Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மே.18 நினைவு கூர்ந்தவர்களின் விபரங்களை கோரியது ரி.ஐ.டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே.18 நினைவு கூர்ந்தவர்களின் விபரங்களை கோரியது ரி.ஐ.டி

image_a326d0127d.jpg

 

க. அகரன் 

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரிடம் கடந்த மே. 18 இல் அவருடைய வீட்டில் யாரை நினைவேந்தல் செய்தீர்கள் என்பது தொடர்பிலான பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) என்ற முன்னாள் அரசியல் கைதியிடமே பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் விபரம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் அவருக்கு வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை சம்மந்தமாக 2021.05.18 ஆம் திகதி இனப்படுகொலை தினத்தை நினைவூட்டும் முகமாக அத்தினத்தில் விளக்கு வைத்து இறந்தவர்களுக்கு சமர்பணம் செய்த காரணத்திற்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் வழங்கிய போது தனது குடும்ப அங்கத்தவர்களும், நெருங்கிய உறவினர்களும் யுத்தத்தின் மூலம் இறந்து விட்ட காரணத்தினத்திற்காகவே, நான் இந்த தினத்திற்கு விளக்கேற்றி அஞ்சலி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தேன் என்று வாக்கு மூலம் கொடுத்து அவ் வாக்கு மூலத்தின் போது யுத்தத்தில் இறந்த குடும்பத்தினரதும், உறவினர்களினதும் விபரங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கையளிப்பேன் எனவும் கூறியிருந்தீர்கள்.

ஆகையால் அப்பெயர் பட்டியலை 2022.02.22 ஆம் திகதிக்கு முன்பதாக  வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு இறந்து போனவர்களின் முழு விபரங்களையும் கையளிக்குமாறு தகவல் தருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மே.18 ஆம் திகதி குறித்த முன்னாள் அரசியல் கைதி தனது வீட்டில் இறந்தவர்கள் நினைவாக நீதிமன்ற கட்டளைகளை மீறாத வகையில் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/மே-18-நினைவு-கூர்ந்தவர்களின்-விபரங்களை-கோரியது-ரி-ஐ-டி/175-291518

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நீதிமன்ற கட்டளைகளை மீறாத வகையில்

சிறீலங்காவில் சட்டமன்றங்கள் மட்டுமே உள்ளதாக எண்ணியிருந்தேன், நீதிமன்றங்களும் உள்ளனவா? அவை எங்கே எவரிடம் உள்ளன.??

 உச்ச நீதிமன்றம்

  • கருத்துக்கள உறவுகள்

TID சொறீலங்கா அரசின் கட்டமைப்பா.. அல்லது அதற்கு வெளியிலான.. அரச இராணுவக் கூலி அமைப்பா. ஏனெனில்.. கடிதம் வெறும் தாளில் எழுதப்பட்டு அனுப்பட்டுள்ளது. எந்த இலச்சனையும் பொறிக்கப்படவில்லை.  ஒரு ரபர் ஸ்டாம்பை வைச்சுக் கொண்டு நினைச்சவனெல்லாம்.. இப்படி செயற்படலாம். இந்த அழைப்பாணை எந்த வகையில் நீதிமன்ற அல்லது சட்ட அங்கீகாரம் பெற்றது. இப்படியான தாந்தோன்றித்தன சட்ட ரீதியற்ற செயற்பாடுகளை சொறீலங்கா அரச இராணுவ உப அமைப்பு ஒன்று செய்வது அரச பயங்கரவாதச் செயலுக்கு ஒப்பானதோடு.. அழைப்பாணை விடுவிக்கப்பட்ட நபரின் மனித உரிமைகளுக்கு உத்தரவாதமற்ற சூழலையும் தோற்றுவிக்கிறது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயல். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

TID சொறீலங்கா அரசின் கட்டமைப்பா.. அல்லது அதற்கு வெளியிலான.. அரச இராணுவக் கூலி அமைப்பா. ஏனெனில்.. கடிதம் வெறும் தாளில் எழுதப்பட்டு அனுப்பட்டுள்ளது. எந்த இலச்சனையும் பொறிக்கப்படவில்லை.  ஒரு ரபர் ஸ்டாம்பை வைச்சுக் கொண்டு நினைச்சவனெல்லாம்.. இப்படி செயற்படலாம். இந்த அழைப்பாணை எந்த வகையில் நீதிமன்ற அல்லது சட்ட அங்கீகாரம் பெற்றது. இப்படியான தாந்தோன்றித்தன சட்ட ரீதியற்ற செயற்பாடுகளை சொறீலங்கா அரச இராணுவ உப அமைப்பு ஒன்று செய்வது அரச பயங்கரவாதச் செயலுக்கு ஒப்பானதோடு.. அழைப்பாணை விடுவிக்கப்பட்ட நபரின் மனித உரிமைகளுக்கு உத்தரவாதமற்ற சூழலையும் தோற்றுவிக்கிறது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயல். 

அரசுடன் சேர்ந்து இயங்கும், தமிழ் ஒட்டுக் குழுக்கள் எழுதிய கடிதம் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

TID சொறீலங்கா அரசின் கட்டமைப்பா.. அல்லது அதற்கு வெளியிலான.. அரச இராணுவக் கூலி அமைப்பா. ஏனெனில்.. கடிதம் வெறும் தாளில் எழுதப்பட்டு அனுப்பட்டுள்ளது. எந்த இலச்சனையும் பொறிக்கப்படவில்லை.  ஒரு ரபர் ஸ்டாம்பை வைச்சுக் கொண்டு நினைச்சவனெல்லாம்.. இப்படி செயற்படலாம். இந்த அழைப்பாணை எந்த வகையில் நீதிமன்ற அல்லது சட்ட அங்கீகாரம் பெற்றது. இப்படியான தாந்தோன்றித்தன சட்ட ரீதியற்ற செயற்பாடுகளை சொறீலங்கா அரச இராணுவ உப அமைப்பு ஒன்று செய்வது அரச பயங்கரவாதச் செயலுக்கு ஒப்பானதோடு.. அழைப்பாணை விடுவிக்கப்பட்ட நபரின் மனித உரிமைகளுக்கு உத்தரவாதமற்ற சூழலையும் தோற்றுவிக்கிறது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயல். 

இதுக்காகத் தானே பயங்கரவாத தடைச்சட்டத்தை வைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யேக்கை இலங்கை புலனாய்வுக்குழு என்று சொல்லுவினம், பிறகு தாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்று கையை விரிப்பினம். அவ்வாறுதான் காணாமற் போனோரை தெருத் தெருவாய் தேடியலையுது என் இனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.