Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரனின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகளின் இரகசிய சந்திப்பில் பேசப்பட்டது என்ன ? - செஹான் சேமசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரகசியமாக நடத்திய கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் பாராளுமன்றத்தில்  வெளிப்படுத்தப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை10 ஆம் திகதி   இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகளை (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரகசியமாக அண்மையில் நடத்திய கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் பாராளுமன்றத்தில்  வெளிப்படுத்தப்பட வேண்டும். 

எப்போதும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவே செயற்படும் இத்தகைய குழுவின் பேச்சுவார்த்தையானது நாட்டுக்கு நன்மை பயப்பதாக ஒருபோதும் அமைய முடியாது.

மக்கள்  பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை அதைரியப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி ஈடுபட்டு வருகின்றனர். 

நாட்டின் பொருளாதாரம் பற்றியும் அதனை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் தெரிவித்தார்.

இன்று நீங்கள் கூறுவதை  ஏன் உங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்பதே எமது கேள்வியாகும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி 2015 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது. 

2014 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை சிறந்த பொருளாதார பின்னணியை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்திருந்தது. 

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒரே வருடத்தில் இரண்டு முறை மத்திய வங்கி நிதி மோசடி இடம்பெற்று நாட்டின் முழுமையான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. 

அரசாங்கம் அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் நாட்டை மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகிப்பது நாட்டின் பெரும் அதிர்ஷ்டமாகும். 

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்த தொற்று ஏற்பட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்றும் தெரிவித்தார். 

சுமந்திரனின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகளின் இரகசிய சந்திப்பில் பேசப்பட்டது என்ன ? - செஹான் சேமசிங்க | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

12 வருடமாய் மூஞ்சூறு தான் போக வழியைக்காணம் அதுக்கே விளங்காத அரசியலை கதைக்குதாம் நம்புங்க மக்களே .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

12 வருடமாய் மூஞ்சூறு தான் போக வழியைக்காணம் அதுக்கே விளங்காத அரசியலை கதைக்குதாம் நம்புங்க மக்களே .

சுமந்திரன்…. அடுத்த பெட்டி, வாங்க பிளான் போடுறாப்ல. 😂
கோத்தாவும், மகிந்தாவும்…. நல்லாய் பெட்டி குடுப்பாங்கள். ஹா…. ஹா… ஹா…. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்…. அடுத்த பெட்டி, வாங்க பிளான் போடுறாப்ல. 😂
கோத்தாவும், மகிந்தாவும்…. நல்லாய் பெட்டி குடுப்பாங்கள். ஹா…. ஹா… ஹா…. 🤣

கோத்தாவும், மகிந்தாவும் தங்கட பெட்டியை நிறைக்க நாடுநாடாக தட்டுகினம் இதில இவர்களுக்கு பெட்டி கொடுக்க எங்கே போறது? ஆனால் பெட்டி வாங்கி பழகிய மனம் எதிர்பார்க்குந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பிழம்பு said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரகசியமாக நடத்திய கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் பாராளுமன்றத்தில்  வெளிப்படுத்தப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்

ஆமா .... இவர் பெரிய தங்கமலை இரகசியம் பேசியிருக்கப்போறார் அதை இவர்கள் கேக்கணுமாம். இவருக்கும் வேறு வேலையில்லை ஓடியோடி இரகசியம் பேசுவார், அவர்களுக்கும் வேறு வேலையில்லை அவரை தொடர்ந்து திரியிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஆமா .... இவர் பெரிய தங்கமலை இரகசியம் பேசியிருக்கப்போறார் அதை இவர்கள் கேக்கணுமாம். இவருக்கும் வேறு வேலையில்லை ஓடியோடி இரகசியம் பேசுவார், அவர்களுக்கும் வேறு வேலையில்லை அவரை தொடர்ந்து திரியிறது. 

உள்ள என்ன கதைத்தவை என்று வெளியில் சொன்னால் முழுபயித்தியம் சுகமாகி விழுந்து விழுந்து சிரிக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்…. அடுத்த பெட்டி, வாங்க பிளான் போடுறாப்ல. 😂
கோத்தாவும், மகிந்தாவும்…. நல்லாய் பெட்டி குடுப்பாங்கள். ஹா…. ஹா… ஹா…. 🤣

இலங்கையில் உள்ள தமிழரை வைத்து எத்தனை பேர் வயிறு வளர்க்கிறார்கள் ?பிரச்சனை முடிந்தால் அரசியல்வாதிகளுக்கும் அப்புக்காத்துகளுக்கும் அங்கு வேலை கிடையாது ஏன் கிந்தியனும் வர முடியாது சர்வதேசத்துக்கும் சிங்கள அரசை மிரட்ட பிடி கிடையாது . ராஜபக்சே குடும்பம் வேப்ப மரத்தை வெட்டி அரசமரத்தை நட்டு அரசியல் செய்யவும் முடியாது . எல்லோருக்கும் எங்களின் முதுகில் சவாரி செய்யணும் ஆனால் நாங்க நிமிர்ந்து நடக்க முடியாது அப்படி நடக்க வெளிக்கிட்டால் எங்கள் இனத்திலே பிறந்த அறிவாளிகள் என்று தங்களை தாங்களே சொல்பவர்களுக்கு பிடிக்காது இந்த அறிவாளிகளை இலகுவாக கண்டுபிடிக்கலாம் முகநூலில் யாரும் கேட்காமலே பழைய சம்பவங்களை நேரில் பார்த்தது போல் தமிழ் தேசியத்தை கருவறுக்கும் புளுகுகளை அள்ளி விடுவார்கள் . அல்லது கிளப்கவுஸில் பேரை  மாத்தி வைத்துக்கொண்டு விரிவுரை கொடுப்பார்கள் எட்டு உண்மையுடன் இரண்டு அதே தமிழ் தேசியத்தை கருவறுக்கும் புளுகுகளை பிளந்து கட்டுவார்  இங்கு யாழில் தமிழ் அரசியல் பழகிய ஒருத்தர் கிளப்கவுஸில் முக்கிய தமிழ் எதிர்ப்பாளர் .

 லண்டனில் பெயர் ஊர் கொடுக்காமல் சிம் கார்ட் வாங்கலாம் அதயே உண்மையான மொபைல் நம்பர் போல் பாவிக்கலாம் அதனால் எத்தனை அவதாரும் கூடு விட்டு கூடு பாயமுடியும் இந்த வசதி தமிழ் தேசிய எதிர்ப்பாளர் கூட்டத்துக்கு வசதியாகி விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அப்படி  என்னதான் கதைத்திருப்பார்கள்?

சிங்களவன்  பதறுவதைப்பார்க்கையில் ஆயுதத்தை வெளியில்  காட்டி  இருப்பார்களோ??

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

அது சரி அப்படி  என்னதான் கதைத்திருப்பார்கள்?

சிங்களவன்  பதறுவதைப்பார்க்கையில் ஆயுதத்தை வெளியில்  காட்டி  இருப்பார்களோ??

ஆயுதம்.............? 😃
விசுகருக்கு, குசும்பு  கூடிப் போச்சுது.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அது சரி அப்படி  என்னதான் கதைத்திருப்பார்கள்?

சிங்களவன்  பதறுவதைப்பார்க்கையில் ஆயுதத்தை வெளியில்  காட்டி  இருப்பார்களோ??

ஆயுதம் என்று நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள்? ஆயுதம் தூக்கினவையை ஒருபுறம் கரிச்சுக்கொட்டிக்கொண்டு, ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டேன் என்று பெருமை பேசும்   சிங்களவனை வேறு பதறவைக்கும் அப்படி என்ன ஆயுதம்  இருக்கும் இவர்களிடம்.....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.