Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2022 செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

KKR இன் தோல்விக்கு ஷேரேயஸ் ஐயரின் திமிரும் ஒரு காரணம். வெங்கடேஷ் ஐயர் ஒருமுறை இரண்டாவது ரன் க்கு ஓடாதபோது மைதானத்திலேயே அவரை திட்டினார். ஒடியிருந்தால் அப்போதே வெங்கடேஷ் அவுட்டாகியிருப்பார். அடுத்த பந்தில் வெங்கடேஷ் வேண்டுமென்றே அவுட்டானதுபோல் இருந்தது. அதைவிட நேர்காணலில் எதிரணி எவ்வளவு ரன்கள் அடித்தாலும் என்னாலும் அடிக்கமுடியுமென்றார். எமது அணியாலும் என்று சொல்லவில்லை. இப்போதுதான் தெரிகிறது ஏன் DC இவருக்கு மீண்டும் கேப்டன்சி கொடுக்கவில்லையென்று!!

  • Replies 155
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

RCB

பெங்களூரு அணி வீரர்கள்

ஐபிஎல் போட்டியின் 31வது ஆட்டம் மும்பை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அனுஜ் ராவத், டூ பிளஸ்ஸி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் சமீராவின் பந்தில் 4 ரன்களிலேயே ராவத் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த கோலியும் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ரன் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 23 ரன்களும், ஷபாஸ் அகமது 26 ரன்களும் எடுத்தனர். எனினும் மறுபுறத்தில் அதிரடியாக ஆடிய டூ பெளஸ்ஸி 64 பந்துகளில் 96 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய லக்னெள அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

இருப்பினும், அதிரடியாக விளையாடிய க்ருணால் பாண்டியா 28 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். ஜோஷ் ஹேசல்வுட் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்ற, 20 ஓவர்கள் முடிவில் லக்னெள அணி 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

 

https://www.dinamani.com/sports/2022/apr/19/hazlewood-cleans-up-lucknow-as-bengaluru-registers-victory-3829875.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தல விராட்கோலி "வந்தார் நின்றார் சென்றார்" முதலாவது ஒரு பந்தை சந்தித்து எதிர்பாராமல் கட்ச் குடுத்து ஆட்டமிழந்தார்......ராவத்தும் கோலியும் முதலாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளிலேயே அவுடாகினர்.......டூ பிளஸ்சி செம அடி, சூப்பர்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பஞ்சாபை எளிதாக வென்ற டெல்லி

dc

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மும்பையில் நடைபெற்ற 32வது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.  எனினும் தில்லி அணியின் லலித் யாதவ் பந்தில் ஷிகர் தவான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் (9), லியாம் லிவிங்ஸ்டன் (2), ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்தார். எனினும், தில்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால், ஷாருக்கான், ரபாடா, நாதன் எல்லீஸ், ராகுல் சஹார் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.  முடிவில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. தில்லி அணியில் குல்தீப், அக்சார் பட்டேல், லலித் யாதவ், கலீல் அஹமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களகாக ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் களம்கண்டனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணி 10.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 20 பந்துகளை சந்தித்த ப்ரித்வி ஷா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 30 பந்துகளில் 60 ரன்களுடனும், சர்பராஸ் கான் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/20/ipl-2022-delhi-demolish-punjab-win-by-9-wickets-3830276.html

 

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டத்தை முடித்துவைத்த தோனி: மும்பையை வீழ்த்தி சென்னை வெற்றி

Mumbai Indians vs Chennai Super Kings won

தோனி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி20 போட்டியின் 33 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று விளையாடின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தின.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, இஷாந்த் கிஷன் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த பிரேவிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யகுமார் 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். ஹிரித்திக் 25 ரன்களை சேர்த்தார்.

முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும், அடுத்தடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின.

தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், அதனைத் தொடர்ந்து வந்த மிட்செல், ராபின் உத்தப்பாவுடன் கைக்கோர்த்தார்.

எனினும் சாம்ஸ் பந்தில் மிட்செல் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு அதிரடி காட்ட 35 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். 

உத்தப்பா 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதனையடுத்து வந்த ஷிவம் தூபே (13), ரவீந்திர ஜடேஜா (3), சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் பின்னர் களமிறங்கிய தோனி பெட்டோரியோஸ் உடன் அதிரடியாக விளையாடினார். எனினும் அவர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பிராவோ களமிறங்கினார். இக்கட்டான சூழலில் தோனி தனது பாணியில் சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார். 

நெருக்கடி ஓவர்: நிதானி தோனி

கடைசி ஓவரில் இரண்டாவது பந்தில், பிராவோ ஒரு ரன் எடுத்தார். இதனால் மறுமுனைக்கு வந்த தோனி 4-வது பந்தில் பவுண்டரியை விளாசினார். 5வது பந்தில் 2 ரன்கள் எடுக்க இறுதிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. நெருக்கடியான சூழலிலும் நிதானமாக ஆடிய தோனி கடைசிப் பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.

இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மும்பை நடப்பு ஐபிஎல்-ல் 7வது முறையாக தோல்வியைத் தழுவியுள்ளது. 
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/21/mumbai-indians-vs-chennai-super-kings-won-3831174.html

@MEERA, வயசாளி இன்றைய போட்டியை வென்று கொடுத்துவிட்டார்!

மும்பை இதுவரை எல்லாப் போட்டிகளிலும் தோற்றுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே இன்று வெல்லவேண்டும் என்றுதான் விரும்பினேன்😜

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

ஜீ தல எப்போதும் தல தான்..💪

ஆனால் பொலாட் தனது முட்டாள் தனத்தாலும் அகங்காரத்தினாலும்  ஆட்டமிழந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தில்லி போராட்டம் வீண்: ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி

FQ927N1agAA2FG4

படம்: டிவிட்டர் / ஐபிஎல்

தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 34ஆவது ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 222 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 116(65 பந்துகள்), தேவ்தத் படிக்கல் 54, கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தனர்.

இமாலய இலக்கை விரட்டிய தில்லி அணி கடைசி ஓவர் வரை வெற்றி பெற போராடியது. இருப்பினும், 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தில்லி அணியில் அதிகபட்சமாக பண்ட் 44, லலித் யாதவ் 37, பிரித்வி ஷா 37, கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்கள் விளாசிய பெளவெல் 36 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/22/delhi-struggle-in-vain-rajasthan-thrill-victory-3831947.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணாக போன ரஸ்ஸலின் அதிரடி; குஜராத் அசத்தல் வெற்றி

Russel

ரஸ்ஸல்

கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

குஜராத் அணியிலிருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணியில் டிம் செளதி, சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

ஆரோன் ஃபிஞ்ச், பேட் கம்மின்ஸ், ஷெல்டன் ஜாக்ஸன் ஆகியோர் நீக்கப்பட்டனர். தொடக்க வீரரான ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க 3ஆம் நிலை வீரராக பவர்பிளேயில் களமிறங்கி ஆச்சர்யப்படுத்தினார் கேப்டன் பாண்டியா. முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது குஜராத். 

10 ஓவர்கள் வரைக்கும் பாண்டியாவும் சஹாவும் நன்கு விளையாடி ஸ்கோரை 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் என உயர்த்தினார்கள். பிறகு சஹா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 

16 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது குஜராத். இதனால் கடைசி 4 ஓவர்களில் அதிரடியாக விளையாடினால் 180-190 ரன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாண்டியாவுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்த மில்லர், பிறகு 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

செளதி வீசிய 18-வது ஓவரில் பாண்டியா 67 ரன்களுக்கும் ரஷித் கான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் நெருக்கடியை எதிர்கொண்டது குஜராத் அணி. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கடைசி 17 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்ததால் குஜராத் அணியால் எதிர்பார்த்தபடி அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பாக ரஸ்ஸல் 4, செளதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பில்லிங்ஸ் 4 ரன்களிலும் நரைன் 5 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில், ரஸ்ஸல் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த போட்டி சுவாரஸ்யமாக நகர்ந்தது. 

இருப்பினும், குஜராத் அணியில் சிறப்பான பந்துவீச்சால் ரஸ்ஸல் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில், 8 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணியால் 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

குஜராத் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஷமி 20 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை மீண்டும் பெற்றுள்ளது. 

 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/23/gujarat-claims-top-spot-as-russel-cameo-ends-in-vain-3832273.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு அதிர்ச்சி தோல்வி: 8 ஓவரில் இலக்கை எட்டிய ஹைதராபாத்!

FRCoEFLaUAAM3V3

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது சன்ரைசா்ஸ் ஹைதராபாத்.

முதலில் ஆடிய பெங்களூரு அணி ஹைதராபாத் பௌலா்கள் ஜேன்ஸன், நடராஜனின் அபார பந்துவீச்சால் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் ஆடிய ஹைதராபாத் அணி 72/1 ரன்களை எடுத்து வென்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 36-ஆவது ஆட்டம் சனிக்கிழமை மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் பௌலிங்கை தோ்வு செய்தது.

சரிந்த பெங்களூரு அணி:

தொடக்க வரிசை பேட்டா்களான கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 5, அனுஜ் ரவாத், விராட் கோலி 0 என வந்த வேகத்திலேயே மாா்கோ ஜேன்ஸன் பந்துவீச்சில் அவுட்டாகி நடையைக் கட்டினா். முதல் ஓவரிலேயே டூபிளெஸ்ஸிஸ், அனுஜ், கோலி வெளியேறினா்.

தினேஷ் காா்த்திக் ஏமாற்றம்:

கிளென் மேக்ஸ்வெல் 12, சுயாஷ் பிரபுதேசாய் 15 நிலைத்து ஆட முயன்றும் அவுட்டாகி வெளியேறினா். அவா்களுக்கு பின் ஸ்கோரை உயா்த்துவாா் என மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தினேஷ் காா்த்திக் டக் அவுட்டானாா். ஷாபாஸ் அகமது 7, ஹா்ஷல் படேல் 4, ஹஸரங்கா 8, சிராஜ் 2 ரன்களுக்கும் வெளியேறினா்.

பெங்களூரு 68: 16.1 ஓவா்களில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பெங்களூரு.

ஜேன்ஸன், நடராஜன் 3 விக்கெட்:

ஹைதராபாத் தரப்பில் அற்புதமாக பந்துவீசிய மாா்கோ ஜேன்ஸன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

8 ஓவா்களில் ஹைதராபாத் வெற்றி:

69 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதரபாத் அணியில் அபிஷேக் சா்மா அற்புதமாக ஆடி 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட்டானாா். கேப்டன் கேன் வில்லியம்ஸன் 16, ராகுல் திரிபாதி 7 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

8 ஓவா்களிலேயே 72/1 ரன்களுடன் பெங்களூருவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்.

பெங்களூரு தரப்பில் ஹா்ஷல் படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினாா்.

இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/23/hyderabad-reach-the-target-in-8-overs-3832322.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டாத வெற்றி; எட்டாவது தோல்வி

spacer.png

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட எட்டாத மும்பைக்கு, இது தொடா்ந்து 8-ஆவது தோல்வியாகும்.

ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அடுத்து மும்பையால் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுக்க முடிந்தது.

லக்னௌ தரப்பில் அட்டகாசமாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் நடப்பு சீசனில் 2-ஆவது சதத்தை பதிவு செய்தாா். இதே மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தான் அவா் முதல் சதத்தையும் அடித்திருந்தாா்.

இந்த ஆட்டத்தில் ராகுல் சதமடித்தாலும் இதர விக்கெட்டுகளை வரிசையாகச் சரித்து லக்னௌவை கட்டுப்படுத்தியது மும்பை. எனினும், அதன் இன்னிங்ஸில் ரோஹித் சா்மா, திலக் வா்மா தவிர இதர பேட்டா்கள் சோபிக்கத் தவறினா்.

டாஸ் வென்ற மும்பை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக குவின்டன் டி காக் 10 ரன்களுக்கு வீழ்ந்தாா். ராகுல் அதிரடியாக ஆடி ரன்கள் சோ்த்து வர, ஒன் டவுனாக வந்த மனீஷ் பாண்டே 22 ரன்களுக்கு வெளியேறினாா்.

தொடா்ந்து மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ரன்களின்றியும், கிருணால் பாண்டியா 1 ரன்னுடனும் பெவிலியன் திரும்பினா். தீபக் ஹூடா 10, ஆயுஷ் பதோனி 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ராகுல் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 103, ஜேசன் ஹோல்டா் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் ரைலி மெரிடித், கைரன் பொல்லாா்டு ஆகியோா் தலா 2, டேனியல் சேம்ஸ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய மும்பையில் கேப்டன் ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, திலக் வா்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் அடித்தனா். இஷான் கிஷண் 8, டெவால்ட் பிரெவிஸ் 3, சூா்யகுமாா் யாதவ் 7, கைரன் பொல்லாா்டு 19, டேனியல் சாம்ஸ் 3, ஜெயதேவ் உனத்கட் 1 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

ஓவா்கள் முடிவில் ரித்திக் ஷோகீன், ஜஸ்பிரீத் பும்ரா ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் கிருணால் பாண்டியா 3, மோசின் கான், ஜேசன் ஹோல்டா், ரவி பிஷ்னோய், ஆயுஷ் பதோனி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/25/எட்டாத-வெற்றி-எட்டாவது-தோல்வி-3833106.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராயுடு அதிரடி வீண்: 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

Rayudu

அதிரடியாக விளையாடிய ராயுடு

ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

ஆனால் மயங் அகர்வால் சோபிக்கவில்லை. அவர் 21 பந்துகளில் 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து ராஜபக்ச களமிறங்கினார். தவான், ராஜபக்ச இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இந்த ஜோடி மட்டும் 110 ரன்கள் எடுத்தது. ஆனால் ராஜபக்ச 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் களம்கண்ட லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடினார். அவர் 7 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 187 ரன்களை எடுத்தது.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான உத்தப்பா 1 ரன் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய சாண்ட்னர், ஷிவம் டுபே சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில் கெய்க்வாட் 30 ரன்னில் வெளியேறினார்.

பின்னர், களமிறங்கிய ஜடேஜா, ராயுடுவுடன் நிலைத்து நின்று ஆடினார். அதிரடியாக ஆடிய ராயுடு 39 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

 

https://www.dinamani.com/sports/2022/apr/25/punjab-beat-chennai-by-11-runs-3833584.html

 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ஓவருக்கு நாலு வைட் போல், பீல்டிங்கும் சொல்லும்படியாக இல்லை.....கடைசியில இரண்டு ஓவருக்கு 35 ரன்ஸ் அடிக்கிறதும் சிரமம்தான் ..........!   😴

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 8 personnes et texte

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்

Prasidh_Krishna_Kohli_Out_PTI04_26_2022_000258A

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

145 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூருவுக்கு தொடக்கம் மாற்றியும் சிறப்பாக அமையவில்லை. விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

இதன்பிறகு, டு பிளெஸ்ஸி ஆட்டத்தை சற்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பவர் பிளே முடிவுந்தவுடன், குல்தீப் சென் அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்தடுத்த பந்தில் டு பிளெஸ்ஸி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தி குல்தீப் சென் அசத்தினார்.

இந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் ரஜத் படிதார், சூர்யாஷ் பிரபுதேசாய் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். பெங்களூருவின் நம்பிக்கை நாயகனான தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

Chahal_Karthik_Run_Out_PTI04_26_2022_000

இதன்பிறகு ஆட்டத்தை முற்றிலும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பெங்களூரு.

இதன்மூலம், 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் சென் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/26/rajasthan-royals-beat-royal-challengers-bangalore-by-29-runs-3833985.html

 

  • கருத்துக்கள உறவுகள்

கோலி எல்லாம் இனி 3 வது 4 வது ஆக இறங்கினால்தான் சரிவரும்......!

அஸ்வின் இப்ப எல்லாம் கொஞ்சம் பேட்டிங் நல்லா செய்கிறார் போல் இருக்கு.....போலிங் சொல்லி வேல இல்ல ......சூப்பர் .....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்: நம்பமுடியாத வெற்றியைப் பெற்றுத் தந்த ரஷித் கான்

Rashid Khan 2 sixes in last 2 balls brings unbelievable win for GT

சஹா

ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷித் கானின் கடைசி நேர அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா முதலில் ஹைதராபாத்தை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

196 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத்துக்கு ரித்திமான் சஹா அதிரடி தொடக்கத்தைத் தந்தார். ஷுப்மன் கில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். சஹா அதிரடியால் குஜராத் அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, 8-வது ஓவரில் உம்ரான் மாலிக் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த ஐபிஎல் முழுவதும் மிரட்டல் வேகத்தில் பந்துவீசி வரும் உம்ரான் மாலிக் இந்த ஆட்டத்திலும் வேகத்துக்குப் பஞ்சம் இல்லாமல் மிரட்டினார்.

இதற்குப் பலனாக முதலில் ஷுப்மன் கில் (22) போல்டானார். அடுத்து களமிறங்கிய குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை முதல் பந்திலேயே மிரட்டினார். அடுத்த ஓவரில் அவரது விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த சஹா 28-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 

உம்ரான் மாலிக்குக்கு ஓய்வளிக்கப்பட்டதையடுத்து சஹா சற்று அதிரடி காட்டி ஹைதராபாத்துக்கு நெருக்கடியளித்தார். பின்னர் 14-வது ஓவரில் மாலிக் மீண்டும் கொண்டுவரப்பட்டார். சிறப்பாக விளையாடி வந்த சஹாவை 153 கி.மீ. வேகத்தில் யார்க்கர் வீசி போல்டாக்கினார் மாலிக். சஹா 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

எடுத்த விக்கெட் போதாதென்று தனது கடைசி ஓவரில் முதலில் டேவிட் மில்லரை (17) போல்டாக்கி ஹைதராபாத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்தினார். மேலும் கடைசி பந்தில் அபினவ் மனோகரையும் போல்டாக்கி அசத்தினார் உம்ரான் மாலிக்.

4 ஓவரில் 25 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மாலிக்.

இந்த நிலையில், குஜராத் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷித் கான் இருந்தனர்.

 நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார் ஓரளவு சிறப்பாக வீசியதால் கடைசி 2 ஓவரில் குஜராத் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரில் நடராஜன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 13 ரன்கள் கொடுத்ததால், கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. 

மார்கோ யான்சென் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை தெவாட்டியா சிக்ஸரை பறக்கவிட்டார். 3-வது பந்தை ரஷித் கான் சிக்ஸருக்கு அனுப்பினார். 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காததால், கடைசி இரண்டு பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டன. ரஷித் கான் கடைசி இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு குஜராத்துக்கு நம்பமுடியாத வெற்றியை பெற்றுத் தந்தார்.

கடைசி ஓவரில் 25 ரன்கள் விளாசிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தெவாட்டியா 21 பந்துகளில் 40 ரன்களும், ரஷித் கான் 11 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

ஹைதராபாத் தரப்பில் 5 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் மட்டுமே வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/27/rashid-khan-2-sixes-in-last-2-balls-brings-unbelievable-win-for-gt-3834574.html

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஓவர் ரசீத்கான் சூப்பர் அடி ......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவெல் கடைசி நேரத்தில் அதிரடி: டெல்லி அபார வெற்றி

Kuldeep_Pant_PTI04_28_2022_000196A

பந்துவீச்சின்போது ஷ்ரேயஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் மற்றும் பந்த்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

147 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தி மிரட்டல் தொடக்கத்தைத் தந்தார். ஹர்ஷித் ராணா வீசிய 2-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டேவிட் வார்னர் மற்றும் லலித் யாதவ் பாட்னர்ஷிப் அமைத்தனர். வார்னர் அதிரடியால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், 10-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார். வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்த ஓவரில் சுனில் நரைன், லலித் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். மீண்டும் பந்துவீசிய உமேஷ் யாதவ், டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் விக்கெட்டை வீழ்த்தினார்.

3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்ததால் டெல்லி அணி நெருக்கடிக்குள்ளானது. ஆனால், அக்சர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோவ்மன் பவெல் அவருக்கு ஒத்துழைப்பு தந்தார். இந்த பாட்னர்ஷிப் கொல்கத்தாவுக்கு மீண்டும் நெருக்கடியளித்தது. 

இந்த நிலையில், அக்சர் படேல் 24 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். ஆனால், பாவெல் சரியான ஓவரைக் குறிவைத்து கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். வெங்கடேஷ் ஐயர் மற்றும் டிம் சௌதி ஓவரில் பாவெல் சிக்ஸரை பறக்கவிட்டதால், கடைசி 2 ஓவரில் டெல்லி வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஷ்ரேயஸ் ஐயர் 19-வது ஓவரை வீசினார். முதல் 4 பந்துகளில் ஷர்துல் தாக்குரால் ரன் எடுக்க முடியவில்லை. இதனால், சற்று விறுவிறுப்பு அதிகரித்தது. 5-வது பந்தில் 1 ரன் எடுக்க, கடைசி பந்தில் பாவெல் சிக்ஸரை பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தார்.

19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாவெல் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/28/rovman-powell-finishes-for-dc-against-kkr-3835296.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோஷின், க்ருணல், சமீரவின் அபார பந்துவீச்சு : பஞ்சாப்பை வெற்றிகொண்டது லக்னோ

(என்.வீ.ஏ.)

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓட்டங்களால் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிபெற்றது. 

Ravi Bishnoi removed Shikhar Dhawan for 6, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

மோஷின் கான், க்ருணல் பாண்டியா, துஷ்மன்த சமீர ஆகிய மூவரது சிறந்த பந்துவீச்சு ஆற்றல்களின் உதவியுடன் சுமாரான மொத்த எண்ணிக்கையான 153 ஓட்டங்களை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் தக்கவைத்து வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

Dushmantha Chameera is ecstatic after picking the wicket of Mayank Agarwal, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

154 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுபபெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மயன்க் அகர்வால், ஷிக்கர் தவான் ஆகிய இருவரும் வேகமாக 35 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

 5 ஆவது ஓவரில் மயன்க் அகர்வால் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Mohsin Khan got rid of Liam Livingstone for 18, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

 பவர் ப்ளே முடிவில் பஞ்சாப் கிங்ஸ் ஒரு விக்கெட்டை இழந்து 46 ஓட்டங்களுடன் பலமான நிலையில் இருந்தது.

அதுவரை மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஷிக்கர் தவான் (5), தொடர்ந்து பானுக்க ராஜபக்ஷ (9) ஆகிய இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து ஜோடியான ஜொனி பெயார்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் அணியைக் கட்டி எழுப்ப எடுத்த முயற்சியை மொத்த எண்ணிக்கை 88 ஓட்டங்களாக இருந்தபோது மோஷின் கான் முடிவுக்கு கொண்டுவந்தார்.

Deepak Hooda played a crucial hand in the middle overs but his dismissal triggered a collapse, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

லிவிங்ஸ்டன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜிட்டேஷ் ஷர்மா (2) சொற்ப நேரத்தில் களம் விட்டகன்றார்.

தொடர்ந்து பெயார்ஸ்டோவ் (32), கெகிசோ ரபாடா (2), ராகுல் சஹார் (4) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

ரிஷி தவான் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மோஷின் கான் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்ருணல் பாண்டியா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.

Dushmantha Chameera picked up the big wickets of Mayank Agarwal and Jonny Bairstow, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

இரண்டாவது ஓவரில் அணித் தலைவர் கே.எல். ராகுலின் (6) விக்கெட்டை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் இழந்தபோதிலும் குவின்டன் டி கொக் (46). தீப்பக் ஹுடா (34) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

ஆனால், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டி கொக், ஹூடா, க்ருணல் பாண்டியா (7), அயுஷ் படோனி (4), மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் (1), ஜேசன் ஹோல்டர் (11) ஆகியோரின் விக்கெட்களை இழந்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் சிறு சவாலை எதிர்கொண்டது.

எனினும் துஷ்மன்த சமீர (2 சிக்ஸ்களுடன் 17), மோஷின் கான் (13 ஆ.இ) ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தமது அணி 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர். அவேஷ் கான் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராகுல் சஹார் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
 

 

https://www.virakesari.lk/article/126616

 

  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே அணிக்கு மீண்டும் கேப்டன் ஆன தோனி - ரவீந்திர ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஐபிஎல் சிஎஸ்கே ரவீந்திர ஜடேஜா எம்.எஸ். தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ஆட்டத்தில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியதையடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பு எம்.எஸ் தோனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு, சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

அதில், "ரவீந்திர ஜடேஜா தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியை துறக்க முடிவு செய்துள்ளார், மேலும் சிஎஸ்கேயை வழிநடத்த எம்எஸ் தோனிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் சிஎஸ்கே அணியை வழிநடத்த எம்எஸ் தோனி ஒப்புக்கொண்டுள்ளார்," என்று கூறப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஐபிஎல் 15ஆம் சீசன் தொடக்கத்தில் எம்.எஸ் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அப்போது ரவீந்திர ஜடேஜா அணியின் கேப்டன் ஆக பொறுப்பேற்றார். ஆனால், ரவீந்திர ஜடேஜா அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து, இந்திய ஆல்-ரவுண்டர் ஆக அறியப்பட்ட அவர் பேட்டிங் அல்லது பந்து வீச்சு என எதிலும் பரிணமிக்கவில்லை.

33 வயதாகும் ஜடேஜா எட்டு போட்டிகளில் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக அவர் எடுத்தது 26 ரன்கள் மட்டுமே.

இருப்பை தக்க வைக்க போராடிய ஜடேஜா

 

ஐபிஎல் ரவீந்திர ஜடேஜா எம்.எஸ். தோனி

ஐபிஎல் 2022 சீசனில் ஜடேஜாவின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, அவர் 8.19 என ஏமாற்றம் தரும் வகையில் 213 ரன்களை விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

கடந்த சீசனில் நான்காவது முறையாக பட்டத்தை வென்ற போதிலும், ஐபிஎல் 2022 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒன்பதாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது, ரவீந்திர ஜடேஜாவின் தலைமையின் கீழ் எட்டு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றது.சமீபத்தில் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை அணியின் வளர்ச்சிக்காக ஒப்படைப்பதாகக் கூறி பதவி விலகினார். அதுபோலவே தமது கேப்டன் பதவியை ஜடேஜா ஒப்படைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

எம்.எஸ். தோனி 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சிஎஸ்கே அணியை வழிநடத்தினார். இந்த 13 ஆண்டுகளில், நான்கு ஐபிஎல் வெற்றிகள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றிகளை தோனியின் தலைமை சிஎஸ்கேவுக்காக பெற்றுத் தந்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

தோனி மீண்டும் சிஎஸ்கே தலைமை பொறுப்பை ஏற்றிருப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் வரவேற்பும் காணப்படுகிறது. பலரும் சமூக ஊடகங்களில் தோனியின் வருகையை பாராட்டியும் ரவீந்திர ஜடேஜாவின் விலகலை விமர்சித்தும் இடுகைகளைப் பகிர்ந்து வருகிறார்கள். தோனியின் தலைமை பிரவேசத்தால் இந்த சீசனில் சிஎஸ்கேவை பிளேஆஃபுக்கு தகுதி பெற முயற்சிப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/sport-61284409

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மில்லர், தெவாட்டியா அதிரடி: பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்

ipl1

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டான்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் மஹிபால் லோம்ரோர் புதிதாக சேர்க்கப்பட்டார். குஜராத் அணியில் யஷ் தயால் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோருக்குப் பதில் பிரதீப் சங்வான் மற்றும் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். 

பெங்களூர் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர், ஜோடி சேர்ந்த கோலி, ராஜத் பட்டிடர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய பட்டிடர் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்து 58 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

பின்னர், வந்த மாக்ஸ்வெலும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 170 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பாக பிரதீப் சங்வான், 19 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து குஜராத் அணியில் சாஹா, சுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

இருவரும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஆனால் சாஹா 29 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கில்லும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்சன் தன்பங்கிற்கு 20 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் ராகுல் தெவாட்டியாவும், மில்லரும் இணைந்தனர்.  இந்த ஜோடி பெங்களூருவின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது.

இதனால் குஜராத் அணி 19.3 பந்துகளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 39, ராகுல் தெவாட்டியா 43 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/30/ipl2022-miller-tewatia-guide-gujarat-to-6-wicket-win-3836500.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூர்யகுமார் அரைசதம்: முதல் வெற்றியை ருசித்த மும்பை!

FRm9fTAakAEsnAJ

ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

மறைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவை கௌரவிக்கும் விதமாக ராஜஸ்தான் அணி 'SW23' என அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்சி அணிந்து இன்று விளையாடியது.

ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 67 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 20வது ஓவரில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் எடுத்தார்.

இந்த தொடரில் 8 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியடைந்த மும்பை அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.
 

 

https://www.dinamani.com/sports/sports-news/2022/apr/30/suryakumar-fifties-mumbai-taste-first-win-3836789.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ

ipl

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னெள அணி கேப்டன் கே. எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். லக்னெள அணியில் வேகபந்து வீச்சாளர் அவேஷ் கானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கிருஷ்ணப்பா கெளதம் சேர்க்கப்பட்டார். தில்லி அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. லக்னெளவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக்கும் ராகுலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

23 ரன்கள் எடுத்திருந்த டி காக் ஆட்டமிழந்த போதும், பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல், ஹூடா தில்லி அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். அரைசதம் எடுத்த ஹூடா தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும், ராகுல் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடினார். 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில், மூன்று விக்கெட் இழப்புக்கு லக்னெள அணி 195 ரன்களை எடுத்தது. தில்லி அணி சார்பாக ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்கை நோக்கி தில்லி அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியில் தொடக்கம் சரியாக அமையவில்லை. ப்ரித்வி ஷா 5, வார்னர் 3 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதன் பிறகு வந்த மிட்செல் மார்ஷ், கேப்டன் ரிஷப் பந்த் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் டெல்லி அணி சரிவிலிருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய மார்ஷ் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 30 பந்துகளை சந்தித்த ரிஷப் பந்த் 44 ரன்களில் வெளியேறினார். 

தொடர்ந்து களமிறங்கிய லலித் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் களம்கண்ட ரோவ்மன் பவெல், அக்சர் படேல் டெல்லிக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தனர். இருப்பினும் இந்த ஜோடியை மோசின் கான் பிரித்தார். 21 பந்துகளில் 35 ரன்களுக்கு பவெல் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் கடைசி வரை போராடிய டெல்லி அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அக்சர் படேல் 42, குல்தீப் யாதவ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

லக்னௌ அணியில் சிறப்பாக பந்துவீசிய மோசின் கான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/01/ipl-2022-lucknow-beat-delhi-by-6-runs-3837053.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

20220501171L

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

ஐபிஎல் போட்டியின் 46ஆவது ஆட்டம் புணேவில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். 

ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை நான்கு புறமாக பறக்கவிட்டனர். இருப்பினும் அபாரமாக விளையாடிய ருதுராஜ் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்தபோது ருதுராஜ் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார்.

அடுத்து வந்த கேப்டன் தோனி 8 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். இவரது விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்தினார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. கான்வே 85(55 பந்துகள்), ஜடேஜா ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

பின்னர், 203 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா , கேன் வில்லியம்சன் களமிறங்கினர். தொடக்கம் முதலே  இந்த இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைச் சேர்த்தது. இருப்பினும் முதல் விக்கெட்டாக அபிஷேக் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பொறுமையாக விளையாடிய அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 47 ரன்களில் ஆட்டமிழந்ததும் ஹைதராபாத் அணி தடுமாறத் துவங்கியது. 

அடுத்த களமிறங்கிய பூரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சென்னை அணியின் பந்துவீச்சில் அதிம பவுண்டரிகளை அடிக்க முடியாமல் போனது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 189 ரன்களை எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வியைத் தழுவியது.

அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரன் 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி 66 ரன்கள்  எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணி தரப்பில் முகேஷ் சௌதரி 4 விக்கெட்களையும், மகிஷ் தீக்‌ஷானா 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினர்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/01/chaudhary-bowls-chennai-super-kings-beat-hyderabad-3837086.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.