Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் இலங்கைக்குள் குவியும் டொலர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. 

இத்தாலி, டுபாய், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டனவற்றிலிருந்து இவ்வாறு பணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உண்டியல் மற்றும் ஹவாலா முறைமைகள் சட்டவிரோதமானவை என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. 

இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் முறைமை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் இந்த உண்டியல் மற்றும் ஹாவாலா முறைமையுடன் அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், வர்த்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்புபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

இதன் காரணமாகவே உண்டியல் மற்றும் ஹாவலா குறித்து கிரமமான விசாரணை நடத்தப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்துள்ள போதிலும் அது இற்றைப்படுத்தப்படாது 203 ரூபா என்ற தொகையில் தொடர்ந்தும் மத்திய வங்கி பேணி வருகின்றது.

எனினும் சந்தையில் டொலர் ஒன்று 243 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. உண்டியில் முறையில் இந்த கூடுதல் தொகை கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உண்டியல் முறை குறித்து சுயாதீனமான அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதில்லை என தெற்கு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

https://tamilwin.com/article/10-million-dollar-brought-into-the-country-1645496229?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்துள்ள போதிலும் அது இற்றைப்படுத்தப்படாது 203 ரூபா என்ற தொகையில் தொடர்ந்தும் மத்திய வங்கி பேணி வருகின்றது.

எனினும் சந்தையில் டொலர் ஒன்று 243 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. உண்டியில் முறையில் இந்த கூடுதல் தொகை கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லாபம் கிடைக்கிற இடத்தில்தானே... மக்கள் தமது பணத்தை மாற்றுவார்கள்.
அரசாங்கத்தின் கஜானாவை நிரப்ப, அவர்களுக்கு பைத்தியமா?

ராஜபக்ச சகோதரர்களும், அரசியல் வாதிகளும்.... 
போர் என்று சொல்லி ஆயுத இறக்குமதியில் கொள்ளையடித்து,
பதுக்கி வைத்த காசின் மூலம், கஜானாவை நிரப்பட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்டியல் மற்றும் கவாலா முறை என்பது என்னவென்றால் பாரீசின் புறநகர் லாசப்பல் மற்றும் லண்டன் "புறநகர்" பகுதிகளில் இருக்கும் கடைகளில் வெளிநாட்டுப்பணத்தைக் கொடுத்து அதை ஊருக்கு அனுப்பிவிடுங்கோ எனச்சொன்னால் நாணயமாற்றுப் பெறுமதியைவிட கொஞ்சம் அதிகமாகக் கொடுப்பார்கள் இதை எதற்காக இவர்கள் செய்கிறார்கள் என்றால் பணம் அனுப்புபவரிடம் கணக்கில் வராத காசு இருந்தால் அல்லது சமூகக்கொடுப்பனவில் அவரோ அல்லது அவரது குடும்பமோ தங்கியிருந்தால் அல்லது பணம் பெறுபவருக்கு ஏதாவது அவசரமிருந்தால் செய்யப்படும்.

இதில் பணத்தைக் கைமாற்றிவிடுபவர் ஊரில நிறையப்பேரிடம் காசு கொடுக்கல் வாங்கள் அல்லது வெளிநாட்டில் வாழும் யாராவது காணி வீடுகளை வித்து அதை வெளிநாட்டு நாணயமாக புலம்பெயர் தேசத்தின் பெற்றுக்கொள்ளவேண்டுமாகவிருந்தால்  இலங்கைப்பணம் அங்கு கைமாற்றிவிடப்படும்.

ஆக இது இலங்கையில் மத்திய வங்கிக்கு சட்டரீதியாகக் கணக்கில் வராது ஏன் இலங்கைக்கே வெளிநாட்டு நாணயமாகக் கிடைக்காது செய்து விடும் ஒரு கைங்கரியம்.

தவிர, இப்போது டாலர் கையிருப்பு மத்தியவங்கியில் சுத்தமாக இல்லை கடஙொடுக்கும் நாடுகளும் டாலரை இலங்கைக்கணக்கில் வைப்பிடுவதில்லை கொடுத்த கடனுக்கு ஈடாக தங்களிடமிருந்து பொருடகளை வாங்கவேண்டும் எனக்கூறிவிட்டார்கள்.  ஆக நயினாதீவு நாகம்மளாச்சிக்கு மடிப்பிச்சை வாங்கிறன் அரிசி போடுங்கோ கதைதான்.

டாலர் கையிருப்பு இல்லாததால் கொழும்பின் பல செல்வந்தர்கள் தங்களது இலங்கை ரூபாயை டாலராக்க முயற்சிக்கிறார்கள் காரணம் இலங்கையின் ரூபாயின் மதிப்பு நிலாவரைக்கேணியின் ஆழத்துக்குச் சென்றுவிட்டது இன்னமும் செல்லவுள்ளது ஏற்கனவே பதுக்கியதுபோக மீதிப்பணத்தை என்ன செய்வது என யோசிச்சு.....

கிரிப்டோ முதலீட்டில் ஈடுபடுபவர்களிடம்  "USDT" ஆக வாங்கிப்போடுகிறார்கள்  இது டாலருக்குச் சமமான பெறுமதியுடையது. இதை அரசாங்கம் ஓரளவு மேப்பம் பிடிச்சிட்டுது விசாரணைகளிலும் இறங்கியிருக்கு யாராவது உங்கள் உறவுகள் இப்படிச்செய்தால் (அதாவது இலங்கையில்) சொல்லிவைக்கவும்

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

உண்டியல் மற்றும் கவாலா முறை என்பது என்னவென்றால் பாரீசின் புறநகர் லாசப்பல் மற்றும் லண்டன் "புறநகர்" பகுதிகளில் இருக்கும் கடைகளில் வெளிநாட்டுப்பணத்தைக் கொடுத்து அதை ஊருக்கு அனுப்பிவிடுங்கோ எனச்சொன்னால் நாணயமாற்றுப் பெறுமதியைவிட கொஞ்சம் அதிகமாகக் கொடுப்பார்கள் இதை எதற்காக இவர்கள் செய்கிறார்கள் என்றால் பணம் அனுப்புபவரிடம் கணக்கில் வராத காசு இருந்தால் அல்லது சமூகக்கொடுப்பனவில் அவரோ அல்லது அவரது குடும்பமோ தங்கியிருந்தால் அல்லது பணம் பெறுபவருக்கு ஏதாவது அவசரமிருந்தால் செய்யப்படும்.

இதில் பணத்தைக் கைமாற்றிவிடுபவர் ஊரில நிறையப்பேரிடம் காசு கொடுக்கல் வாங்கள் அல்லது வெளிநாட்டில் வாழும் யாராவது காணி வீடுகளை வித்து அதை வெளிநாட்டு நாணயமாக புலம்பெயர் தேசத்தின் பெற்றுக்கொள்ளவேண்டுமாகவிருந்தால்  இலங்கைப்பணம் அங்கு கைமாற்றிவிடப்படும்.

ஆக இது இலங்கையில் மத்திய வங்கிக்கு சட்டரீதியாகக் கணக்கில் வராது ஏன் இலங்கைக்கே வெளிநாட்டு நாணயமாகக் கிடைக்காது செய்து விடும் ஒரு கைங்கரியம்.

தவிர, இப்போது டாலர் கையிருப்பு மத்தியவங்கியில் சுத்தமாக இல்லை கடஙொடுக்கும் நாடுகளும் டாலரை இலங்கைக்கணக்கில் வைப்பிடுவதில்லை கொடுத்த கடனுக்கு ஈடாக தங்களிடமிருந்து பொருடகளை வாங்கவேண்டும் எனக்கூறிவிட்டார்கள்.  ஆக நயினாதீவு நாகம்மளாச்சிக்கு மடிப்பிச்சை வாங்கிறன் அரிசி போடுங்கோ கதைதான்.

டாலர் கையிருப்பு இல்லாததால் கொழும்பின் பல செல்வந்தர்கள் தங்களது இலங்கை ரூபாயை டாலராக்க முயற்சிக்கிறார்கள் காரணம் இலங்கையின் ரூபாயின் மதிப்பு நிலாவரைக்கேணியின் ஆழத்துக்குச் சென்றுவிட்டது இன்னமும் செல்லவுள்ளது ஏற்கனவே பதுக்கியதுபோக மீதிப்பணத்தை என்ன செய்வது என யோசிச்சு.....

கிரிப்டோ முதலீட்டில் ஈடுபடுபவர்களிடம்  "USDT" ஆக வாங்கிப்போடுகிறார்கள்  இது டாலருக்குச் சமமான பெறுமதியுடையது. இதை அரசாங்கம் ஓரளவு மேப்பம் பிடிச்சிட்டுது விசாரணைகளிலும் இறங்கியிருக்கு யாராவது உங்கள் உறவுகள் இப்படிச்செய்தால் (அதாவது இலங்கையில்) சொல்லிவைக்கவும்

 

இவ்வாறு பணம்  கைமாறுவதன் இன்னொரு  பக்கம் புலம்  பெயர்ந்தவர்கள்  இலங்கையை  காலி   செய்கிறாரகள் என்பதாகும்

அதன்படி இதுவரை வந்து  கொண்டிருந்த வெளிநாட்டுப்பணங்களும்  அதனூடான  வேலை  வாய்ப்புக்களும் குறைவடையப்போகிறது

உண்டியல் மூலம்  வரும் பணத்தை  தடுக்க இலங்கை  அரசு இன்னனான்றையும்செய்கிறது

அதனால் நானும்  அண்மையில்  பயனடைந்தேன்

ஒரு  கோயில் கும்பாவிசேசத்துக்காக 1 லட்சத்து 60 ரூபாங்களை  சட்டப்படி வங்கிக்கு அனுப்பியிருந்தேன்

அங்கே 10 ஆயிரம் ரூபாய்கள் இனாமாக ஊக்குவிப்பாக  சேர்த்து  ஒரு லட்சத்து 70 ரூபாங்களை சம்பந்தப்பட்டவருக்கு கொடுத்திருந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

இவ்வாறு பணம்  கைமாறுவதன் இன்னொரு  பக்கம் புலம்  பெயர்ந்தவர்கள்  இலங்கையை  காலி   செய்கிறாரகள் என்பதாகும்

அதன்படி இதுவரை வந்து  கொண்டிருந்த வெளிநாட்டுப்பணங்களும்  அதனூடான  வேலை  வாய்ப்புக்களும் குறைவடையப்போகிறது

உண்டியல் மூலம்  வரும் பணத்தை  தடுக்க இலங்கை  அரசு இன்னனான்றையும்செய்கிறது

அதனால் நானும்  அண்மையில்  பயனடைந்தேன்

ஒரு  கோயில் கும்பாவிசேசத்துக்காக 1 லட்சத்து 60 ரூபாங்களை  சட்டப்படி வங்கிக்கு அனுப்பியிருந்தேன்

அங்கே 10 ஆயிரம் ரூபாய்கள் இனாமாக ஊக்குவிப்பாக  சேர்த்து  ஒரு லட்சத்து 70 ரூபாங்களை சம்பந்தப்பட்டவருக்கு கொடுத்திருந்தார்கள்

வங்கிகள் இப்ப 2/3 ரூபாவை அதிகமாக வழங்குகினம் அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 எவ்வளவு அழகான பண பரிவர்த்தனை உள்ள இலங்கை இப்போது பாக்கிஸ்தான் நிலைமையை விட மோசமாகி விட்டதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.