Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள் – மௌலவி முபாரக் அப்துல் மஜீத்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள் – மௌலவி முபாரக் அப்துல் மஜீத்!

spacer.png

சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல என ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிங்களுக்கு ஆதரவானவர்கள் போன்று காட்டிக்கொள்ளும் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல. பொத்துவில் பொலிகண்டி ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்களின் சுயரூபம் வெளித்தது.

எமது நாட்டின் அரசாங்கம் கொரோனா அலையின் பலத்த பின்னடைவின் மத்தியிலும் ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது. கடந்த நல்லாட்சி காலத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த அரசாங்கம் சிறப்பாக உள்ளது.

நல்லாட்சி காலத்தில் இனவாதம் தலைதூக்கி சிறுபான்மைக்கு எதிரான அரசாங்கமாக இருந்தது. திருகோணமலை சண்முகா பாடசாலை விடயம் ஆரம்பித்த காலத்தில் இனவாதிகளின் கை ஓங்கியிருந்தது.

ரிசாட், ஹக்கீம், ஹலீம், கபீர் காஸிம், மஹ்ரூப் போன்ற பலரும் அமைச்சர்களாக இருந்தும் அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமலே இருந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிங்கள் யாரும் அமைச்சரவையில் இல்லை.

ஆனாலும் அவர்களின் காலத்துடன் ஒப்பிடும் போது சிறுபான்மையினருக்கு இந்த அரசாங்கத்தில் பிரச்சினை குறைவாகவே உள்ளது. அவர்களினால் நல்லாட்சி காலத்தில் பூச்சாண்டி காட்டியதை தவிர சமூகத்திற்கு எதையும் சாதிக்க முடியாமலே போனது.

தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள். சம்பந்தன் வீட்டில் புரியாணி சாப்பிடும் ஹக்கீம் நினைத்தால் இந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முடியும்.

நாடுகடந்த டயஸ்போறாக்களின் முகவர்களாக இருக்கும் இவர்களுக்கு சமூகத்தை பற்றிய கவலைகள் இல்லை. பதவிகள் மீதும், பணத்தின் மீதுமே பற்றுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

 

https://athavannews.com/2022/1266275

  • கருத்துக்கள உறவுகள்

போதைபொருள் பாவிப்பவர்களுக்கு பகிரங்கமாக பத்து பிரம்படி- மௌலவி முபாறக்  அப்துல் மஜீத் - Tamil News

 

அரசாங்கத்தை எதிர்த்து நாம் செயற்படுகின்ற எதிர்வினையினால் சிங்கள குடியேற்றம்  தொடர்கின்றது - முபாரக் அப்துல் மஜீத் (Video) - தமிழ்வின்

திருகோணமலை சண்முகா பாடசாலை  விடயத்தில்...
சிவப்பு  தொப்பிக்காரனை, இன்னும் காணவில்லையே.... என்று  நினைத்தேன். 
வந்துட்டான். :grin: 😂 🤣

இந்தாள்.... கன  கட்சிகளுக்கு, தலைவராக இருக்கிறார் போலுள்ளது.  😃

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

எமது நாட்டின் அரசாங்கம் கொரோனா அலையின் பலத்த பின்னடைவின் மத்தியிலும் ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது. கடந்த நல்லாட்சி காலத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த அரசாங்கம் சிறப்பாக உள்ளது.

 

26 minutes ago, கிருபன் said:

நல்லாட்சி காலத்தில் இனவாதம் தலைதூக்கி சிறுபான்மைக்கு எதிரான அரசாங்கமாக இருந்தது.

 இவர் ஏன் முழுப்பூசணிக்காயை சோத்துக்குள் மறைக்கிறார். ஏதோ ஒரு குற்றச்சாட்டில் தொடர்புபட்டிருப்பாரோ? அனிஞாயத்துக்கு ஓடியோடி எல்லாவற்றையும் அள்ளி மறைத்து சான்றிதழ் கொடுக்கிறார்.

25 minutes ago, தமிழ் சிறி said:

இந்தாள்.... கன  கட்சிகளுக்கு, தலைவராக இருக்கிறார் போலுள்ளது.

கனகட்சிகள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகிறது என்று காட்டுவதற்கு அவரே கன பெயரை ஒரு கட்சிக்கு மாற்றி மாற்றி வைக்கிறாரோ? ஒன்று சமயத்தையும் மற்றையது அரசியலையும் பிரதிபலிக்கிறது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

கனகட்சிகள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகிறது என்று காட்டுவதற்கு அவரே கன பெயரை ஒரு கட்சிக்கு மாற்றி மாற்றி வைக்கிறாரோ? ஒன்று சமயத்தையும் மற்றையது அரசியலையும் பிரதிபலிக்கிறது போலுள்ளது.

இவருக்கு... கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வகிக்க வேண்டும் என்று, நீண்ட நாள் ஆசை.
அதுக்குத்தான்.... இவ்வளவு அலுவலும் நடக்குது.

ஆனால்.... அதுக்கு, இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று...
கோத்தாவுக்கும்  தெரியும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

  
தானே பெரிய புத்திசாலி என தம்பட்டம் அடிக்கும் கோத்தா, இந்தகோமாளியை  கிழக்கு மாகாண ஆளுநராக்கி தனது  கோமாளித்தனத்தை பகிரங்கப்படுத்த விரும்பமாட்டார், இதன் அலம்பலை வைத்து எதையாவது தான் சாதிக்கலாமா என பார்ப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

AVvXsEjVE9sACJiTp7Zvo95Yrexe_kyVIy56R0CkD2_u-bxLNR2N7RK74zCFwqQkUVEcJ621-ofF7JP9_f9c1sC0DuJz2x3r9_DZXirMX7ZaRlIq6UH2hnFNZZG0ufpckorDx-z009jC8FW1upWyEeonW4mCBb_gxnMdmA64ma__WvRtdIGRu_tX2RYuLoqy=s16000

நூருல் ஹுதா உமர் -

திருகோணமலை சண்முகா பாடசாலையின் அதிபர் ஊடகங்களின் முன்னிலையில் ஆசிரியை பஹ்மிதா அணிந்த ஆடை ஒழுக்க விழுமியமற்ற ஆடையாக ஹபாயாவை தெரிவித்தார். உடலை முழுவதுமாக மூடும் ஹபாயா ஒழுக்கமான ஆடையாக இல்லாது விட்டால் அவர் கூறவரும் ஒழுக்கமான ஆடை ஜன்னல் வைத்த ஜாக்கட்டும் இடுப்புத்தெரியும் சாரியுமா அல்லது குட்டை பாவாடையையா? முன்னொரு காலத்தில் அணிந்த சாரியை போன்றில்லாது இப்போது கால ஓட்டத்தில் சந்தையில் உள்ள சாரிகள் மிக கவர்ச்சியாக உள்ளது என பிரபல எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்கள். ஹபாயா ஒழுக்கம் நிறைந்த ஆடையெனவும் ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி கலாபூசணம் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். 

கல்முனை காரியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், திருகோணமலை சண்முகா பாடசாலையின் உள்ளே சென்றால் பெண்பிள்ளைகள் அவர்களின் தலையை மறைத்து அணியும் ஆடையான முக்காட்டை கழற்றிவைத்துவிட்டு செல்லவேண்டும் என்பதாக அறிகின்றோம். அது மனிதாபிமானமற்ற, இனவாத செயற்பாடாகும். அது ஒரு தேசிய பாடசாலை. இலங்கை அரசினால் அப்படியான சட்டம் எந்த பாடசாலையிலும் அமுலில் இல்லை. தொப்பி போடக்கூடாது, தலைமை மூடக்கூடாது என்று சுற்றுநிரூபங்கள் வெளிவந்ததாக எனக்கு தெரியாது. கடந்த காலங்களில் தமிழ் பெண்கள் போட்டுவைக்கக்கூடாது என்ற நடைமுறைகளை சிலர் கூறியதும், காரைதீவில் வைத்து முஸ்லிங்களின் தொப்பிகளை கழற்றிய வரலாறுகளும் இருக்கிறது. ஒரு தமிழ் சகோதரி தன்னுடைய பொட்டை கலைத்தால் எப்படி கூச்சப்பட்டு  கூனிக்குறுகிப்போவாளோ அது போன்றுதான் முஸ்லிம் பெண்ணும் தன்னுடைய ஆடை கலாச்சாரத்தில் கைவைத்தால் கூனிக்குறுகிப்போவாள். கடந்த  நல்லாட்சி காலத்தில் கொழும்பில் சில பாடசாலைகளில் பெண்பிள்ளைகள் காற்சட்டை அணிய முடியாத நிலை உருவாகியதை நாங்கள் கண்டோம். இப்படியான நடைமுறைகள் மனிதாபிமானமற்ற இனவாத சிந்தனை கொண்டவை. இதனால் நாட்டுக்கும், சிறுபான்மை சமூகத்திற்கும் ஆபத்து உள்ளது. 

எமது உரிமைகள் கிடைக்கவேண்டுமாக இருந்தால் நாம் அடுத்தவர்களின் உரிமையை மதிக்கவேண்டும். சண்முகா பாடசாலையில் நடைபெற்ற விடயம் நிரந்தர பகையானதாக மாறிவிடக்கூடாது என்பதே எங்களின் பிராத்தனையாக இருக்கிறது. முஸ்லிங்களுக்கு ஆதரவானவர்கள் போன்று காட்டிக்கொள்ளும் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல. பொத்துவில் பொலிகண்டி ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்களின் சுயரூபம் வெளித்தது. 

எமது நாட்டின் அரசாங்கம் கொரோனா அலையின் பலத்த பின்னடைவின் மத்தியிலும் ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது. கடந்த நல்லாட்சி காலத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த அரசாங்கம் சிறப்பாக உள்ளது. நல்லாட்சி காலத்தில் இனவாதம் தலைதூக்கி சிறுபான்மைக்கு எதிரான அரசாங்கமாக இருந்தது. திருகோணமலை ஷண்முகா பாடசாலை விடயம் ஆரம்பித்த காலத்தில் இனவாதிகளின் கை ஓங்கியிருந்தது. றிசாத், ஹக்கீம், ஹலீம், கபீர் காஸிம், மஹ்ரூப் போன்ற பலரும் அமைச்சர்களாக இருந்தும் அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமலே இருந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிங்கள் யாரும் அமைச்சரவையில் இல்லை. ஆனாலும் அவர்களின் காலத்துடன் ஒப்பிடும் போது சிறுபான்மையினருக்கு இந்த அரசாங்கத்தில் பிரச்சினை குறைவாகவே உள்ளது. அவர்களினால் நல்லாட்சி காலத்தில் பூச்சாண்டி காட்டியதை தவிர சமூகத்திற்கு எதையும் சாதிக்க முடியாமலே போனது. 

தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள். சம்பந்தன் வீட்டில் புரியாணி சாப்பிடும் ஹக்கீம் நினைத்தால் இந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முடியும். நாடுகடந்த டயஸ்போறாக்களின் முகவர்களாக இருக்கும் இவர்களுக்கு சமூகத்தை பற்றிய கவலைகள் இல்லை. பதவிகள் மீதும், பணத்தின் மீதுமே பற்றுள்ளது என்றார்.

https://www.madawalaenews.com/2022/02/blog-post_214.html

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவே அரசுக்கு நல்லபிள்ளை பெயரெடுக்க அலப்பறை செய்யும் இது இந்த வருடம் முழுவதும் இதை வைத்தே ஓட்டிவிடும். கோத்தா தட்டி அடக்கும்வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில், ஹிஜாப், காவி உடை என எதையும் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்று கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சீருடையை மட்டுமே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவும் கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்ப இங்கை என்ன சொல்லப்போகினம்...எப்படி கவிதை எழுதப் போகினம்...

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, alvayan said:

இந்நிலையில், ஹிஜாப், காவி உடை என எதையும் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்று கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சீருடையை மட்டுமே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவும் கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்ப இங்கை என்ன சொல்லப்போகினம்...எப்படி கவிதை எழுதப் போகினம்...

இங்கை அடிக்க அங்கை வலிச்சிருக்கோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, colomban said:

உடலை முழுவதுமாக மூடும் ஹபாயா ஒழுக்கமான ஆடையாக இல்லாது விட்டால் அவர் கூறவரும் ஒழுக்கமான ஆடை ஜன்னல் வைத்த ஜாக்கட்டும் இடுப்புத்தெரியும் சாரியுமா அல்லது குட்டை பாவாடையையா? முன்னொரு காலத்தில் அணிந்த சாரியை போன்றில்லாது இப்போது கால ஓட்டத்தில் சந்தையில் உள்ள சாரிகள் மிக கவர்ச்சியாக உள்ளது என பிரபல எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்கள். ஹபாயா ஒழுக்கம் நிறைந்த ஆடையெனவும் ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி கலாபூசணம் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நன்றாக பார்த்து  ரசித்து அனுபவித்திருக்கிறார் சேலை உடுத்திய பெண்களை. ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதும் விபச்சாரமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.