக்கள்,நிலா....
நன்றி

வெண்ணிலா...உங்களுக்குமா?? :) கவிதை அருமை..

ஹீஹீ குட்டித்தம்பி அபப்டியாயின் உங்களுக்குமா? :o

கவிதையால அசத்துறீங்க. கிளியையும்தூது விடுறீங்களா வெண்ணிலா.

ஹிஹீ சும்மா கிளியை விட்டுப்பார்த்தேன் நண்பியே. :P

Edited by வெண்ணிலா

ஹீஹீ குட்டித்தம்பி அபப்டியாயின் உங்களுக்குமா? :)

கிளியை நம்பி நானிருக்கலை...

தனினம்பிக்கை இருந்துச்சுசாக்கும் :P

இரக்கமான நினைவுகளை என்

இதயவங்கியில் வட்டியில்லாமல்

வைப்புச் செய்து காத்திருக்கிறேன்

எனக்குப் பிடித்த இனிமையான வரிகள் வாழ்த்துக்கள் வெண்ணிலா! :) அது சரி இந்தக் காலத்தில போய் யாராவது வட்டியில்லாமல் இதயவங்கியில காதல் போடுவாங்களா...? வெண்ணிலா... காதல் என்றால் முதல் வட்டிபோட வேணும் பிறகு கல்யாணம் முடிஞ்சவுடன் அது குட்டி போடவேணும் அதெல்லோ காதல்:o

அதை விட்டு சீச் சீச் இதெல்லாம் சின்ப்புள்ளத் தனமாய் இருக்கு:)

  • கருத்துக்கள உறவுகள்

கிளியிட்ட தூதுவிட்டு பிரயோசனமில்லை ஜம்மு மாதிரி சிலதுகள் கிளியை நடுவழியில சுட்டு சாப்பிட்டுவிட்டூவீனம் ஆனபடியா கணணியில தூது அனுப்புறது தானே ! :P

கவிதை நன்றாக இருகிறது

  • தொடங்கியவர்

கிளியை நம்பி நானிருக்கலை...தனினம்பிக்கை இருந்துச்சுசாக்கும் :P

:lol: நமக்கும் அதே நம்பிக்கை இருக்குதுங்கோ. கிளியை தூதுக்கு விட்டு பார்த்தம் ல. ஆனால் பாருங்க சக்சஸ் ஆகிடும். நம்ம கிளி சும்மா லேசுப்பட்டது இல்லை ஆமா.

இரக்கமான நினைவுகளை என்இதயவங்கியில் வட்டியில்லாமல்வைப்புச் செய்து காத்திருக்கிறேன்எனக்குப் பிடித்த இனிமையான வரிகள் வாழ்த்துக்கள் வெண்ணிலா! :rolleyes: அது சரி இந்தக் காலத்தில போய் யாராவது வட்டியில்லாமல் இதயவங்கியில காதல் போடுவாங்களா...? வெண்ணிலா... காதல் என்றால் முதல் வட்டிபோட வேணும் பிறகு கல்யாணம் முடிஞ்சவுடன் அது குட்டி போடவேணும் அதெல்லோ காதல்:Dஅதை விட்டு சீச் சீச் இதெல்லாம் சின்ப்புள்ளத் தனமாய் இருக்கு:D

இப்பதான் தூது விட்டிருக்கிறம் அப்புறம் வட்டி குட்டி எல்லாம் போடுறமுங்கோம்ம் சின்னப்புள்லத்தனம் தான்.எல்லாக் காதலும் ஒரு மாதிரி இல்லைத்தானே. :rolleyes:

கிளியிட்ட தூதுவிட்டு பிரயோசனமில்லை ஜம்மு மாதிரி சிலதுகள் கிளியை நடுவழியில சுட்டு சாப்பிட்டுவிட்டூவீனம் ஆனபடியா கணணியில தூது அனுப்புறது தானே ! :P கவிதை நன்றாக இருகிறது

ஓ அபப்டியா?ஆனால் நம்ம கிளி பாதுகாப்பாக போகுமே. யாரும் சுட்டு விழுத்த முடியாது.கணனியிலா? வைரஸ் வந்துடுமே. இல்லையா புத்து? ;)

Edited by வெண்ணிலா

கவிதை நன்றாகவுள்ளது ... பாராட்டுக்கள்

கிளியை எல்லாம் தூதுவிடும் நேரத்தில் நம்ம கிட்ட சொல்லியிருந்தால் தூக்கிவந்து உங்கள் காலடியில் போட்டிருப்போமே....

சரி... சரி.... அவர் முகவரியை அனுப்பி வையுங்க..... :P

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாகவுள்ளது ... பாராட்டுக்கள்

கிளியை எல்லாம் தூதுவிடும் நேரத்தில் நம்ம கிட்ட சொல்லியிருந்தால் தூக்கிவந்து உங்கள் காலடியில் போட்டிருப்போமே....

சரி... சரி.... அவர் முகவரியை அனுப்பி வையுங்க..... :P

*****************

ம்...நிலாவுக்கு இவ்வளவு ஆதரவு இருக்கிறதை பார்க்கின்றபோது கொஞ்சம் பொறாமை...

பாராட்டுக்கள்...தொடருங்கள் உங்கள் கவிதையை

தம்பி உங்களை எப்படி அக்கா நம்பி தூதனுப்புறது? லொள்ளுகள் அரட்டையால் சொதப்பி விட்டீங்க என்றால் அவ்வளவுதான். சோ கிளியையே விட்டிருக்கு. பார்ப்பம். :P

அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் ஆனா அவருக்கு தங்கைச்சி இருக்கோ.........சும்மா தான் உறவை வளர்போம் என்று கேட்டேன்......... :P

  • தொடங்கியவர்

கவிதை நன்றாகவுள்ளது ... பாராட்டுக்கள்

கிளியை எல்லாம் தூதுவிடும் நேரத்தில் நம்ம கிட்ட சொல்லியிருந்தால் தூக்கிவந்து உங்கள் காலடியில் போட்டிருப்போமே....

சரி... சரி.... அவர் முகவரியை அனுப்பி வையுங்க..... :P

:lol: அண்ணா தூக்கிட்டு வர வேணாம். கூட்டிட்டு வந்தாலே போதும்.

நேரம் வரும்போது முகவரியை சொல்லுறேன்.

நான் இப்ப கொஞ்சம் பிசி. எனவே இப்பவே ஆள் வந்தால் கொஞ்சம் கரைச்சலாகிடும் ல. ஹீஹீ

தூக்குறதிலேயே இருங்கோ. தங்கை நிலாவில இம்புட்டு பாசமோ? நன்றிகள் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா அக்கா கவிதை நல்லாயிருக்கு.

வேணுமெண்டா நான் தூது போறன். :lol:

  • தொடங்கியவர்
*****************ம்...நிலாவுக்கு இவ்வளவு ஆதரவு இருக்கிறதை பார்க்கின்றபோது கொஞ்சம் பொறாமை...பாராட்டுக்கள்...தொடரு

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ந்ம்ம மொழி இசை அது எல்லாருக்கும் விளங்கும் அதனால நாம கதைக்கிற பாசை அவருக்கு விளங்கும் யோசிக்காதீங்கோ.

:rolleyes:

ஜம்முவுக்கோ????? நானோ??????? நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தன் நிலா அக்கா?? :lol:

  • தொடங்கியவர்

ந்ம்ம மொழி இசை அது எல்லாருக்கும் விளங்கும் அதனால நாம கதைக்கிற பாசை அவருக்கு விளங்கும் யோசிக்காதீங்கோ.

:rolleyes:

ஜம்முவுக்கோ????? நானோ??????? நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தன் நிலா அக்கா?? :rolleyes:

ஆமால்ல உங்க மொழி இசை. ஓ இது எல்லோருக்கும் தெரியுமே.

ஓ ஏன் பா ஜம்மு அண்னா தானே. தூது போனால் என்னவாம்? பாவம் நம்ம ஜம்மு தூது போக பொன்னியை சீ காகத்தை துரத்திட்டு இருக்கிறாரு பாருங்க. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ ஏன் பா ஜம்மு அண்னா தானே. தூது போனால் என்னவாம்? பாவம் நம்ம ஜம்மு தூது போக பொன்னியை சீ காகத்தை துரத்திட்டு இருக்கிறாரு பாருங்க. :lol:

ஜம்முவுக்கு பொன்னி... சொறி சொறி காக்கா தான் சரி தூது போக :P

கடுகதி வாழ்க்கையினால் கவிதைகள் சிலவற்றை காணத்தவறிவிட்டேன்.

அருமையான கவிதை வெண்ணிலா

கட்டாந்தரையில் கனவு தழுவும்போது சுகம் அதிசுகம்

  • தொடங்கியவர்

கடுகதி வாழ்க்கையினால் கவிதைகள் சிலவற்றை காணத்தவறிவிட்டேன்.

அருமையான கவிதை வெண்ணிலா

கட்டாந்தரையில் கனவு தழுவும்போது சுகம் அதிசுகம்

நன்றிகள் பரணியண்ணா.

ம்ம் கனவுகள் மீட்டிப்பார்க்கும் போதும் சுகம் தானே. :P

இனிமையான பாடல் போல்

இதமாக வசனங்கள

சுகமான சோகங்களாய்

மலர்ந்துள்ளது.

தூதுவிடும் கவிதை மிகவும் நன்றாகவுள்ளது நல்ல கற்பனை வளம்

வாழ்த்துக்கள் வெண்ணிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.